Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணாடி லெனின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமாரின் அன்பு கட்டளைக்கு இணங்கி கலை நிகழ்ச்சிக்கு போவதிஸ்கு ஆயத்தமானான் சுரேஷ் கனடாவில் இருந்து வந்த சுரேசிற்கு சிட்னி வாழ் தமிழர்களின் வாழ்க்கை முறை கொஞ்சம் நல்லதாகவே இருந்தது அவன் வந்த போது காலைநிலை வேறு இலங்கையில் உள்ளது போன்று இருந்தபடியால் அவனுக்கு மேலும் சிட்னி பிடித்திருந்தது.

கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் சுரேஷ்,நான் சிவகுமார் மச்சான் ரெடியா என்று வாசலிலே நின்ற படியே கூப்பிட்டான்.இருவரும் கிளம்பினார்கள் படைபாளிகள் சங்க கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதிற்கு.

பட்டு சேலைகள்,கதர் வேட்டிகள் என்று தமிழ் மக்கள் கூட்டத்தை கண்ட சுரேஷிற்கு தானிருப்பது ஊரிலா என்று ஒரு சந்தேகம் ஒரு கணம் தோன்றியது.அந்த எண்ணத்தை பொய்யாக்கியது பக்கத்தில் இருந்த இளசுகளின் ஆங்கில உச்சரிப்புகளும்,கிளி பேச்சும்.

மேடையில் அங்குமிங்கும் ஓடி திரிந்து கொண்டு மைக்கை செட் பண்ணி கொண்டிருந்தாள் ஒரு தமிழன்பர்,இடைகிடையே இன்னும் சில நிமிடங்களிள் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்று கூறி கொண்டே இருந்தார் ஒரு படியாக நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.

பட்டுவேட்டி,விபூதி குறியுடன் சுரேஷின் வயதை ஒத்த ஒருவர் மேடையில் ஏறினார் அழகான மூக்குகண்ணாடி அணிந்திருந்தார் தனது பேச்சை அழகு தமிழில் தொடங்கினார்,தொடங்கு முதல் பக்தி பாடல் ஒன்றை பாடி தன் பேச்சை ஆரம்பித்தார்.பாரதியார்,மகாத்

மா காந்தி போன்றோரின் சுகந்திர தாகம் பற்றியும்,ஆத்மீக சிந்தனைகள் பற்றியும் சில நகைச்சுவை துணுக்குகளை போட்டு சபையோரை அலுப்பு தட்டாம தனது பேச்சை அரங்கிற்றி கொண்டிருந்தார்.

மேடையில் பேசியவரை எங்கையோ கண்ட மாதிரி இருக்கே குரல் கேட்ட மாதிரி இருக்கே என்று கேட்டு கொண்டிருந்தான் சுரேஷ்,இதை உணர்ந்தவன் போல் சிவகுமாரும் என்ன மேடையில் பேசுவது தெரிந்த நபர் போல் இருக்கிறதா என்று கேட்டான்.

ஒம்டாப்பா அது தான் யோசித்து கொண்டிருக்கிறேன் கிளிக் பண்ணுதில்லையடப்பா என்றான் சுரேஷ் இவன் தான்டப்பா எங்களின்ட பள்ளிகூடத்தில் சீனியரா படித்த பிரசாந்.சோவித் யூனியன் சோவியத் நாடு என்ற பொரு சஞ்சிகை மாசம்,மாசம் அடித்து இலவசமாக உலகம் பூராகவும் விநியோகித்தவர்கள் அதை படித்து போச்சு கமீயூனிசம் படித்து கொண்டு திரிந்த பிரசாந் தான்,பிறகு ஏதோ இயக்கத்தில் சேர்ந்து இரண்டு வருசதிற்கு பிறகு வரும் போது கண்ணாடியும்,தாடியும் வைத்து கொண்டு ஊரில தனது பெயரை நாலும் பேர் கதைக்க வேண்டும் என்று பெண்கள் பாடசாலை முடியும் நேரத்திலும் மோட்டார் சைக்கிளில் ஓடி திரிந்து கொண்டு,நண்பர்களை தோழர்கள் என்று அழைத்து கொண்டு திரிவான் அவன் தானாடப்பா என்று கூறி முடிக்க முதலே சுரேஷ் அடாடா இவன் தான்டா "கண்ணாடி லெனின் ".அட இவன் இங்கையா இருக்கிறான் இவன் அப்பவே தமிழ் தேசியதிற்கு எதிர் கருத்து வைப்பவன் ஒன்று பட்ட இலங்கையில் கமினீயூசம் வளர்க்க வேண்டும் என்று புலம்பினவன் இன்று எப்படி புலத்தில் படைப்பாளிகளின் கலை நிகழ்ச்சியில் முன் நிற்கின்றான் என்று கேட்டான் சுரேஷ்.

பிரச்சாந் மேடைகளில் தான் தமிழ் தேசிய ஆதரவாக பேசி புலத்தில் வாழும் எம்மவர்களிடையே பிரபலாமா இருந்து கொண்டு புனை பெயரில் பத்திரிகைகளிளும்,வானொலிகளிள

கதை நன்று

உண்மைதான் புத்தன் பலர் இப்படி இருக்கிறார்கள் புகழ்தான் முக்கியம் அதற்காக எத்தனை வேடமும் போடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புததன் இந்தப் பெயரில் மானிப்பாயில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இயக்கத்தில்ஒர

ுதர் இருந்ததாக நினைக்கிறேன் சிலநேரம் இதுஅவரதுஉண்மைக் கதையோ தெரியாது????

புத்தன் அண்ணாவின்

கண்ணாடி லெனின் கதை

சிறப்பாக இருக்கிறது

சொல்ல வந்த விஷயம்

அருமை.

இப்படி கண்ணாடி லெனின்

மட்டுமில்ல பிரபலதிற்காக

அலைபவர்கள் நிறைய பேரை

கேள்விபட்டிருக்கிறேன்.

கண்ணாடி லெனின் கொஞ்சம்

வித்தியாசமாக இருக்கிறார்

தனது பிரபலதிற்காக

இரண்டு வேசம் போடுவது

சுவையாக இருக்கிறது. :wub:

வாழ்த்துக்கள் புத்தன்....

ம்ம்..புத்து மாமா கண்ணாடி லெனின் கதை பலரின் மாய கண்ணாடிகளை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது நன்றாக இருக்கிறது மாம்ஸ் கதை வாழ்த்துக்கள் :wub: ..மாம்ஸ் தூங்கிறவனையும் எழுப்ப்ப தேவையில்லை தூங்கிற மாதிரி நடிக்கிறவனையும் எழுப்ப தேவையில்லை பாருங்கோ..(உந்த தூங்கிற மாதிரி நடிக்கீனம் அவைக்கு ஆமா போடுறவையால தான் உவ்வளவு பிரச்சினையும் பாருங்கோ :wub: )..

அவர்கள் பிரபலயதிற்கு செய்கிறார்கள் என்றா அவர்களை பிரபலயமாக்கியது யார் என்று சிந்தித்தா இதற்கு இலகுவா விடையை தேடி கொள்ளளாம் என்று நினைக்கிறேன்.. :(

அப்ப நான் வரட்டா!!

சின்ன கதைக்குள் ஒரு சீர்திருத்ததையே அடக்கிட்டியள்.

ஜம்மு சொன்ன போல புகழ் விரும்பிகளுக்கு ஜால்ரா போடுறவையளை முடக்கினால் சரி.

கதை எழுதிய விதம் சூப்பர்ப் மாமு

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்துக்கு பாராட்டுக்கள் புத்தன்.

எம்மவர்களில் சிலருக்கு மேடைகளில் பேசும் போது திலிபன், அன்னை பூபதி பற்ற்ப் பேசுவதில்லை.மகாத்மா காந்தியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். எமது தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு இல்லை. தமிழை வளர்க்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும் ஆதரவு இல்லை. தமிழைக் கொலை செய்யும் சன். ஜெயா தொலைக்காட்சிகளுக்கு தான் ஆதரவு. பேசுவது தமிழ், ஈழம். உணர்வில் தமிழ் ,ஈழம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்!! குறுகிய கதைக்குள் செருகிய கரு நன்று!!! தொடருங்கள் வாழ்த்துகள்!!! :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் கூறிய சிவா,சாத்திரி,கனிஷ்டா,கொக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயம்ஒரு உண்மைச்சம்பவத்ததை தழுவியதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றாக உள்ளது புத்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.