Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தை தமிழன் ஆளுவான்”

Featured Replies

“உலகத்தை தமிழன் ஆளுவான்”

-டென்மார்க் தமிழர் எடுக்கும் படம்

“உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால்இ உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும்இ திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர்இ தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல்.

உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். இதை தடுத்து அழிக்க நினைக்கும் வில்லன்இ செயற்கை சுனாமியை உருவாக்கி அந்த தீவையே மூழ்கடிக்க நினைக்கிறான். வில்லனின் யுக்தியை முறியடிக்கிற ஹீரோ எப்படி தனது லட்சியத்தை நனவாக்கினார் என்பது முடிவு. தொண்ணூறு சதவீத படத்தை டென்மார்க்கில் எடுத்திருக்கிறார் துரை. அங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட குட்டி தீவுகள் இருக்கிறதாம். அதில் ஒரு தீவை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய வள்ளுவர் சிலையையும் அங்கே நிர்மாணித்திருக்கிறார் படப்பிடிப்புக்காக. மீதியுள்ள பத்து சதவீத படப்பிடிப்பு விருதுநகர் அருகில் உள்ள கிராமத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் வசந்த்இ மற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் சிந்துராஜ்இ ரவிஷங்கர் ஆகியோர் டென்மார்க்கை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள் பூர்ணிதாஇ சுஜிபாலா ஆகியோர். காமெடிக்கு கருணாசும்இ வில்லனாக ஸ்ரீமனும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கிச்சாஸ்இ நடனம் காதல் கந்தாஸ்இ சண்டைப்பயிற்சி அனல் அரசுஇ எடிட்டிங் சதீஷ் குரோசோவா என்று முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களை தமிழகத்திலிருந்து தேர்வு செய்திருக்கும் துரைஇ ஜுன் மாதம் இளம் புயலை வெளியிடும் முடிவில் இருக்கிறார். கதைஇ திரைக்கதைஇ பாடல்கள்இ இயக்கம் என்று நான்கு வேலைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் துரைஇ நான்கு திசைகளில் மட்டுமல்ல... எட்டு திசைகளும் பேசப்படுகிற ஒரு இயக்குனராக வர வாழ்த்துவோமே!

-ஆர்.எஸ்.அந்தணன்

  • கருத்துக்கள உறவுகள்

லோட் ஒப் த றிங்ஸ், ஹரி பொட்டர் போல படமாயிருக்கும். ஆகக்குறைந்தது நாமெல்லாம் உலகத்தை ஆளப்போகிறோம் என்ற திருப்தியோடு தமிழர்கள் தியேட்டரை விட்டு வெளியெறுவார்கள். அது சரி, ஒரு குட்டித் தீவில இருந்துகொண்டு இன்ரர் நெற்றுக்குள்ளால உலகத்தை ஆளலாமெண்ட கற்பனை ஆருக்கு வரும்?... ஒரு தமிழ் இளைஞனுக்கு வந்திருக்குது. படம் வெற்றிபெற வாழ்த்துவோம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாரிந்தத் துறை ? டென்மார்க்கில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவும், கருணா மற்றும் அரச புல்நாய்வுத்துறைக்குச் சார்பாகவும் செயல்பட்டு வரும் அந்தத் "துரைக் குடும்பத்தைச் " சேர்ந்தவரா இவர் ? விளக்கம் வேண்டும். இவர் பற்றி சரியாகத் தெரியாமல் இவர் எடுக்கும் படத்திற்கு ஆகா ஓகோ என்று பராட்டுச் செய்வது சரியில்லை.

நல்ல முயற்சி. இப்படியே கன படங்கள் வரவேண்டும். இப்படி ஒவ்வொரு தமிழனும் சிந்தித்தால் நாங்கள் கற்பனையிலும், கனவிலும் வாழ்ந்து காலத்தை முடிச்சிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய விழிப்புணர்ச்சியை பாராட்டுகின்றேன் ரகுநாதன் .

இவர் யார் என்று எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் தான் சொல்லவேண்டும். ஈழத்தவர்களின் புதிய முயற்சிகளை குறை சொல்லி அவற்றை முளையிலேயே கருக செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்காக விமர்சனங்களே கூடாது என்பதில்லை, அவை எதிர்மறை விமர்சனங்களாக இல்லாமல் இருந்தால் சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

மதன்,

நான் ஈழத் தமிழர் எடுக்கும் படமென்பதற்காகக் குறை கூறவில்லை. எனது கவலையெல்லாம், டென்மார்க்கில் தகப்பன், ரெண்டு மகன்கள் என்று இருக்கும் ஒரு துரைக் குடும்பம் தமிழ்த் தேசியத்திற்கெதிராக செய்துவரும் அநியாயங்கள் நாம் அறியாததல்ல.

அவர்தான் இந்தத் துரையோ என்று எண்ணிவிட்டேன். படங்கள் மூலம் சிங்களப் பேரினவாதம் செய்யத் தொடங்கியிருக்கும் பிரச்சாரத்தினைப் "பிரபாகரன்" என்ற சிங்களப் படத்தில் காண இருந்தோம். அதுபோல இந்தத் துரையும் ஒரு தமிழ்ப்படம் மூலம் இதைச் செய்ய முயல்கிறாரோ என்று எண்ணினேன்.

இவர் அந்தத் துரை இல்லை என்றால் பேஷாகப் படம் எடுக்கலாமே ? எனது முழு ஆதரவும் அதற்கு உண்டு.

எனக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு மறைமுக நோக்கங்கள் எதுவுமற்ற படைப்பு முயற்சியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பமும். புரிந்துணர்வுடன் அளித்த பதிலுக்கு எனது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் இந்த கி.செ துரை என்பவர் அலைகள் என்கிற இணையத் தளத்தினை நடாத்துபவர். இதற்கு முன்னரும் பூக்கள் என்றுஒரு படம் எடுத்தார்.தேசியத்திற்கு எரிராக இயங்குபவர.;கோ.க. குமாரதுரை என்பவர்.கோ.க. என்றால் கோழிக்கள்ளன். என்றுபொருள்.

இந்த துரை ஈழ மக்களின் உணர்வுகளோடு மிகவும் தொடர்பு உடையவர். விடுதலையையும் மக்களையும் நேசிப்பவர். இவரது குரல் அடிக்கடி டென்மார்க் நகரத்தில் இருந்து ஜ.பி.சி வானொலிக்காக பல நல்ல கருத்துக்களுடன் வருபவர். இவர் ஒரு சமூக ஆய்வாளர், பத்திரிகையாளரும் கூட.

ஜ.பி.சி அறிவிப்பாளர் ஜெகன் அவர்களின் நிகழச்சியில் இவரது கலந்துரையாடல்களும் இடம் பெறும்.

வாழ்த்துவோம் அவரது முயற்சியை வரவேற்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
:D நன்றி சாத்திரி, நேசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.