Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இன்று பாராளுமன்றத்தில்  பேசினார் பார்த்தீர்களா  ??  பயங்கரவாதசட்டம்.  நீக்கப்படும்‘  என. அறிகிறேன்,......இவரது கோரிக்கை,பேச்சால்      உண்மை  தான் இல்லையா????

நல்ல பெரிய காகம் போல…பனம் பழம் எல்லாம் விழுகுது🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நல்ல பெரிய காகம் போல…பனம் பழம் எல்லாம் விழுகுது🤣

ஒம்.   ஒம்    இப்போது தான்   இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது   உலகத்துக்கே தெரிகிறது   ...

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் என்ற முழு விசரணை  அரசியலை விட்டு போக வைக்க அர்சுன்னா என்ற பாதி விசரை வெல்ல வைக்க வேண்டி வந்தது அந்த சுமத்திரன் முழு விசர் அரசியலை விட்டு போகாதமுதல் இந்த அரை விசர்ததான் அதுக்காக எவ்வளவு விலையும் கொடுக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர்கள், ஐயர் தொழில் பற்றி சொல்லும் பொது ஒரு விடயத்தை மறந்துவிட்டேன்.

பழைய சந்ததி ஐயர்களுக்கு பறவை பாசை  பேச (மந்திரம் சொல்ல) பயின்று, பயிற்சி எடுத்து இருப்பார்கள். 

நான் சொல்லும் ஐயர் சந்ததி, நல்லூரில் பிரதம குருக்களாக இருந்த குமாரசாமி குருக்களின் சந்ததிக்கு கிட்டிய சந்தத்திகளும் , அதன் முதல் சந்ததிகளும்..

எல்லா ஐயர்களும் என்று இல்லை, (குமாரசாமி குருக்கள் ) போல நன்கு பயிற்சியும், அனுபவமும் உள்ளவர்கள்.

பொதுவாக இவர்களே, பிரதம குருக்களாக அந்தந்த கோயில்களில் பொறுப்பை எடுப்பார்கள்.  

பறவை பாசை என்பது வாய் மூடி, உதடுகள் இறுக்கமாக மூடி  இருக்க, குரல் நாணால் பேசுவது அல்லது மந்திரம்   சொல்வது.

(ஒருமுறை உங்களின் பெயரை சொல்லிப் பாருங்கள். ம் அல்லது ங் அல்லது அவை போன்ற, அல்லது  இவை இரண்டும் கலந்த ஒலியே எழுப்ப முடியும். இதை தவிர வேறு எந்த ஒலியும் எழுப்ப முடியாது. ஆயினும் ம், ங் எனும் ஒலிகள் இம்மை, மறுமை எனபதுடன் தொடர்புடைய   மந்திரங்களுக்கு அடிப்படை ஆகும்.).

 விசேட நாட்களில், சந்தர்ப்பத்தில், குழுவாக ஐயர்கள்பூசை  செய்யும் போது,, பொதுவாக  பூசையின் இறுதி பகுதியில் (அனல் அப்படித் தான்  என்று இல்லை) , மற்ற ஐயர்கள் மந்திரம் சொல்வதை நிறுத்த, பிரதம குருக்கள் தொடர்வார். அது பொதுவாக பறவை பாசையில் சொல்லும் மந்திரங்கள்.

பிரதம  குருக்கள் எப்போதும் சாமியை பார்த்தபடி நிற்பதால் (அதாவது அவரின் முகம், வாய் பக்தர்களுக்கு தெரியாது ), அது தெரிவதில்லை.   

முன்பு சொன்னது போல, மந்திரங்கள் சொல்லும் விதத்திலும் அவை உரு, சக்தி எடுக்கும் (என்பது நம்பிக்கை).

இதை சொல்வது, ஐயர் என்பது மிகவும் பொறுப்புள்ள தொழில். 

இந்த பறவை பாசை கலையாக வர ஏறத்தாழ 20-25 வருட பயிற்சி தேவை. எல்லோருக்கும்  (அதாவது எல்லா ஐயர்களுக்கும்) கலையாக வராது. 

(இப்படியான  பொறுப்புகளுக்கு மற்றும் பயிற்சிகளுக்கு முன்பு    , சைவக் குருக்களின் இடம் எங்கே என்பதை நீங்களே யோசித்து பார்க்கலாம்)

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2025 at 18:42, colomban said:

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது. 

வடக்கு மற்றும் நாட்டின் மற்றைய பகுதிகளில் சைவ குருமார் இல்லையோ? இவர்கள் மட்டும் ஏன் போராடுகிறார்கள்? இவர்களுக்குத்தான் தொப்பி அளவோ என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

வடக்கு மற்றும் நாட்டின் மற்றைய பகுதிகளில் சைவ குருமார் இல்லையோ? இவர்கள் மட்டும் ஏன் போராடுகிறார்கள்? இவர்களுக்குத்தான் தொப்பி அளவோ என்னவோ?

ஏன் எங்க இருந்தாலும் அவர்கள் ஈழதமிழர், சைவர்கள் தானே? ஆகவே போராடலாம்.

ஜெயசிக்குரு நேரம் கிழக்கில் இருந்து ஜெயந்தன், அன்பரசி படையணிகள் வன்னிக்கு வந்து போராடியபோது இனித்தது, இப்போ கசக்குதோ?

#பிரதேசவாதம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

வடக்கு மற்றும் நாட்டின் மற்றைய பகுதிகளில் சைவ குருமார் இல்லையோ? இவர்கள் மட்டும் ஏன் போராடுகிறார்கள்? இவர்களுக்குத்தான் தொப்பி அளவோ என்னவோ?

அர்ச்சுனா என்ன சொன்னார், அதற்கெதிராக இவர்கள் ஏன் போராடுகிறார்கள்  என்று யாருக்காவது தெரியுமா? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அர்ச்சுனா, சைவ இந்துக்களை பற்றி தவறான கருத்து வைத்திருந்தால் அது நாட்டிலுள்ள எல்லா சைவ இந்துக்களையும் பாதித்திருக்கும். இவர்களை மட்டும் பாதிக்கும்படி அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என இவர்கள் அறிவிக்கவில்லை. இவர்களை மட்டும் பாதிப்பதுபோல் ஏதோ சொல்லியிருப்பார் போல. 

10 hours ago, goshan_che said:

ஏன் எங்க இருந்தாலும் அவர்கள் ஈழதமிழர், சைவர்கள் தானே? ஆகவே போராடலாம்.

ஜெயசிக்குரு நேரம் கிழக்கில் இருந்து ஜெயந்தன், அன்பரசி படையணிகள் வன்னிக்கு வந்து போராடியபோது இனித்தது, இப்போ கசக்குதோ?

#பிரதேசவாதம்

இங்கு பிரதேசவாதத்தை வலிந்து திணிப்பது நீங்கள். தமிழர், விடுதலை வேண்டி போராடினார்கள். வடக்கு படையணி  கிழக்கிலும், கிழக்கு படையணி வடக்கிலும், ஒரே விடுதலைக்காக போராடினார்கள். அங்கே எங்கும் பிரதேசவாதம் இருக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர்க்குரிய பதவிகள் வழங்கப்பட்டன. அது தமிழரின், இனத்தின் விடுதலைக்கான போராட்டம். இவர் இங்கு, இந்துக்கள் என்றும் கூறுகிறார், சைவர் என்றும் கூறுகிறார். அப்போ ஏன் நாட்டின் மற்றைய பகுதிகளில் உள்ள சைவர் இதை எதிர்க்கவில்லை என்றுதான் கேட்க்கிறேன். இது அவர்களுக்கு மட்டுமுரிய போராட்டமா என்று. நீங்கள் தேவையற்ற  ஒன்றை செருகி பிரச்சனையை உருவாக்க துடிக்கிறீர்கள்.        

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அர்ச்சுனா, சைவ இந்துக்களை பற்றி தவறான கருத்து வைத்திருந்தால் அது நாட்டிலுள்ள எல்லா சைவ இந்துக்களையும் பாதித்திருக்கும். இவர்களை மட்டும் பாதிக்கும்படி அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என இவர்கள் அறிவிக்கவில்லை. இவர்களை மட்டும் பாதிப்பதுபோல் ஏதோ சொல்லியிருப்பார் போல. 

இங்கு பிரதேசவாதத்தை வலிந்து திணிப்பது நீங்கள். தமிழர், விடுதலை வேண்டி போராடினார்கள். வடக்கு படையணி  கிழக்கிலும், கிழக்கு படையணி வடக்கிலும், ஒரே விடுதலைக்காக போராடினார்கள். அங்கே எங்கும் பிரதேசவாதம் இருக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர்க்குரிய பதவிகள் வழங்கப்பட்டன. அது தமிழரின், இனத்தின் விடுதலைக்கான போராட்டம். இவர் இங்கு, இந்துக்கள் என்றும் கூறுகிறார், சைவர் என்றும் கூறுகிறார். அப்போ ஏன் நாட்டின் மற்றைய பகுதிகளில் உள்ள சைவர் இதை எதிர்க்கவில்லை என்றுதான் கேட்க்கிறேன். இது அவர்களுக்கு மட்டுமுரிய போராட்டமா என்று. நீங்கள் தேவையற்ற  ஒன்றை செருகி பிரச்சனையை உருவாக்க துடிக்கிறீர்கள்.        

உங்கள் கருத்தில்தான் பிரதேசவாதம் தொனித்தது. அதை சுட்டி காட்டினால் நான் பிரதேசவாதத்தை திணிப்பதாக சொல்கிறீர்கள்.

இந்து என்பது ஆதி சங்கரர் காலத்தில் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணபத்தியம் ஆகிய நம்பிக்கைகளை இணைத்து உருவான கூட்டு. சிவமூலர் இலங்கையை சிவபூமி என்கிறார். ஈச்சரங்களும் சிவாலயங்களே.

ஆகவே இப்போ இலங்கையில் இருப்போர் இந்துவும்தான் சைவரும்தான். இரு சொற்களும் அங்கே இப்போ interchangeable.

அதனால் இந்து கல்லூரியும் உள்ளது, சைவப்பிரகாசாவும் உள்ளது.

ஆகவே மட்டகளப்பில் இருந்தாலும், யாழ்பாணத்தில் இருந்தாலும் அருச்சுனாவை ஒரு இந்து/சைவர் கேள்வி கேட்கலாம்.

அப்படி கேட்க கூடாது என்பது பிரதேசவாதம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.