Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

பெயரே ஒரு கதை

ஞாயிறு செய்தித்தாள்..

குட்டிக்கதைப்போட்டி..

இருபக்க சிறுகதைகள்..

உன் கதைக்கு பெயரென்ன?..

என்னை நானே கேட்டேன்..

முதலில் வரைந்த பெயர்..

நீ மட்டும் அறிவாய்..

அந்தக் கனாக்காலங்கள்..

எதிர்வீட்டு வாசல்..

மொட்டைமாடி..

ஜன்னலில் ஒரு பௌர்ணமியாய்..

மல்லிகை வாசம்..

தென்றல் தேசம்..

ரோஜா முகம்..

அழகாகும் முற்றம்..

நீ வந்த பொழுதுகளில்..

முதன்முதலாய்..

முகம் காட்டிய தேவதை..

சிரிக்கும் சிற்பம்..

அருகிருந்தும் தூரமாய்..

பேசிக்கொள்ளாத நட்பு..

நான் மாறுகிறேன்..

என்னை நீ மாற்றினாய்..

கனாக்கள் பிரசவம்..

தொடும் தூரத்தில் நிலா..

உனக்கு மட்டும் அனுமதி..

நீ மட்டும் வரலாம்..

காதல் விதை..

காரணி நீ காதலி..

அவளுக்கு தெரிந்திராது..

மண் படாத காதல்செடி..

எனக்காக துடிக்கும் இதயம்..

அவளுக்கும் ஆசை உண்டு..

பரிசுத்தமான இதயம் உனது..

தினசரி தரிசனம்தான்..

அழகான காலங்கள்..

அழகாக ஆசைப்பட்டேன்..

அவளுக்காய் மாறிவிட்டேன்..

ஒரு நாள் மறவேன்..

எதிர்வீட்டுக் கதவில் பூட்டு..

எங்கு போனார்கள்..

அன்று தெரியவில்லை..

மறந்தே போனாயா..

நினைவில் வாழ்கிறேன்..

என் எண்ணங்களில் இனிப்பவள்..

மனதில் நிலைத்த ஓவியம்..

அந்தக் கொலுசுப் பாதங்கள்..

எண்ண எண்ண இனிமை..

இருபது மார்கழிகள்..

ஒரு திருவிழா நாள்…

அவளாய் வந்தாள்..

மீண்டும் பௌர்ணமி..

ஜன்லைத் திறந்த தென்றல்…

இருவேறு முற்றம்..ஒரு காதல் மரம்..

வலியில்லா வாழ்வில்லை..

வலிகூட சுகுமாகும்..

தொடாமல் கலந்தவள்..

கனாக்களில் வாழ்ந்தவள்..

நலமாய் வாழ்க நீ..

நட்புக்கும் தடை..

பேசாமல் போகிறோம்..

கண்கள் மட்டும் பேசிவிடும்..

நான் உன்னை மறக்கவில்லை..

என்ன நினைப்பாயா…

மறந்தாலன்றோ நினைப்பேன்

முதுமை அறுவடைக்காய்..

உயிருக்குள் இதய ஊஞ்சல்..

கடைசி மணி..

எனக்காக அழாதே..

என் ஆத்மராகம்..

ஒரு ஜீவகானம்..

ஒரு மௌனகீதம்..

என் மரணதாகம்..

புன்னகை மறையாதிரு..

ராமன் தீக்குளித்தான்..

காதல் உடன்கட்டை..

ஈடேறிய காதல்..

சொர்க்கவாசல் சுகவாழ்வு…

எல்லாம் சுபம் காதலில்..

 

Edited by விகடகவி

  • 4 months later...
  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அதிகாலை ..

அழகான கனவு ..

புல்லின் மேல்  பூக்கள்  ஆடும் பொழுது...

தெளிந்த வானம் பார்த்து சுகந்து கிடக்க ..

கால்களில் சலனம் ..

கீழே பாக்கிறேன் ...

புல் எல்லாம் ட்கள்  ஆகும் அதிசயம் ...

எழுந்து பாக்கிறேன்

பஞ்சு மெத்‌தை கூட பாறயை போல் ..

Edited by விகடகவி

பெயரே ஒரு கதை

.

.

.

.

" என்ன நினைப்பாயா…

மறந்தாலன்றோ நினைப்பேன்

முதுமை அறுவடைக்காய்..

உயிருக்குள் இதய ஊஞ்சல்..

கடைசி மணி..

எனக்காக அழாதே..

என் ஆத்மராகம்..

ஒரு ஜீவகானம்..

ஒரு மௌனகீதம்..

என் மரணதாகம்..

புன்னகை மறையாதிரு.. "

 

 

 

ஆழ்ந்த நினைவுகளை மனதுள் கடத்துகிறது கவிதை... முடிவுறா காதலின் வீரியம் வாழ்க்கை பயணத்திலேங்கும் உடன் பயணிக்கிறது, அதன் தாக்கத்தை எங்கும் விதைத்து செல்கிறது, இந்த கவிதையும்.

நன்றிகள் அண்ணா நல்லதொரு படைப்பிற்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்...

  • தொடங்கியவர்

ஊர் போற்றும் வாரி இறைக்கும் போது 

ஊதாரியென தூற்றும் ..வக்கிழக்கும் போது 
வெறும் காகிதம்தான் பணமென்ற 
பெரும் கருத்து மாறும் - நல்லவர்கள் 
இல்லை என்று உள்ளே தோணும்  -பணம்
உற்றமும் சுற்றமும் ..
ஓடவும் ஒழியவும்..
கூடவும் குழையவும்
வைக்கும் மாயக்கோல் நிரந்தர 
மந்திரக்கோல்..
உழைப்பும் உன்னத செலவும்
சிக்கனமும் சேமிப்பும் 
புரியும் ஓடத் தளர்ந்து 
உடலும் உள்ளமும் 
திகைக்கும் போது .. 

Edited by விகடகவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விகடகவி......தொடருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாஞ்சையுடன்  விகடகவிக்கு,

 

தங்களின் கவிமழையில் நனையக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் ....

  • தொடங்கியவர்

நன்றிகள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மெல்லினமும் வல்லினமும் பின்னிக்கொள்ளுதே

வார்த்தைகளை சேர்த்துவிட ஹார்மோன் சொல்லுதே 
தங்கமேனி உருகி உருகி ஈரம் பூக்குதே 
தாகம் என்று தீருமென்று கட்டில் கேக்குதே
மெல்லினமும் வல்லினமும் பின்னிக்கொள்ளுதே
வார்த்தைகளை சேர்த்துவிட ஹார்மோன் சொல்லுதே 
 
விரல்கள் யாவும் பூக்கள்தானே முதலாம் பாதியில்
பூக்கள் தொட்டு தேகம் தீயில் இரண்டாம் பாதியில் 
தீயை அணைக்குது வியர்வை மழையே போதவில்லயே -அது
போதவில்லயே 
மழையில் கலையும் தாகம் இதுவா புரியவில்லயே -இது
புரியவில்லயே 
மெதுவாக இரதம் ஒன்று வேகம் கொள்ளும் 
தரை ஏனோ தடுமாறி ஸ்நேகம் கொள்ளும் 
உள்ளிருந்தும்  காற்று வீசும்..
சொல்லிழந்தும் உதடுகள் பேசும்.. 
உள்ளிருந்தும்  காற்று வீசும்..
சொல்லிழந்தும் உதடுகள் பேசும்.. 
உதை பட்ட தலயணை தரையில் அழும்  
 
மெல்லினமும் வல்லினமும் பின்னிக்கொள்ளுதே
வார்த்தைகளை சேர்த்துவிட ஹார்மோன் சொல்லுதே 
தங்கமேனி உருகி உருகி ஈரம் பூக்குதே 
தாகம் என்று தீருமென்று கட்டில் கேக்குதே
மெல்லினமும் வல்லினமும் பின்னிக்கொள்ளுதே
வார்த்தைகளை சேர்த்துவிட ஹார்மோன் சொல்லுதே 

 

  • 4 months later...
  • தொடங்கியவர்

இந்த சூரியன் நிலவுக்குத்தான் வழிவிடுகிறான் என நினைத்திருந்தேன்..ஆனால்

நிலவையும் அவனையும் சேரப்பார்த்தபின்தான் புரிந்தேன் அவன் இரவுக்குத்தான் வழிவிடுகிறானென்று..

  • தொடங்கியவர்

நாளை என்ற கனவுக்கோட்டைக்காக இன்று நாங்கள் ஒரு செங்கல்லை கூட நகர்த்துவதில்லை

  • தொடங்கியவர்

சின்ன தேநீர் குவளைகளில் கூட சைவம் அசைவம் பிரித்து வைக்கும் பெண்கள் ஆண்கள் வெளியே அருந்தும் உணவெல்லாம் அறிந்தால் ..ஆண்கள் சந்நியாசி ஆகி விடுவார்கள் .

  • தொடங்கியவர்

வயிற்றில் சுமக்கும் தாயையும் சேர்த்தே நெஞ்சில் சுமக்கும் தந்தையே -உன் அருமை நான் உணர்ந்தேன் நானும் தந்தையான பின்னரே....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாள் முழுவதும் மழை. நனையப் பிடிக்காமல்  யாழ்இணைய கவிதைப்  பக்கத்திற்குள் ஒதுங்கினால் தினசரி துரறல் தெப்பலாக நனைத்து விட்டது, ஒவ்வொரு வரிகளிலும் பெயர் எழுதிய கதை மனசெல்லாம் மழை. விகடகவிக்குள் கவிதை அருவுியாய் கொட்டுகிறது, பாராட்டுக்கள். தொடருங்கள்

  • தொடங்கியவர்

நன்றி:)

  • தொடங்கியவர்

உண்மையாகவே என்னைக் காதலிக்கிறாயா?
நூறு முறைகள் கேட்டேன்.
தெரியாதா?..(சிரித்துக்கொண்டே) நூறு முறைகள் சொன்னாய்.
பாவி...இல்லை என்பதை ஒரு முறையாவது சொல்லியிருக்கலாமே!

  • தொடங்கியவர்

பொய்த்தூண்கள் கொண்டு நாம் கட்டும் கோட்டை நம்மீதே இடிந்து வீழும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே என்னைக் காதலிக்கிறாயா?
நூறு முறைகள் கேட்டேன்.
தெரியாதா?..(சிரித்துக்கொண்டே) நூறு முறைகள் சொன்னாய்.
பாவி...இல்லை என்பதை ஒரு முறையாவது சொல்லியிருக்கலாமே!

சிரிப்பில மயங்கிய கவிஞர், அவள் இல்லை என்று தலையாட்டியதை கவனிக்கவில்லைப் போல...! :)

அசத்துறீங்கள் , தொடருங்கள் நன்பரே...!!

  • தொடங்கியவர்

நன்றி:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்த்தூண்கள் கொண்டு நாம் கட்டும் கோட்டை நம்மீதே இடிந்து வீழும்

 அவ்வளவும் பொருள்.

  • தொடங்கியவர்

நியாயத்தராசின் முட்கள் நம் பக்கமே சாயும் என்று நாம் எல்லோரும் எப்போதும் நினைத்துக்கொள்கிறோம் ..

நாம் என்பது நான் என்றாகும் போதும் எண்ணம் இன்னும் இறுக்கமாகிறது.

  • தொடங்கியவர்

சிரிப்பில மயங்கிய கவிஞர், அவள் இல்லை என்று தலையாட்டியதை கவனிக்கவில்லைப் போல...! :)

அசத்துறீங்கள் , தொடருங்கள் நன்பரே...!!

நன்றி குமாரசாமி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கண்ணீர்த்துளிகளெல்லாம் -மன
வலிகளல்ல..அவை
அன்பிலும் துளிர்க்கலாம்..
ஆனந்த நெகிழ்விலும் துளிர்க்கலாம்..

  • 3 months later...
  • தொடங்கியவர்

அம்மா நீ இல்லாமல்
என் தேவைகள் கூட
தேவையற்றுக்கிடக்கிறது..
வாழ்வின் வெற்றிடங்கள் கூட
வெறுமையாகி கிடக்கிறது..
அழைப்பாரற்று அலைபேசி அழுகிறது
வாஞ்சை மறந்த மொழி வரண்டுகிடக்கிறது
நீ சீவாத தலைமுடி வேதனையில் உதிர்கிறது
ஊட்டாத உணவு உள்ளிறங்க மறுக்கிறது..
விசும்பலை விழுங்கிவிட்டேன்
வேதனையை முடியவில்லை
கன்னங்களை துடைத்து விட்டேன்
கண்ணீரை முடியவில்லை
உன் சேலை இருக்கிறது
உன் வாசம் இருக்கிறது
உன் பரிசம் இல்லையம்மா
உன் பாடல் கேட்கிறது
உன் வார்த்தையெதிர் ஒலிக்கிறது
தூக்கம் வரவில்லயம்மா...
இன்னொரு பிறவி
உன் மடியில் பிள்ளையாக
மீண்டும் வரம் வேண்டும்ம்மா
அம்மா !!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கொட்டும் மழையால்...
கரையாள்..

கோடை வெயிலால்...
உருகாள்...

எதிரே வந்தால்..
பாராள்..

என்வாய் சொன்னால்..
கேளாள் ..

என்றே நொந்தபின்..
ஓர் நாள்..

கண்கள் காணவும்..
கரைந்தாள்..

விலகிப்போகவும்..
உறைந்தாள்..

உயிர்வரை சென்று
பார்த்தாள்..

நலமா என்றே
கேட்டாள்..

காலங்கடந்தபின்..
கேட்டாள்..
சிலையாய் சமைந்தவன்
நான்தான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விகடகவி said:

நலமா என்றே
கேட்டாள்..

காலங்கடந்தபின்..
கேட்டாள்..
சிலையாய் சமைந்தவன்
நான்தான்!

நீங்கள் மட்டுமில்லை.. tw_astonished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.