Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 11-12-2007 11:06 மணி தமிழீழம் [சிறீதரன்]

மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது

பாரளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் அவர்களுக்கு உலக சமாதான காவலர் விருது வழங்கப்படவுள்ளது.

அமெரிக்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் இவ் விருது இவ்வருடம் மனோகணேசனுக்கு வழங்கப்படவுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

மனோகணேசன் இந்த விருதுக்கு தகுதியானவர் தான்!

ஆனால் வழங்குபவர்கள் தகுதியானவர்களா?

இந்த விருதை மறுப்பது அவருக்கு மேலும் தகுதியை அதிகரிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

விருது வழங்க இவர்கள் எந்தளவில் லாயக்குள்ளவர்கள்?

இரத்தம் தோய்ந்த கையோடு விருதுகளை வழங்க மனோ கணேசன் அவர்கள் ஏற்பதா?

மனோ கணேசன் இந்த விருதுக்கு ஏற்றவர்

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் இந்த விருதுக்கு ஏற்றவர்

ஆனால் அமெரிக்கர்களால் அல்ல!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் சிறுமிகள் பலியான போது அதை மனிதாபிமானமற்ற வகையில் கையாண்டு அரசியல் பேசிய சங்கரி போன்றவர்களுக்கு யுனிசெப் விருது வழங்கியதோடு ஒப்பிடும் போது இக்காட்டான சூழலில் பேரினவாத அரசின் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களின் மத்தியில் அப்பாவி மக்களுக்கு இன மத பிரதேச பேதமின்றி அரசியலுக்கு அப்பாலும் நிற்க வேண்டிய நேரங்களில் நின்று குரல் கொடுத்த மனோ கணேசனுக்கு இவ்விருது சாலப் பொருந்தும்.

அமெரிக்காவில் இயங்கும் மனித நேயத்தை உண்மையாக நேசிக்கும் அமைப்புகளின் பரிந்துரையில் வழங்கப்படும் விருதாக அமைவதாகவே இதைக் கொள்ளலாம். அமெரிக்க அரசுதான் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.. அதன் நேரடி விருது என்பது.. மனித இரத்தக் கறை படிந்த கரங்கள் தரும் விருதைப் பெறப்படுவது போன்றது.

Edited by nedukkalapoovan

மனோகணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

இவ்விருதை அவர் பெற்றுக் கொள்கின்றாரா இல்லையா என்பது அவரது சொந்த விடயம். ஆனால் ஐரோப்பிய வலம் வந்து கொண்டிருக்கும் நம் கூட்டமைப்பினரை விட திரு.மனோ கணேசன் செய்யும் சேவைக்கு அவர் விருது பெறும் தகுதியை உடையவர் என்பது நிரூபணமாகியுள்ளது.

வாழ்த்துக்கள் மனோ கணேசன்.

Edited by Vasampu

மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது

manoganeshan.jpg

[11-12-2007 2.10pm] சிவில் கண்காணிப்புக் குழுவின் அழைப்பாளரும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது வழங்கப்படவுள்ளது. 2007ம் ஆண்டுக்கான உலக சமாதான காவலர் விருதிற்காக தாம் தெரிவாகியிருப்பது குறித்து இன்று (டிச.11) பிற்பகல் அமெரிக்க தூரகத்தினால் தமக்கு அறிவிக்கப்பட்டதாக மனோ கணேசன் எமது இணைய தளத்திற்கு தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டலீசா ரைஸினால் வொஷிங்டனில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Lankadissent.com

  • கருத்துக்கள உறவுகள்

உலக சமாதானத்துக்கு எதிரானவர்களினால் வழங்கப்பட்ட விருது. விருதுக்கு ஏற்றவர் திரு. மனோகணேசன் அவர்கள். சிங்களக்குகைக்குள் இருந்து தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்.

அமெரிக்காவினால் சர்வதேச ரீதியில் வழங்கப்படும் 'சுதந்திரக் காவலர்' விருதின் இரண்டமாவது இடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனை சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று முன்தினம் வாஷிங்டனில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொண்டலிஸா ரைஸ் உத்தியோகபூர்வமான அறிவித்தார்.

மனித உரிமைகளைப் பேணும் நடவடிக்கையில் விசேடமாக பணியாற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு அல்லது அமைப்புகளுக்கு இந்த விருதை இந்த வருட தொடக்கம் வழங்குவதற்கு கடந்த ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் போது அமெரிக்ககா தீர்மானித்து அறிவித்திருந்தது.

இதன்படி முதல் விருது இவ்வருடம் ஸிம்பாப்வேயில் மனித உரிமைகளுக்குப் பணியாற்றும் சட்டதரணிகள் குழு என்ற தொடண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றது.

இரண்டாவது இடம் இலங்கையில் மக்கள் கண்காணிப்புக் குழுவை அமைத்து, இங்கு மனித உரிமைப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்குக் குரல் எழுப்பி வரும் மனோ கணேசனுக்கு வழங்கப்படுகின்றது என் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இலங்கையில் சட்டத்துக்கு முரணான கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள், சித்திரவதைகள், சட்டவிரோதக் கைதுகள் போன்றவற்றுக்காக 2006 இல் தாம் அமைத்த மக்கள் கண்காணிப்புக் குழு ஊடாக மனோ கணேசன் குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : சுடர் ஒளி

மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான மனோ கணேசனுக்கு மனித உரிமைகள் பாதுகாப்பாளர் விருதினை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

நிச்சயமாய் மனோ கணேசன் அவர்கள் அந்த விருதுக்கு தற்போதுள்ள தமிழ்ப் பா.உக்களிடையே தகுதியனவரே. பெயருக்கும் பகட்டுக்கும் அல்லாமல் அல்லலுரும் கொழும்புத் தமிழருக்கு அவர் எப்போழுதும் உறுதுணையாய் இருப்பவர். எந்த நேரம் அழைத்தாலும் பதில் சொல்லி அதற்கான தேவைகளைக் கவனித்து ஆவனை செய்பவர். மக்களுக்குள் மக்களாக நின்று அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் சேவைபுரிபவர். நல்ல மனம் கொண்ட மனிதர்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசனுக்கு எங்களின் இனிய வாழ்த்துக்கள்.

பாதுகாப்பில் அதிக கவனத்தோடு செயற்படுமாறு வேண்டுகின்றோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.