Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூகச் சிந்தனையாளர்

பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள்

யாராகினும்,

அவரின் வழியொற்றி நீங்கள்

வாழாதிருப்பின்

உங்களுக்கு ஒன்று சொல்வேன்

உங்களது வேலிக்குள்

உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு

எல்லா ஆடுகளுக்கும்

சுதந்திரம் வேண்டி நீங்கள்

ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம்

எதுவென்பதை நானறிவேன்.

அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை

அதுதான் அடைந்து கிடக்கிறது

நான் என் செய்வேன் என்பவர்க்கு

நானின்றொன்று சொல்வேன்

உன் சொந்தப்பட்டியில்

அடைபட்டுக் கிடக்கும்

உன் ஆட்டுக்கு விடுதலை

பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில்

வேறெந்த ஆட்டுக்கும்

நீ விடுதலை உபதேசம் செய்யாதே.

விடுதலை பெற எண்ணும்

ஆடுகளை வேட்டையாடும்

நோக்கம் மட்டுமே உன்னுடையது

என்பதை எவரும் கண்டு கொள்வார்கள்.

.

முதலில் உன்பட்டியின்

ஆட்டை, ஆடுகளை விடுதலை செய்.

20.02.2025

வாசு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவரின் வழியொற்றி நீங்கள்

வாழாதிருப்பின்

உங்களுக்கு ஒன்று சொல்வேன்

முதலில் உன்பட்டியின்

ஆட்டை, ஆடுகளை விடுதலை செய்.

20.02.2025

வாசு

👍................

சரியாகவே சொல்லியிருக்கின்றார்..........

ஊருக்கு மட்டுமே உபதேசம்....., ஆடுகள் நனைகின்றன..... என்ற இரண்டையும் சேர்த்து, பெரியார் பெயரில் வலம் வரும் போலி சமூகச் சிந்தனையாளர்களின் தலைகளில் குட்டு வைத்திருக்கின்றார்.....

நிஜமான சமூகச் சிந்தனையாளர்களை மறைமுகமாக பாராட்டியும் இருக்கின்றார்....... எந்த விடயத்திலும் போலிகளை அடையாளம் கண்டு, அவர்களை விலக்குவது என்பதே ஒரு தொடர் போராட்டம் தான்............

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பாவின் அப்பாவின் காலத்தில் தோட்டம் செய்வதற்காக கிணறு தோண்டியபோது சூலம் ஒன்று வெளிப்பட்டதாம் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் சைவ சமயம் ஒடுக்கப்பட்டபோது புதைத்தார்களா தெரியவில்லை). தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் பிரதான வீதியருகில் கொட்டில் போட்டு சூலத்தை பிரதிட்டை செய்தனர். அப்பாவின் அப்பாவும், அதன் பின்னர் எனது அப்பாவும் தமக்குத் தெரிந்தவகையில் பூசை செய்து வந்தனர். 80களின் ஆரம்பத்தில் கோயிலாகக் கட்டப்பட்டு, சைவ மேனிலையாக்கம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு பிராமண ஐயர் பூசை செய்துவருகின்றார்..

கொழும்பில் இறுதிக்காலத்தில் நினைவு பிறழ்ந்த நிலையிலும் வைரவர் என்ற சொல்லைக் கேட்டால் அப்பா “என்ரை” எனச் சொல்லுவார்.. அவருக்கு திரும்பவும் ஊருக்குப் போகவோ, எள்ளங்குளச் சுடலையில் வேகவோ சந்தர்ப்பம் கிட்டவில்லை.

எனது கடவுள் மறுப்புக்கொள்கையால் நான் கோயில் சம்பந்தமாக எதுவும் செய்வதில்லை. ஆனால் கொழும்பில் இருந்த அக்கா ஏதாவது உதவி செய்யக் கேட்டால் ஐயர் குடும்பத்திற்கு “உதவி”யாக இருக்கட்டும் என்று ஏதாவது கொடுப்பதுண்டு. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஊருக்குப்போனபோது ஐயர் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதைப் பார்த்தபின்னர் சின்ன “உதவி”யையும் செய்வதில்லை!

இப்போது கோயில் ஊரில் உள்ள 12 குடும்பங்களின் (அதுக்கும் அடிபாடு) பண உதவியுடன் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றது. அக்காவும் பரம்பரைக் கோயில் என்பதால் ஒரு “உரித்து” வைத்திருக்கின்றார். இந்த வருடம் அவருக்குத்தான் “பட்டோலை” பொருட்கள் வாங்கும் கெளரவம் கொடுத்தார்களாம். இனிப் பன்னிரன்டு வருடங்களுக்கு பின்னர்தான் திரும்ப எங்களுக்கு வருமாம்.

எங்கள் குடும்பத்தின் “உரித்தை”க் காக்க என்னை பட்டோலை பொருட்கள் வாங்கும் சடங்கை முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டார்..

இங்கு பெரியாரின் கொள்கைகளுக்கு முண்டுகொடுத்துக் கொண்டு பட்டோலைக் கெளரவத்தை வாங்க நான் ஒன்றும் கலைஞர் கருணாநிதி போல மஞ்சள் துண்டு போடுபவன் இல்லையே!😆

நான் அக்காவுக்கு எனக்கு கடவுள் பக்தி எல்லாம் கிடையாது. இப்படி எல்லாம் கோவிலுக்கு செய்ய வெளிக்கிட்டால், எனது கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக முடியும். அதிலும் உரிமைப்போர் செய்யபவர்கள் பலர் இருக்கும்போது இது எல்லாம் தேவையில்லாத ஆணி.

எனக்கு பட்டோலையும் வேண்டாம்; பனையோலையும் வேண்டாம் என்று பதில் எழுதினேன்!

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்று எழுதி என்னவாவது செய்யுங்கோ விடயத்தைக் கைவிட்டுவிட்டார்..

நாங்கள் ஆட்டை அடைத்து வைப்பது இல்லை என்பதால் அவிழ்த்துவிட வேண்டிய அவசியம் இல்லை!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

17 minutes ago, கிருபன் said:

நாங்கள் ஆட்டை அடைத்து வைப்பது இல்லை என்பதால் அவிழ்த்துவிட வேண்டிய அவசியம் இல்லை!

👍.........

மேலும் மேலும் அதிகமாக வாசிப்பதும், எங்களை நாங்களே கேள்விக்குள்ளாக்குவதும், இப்படியான ஒரு புரிதலை, வாழ்வை அடையவே. எவ்வளவு தூரம் இந்தப் பாதையில் போக இயலும் என்று தெரியவில்லை, ஆனால் ஆரம்பித்ததில் இருந்து பார்த்தால், ஏராளமான தூரத்தை கடந்து வந்து விட்டது தெரிகின்றது. சுற்றி வர எதுவும் மாறாவிட்டாலும் கூட, அப்படியே தேங்கிய குட்டையாக அது நின்றாலும் கூட, அதிலிருந்து எங்களால் ஓரளவாவது வெளியேற முடிந்தது என்பதே ஒரு வாழ்நாள் சாதனை..............

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாட்டனார் அருனாசலம் அவர்களின் குடும்பச் சொத்தான திருநெல்வேலி பழங்கிணத்தடி பிள்ளையார் கோவிலில் எனது பெரியப்பாவும் தனக்குத் தெரிந்தவகையில் தேவாரம்பாடி பூசை செய்து வந்தார். பெரியப்பா இறந்ததும் கோவில் சற்று விசாலமாகக் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு, சிறிய மண்டபமும் கட்டிப் பிராமண ஐயர் தற்போது பூசை செய்துவருகின்றார்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எனது அப்பாவின் அப்பாவின் காலத்தில் தோட்டம் செய்வதற்காக கிணறு தோண்டியபோது சூலம் ஒன்று வெளிப்பட்டதாம் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் சைவ சமயம் ஒடுக்கப்பட்டபோது புதைத்தார்களா தெரியவில்லை). தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் பிரதான வீதியருகில் கொட்டில் போட்டு சூலத்தை பிரதிட்டை செய்தனர். அப்பாவின் அப்பாவும், அதன் பின்னர் எனது அப்பாவும் தமக்குத் தெரிந்தவகையில் பூசை செய்து வந்தனர். 80களின் ஆரம்பத்தில் கோயிலாகக் கட்டப்பட்டு, சைவ மேனிலையாக்கம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு பிராமண ஐயர் பூசை செய்துவருகின்றார்..

கொழும்பில் இறுதிக்காலத்தில் நினைவு பிறழ்ந்த நிலையிலும் வைரவர் என்ற சொல்லைக் கேட்டால் அப்பா “என்ரை” எனச் சொல்லுவார்.. அவருக்கு திரும்பவும் ஊருக்குப் போகவோ, எள்ளங்குளச் சுடலையில் வேகவோ சந்தர்ப்பம் கிட்டவில்லை.

எனது கடவுள் மறுப்புக்கொள்கையால் நான் கோயில் சம்பந்தமாக எதுவும் செய்வதில்லை. ஆனால் கொழும்பில் இருந்த அக்கா ஏதாவது உதவி செய்யக் கேட்டால் ஐயர் குடும்பத்திற்கு “உதவி”யாக இருக்கட்டும் என்று ஏதாவது கொடுப்பதுண்டு. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஊருக்குப்போனபோது ஐயர் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதைப் பார்த்தபின்னர் சின்ன “உதவி”யையும் செய்வதில்லை!

இப்போது கோயில் ஊரில் உள்ள 12 குடும்பங்களின் (அதுக்கும் அடிபாடு) பண உதவியுடன் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றது. அக்காவும் பரம்பரைக் கோயில் என்பதால் ஒரு “உரித்து” வைத்திருக்கின்றார். இந்த வருடம் அவருக்குத்தான் “பட்டோலை” பொருட்கள் வாங்கும் கெளரவம் கொடுத்தார்களாம். இனிப் பன்னிரன்டு வருடங்களுக்கு பின்னர்தான் திரும்ப எங்களுக்கு வருமாம்.

எங்கள் குடும்பத்தின் “உரித்தை”க் காக்க என்னை பட்டோலை பொருட்கள் வாங்கும் சடங்கை முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டார்..

இங்கு பெரியாரின் கொள்கைகளுக்கு முண்டுகொடுத்துக் கொண்டு பட்டோலைக் கெளரவத்தை வாங்க நான் ஒன்றும் கலைஞர் கருணாநிதி போல மஞ்சள் துண்டு போடுபவன் இல்லையே!😆

நான் அக்காவுக்கு எனக்கு கடவுள் பக்தி எல்லாம் கிடையாது. இப்படி எல்லாம் கோவிலுக்கு செய்ய வெளிக்கிட்டால், எனது கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக முடியும். அதிலும் உரிமைப்போர் செய்யபவர்கள் பலர் இருக்கும்போது இது எல்லாம் தேவையில்லாத ஆணி.

எனக்கு பட்டோலையும் வேண்டாம்; பனையோலையும் வேண்டாம் என்று பதில் எழுதினேன்!

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்று எழுதி என்னவாவது செய்யுங்கோ விடயத்தைக் கைவிட்டுவிட்டார்..

நாங்கள் ஆட்டை அடைத்து வைப்பது இல்லை என்பதால் அவிழ்த்துவிட வேண்டிய அவசியம் இல்லை!

கற்ற பின் நிற்க அதற்குத் தக 🙏

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சமூகச் சிந்தனையாளர்

பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள்

யாராகினும்,

அவரின் வழியொற்றி நீங்கள்

வாழாதிருப்பின்

உங்களுக்கு ஒன்று சொல்வேன்

உங்களது வேலிக்குள்

உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு

எல்லா ஆடுகளுக்கும்

சுதந்திரம் வேண்டி நீங்கள்

ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம்

எதுவென்பதை நானறிவேன்.

அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை

அதுதான் அடைந்து கிடக்கிறது

நான் என் செய்வேன் என்பவர்க்கு

நானின்றொன்று சொல்வேன்

உன் சொந்தப்பட்டியில்

அடைபட்டுக் கிடக்கும்

உன் ஆட்டுக்கு விடுதலை

பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில்

வேறெந்த ஆட்டுக்கும்

நீ விடுதலை உபதேசம் செய்யாதே.

விடுதலை பெற எண்ணும்

ஆடுகளை வேட்டையாடும்

நோக்கம் மட்டுமே உன்னுடையது

என்பதை எவரும் கண்டு கொள்வார்கள்.

.

முதலில் உன்பட்டியின்

ஆட்டை, ஆடுகளை விடுதலை செய்.

20.02.2025

வாசு

வாசுவின் இந்த கவிதைக்கான பதில் கவிதை கீழே…

ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

எங்கள் பாட்டனார் அருனாசலம் அவர்களின் குடும்பச் சொத்தான திருநெல்வேலி பழங்கிணத்தடி பிள்ளையார் கோவிலில் எனது பெரியப்பாவும் தனக்குத் தெரிந்தவகையில் தேவாரம்பாடி பூசை செய்து வந்தார். பெரியப்பா இறந்ததும் கோவில் சற்று விசாலமாகக் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு, சிறிய மண்டபமும் கட்டிப் பிராமண ஐயர் தற்போது பூசை செய்துவருகின்றார்..

பிராமண ஐயர் வைச்சு பூசையாக்காட்டில் கோயிலுக்கு மரியாதை இல்லையாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பொருள் பொதிந்த கவிதை ஓணாண்டி ......... இதை விவரித்து எழுதினால் அரசியலாய் மாறிவிடும் ......... அது இங்கு வேண்டாம் . ....... இக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 27 க்கு மாற்றி விடலாமே ....... பலரும் வாசிக்கும் இடமாய் அது இருக்கும் .......! 👍

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

நல்ல பொருள் பொதிந்த கவிதை ஓணாண்டி ......... இதை விவரித்து எழுதினால் அரசியலாய் மாறிவிடும் ......... அது இங்கு வேண்டாம் . ....... இக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 27 க்கு மாற்றி விடலாமே ....... பலரும் வாசிக்கும் இடமாய் அது இருக்கும் .......! 👍

நிலமைக்கு ஏற்ப நிறம் மாறும் ஓணான் அல்ல ஓணாண்டி அவர்கள். அது வாசிப்போரின் உள்வாங்கலைப் பொறுத்தது சுவி அவர்களே!🤔

சும்மாதான் ஒரு சீண்டல் சுவி.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

நிலமைக்கு ஏற்ப நிறம் மாறும் ஓணான் அல்ல ஓணாண்டி அவர்கள். அது வாசிப்போரின் உள்வாங்கலைப் பொறுத்தது சுவி அவர்களே!🤔

சும்மாதான் ஒரு சீண்டல் சுவி.😁

சீண்டல்கள் சுகமானது திரு .பாஞ்ச் அவர்களே . .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

சீண்டல்கள் சுகமானது திரு .பாஞ்ச் அவர்களே . .........! 😂

எனக்குச் சீண்டித்தான் அமைந்தது……….இறைவன் கொடுத்த வரம்.🥰

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2025 at 17:28, கிருபன் said:

நாங்கள் ஆட்டை அடைத்து வைப்பது இல்லை என்பதால் அவிழ்த்துவிட வேண்டிய அவசியம் இல்லை!

அருமை சிறந்த பதில் உண்மையும்கூட

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.