Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிமளம் தற்கொலை: சோகத்தில் திராவிட கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 67.

இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் வசித்து வந்தார். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 10 நாட்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல் நலம் தேறியதையடுத்து நேற்று மாலை தான் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பினாலும் கவலையுடன் காணப்பட்ட அவர், நானும் என் மனைவி சரோஜாவிடமே போய் விடுகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார் (சரோஜா இரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்).

அவரைத் தேற்றிய குடும்பத்தார் அவரை தூங்க வைத்துவிட்டு உறங்கச் சென்றனர். இந் நிலையில் நள்ளிரவில் பரிமளம் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த கிணற்றுக்குள் குதித்தார்.

நள்ளிரவு 2 மணியளவில் பரிமளத்தின் மூத்த மகன் மலர்வண்ணன், தந்தையின் உடல் நிலை எப்படி உள்ளது என்பதை காண அவரது அறைக்குச் சென்றார். ஆனால், அவரைக் காணாதாதால் அதிர்ச்சியடைந்து வீட்டிலிருந்த அனைவரையும் எழுப்பினார்

அவர்கள் வீட்டிலும் தெருவிலும் பரிமளத்தை தேடி அலைந்தனர்.

இந் நிலையில் கிணற்றில் பரிமளத்தின் உடல் மிதந்தது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

திருவல்லிகேணி துணை கமிஷனர் ராமசுப்பிரமணி தலைமையிலான போலீஸ் படையும் தீயணைப்பு படையினரும் வந்து பரிமளத்தின் உடலை மீட்டனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிணற்றில் சுவற்றில் தலை மோதியதாலும் நீரில் மூழ்கியும் பரிமளம் இறந்ததாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பரிமளம் தனது மனைவி சரோஜாவின் மறைவுக்குப் பின் மன அமைதி இழந்து தவித்து வந்துள்ளார். இதனால் உடம் நலம் பாதிக்கப்பட்டார். பரிமளத்தின் மருத்துவ செலவுகளால் அவரது குடும்பத்தினர் ஏராளமாக கடன் வாங்கியுள்ளனர்.

இந் நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மறைந்த பரிமளத்திற்கு மலர்வண்ணன் (43), சவுமினியன் (40) என்ற 2 மகன்களும், இளவரசி (30) என்ற மகளும் உள்ளனர்.

மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அண்ணா பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்த பரிமளம்,

அண்ணாவின் சொற்பொழிவுகளை தொகுத்து பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

திமுக, அதிமுக என எல்லா தரப்பிலும் மூத்த தலைவர்களுடன் நெருக்கம் இருந்தாலும் சுயநலமில்லாத பரிமளம், உதவி கேட்டு இதுவரை யாரையும் அணுகியதில்லை. அரசியலை தவிர்த்துவிட்டு வாழ்ந்து வந்தவர். அண்ணாவைப் போலவே நேர்மைக்குப் பேர் போனவர்.

தான் பிறர்க்கு பாரமாக இருப்பதாக நினைத்து புழுங்கி வந்தவர் இந்த தற்கொலை முடிவை நாடியுள்ளார்.

கருணாநிதி அஞ்சலி:

பரிமளம் இறந்த தகவல் அறிந்ததும் முதல்வர் கருணாநிதி இன்று காலை அவரது இல்லத்திற்கு சென்று பரிமளம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா இரங்கல்:

பரிமளத்தில் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மிக அடக்கமான மனிதரான பரிமளத்தின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி அண்ணாவுடன் தொடர்பு கொண்ட அனைத்து தரப்பினருக்கும் இழப்பாகும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

அன்னாரின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பிரச்சனைக்காக தற்கொலை எனில் இவ்வுலகம் பிணக்குவியலாக தான் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் தற்கொலை: சோகத்தில் திராவிட கட்சிகள்

சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நெருங்கும் வேளையில் அவரது வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் திராவிடக் கட்சிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

திமுகவை தோற்றுவித்து தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு வழிகோலியவர் பேரறிஞர் அண்ணா.

தமிழகத்தில் உள்ள திராவிடப் பாரம்பரிய கட்சிகளும், இயக்கங்களும் அவரது வழித்தோன்றலாகவே தங்களை வெளிக்காட்டிக் கொள்கின்றன.

அடுத்தாண்டு வரும் அவரது பிறந்தநாள் நூற்றாண்டை வெகு விமரிசையாக நடத்துவது பற்றி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு பல முஸ்தீபுகளை செய்து வருகின்றன.

2009ம் ஆண்டு முழுவதும் உலகையே பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டை அரசு சார்பில் கொண்டாடப் போவதாக பட்ஜெட் அறிக்கையிலேயே ஆளும் திமுக அரசு அறிவித்தது.

"ஆட்சிப் பொறுப்பை இரண்டு ஆண்டுகள் மட்டுமே அண்ணா வகித்தபோதும், ஜனநாயகத்தின் மாட்சிமையை உலகுக்கு உணர்த்துவதாக அவரது நிர்வாகம் இருந்தது. அண்ணாவின் பெருமையை இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ளும்விதமாக இந்த விழாக்கள் நடத்தப்படும்" என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் அன்பழகன் கூறினார்.

இதற்கு சற்றும் குறையாத வகையில், அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டை அதிவிமரிசையாக கொண்டாடப் போவதாக கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்தார்.

இருதரப்பினரும் வரிந்துகட்டிக் கொண்டு விழா எடுக்க மும்முரம் காட்டும் நிலையில் அண்ணா குடும்பத்தில் இந்த சோக நிகழ்ச்சி நடந்துள்ளது.

அவரது வளர்ப்புமகன் பரிமளம் கடன்சுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பரிமளத்தின் மறைவு இரு பெரும் திராவிட கட்சித் தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள இரங்கற்பாவில், 'நம்மை வளர்த்து இன்றைக்கு ஆளாக்கிய அண்ணாவின் மூச்சும், ஆவியும், இதயத்துடிப்பும் என்றும் நம்மிடம் நிலைத்திருக்கும். அவரது பெருமையை பறைசாற்றுவதற்கு பிரம்மாண்டமான விழா எடுக்கவுள்ள நிலையில் பரிமளத்தின் இறப்பு மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை அரசுடைமையாக்கி அதற்கான நிதியை அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் கருணாநிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்தக் குடும்பம் பெரும் நிதி நெருக்கடியில் தான் இருந்து வருகிறது.

-தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்துரை நாத்திகத்தில் இரு;நது விலத்தி ஒன்றே தேவன், ஒன்றே குலம் எனத் தமிழ் மக்களை ஒன்றிணைக்க முயன்ற ஒருவர். அவருடைய வளர்ப்பு மகனும் அதே சிந்தனையோடு தான் வளர்க்கப்பட்டிருப்பார். அன்னாருக்குக் கண்ணீர் அஞ்சலிகள்.

டாக்டர் என்று சொல்லிறீங்கள். அவர் கூட தற்கொலை செய்யுறாரா? அப்படி என்றால் சாதாரண பொதுமக்களான எங்கள் கதி?

இந்த டாக்டர் பட்டம் ஸ்கூலில படிச்சு எடுத்ததா? இல்லாவிட்டால் யாராவது கொடுத்த கெளரவ பட்டமா?

கடன்சுமையால தற்கொலை செய்து உள்ளார் என்று வேறு இருக்கிது. டாக்டரால் கடன்படாமல் வாழமுடியவில்லையா?

இதே செய்திய தமிழ்சிறீயும் இணைச்சு இருக்கிறார் போல இருக்கிது... அதுல அவர் மருத்துவர் என்று சொல்லப்படுகிது..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36377

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அண்ணவின் வளர்பு மகனாக இருந்தாலும் அரசியல் செல்வாக்குகள் இருந்தாலும் யாரிடமும் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தியது இல்லையாம்.....யாரிடமும் கையேந்தியதும் இல்லiயாம்...அவர் கையேந்தியாது ஒன்றே ஒன்றுக்காக மட்டுமாம்..அண்ணாவின் 100 ஆண்டுகள் வருவதை முன்னிட்டு அரிய புகைப்படங்களை சேர்த்த வெளியிட இருந்தாரம் அதற்க்காக தான் பலரிடம் அதைகேட்டு அந்த வேலையில் இருந்திருக்கினறார்...

தற'கொலைசெய்ய காரணம் தான் யாருக்கும் பாரமாக இருக'கவிரும்பவில்லை என்று கூறிய-pருந்தாராம் மனைவியின் இழப்பு மருத்துவ செலவுகளாhல் ஏற்ப்பட்ட கடன்.இதனால் மனமுடைந்து தன் உயிரை எடுத்துக்கொண்டார்....

தமிழக அரசியல் செல்வாக்கை பயன் படுத்தி தொட்டதற்கெல்லாம் அதை உயயோகிக்கும் மனிதர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்....

இவருடைய நிலைமை அறிந்து திராவிட கட்சிகளாவது மருத்துவ செலவுக்கு உதவி இருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் தற்கொலை

பரிமளம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை இவர் மரணம் அடவதற்க்கு சில நாட்கள் முன்பு தான் தலைமை செயலகத்திறக்கு சென்று தான் இருப்பதற்க்கு வீடு ஒன்றை கோரியிருந்தாரம் அரச அதிகாரிகள் யாரும் அவரை கண்டுகொள்ள வில்லையாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்:

இதேவேளை இவர் மரணம் அடவதற்க்கு சில நாட்கள் முன்பு தான் தலைமை செயலகத்திறக்கு சென்று தான் இருப்பதற்க்கு வீடு ஒன்றை கோரியிருந்தாரம் அரச அதிகாரிகள் யாரும் அவரை கண்டுகொள்ள வில்லையாம்.....

பரிதாபத்துக்குரிய மனிதன்.

அண்ணாத்துரை நாத்திகத்தில் இரு;நது விலத்தி ஒன்றே தேவன், ஒன்றே குலம் எனத் தமிழ் மக்களை ஒன்றிணைக்க முயன்ற ஒருவர். அவருடைய வளர்ப்பு மகனும் அதே சிந்தனையோடு தான் வளர்க்கப்பட்டிருப்பார். அன்னாருக்குக் கண்ணீர் அஞ்சலிகள்.

இல்லாட்டிக்கு அஞ்சலி செலுத்த மாட்டிங்கள் போல. :mellow: ஆகா நல்ல மனிதர் நீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் வாசகன். சம்பிர்தாயத்துக்குக் கண்ணீர் அஞ்சலி எழுதி ஏமாற்றம் செய்வதை விட, எனக்குப் பிடித்த கொள்கையோடு இருப்பவர்களுக்கு உண்மையாக்க கண்ணீர் அஞ்சலி செலுத்துவதே மேல் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் வாசகன். சம்பிர்தாயத்துக்குக் கண்ணீர் அஞ்சலி எழுதி ஏமாற்றம் செய்வதை விட, எனக்குப் பிடித்த கொள்கையோடு இருப்பவர்களுக்கு உண்மையாக்க கண்ணீர் அஞ்சலி செலுத்துவதே மேல் என நினைக்கின்றேன்.

பாருங்கள்

இறந்த ஒரநல்ல மனிதனுக்கு இரங்கல் சொல்வதிலேயே எமக்குள் பிடுங்கல்

இவையெல்லாம்

படைநடத்தி பகைமுடித்து

விடுதலையடைந்து?????...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன்:

பாருங்கள்

இறந்த ஒரநல்ல மனிதனுக்கு இரங்கல் சொல்வதிலேயே எமக்குள் பிடுங்கல்

இவையெல்லாம்

படைநடத்தி பகைமுடித்து

விடுதலையடைந்து?????...........

ம்ம்ம்ம்...........பெருமூச்சுதான் வருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவர் பரிமளம் அவர்களின் தற்கொலை பேரதிர்ச்சியாக உள்ளது.

அவரைத் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். 2003 ஆம் ஆண்டு நான் தமிழ் நாட்டிற்குச் சென்றபோது தமிழறிஞர் நன்னன் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது பரிமளம் அவர்களிடமிருந்து நன்னன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னையும் அவரையும் நன்னன் அவர்கள் அறிமுகப் படுத்தி வைத்தார். அடுத்த நாள் அவரது அன்பான அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றேன். நீண்ட நேரம் உரையாடினோம். வெளியுலகத்திற்குத் தெரியாத தீவிர தமிழீழ ஆதரவாளர்களில் அவரும் ஒருவர். நேர்மையான மனிதர்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை கைது செய்து கொண்டு வரவேண்டும் என்று ஜெயலலிதா சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது தி.மு.க. நடுநிலை வகித்தது. இதனை என்னிடம் மனவேதனையுடன் குறிப்பிட்டார். ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை விட தி.மு.க அதனை எதிர்க்காமல் நடுநிலை வகித்ததே அவருடைய மனவேதனைக்குக் காரணம்.

2005 ஆம் ஆண்டு அவரை மீண்டும் சந்தித்தேன். அண்ணா நூற்றாண்டு விழா பற்றி நீண்ட நேரம் உரையாடினார். அண்ணாவின் சொற்பொழிவுகள் அடங்கிய ஒலித் தட்டுக்கள் சிலவற்றை தந்து உதவினார்.

சில மாதங்களுக்கு முன் நடிப்பிசைப் புலவர் கே.ஆர் ராமசாமியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக அவரைத் தொடர்பு கொண்டேன். பல தகவல்களை எனக்கு சொல்லியிருந்தார். கே.ஆர் ராமசமியின் அபூர்வமான புகைப் படங்கள் சிலவற்றையும் அனுப்பியிருந்தார்.

மிகவும் அன்பான மனிதர். வயது வேறுபாடு பார்க்காமல் எழுந்து நின்று வரவேற்கும் குணம் கொண்டவர்.

1909 ஆம் ஆண்டு பிறந்த அண்ணாவுக்கு அடுத்த ஆண்டு நூறாவது ஆண்டு. அதற்குள் அவரது புதல்வர் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாரே!

அன்னாருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்!

Edited by இளங்கோ

இவர் பற்றி இதுவரை நான் அறிந்திருக்கவில்லை... பாவம் நேர்மையா வாழ்ந்ததால் கோழையான மரணம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.