Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் மதியுரைஞர் பதவியை வைகோவிற்கு வழங்கத் தீர்மானம்

Featured Replies

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் பதவிக்கு இந்திய அரசியல் பிரமுகர்களுள் ஒருவரான வைகோவை நியமிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வகித்த மதியுரைஞர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதால் அப்பதவிக்கு உகந்தவர் வைகோ என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறந்த உதவியாளராக விளங்கி வரும் வைகோவை அப்பதிவியில் நியமிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக மேற்படி தகவல் பிரிவு தெரவிக்கின்றனது.

அண்மைக் காலங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான பல கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வைகோ கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய பிரதமரைச் சந்தித்து விடுதலைப்புலிகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அத்துடன் விடுதலைப்புலிகள் சார்பில் கலந்துரையாடும் பொருட்டு ஐ.நா. செயலாளரையும் வைகோ சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக அவரை கௌரவிக்கவே மதியுரைஞர் பதவியை வைகோவுக்கு வழங்க விடுதலைப்புலிகள் தீர்மானித்துள்ளனர்.

இவை எவ்வாறயினும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள போது வைகோ இப்பதவியை ஏற்றுக்கொள்வது அவருக்கெதிராக இந்திய அரசு சட்ட நடவடிக்கைகளை முன்னேடுப்பதற்கு வழிவகுக்கும் என்பது குறிப்படத்தக்கது.

(திவயின நாளேட்டிலிருந்து)

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிகளா....

உங்கட கற்பனை குதிரை தறிகெட்டு ஓடுது போல இருக்குது...... :D:D:D

எண்டாலும் இது ரெம்ப ஓவர் :lol::):)

உப்பிடி எல்லாம் யோசிச்சுதானேடா இவ்வளவு காலமும் கோட்டை விடீங்க.. இப்ப கூட திருந்த மாட்டிங்களாடா?

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலமையில் இந்தியக் குடிமகனாகிய வைகோவிற்கு வி. புலிகளின் எந்தவொரு உத்தியோகபூர்வ பொறுப்புகளும் வழங்கப்படுவது சாத்தியமில்லை.

எப்பிடீங்க இப்பிடி எல்லா வருது..???

ஒருவேளை உக்காந்து யோசிப்பாங்களோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோவிற்கு இப்பதவி பொறுத்தமான பதவி. இந்தியாவை விட்டு வெளியேறவேண்டிய நிலைவரும் ஒருவேளை அப்பதவி கொடுக்கப்பட்டு ஏற்றுக்கொண்டால்.

அரசியல் ரீதியாக தோல்வியைத் தழுவிய வைகோ தமிழீழத்தமிழர்களுக்கான விடுதலையில் பங்குபெற்று வெற்றி பெற்றால் மகிழ்ச்சி தான்.

திவயினவில சிங்களவந்தான் ஏதோ கிறுக்கி இருக்கானெண்டு பாத்தா... எங்கட யாழ் களத்திலையும் சிலதுகள்

இதை என்னெண்டு சொல்ல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறுக்குத்தனமான செய்திகள் வரும்பொழுது கிறுக்குத்தனமான பதில்கள் அவசியம் தான்.

சரி அதைவிடுவோம். வைகோ தமிழகத்தில் குரல் கொடுக்கமட்டும் தானா அல்லது இந்த பதவிக்கு சரியில்லாதவரா?

  • கருத்துக்கள உறவுகள்

திவயினவை விடுங்கள், எங்கே அனைவரும் உங்கள் மனங்களில் கை வைத்துச்சொல்லுங்கள், வைக்கோ பொறுத்தமானவர் தானே ?! இந்தியாவில் பிறந்து அந்நாட்டின் அடக்குமுறைக்கு உற்பட்டு இருக்காவிட்டால் அவரை விட நல்ல ஆள் கிடையாது இப்போதைக்கு.

எல்லாவிதத்திலும் அவர் பொறுத்தமானவரே !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திவயினவை விடுங்கள், எங்கே அனைவரும் உங்கள் மனங்களில் கை வைத்துச்சொல்லுங்கள், வைக்கோ பொறுத்தமானவர் தானே ?! இந்தியாவில் பிறந்து அந்நாட்டின் அடக்குமுறைக்கு உற்பட்டு இருக்காவிட்டால் அவரை விட நல்ல ஆள் கிடையாது இப்போதைக்கு.

எல்லாவிதத்திலும் அவர் பொறுத்தமானவரே !

நன்றி.

நார்வேயில் வைகோவின் பேட்டி பதிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. பார்க்கவும். வைகோ அப்பதவிக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. தற்போதைக்கு இலக்கு விடுதலை. அதற்கு தமிழர்கள் ஒன்று பட்டால் போதும். தமிழீழ தமிழனா அல்லது தமிழக தமிழனா என பேதம் பார்க்காமல்

Edited by pakutharivu

எங்கே எல்லாரும் மனதில கைவைச்சு சொல்லுங்கோ

வை கோ Vs அன்ரண்ணா ?

வைக்கோ அய்யா செய்யும் பணி மகத்தானது. மறக்கமுடியாது மறுக்க முடியாது...

அவர் ஒரு நல்ல கொள்கை பரப்பு செயளாளர்.. ஒரு நல்ல பேச்சாளர்...

இது மட்டும் காணுமா அரசியல் ஆலோசகராக?

மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அய்யா அவர்கள் கூட பெறமுடியாததே புலிகளின் பிரதிநிதி அங்கிகாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சூராவளி. நாங்கள் இப்போது தேசத்தின் குரலுக்கு ஈடான ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோமா? அப்படியொருவர் இனி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை. அவரை யாராலும் ஈடு செய்ய முடியாது. நாம் எமது தேசத்தின் குரலுடன் வைக்கோவையோ அல்லது குமார் பொன்னம்பலத்தையோ ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. தனது வாழ்நாளையே தனது இனத்துக்காகவும், ஈழ விடுதலைக்காகவும் கொடுத்து தலைவரின் மனதிலும், தமிழர் மனதிலும் ஓங்கி வீற்றிருப்பவர் அவர்.

ஆனால் வைக்கோவுக்கும் குமாருக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு இடமிருக்கிறது. அவர்கள் எமது தேசத்தின் குரலின் நிழலில் பணிபுரியலாம், அவர்களே அந்த நிழலாக மாறிவிட முடியாது. அந்தப் பணிக்கு வைக்கோ பொறுத்தமானவர் என்பது தான் எனது எண்ணம்.

ரகுநாதன்!

போராட்டத்தில் இணையாத யாரும் பொறுப்புக்களை வகிக்க முடியாது...

அன்ரண்ணா ஆயுதம் ஏந்தாத போராளி...

போராட்டத்தில சேரதவர்கள் யாராக இருந்தாலும் அர்ப்பணிப்பை உறுதி செய்ய முடியாது... அதுவும் ஒரு அரசில்வாதி நிச்சயமாய் செய்ய முடியாது..

இதுக்கு பலபேரை உதாரணமா சொல்லலாம்.... ஆனாலும் அதை நீங்களே ஆராந்து அறிவதே மேல்..

ஒருநாளும் தலமை அதை செய்யாது.. அது மாத்திரம் உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அண்ணன் சிறந்த பேச்சாளர் என்பதுடன் ஈழத்தமிழர் மத்தியில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெற்று எமக்காக நீண்டகாலமாக ஆதரவுக் கரம் நீட்டிவரும் ஒரு மகத்தான மனிதர். தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக செயற்பட தற்சமயம் நம்மத்தியிலுள்ள விவேகமும் பேச்சுத் திறமையும் நிறைந்த ஒரு தமிழ்மகன் எனக்குத் தெரிந்து அது வைக்கோ அண்ணன்தான் என்பது எனது அபிப்பிராயம். ஆனால் அவர்முன் அவரால் தாண்ட முடியாத பல்வேறு தடைகளும் முட்டுக்கட்டைகளும் உள்ளன. இருப்பினும் அவர் பேச்சுவார்த்தைகளிலும் மகாநாடுகளிலும் ஒரு தனிநபராக கலந்துகொண்டு ஈழத்தமிழர் சார்பில் பேசலாம் விவாதங்களை முன்வைக்கலாம். ஆனால் ஒரு உதாரணத்துக்கு சொல்வதானால் அவரால் எம்மை உத்தியோக பூர்வமாக பிரதிநித்துவம் செய்யமுடியாது - எந்தவித உடன்படிக்கைகளிலும் எமக்காக கையொப்பம் இடவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி, வணங்காமுடி!

நியாயமான கருத்து. உடன்படுகிறேன்.

நன்றி.

தமிழக அரசியலில் படுதோல்வி கண்டவர் வைகோ. அதற்காக ஈழப்பிரச்சினை குறித்த அவரது புரிதல் மற்றும் ஈடுபாட்டினை யாரும் தவறாக கணித்துவிடக்கூடாது. ஒரு அரசியல் தலைவராக அவரால் வெற்றி பெற இயலாவிடினும் அதற்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினராக டெல்லியை கலங்கடித்தவர் அவர். தமிழீழ போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் வைகோ அவர்களுக்கு பதவி ஏதேனும் வழங்கப்பட்டால் ஒவ்வொரு தாயகத்தமிழனும் அதற்காக பெருமை கொள்வான்.

தமிழக அரசியலில் படுதோல்வி கண்டவர் வைகோ. அதற்காக ஈழப்பிரச்சினை குறித்த அவரது புரிதல் மற்றும் ஈடுபாட்டினை யாரும் தவறாக கணித்துவிடக்கூடாது. ஒரு அரசியல் தலைவராக அவரால் வெற்றி பெற இயலாவிடினும் அதற்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினராக டெல்லியை கலங்கடித்தவர் அவர். தமிழீழ போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் வைகோ அவர்களுக்கு பதவி ஏதேனும் வழங்கப்பட்டால் ஒவ்வொரு தாயகத்தமிழனும் அதற்காக பெருமை கொள்வான்.

அப்படி பார்த்தால் ஏற்கனவே பதவிகளில் இருந்த வைகோவை விட நெடு்மாறன் அண்ணாதான் முன்னுக்கு நிற்பார்...!!

அவர் அப்படி ஏதாவது ஒரு பதவியை ஏற்றால் அது அவரை விட அந்த பதவிக்கு தான் பெருமையாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா குட்டையை கலக்காமல் ஆக வேண்டியதை பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் வைக்கோவும், நெடுமாறன் ஐய்யாவும் தமிழரின் பிரச்சாரப் போருக்கே மிகவும் பொறுத்தமானவர்கள் என்று நினைக்கிறேன். அரசியல் ஆலோசகர் பதவிக்கு இங்கு பலர் கூறியது போல போராட்டத்துடன் நேரடிப் பங்களிப்புக் கொண்ட ஒருவர் வருவதே சிறப்பு.

ரகுநாதன் நீங்கள் கடைசில சரியாக புரிந்துள்ளீர்கள்

நாங்கள் ஒன்றும் வை. கோ அண்ணாக்க்கோ, அல்லது பழநெடுமாறன் அய்யா அவர்களுக்கோ இழுக்கு ஏற்படுத்த வேணுமென்றோ அல்லது உதாசீனம் செய்யவேணுமெண்டோ நினைக்கவில்லை..

அந்த பதவிக்கு... தாயகத்து வித்து ஒன்ரே பொருத்தமானது... அதிலும் போராட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு அரிப்பணிப்பு மனோபாவத்திலுப்பவருக்கே பொருத்தமானது...

"இரவல் படையில் போராட்டம் செய்யமுடியாது" இது அப்படியான ஒரு விசப்பரிச்சைதான்...

  • கருத்துக்கள உறவுகள்

திவயின நாளேட்டு நன்றாக குழப்பிபோட்டுது யாழ் உறவுகளை.தலைவருக்கு தெரியும் யாரை எப்போ தெரிவு செய்ய்யவேண்டுமென்று. தலைவரின் முதன்மை குணங்களில் ஒன்று தகுந்தவரை கண்டுபிடித்தல் என்பதாகும்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

"இரவல் படையில் போராட்டம் "- சூராவளி, பின்னீட்டீங்க போங்க !

அந்த பதவிக்கு... தாயகத்து வித்து ஒன்ரே பொருத்தமானது... அதிலும் போராட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு அரிப்பணிப்பு மனோபாவத்திலுப்பவருக்கே பொருத்தமானது...

"இரவல் படையில் போராட்டம் செய்யமுடியாது" இது அப்படியான ஒரு விசப்பரிச்சைதான்...

சூறாவளி,

இப் பதவியை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் ஏற்றுக் கொண்டிருந்தால் அனுமதிப்பீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏற்றுகொள்வோமா இல்லையா என்பதை விட, அவர் அத்தகுதிக்கு ஏற்றவர்தானா என்று யோசிக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் அவரை எந்தப் பதவிக்குமே பொறுத்தமற்றவர் என்று அர்த்தமில்லை. அவர் முன்னர் செய்ததுபோல புலிகளின் பெண்கள பிரிவில் பொறுப்பான பதவி வகிக்க பொறுத்தமானவர்தான்.

ஏனோ, அடேல் பாலசிங்கத்தை, எமது தேசத்தின் குரலின் இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை.

அட நானா அனுமதிப்பது.. தலைவரின் முடிவு எதுவோ அதை ஏற்றுக்கொள்வதே சரியானது.

அன்ரண்ணாவை மணம்முடித்து.. ஈழத்தில் தானும் ஒரு போராளியாகவே தன்னை அர்பணித்திருந்தார் அன்னை அடோல் பாலசிங்கம்.

அவரை ஈழத்திலும் புலத்திலும் பார்த்து இருக்கிறேன்... அப்படியானவர் தர்க்கரீதியாக பொருத்தமானவர்தான்.. இருப்பினும் அவருடைய விருப்பமோ அல்லது தலைவருடைய தெரிவே அதுவல்ல என்பது மாத்திரம் தெரியும்..

முடிவாக: அன்னை அடோல் பாலசிங்கம் பொருத்தமானவராக இருந்தாலும்... நடைமுக்கு ஒவ்வாதது.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.