Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் விடயம் தொடர்பாக முக்கிய விடயம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரியநேத்திரனின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போதுதான் அவருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

அரசியல் குழுவின் இறுதி முடிவு! கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன் | Ariyanathran Expelled From The Party

பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் மூலமாக கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

கட்சியின் அரசியல் குழு கூடி குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தை நானும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆகவே அவர் இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.” என்றார்.

https://akkinikkunchu.com/?p=356525

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்

தைப்பொங்கல் சிரிப்புகளில் வரவேண்டிய செய்தியைப்போல் சுமந்திரன் கட்சியின் நிலை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் முடிவே அரசியல் குழுவின் முடிவு.

அடுத்தது யார்?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனின் முடிவே அரசியல் குழுவின் முடிவு.

அடுத்தது யார்?

யார்யாரெல்லாம் புலி அனுதாபிகளோ அவர்களனைவரும் நீக்கப்படுவர். அடுத்தவர் சிறீதரன்?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்... தமிழரசு கட்சியை சிதைத்துக் கொண்டு இருக்கும்,

சுத்துமாத்து சுமந்திரனைத் தான் வெளியேற்ற வேண்டும்.

இந்த, நரகத்தின் முள்ளு தமிழரசு கட்சியில் இருந்தால்,

இன்னும் பல தோல்விகளை பாரம்பரியமான தமிழரசு கட்சி சந்திக்க வேண்டி வரும்.

பல தோல்விகளை சந்தித்த சுமந்திரனை... உடனே, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் சுமத்திரன்மட்டுந்தான் கட்சியில் மிஞ்சுவார் போல இருக்கிறது.

அரியநேந்திரனுக்கு சங்கு.

உன்னோட சேர்ந்து நான் செய்யும் காரியம் ரொம் பயங்கரமாக இருக்கும் என்ற வாக்கிற்கு அமைய சங்குக் கூட்டணியும் பத்தி எழுத்தாளர்களும் அரிநேந்திரனுக்கு சங்கு ஊதிவிட்டு பின்வாசல் வழியாக சுமத்திரனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனின் முடிவே அரசியல் குழுவின் முடிவு.

அடுத்தது யார்?

பார் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் மூலமாக கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முதல் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

கட்சியின் அரசியல் குழு கூடி குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தை நானும் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆகவே அவர் இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.” என்றார்.

எனக்கொரு சந்தேகம்.

ஒரு அமைப்பிலோ அல்லது கட்சியிலோ பதில் பொறுப்பில் இருக்கும் ஒருவரோ அல்லது பதில் பொறுப்பில் உள்ளவரின் கீழ் உள்ள பிரதிநிதிகளின் ஆதரவுடனோ அந்த அமைப்பின் அல்லது கட்சியின் அதி முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?

இது பொதுவானதொரு கேள்வி .

தமிழரசுக் கட்சி யாப்பு என்ன சொல்கின்றது என்பது தெரியவில்லை .

அந்த யாப்பின் பிரகாரம் கட்சி இப்போது செயற்பட்டாலும்

நாட்டு சட்டங்களுக்கு அந்த யாப்பு அமைவானதாக இருக்கின்றதா?

இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை அரியநேந்திரன் கட்சியில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பை வழக்குத் தாக்கல் செய்யும் பட்சத்தில் நீதிமன்றம் அளிக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அரியநேத்திரனின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போதுதான் அவருக்கு கடிதம் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

அரியநேந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்க, ஜோசவ் பரராஜசிங்கத்தின் நினைவு கூரல் கூட்டத்திற்கு அரியநேந்திரனை அழைத்தமைக்காக நீங்களும் சுமந்திரனால் கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக கூறுகிறார்களே, அதெப்படி? முதலில் உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவது, பின்தான் காரணம் தேடிக் கண்டுபிடிப்பதா? அரசியல் அறிவு, ஒழுக்கம் இல்லாதவர்களின் செயற்பாடு இப்படித்தான் இருக்கும். கட்சிக்காகவே மக்கள் என்பது இவர்களின் முட்டாள்த்தனமான வாதம். கட்சி உறுப்பினர் யாவரும் சேர்ந்து, சுமந்திரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சி கூடுவோமென போராடுங்கள், இல்லையேல் எல்லோரும் கட்சியை விட்டு வெளியேறுங்கள். எப்படியிருந்தாலும் சுமந்திரன் உங்கள் எல்லோரையும் வெளியேற்றி வீட்டைப்பூட்டி திறப்பை எடுப்பார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பதே கேள்வி. அவருக்கு இந்தப்பணியை பூர்த்தி செய்யச்சொல்லி அமர்த்தியவர்கள் இப்போ அரசியலில் கேள்விக்குறியாக உள்ளார்கள். இப்போ அறிவற்ற சுமந்திரனின் நிலைதான் தொங்குபொறி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

பார் சிறி

அன்று தலைவர் போட்டு வாறன் பிள்ளையள் என்று சொன்னதும்.....

இன்று.

அனுர போட்டு வாறன் என்று சொல்வதும் நம்மவர்களின் ஒற்றுமையின் சிகர சொப்பனம்.

https://youtu.be/f8unFNmNYzw?si=yeTSgHnult2bSgMR

  • கருத்துக்கள உறவுகள்

சரி பிழைக்கு அப்பால்….

புலம்பெயர் புஸ்வாணங்கள் என்ன குத்தி முறிந்தாலும்….

தமிழரசு கட்சியின் அதிகாரம் மிக்க குழுக்கள் எல்லாமும் சுமனிடமே என்பதுதான் உண்மை.

கட்சியில் ஆதரவு இல்லை எனில் எப்போதோ சுமனை தூக்கி கடாசி இருப்பார்கள்.

சும்மா புலம்பாமல் - முடிந்தால் சுமனை கட்சியால் வெளியேற்ற பாருங்கள்.


பார் விவகாரம் வெளிவரக்கூடாது என்பதால் பார் சிறி அனுரவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்த விவகாரத்தில் அவரே கட்சியை விட்டு தூக்கி அடிக்கப்படக்கூடும்.

இதுதான் கட்சி தலைவர் என சொல்லி கொள்ளும் “செயலற்ற தலைவர்” பார் சிறியின் தலைமைதுவ இலட்சணம்😂.

ஊழல் செய்வதை தவிர வேறு எந்த திறமையும் இல்லாத ஈழத்து மிக்சர் மாமா தான் பார் சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

எனக்கொரு சந்தேகம்.

ஒரு அமைப்பிலோ அல்லது கட்சியிலோ பதில் பொறுப்பில் இருக்கும் ஒருவரோ அல்லது பதில் பொறுப்பில் உள்ளவரின் கீழ் உள்ள பிரதிநிதிகளின் ஆதரவுடனோ அந்த அமைப்பின் அல்லது கட்சியின் அதி முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?

இது பொதுவானதொரு கேள்வி .

என்ன வாத்தியார் திருப்பதிக்கே லட்டா?

3 hours ago, goshan_che said:

பார் சிறி

போன தேர்தலிலேயே அவரை தூக்கி எறிய ஆயத்தம்.

ஆனால் மனிசன் 25000-30000 வாக்குகளை இறுக அணைத்தபடி உள்ளாரே?

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

போன தேர்தலிலேயே அவரை தூக்கி எறிய ஆயத்தம்.

ஆனால் மனிசன் 25000-30000 வாக்குகளை இறுக அணைத்தபடி உள்ளாரே?

உண்மைதான்.

பைத்தியர், ஒத்தை ரோசா, பார்சிறி, 3xஅனுரகாவடிகள் என எம்மக்கள் தெரிவு அபாராம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாக்கு வங்கியை குறிவைத்துல்ளனர்.

பைத்தியர் - protest vote

அனுரகாவடிகள் - அனுர சின்ன காவடிகள் +protest vote

ஒத்தை ரோசா - இன்னும் தமிழீழ கனவில் இருக்கும் ஒத்தை ரோட்டு வாக்குவங்கி

சிறி - இவர் கிட்டதட்ட தமிழ்நாட்டு பாணி. எந்த கொள்கையும் இவருக்கு வாக்கு போட காரணம் அல்ல. மாறாக கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் யாழ் எதிர்ப்புவாதம், ஊழல் கசிவு, அரசவேலை என தனக்கான இடத்தை தக்க வைக்கிறார்.

கட்சியில் ஏனையவை இவர் அளவுக்கு ஊழல் இல்லை எனிலும் - அவர்களின் சுத்து மாத்து வெளிச்ச அளவு இவருக்கு வெளிக்கவில்லை😂.

2 hours ago, குமாரசாமி said:

அன்று தலைவர் போட்டு வாறன் பிள்ளையள் என்று சொன்னதும்.....

இன்று.

அனுர போட்டு வாறன் என்று சொல்வதும் நம்மவர்களின் ஒற்றுமையின் சிகர சொப்பனம்.

https://youtu.be/f8unFNmNYzw?si=yeTSgHnult2bSgMR

ஆனால் ஒற்றுமைக்காக என்ன விலையும் கொடுக்க முடியுமா?

சுமன், சிறி, கஜன், பைத்தியர்…

இந்த தலைமுறையின் அத்தனை அழுக்குகளும் அரசியலில் இருந்து கழுவபடவேண்டியவர்கள்.

அப்போதுதான் ஒற்றுமை சாத்தியமாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.