Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

நன்றி: புதுமை

எமது கோயில்களில் தரப்படும் பிரசாதமாக தேங்காய், வாழைப்பழம், மற்றும் சுண்டல் தரப்படுவதற்கும் ஒரு காரணம் உள்ளதாம். இவை மூன்றிலுமே நாம் உயிர் வாழத் தேவையான அனைத்து சக்திகளும் உள்ளதாகச் சித்த வைத்தியர் ஒருவரின் பேட்டியின் போது அறிந்து கொண்டேன். நாம் உயிர் வாழ இவை மூன்றுமே போதும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இன்று கோயில்களாக இருக்கும் பல இடங்கள் சித்தர்களின் சமாதி என்றும், ஒரு உடலின் அமைப்பாகவே கோயில்கள் அமைந்திருக்கின்றன என்பதையும் அறிந்தேன்.

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

நன்றி: புதுமை

அட...பிரபஞ்சமானது விரிந்து கொண்டு போகுதுன்னு விஞ்சானிகள் சொல்லினம். நீங்க அதை தேங்காய்க்குள் அடக்கிட்டிங்கே..? <_<

எமது கோயில்களில் தரப்படும் பிரசாதமாக தேங்காய், வாழைப்பழம், மற்றும் சுண்டல் தரப்படுவதற்கும் ஒரு காரணம் உள்ளதாம். இவை மூன்றிலுமே நாம் உயிர் வாழத் தேவையான அனைத்து சக்திகளும் உள்ளதாகச் சித்த வைத்தியர் ஒருவரின் பேட்டியின் போது அறிந்து கொண்டேன். நாம் உயிர் வாழ இவை மூன்றுமே போதும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இன்று கோயில்களாக இருக்கும் பல இடங்கள் சித்தர்களின் சமாதி என்றும், ஒரு உடலின் அமைப்பாகவே கோயில்கள் அமைந்திருக்கின்றன என்பதையும் அறிந்தேன்.

ம்ம்ம்...தமிழச்சி அக்கா நன்னா கோயிலில சுண்டல் வாங்கிறா என்று விளங்குது...(கீயூவில இருந்து தான் வாங்கிறனியளோ :o )..தமிழச்சி அக்கா உந்த சித்த வைத்தியரின்ட பேட்டியை எல்லாம் கேட்டு இப்படி ஆகிட்டா...(அச்சோ :D )...வேண்டாமக்கா அது ரொம்ப கொடுமையாக்கும்..இப்ப தான் விளங்கினது தேங்காய் யாரும் போய் கோயிலில அடித்தா சுண்டல் அண்ணா மாதிரி ஆட்கள் பாய்ந்தடித்து தேங்காய் பொறுக்கி சாப்பிடுறவை என்று.. :) (நான் சும்மா பகிடிக்கு தகவலிற்கு தாங்ஸ் :D )...அதற்காகா தேங்காய்,வாழைபழம்,சுண்டலை சாப்பிட்டு கொண்டு இருந்திடாதையுங்கோ என்ன தமிழச்சி அக்கா... :(

அது சரி சித்தர் என்றா என்ன எனக்கு ஒருக்கா எஸ்பிளைன் பண்ண முடியுமா ஜம்மு பேபியும் சித்தர் ஆகலாமோ... <_< (கோவிக்காம என்ட டவுட்டை கிளியர் பண்ணிவிடுங்கோ என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

பிரபஞ்சம் கோள வடிவமா? இது என்ன புதுக் கதை?

இந்த மதத்தில் நடக்கிற அர்த்தமற்ற கூத்துக்களுக்கு விஞ்ஞான விளக்கம் கொடுக்க முற்பட்டால் இப்படித்தான் வரும்.

இப்படி ஏதாவது "வெங்காய" விளக்கம் கொடுத்து, கடைசியில் தேங்காய் உள்ளே அழுகி இருக்க, அதற்கு இன்னும் ஒரு விளக்கம் கொடுத்து பரிகாரத்திற்கு காசு பறிக்கலாம். அதுதானே நடக்கிறது.

சபேசன் பிரபஞ்சத்துக்குள்ளை தேங்காயும் அடங்குந்தானே? அதாலை தான் பிரபஞ்சத்திற்கு குறியீடாக தேங்காயை உடைக்கிறார்கள் தேங்காய் வடிவில் பிரபஞ்சம் என்று மந்திரம் ஓதிய படி.

செவ்வகத்தினுள் சதுரம் அடங்கும் எண்டாலும் சதுரத்தை செவ்வகம் என்று சொல்ல முடியாது என்றமாதிரி நுணுக்கமான விவகாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுருங்கச் சொன்னா.. தேங்காய்க்குள் பிரபஞ்சம் என்பது.. காட்டூண் கிறுக்கலுக்கால ஓர்மமா வார சிங்களவனை வென்று தமிழீழம் பெறுவது மாதிரி..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்தின் தோற்றமும் அழிவும் தேங்காய் வடிவத்தினால் இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அறிய..

http://www.pbs.org/wgbh/nova/elegant/media2/3012_q_01.html

  • 3 years later...

சின்ன வயதில் கலட்டி அம்மன் கோயில் தேரின்போது நடந்த தேங்காய் அடியின் பின்னர் பவுன் மோதிரம் ஒண்டு கண்னெடுத்தனான்..

அதை.. பொன்னையாவின் வளர்ப்பு மீன்கடையில் ஆறு கொலம்பியன் பூனை மீன்களுக்கு பண்டமாற்றம் செய்தேன்.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.