Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்

Monday, November 03, 2025 செய்திகள்

q.png


தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.


நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.


கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு ஆண்டுகள் என இன்னும் நான்கு ஆண்டுகள் சேவை செய்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தான் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்தபோது, தனது ஓய்வு குறித்து நினைவூட்டியதாகவும் இருந்த போதிலும், தனது ஓய்வுக்குரிய ஜனவரி 20ஆம் திகதிக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜனாதிபதி வெளிநாடு சென்றதாகவும் அவர் கூறினார்.


ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பியதால், தனக்குரிய பதவி உயர்வுக்கான சட்டம் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.


இந்த அநீதி தொடர்பாக "நான் விரும்பி ஓய்வு பெறவில்லை; கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன்" என்று தான் எழுதிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், தாம் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கை தவிர, வேறு எதற்கு முன்னாலும் தலைகுனிந்ததில்லை என்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை சட்டத்துறையில் வளர்த்தவர் குமார் பொன்னம்பலம்...

https://www.facebook.com/share/v/14QPhdXVgDr/

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இளஞ்செழியனின் பேச்சைக் கேட்க மிகவும் கஸ்டமாக இருந்தது.

ஏன் இவ்வளவு வஞ்சகம்?

எல்லோரும் சமமாக வாழுவோம் என்கிறார்களே?

இதுவா சமம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொளியை எல்லோரும் பாருங்கள்.

இவர் ரணிலின் மற்றும் மகிந்தவின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார் என்றும், அதனால் தான் அரசியல் ரீதியில் பழிவாங்கபட்டார் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையான காரணம் எதுவென அறிய முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தக்கூடிய சிறந்த நிர்வாக திறமையுடன் வடக்கில் தமிழர் பலத்தை சமயோசிதமாக கட்டியெழுப்பக் கூடிய நிர்வாகி ஒருவர் முதமைச்சராக வந்தாலே தமிழ் மக்களுக்கு நல்லது. பொது வெளியுல் கண்கலங்கும், அனுதாபத்தை தேடும் இவரது சென்றி மென்ற் அரசியல் இவரது நிர்வாக திறமையை சந்தேகிக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உயர் நீதிமன்ற நீதியரசர்களக கடந்த வாரம் மூன்று தமிழர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதை விட உயர் நீதி மன்ற நீதியரசராக இருந்த தமிழர் எஸ் துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியுயர்தப்பட்டார். எனவே இளஞ்செழியனின் குற்றச்சாட்டு தவறானது. அவரது தனிப்பட்ட பிரச்சனையை இனப் பாகுபாட்டின் காரணமாக தனக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று சித்தரிக்க முயன்றுள்ளார். வழமையான தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக செய்யும் வேலையை தானும் முயன்று பார்த்துள்ளார் என்றே எடுக்கவேண்டியுள்ளது.

1 hour ago, island said:

உயர் நீதிமன்ற நீதியரசர்களக கடந்த வாரம் மூன்று தமிழர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதை விட உயர் நீதி மன்ற நீதியரசராக இருந்த தமிழர் எஸ் துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியுயர்தப்பட்டார். எனவே இளஞ்செழியனின் குற்றச்சாட்டு தவறானது. அவரது தனிப்பட்ட பிரச்சனையை இனப் பாகுபாட்டின் காரணமாக தனக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று சித்தரிக்க முயன்றுள்ளார். வழமையான தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக செய்யும் வேலையை தானும் முயன்று பார்த்துள்ளார் என்றே எடுக்கவேண்டியுள்ளது.

இளஞ்செழியன் ஒரு நல்ல நீதியரசராக இருந்தவர். சில சிறந்த தீர்ப்புகளை வழங்கியவர், ஆனால் அழுது நடிப்பதிலும், செண்டிமண்ட் காட்சிகளில் வெளுத்து வாங்குவதிலும் நல்ல திறமையுள்ளவர்.

தனக்கு காவலாக வந்த சிங்கள பொலிசார் (தேவையில்லாமல் மூக்கை நுழைக்கப் போய்) கொல்லப்பட்டதன் பின் அந்த பொலிசாரின் பெற்றோறின் காலில் வீழ்ந்து அழுதது தொடக்கம், சிங்கள பெளத்த பிக்குகளை தொழுதது தொட்டு, தனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என கண்ணீர் மல்க நாடகம் போட்டது வரை இவருக்கு நல்ல நடிப்பு திறமை உள்ளது எனக் காட்டியுள்ளார்.

அந்தந்த கால கட்ட ஆளும் கட்சிகளுக்கு விசுவாசமாக நடப்பது என்பது அரச உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களின் பொதுவான குணம். இவருக்கும் அது நிறைய இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

உயர் நீதிமன்ற நீதியரசர்களக கடந்த வாரம் மூன்று தமிழர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதை விட உயர் நீதி மன்ற நீதியரசராக இருந்த தமிழர் எஸ் துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியுயர்தப்பட்டார். எனவே இளஞ்செழியனின் குற்றச்சாட்டு தவறானது. அவரது தனிப்பட்ட பிரச்சனையை இனப் பாகுபாட்டின் காரணமாக தனக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று சித்தரிக்க முயன்றுள்ளார். வழமையான தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக செய்யும் வேலையை தானும் முயன்று பார்த்துள்ளார் என்றே எடுக்கவேண்டியுள்ளது.

நீங்கள் சொன்னது யோசிக்கபட வேண்டியவை

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா…..வா!

தளபதி விஜை அரசியலுக்கு வந்ததால் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நீதான் சரியான ஆள் தலைவா…

பிகு

கறுப்பன் குசும்பன் முதலமைச்சர் பதவிக்கு ரூட்டு போடுறான்😂

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2025 at 01:18, goshan_che said:

தளபதி விஜை அரசியலுக்கு வந்ததால் சினிமாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நீதான் சரியான ஆள் தலைவா…

பிகு

கறுப்பன் குசும்பன் முதலமைச்சர் பதவிக்கு ரூட்டு போடுறான்😂

இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும் என்று அவர் பேசும் மேடை பேச்சு காணொளி ஒன்று எனக்கு அனுப்பபட்டு பார்த்தேன். விளங்கியது நீங்கள் Island எல்லாம் அவரை பற்றி சொன்னது முழுக்க சரியே தான். ஆனால் தமிழர்களின் தீவிர ஆதரவு அவருக்கு உண்டு உதாரணத்திற்கு சில 👇

இளஞ்செழியன்... இதன் பொருள்:

இளம் --இளமையான: அதாவது மனதாலும் தளர்வடையாத இளமை

செழியன் : உன்னதமான மதிப்பு மிக்க நல்லொழுக்கம் உள்ள

"மனதால் இளமை உடைய மாண்பு மிக்கவர்".

இத்தகைய மாண்புகள் கொண்ட உங்கள் தலைமை வந்தால்தான் வீழ்ந்து தாழ்ந்து கிடக்கும் தமிழினம் தலைநிமிரும் ஐயா

---

நீதியே பயப்படும் உங்களை பார்த்து ஐயா. நேர்மையின் வடிவமே! உங்களால் தான் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இறைவன் அருளால் நீங்கள் வாழ்க வளமுடன்.

---

தம்பி நீதிபதி இளஞ்செழியன் நீடூழி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் ஈழம் வாழ்க நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2025 at 01:18, goshan_che said:

கறுப்பன் குசும்பன் முதலமைச்சர் பதவிக்கு ரூட்டு போடுறான்😂

இத்தனை துணிவாக பல வழக்குகளில் எதிர்பார்க்காத தண்டனைகளை வழங்கிய ஒரு நீதிபதியாக இருந்தவர் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில்....... முடிந்தால்..... 2009 க்கு முன்னால் வந்திருக்க வேண்டும்.

வரவில்லை.... அதற்கான காரணம் என்ன ?

இப்போது அவரை யாரோ அரசியலுக்குள் இழுக்க முனைகின்றார்கள்.

தனக்கு பதவி உயர்வு தரவில்லை என்பதால்.... அவரும் அனுரவைப் பழிவாங்கலாம் என்று நினைத்து ... நான் யார் என்று காட்டுவேன் என்று வெளிக்கிட்டுவிட்டார். மக்களுக்கான அரசியல் இப்போது யாரும் செய்யும் நிலையில் இல்லை .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.