Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களுவாஞ்சிகுடியில் தற்கொலை குண்டுத்தாக்குதல் - பிள்ளையான்குழு உறுப்பினர் இருவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக பிள்ளையான் குழு உறுப்பினர்கள் இருவரும் தற்கொலைதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் களுவாஞ்சிகுடியில் மட்டக்களப்பு – கல்முனை வீதியின் அற்புதப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிள்ளையான் குழு அலுவலகத்தில் கடமையாற்றும் ரொகான்,ஜெகன் என்பவர்களே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடியில் இருந்து கல்லாறு முகாமுக்கு சென்றுகொண்டிருந்தபோது துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் இவர்கள் மீது தற்கொலை குண்டை வெடிக்கவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்த பெண் ஒருவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

களுவாஞ்சிகுடி பிரதேசத்தை சேர்ந்த தம்பிராஜா கஜேந்தினி(32வயது) என்பவரே காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

http://swissmurasam.info/content/view/2680/

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடியில் இன்று முற்பகல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

களுவான்சிகுடியில் தற்கொலை குண்டு தாக்குதல் தமிழீழமக்கள் விடுதலை புலி இயக்க போராளிகள் இருவர் பலி

வீரகேசரி இணையம் - களுவான்சிகுடி ஒண்டாச்சி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதில் இரு தமிழீழ் மக்கள் விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளிகள் பலியாகியுள்ளனர்.

இன்று முற்பகல் 9.30 மணியளவில் இத் தற்கொலை குண்டுதாக்குதல் இடம் பெற்றுள்ளது . இத் தற்கொலை குண்டுதாரியின் உண்மையான இலக்கு எதுவென தெரியவில்லை எனவும் இ சந்தேகத்திற்கிடமான முறையில் ஆனொருவர் அவ்விடத்தில் நடமாடியதையடுத்து.

தமீழீழ மக்கள் விடுதலை புலிகள் இயக்க போராளிகள் அச்சந்தேகநபரை அழைத்து விசாரிக்க முற்பட்ட வேளை இத் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலை புலிகள் இயக்க பேச்சாளர் அசாத் மெளலான தெரிவித்துள்

வீரகேசரியின் சுருதி மாற்றத்திற்கான காரணம்????

தமீழீழ மக்கள் விடுதலை புலிகள் இயக்க போராளிகள்

அரிக்குது

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

வீரகேசரி நாளேடு மற்றும் வார ஏடு அண்மைக்காலமாக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செய்திகளையும், கட்டுரைகளையும், பேட்டிகளையும் வெளியிட்டு வருவதுடன் கிழக்கு ஒட்டுப்படைக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாகவே 10.02.08 இல் வீரகேசரி வார வெளியீட்டில் மட்டக்களப்பிலிருந்து செயற்படும் ஒட்டுப்படைக் குழுவின் பிரதித்தலைவரான பிள்ளையானின் பேட்டியினை வெளியிட்டிருந்தது.

தற்போதைய காலகட்டத்தில் பிள்ளையானின் பேட்டியினை வீரகேசரி வெளியிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

பேச்சுக்கு ஒட்டுப்படையினரின் மிரட்டலினால்தான் வெளியிட்டோம் என்று வைத்துக்கொண்டால் கொழும்பிலிருந்து செயற்படும் தினக்குரல், சுடரொளி எவ்வாறு தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்கின்றது?

இதே வீரகேசரி நாளேடு மற்றும் வார ஏடு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகுவதாக அறிவித்த போது அந்த நேரம் தேசியத்துக்காக செயற்பட்டது. அப்போது அதற்கு மாமனிதர் சிவராம் அவர்கள் பாரிய பங்களிப்பினைச் செய்திருந்தார்.

ஆக அப்போது சிவராம் அவர்கள்தான் அப்போது வீரகேசரியினை தேசியத்துக்காக வேலை செய்ய வைத்ததோ தெரியவில்லை.

ஆகவே, தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களே இவ்வாறு தேசியத்துக்கு எதிராக துணை போகும் வீரகேசரி நாளேடு, வார ஏடுகள் போன்றவற்றை புறக்கணியுங்கள்.

கொழும்பில் நெருப்பாற்றுக்கு மத்தியில் இருந்து தேசியத்துக்காக உண்மையாக உழைக்குத் ஏடுகளை அடையாளம் கண்டு அவர்களின் ஏடுகளை வாங்கிப் படித்து அவர்களையே ஊக்குவியுங்கள்.

வீரகேசரியின் சுருதி மாற்றத்திற்கான காரணம்????

மைவிடம்

ட்சி அதிகாரம்

யலாமை

ர்ப்பு

யிர்ப்பயம்

தியம்

ச்சரிக்கை

மாற்றம்

ந்து நட்சத்திர விடுதி

ப்பந்தம்

.....

(ஆயுதம்)

உயிரெழுத்து உதாரணங்கள்!

மெய்யெழுத்து காரணங்கள் யாரரிவாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

அமைவிடம்

ஆட்சி அதிகாரம்

இயலாமை

ஈர்ப்பு

உயிர்ப்பயம்

ஊதியம்

எச்சரிக்கை

ஏமாற்றம்

ஐந்து நட்சத்திர விடுதி

ஒப்பந்தம்

ஓ.....

ஃ (ஆயுதம்)

உயிரெழுத்து உதாரணங்கள்!

மெய்யெழுத்து காரணங்கள் யாரரிவாரோ?

அப்படியென்றால்

சுருதிமாற்றம் ஏற்பட்டுவிட்டது என்கின்றீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரியில் ஒரு காலத்தில் அர்பனிப்புமிக்க ஊழியர்கள் கடமையாற்றினர் இப்பொழது சுயநலத்தக்காகவும் பணத்தக்காகவும் kudumபத்தக்காகவும் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் இருக்கின்றார்கள் அதானல் வீரகேசரியின் சுருதி மாறி றொம்ப நாள் ஆச்சுங்கோ ஆனால் வீரகேசரியின் விற்பனை குறைஞ்சும் றொம்பநாளாச்சு...

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

-- ஓரவஞ்சகம்

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரியில் இருக்கும் சிலர் தமது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் தமிழ்த் தேசியத்தை பழி வாங்குகின்றனர் என்பதே இங்கு உண்மை. இவர்களைப் போன்றவர்களின் சிறிய ஆசைக்கு தமிழ்த் தேசியம் பலியாகாது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காலம் வேண்டுமானால் இப்போது அவர்களுக்கான காலமாக இருக்கலாம், ஆனால் வரலாறு அவர்களுக்காக ஒருபோதும் காத்திருக்காது என்பதனை வீரகேசரி நிர்வாகம் புரிந்து கொண்டு தம்மை சுதாரித்து தம்மை திருத்திக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை தாக்குதல் இனியபாரதி குழுவால் நடத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடிப்பில் இரு பிள்ளையான் குழுவினர் பலி! பொதுமக்கள் ஒருவர் காயம்

மட்டக்கப்பு ஒந்தாச்சி களுவாஞ்சிக்குடிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரு பிள்ளையான் குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈருளியில் வந்த சந்தேக நபரை வழிமறித்து சோதனையிட முற்பட்ட போது ஈருறுளியில் வந்த நபர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். குண்டு வெடிப்பின்போது இரு பிள்ளையான் குழு உறுப்பினர்கள் இருவர் உட்பட மூவரும் சம்பவ இடத்தில் உடல் சிதறிப் பலியாகியதோடு மேலும் ஒரு பொதுமகன் காயமடைந்துள்ளார்.

கொல்லப்பட்ட துணை இராணுவக் குழுவினர் தம்பட்டையைச் சேர்ந்த ஜெகன் மற்றும் ஆரையம்பதியைச் சேர்ந்த சுதன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பொதுமகன் அற்புதப் பிள்ளையார் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றும் 23 அகவையுடைய தந்திராஜா கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு ஆயுததாரி பிள்ளையான் உட்பட குழுவின் முக்கிய ஆயுததாரிகள் கலந்துகொள்ள இருந்ததாகவும், அவர்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதலை நடத்த குறித்த நபர் வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்குண்டுத் தாக்குதல் யாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தெரியவில்லை என பிள்ளையான் அல்லது கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலயும் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு குறைப்பட்டுக் கொண்டார், புலத்தில ரிவியப் போட்டால் அதிலயும் ஒட்டுக் குழு எண்டு கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லுறாங்கள் எண்டு. அப்ப எப்படியாம் கூப்பிடுறது இந்தக் குழுக்களை? த.வி.பு (பிள்ளையான் பிரிவு) எண்டு மரியாதையாக் கூப்பிடலாமோ தெரியேல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.