Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன் விளையும் மண் உரும்பிராய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன் விளையும் மண் உரும்பிராய்

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளைப்போல் எமது உரும்பிராய் மண்ணும் நான்கு கோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மேற்காக ஓடும் கோப்பாய் வீதியும், வடக்குத் தெற்காக ஓடும் பலாலி வீதியும் எம்மண்ணை நடுவே ஊடறுத்துச் செல்கின்றன. கோப்பாய், நீர்வேலி, அச்செளு, போயிட்டி, ஊரெளு, சுண்ணாகம், இணுவில், கோண்டாவில் என்கின்ற ஊர்கள் எம் ஊரைச் சுற்றி அமைந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் நடுவில் எம் உரும்பிராய் மண் அமைந்திருப்பதும் அதற்கு ஓர் சிறப்பாகும். பெரும்பாலான சைவத்தமிழர்களைக் கொண்ட உரும்பிராய் மண் பல காலத்தால் முந்திய ஆலயங்களைக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. உதாரணமாக கருணாகரப்பிள்ளையார் கோவிலை சொல்லலாம். அதை மற்றும் பல கோவில்களை கொண்டது இந்த உரும்பிராய் மண்.

இவ்வூரின் மேற்கு எல்லைக்கு அருகில் பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய கடவுளர்களுக்கான மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இவற்றுள் கருணாகரப் பிள்ளையார் கோயில், காலத்தால் முந்தியது. கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவற்றைவிட, கற்பகப் பிள்ளையார் கோயில், ஞான வைரவர் கோயில், என்பனவும் இங்கேயுள்ளன. ஆண்டு தோறும் ஆடு,கோழி ஆகியவற்றைப் பலி கொடுத்து விழாவெடுக்கும் வழக்கத்தை மிக அண்மைக்காலம் வரை கொண்டிருந்ததும், யாழ் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டதுமான காட்டு வைரவர் கோயிலும் இங்கேதான் அமைந்துள்ளது. கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதை அரசு தடை செய்ததனால் இவ் வழக்கம் கைவிடப்பட்டது.

பல பண்டிதர்களையும், கல்விமான்களையும் தன்னகத்தே கொண்டது உரும்பிபராய் மண்ணாகும். உரும்பிராய் மண்னுக்கு பெருமை சேர்க்கும் மற்றோரு விடையம்;, உரும்பிராய் இந்துக்கல்லு}ரி. உரும்பிராயில் இப்போது பல பாடசாலைகள் இருக்கின்றன. தாய் தமிழின் மேல் தாளாத பற்றுக்கொண்ட ஆறுமுக நாவலர் ஆரம்பித்த பாடசாலை யாழ் இந்துக் கல்லு}ரி. முதலாம் உலக மகா யுத்தத்தின்போது இதன் கிளைகளில் ஒன்றாக எமது உரும்பிராய் இந்துக்கல்லூரியும் இருந்தது என்ற பெருமையும் இதற்குண்டு. இப்போது பல கல்விமான்களை உருவாக்கிய பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து நிற்கின்றது. யாழ் நாகரிலேயே சற்ற பெரிய பாடசாலைகளில் இதுவும் ஒன்று எனலாம. பல கல்விமான்கனை உருவாக்கிய பெருமையும், உருவாக்கி கொண்டிருக்கின்ற பெருமையும் இப்பாடசாலைக்கு சேரும்.

உரும்பிராய் மண் காலில் பட்டால் அந்த சிவப்பு நிறம் உடனே ஒட்டிக்கொள்ளும். அதேபோல் எமது மண்ணில் கலடி எடுத்து வைத்தவர்களை ஒருபோதும் கைவிட்டதாக சரித்திரமே இல்லை. வியாபாரம் செய்ய வருவோர் வேலை பரர்க்க வருவோர், குடியிருக்க வருவோர் கும்மாளம் அடிக்க வருவோர், கல்வி கற்க வருவோர் கல்வி கற்பிக்க வருவோர், சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்தும், பல கல் தொலைவிலிருக்கும் ஊர்களிலிருந்தும் மக்கள் தினமும் வந்துகொண்டேயிருப்பார்கள். எமது ஊரான உரும்பிராயும், உரும்பிராய் மண்ணில் பிறந்த மக்களில் பலரும் உலகப் புகழ் பெற்றவர்கள். இவர்களைப் பெற்றதினால் நிலவளமும், நீர்வளமும், பொருள்வளமும் கொண்ட எமது மண், புகழ்வளமும் கொண்டு பெருமை கொள்கின்றது.

நீர்வளமும் நிலவளமும் உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்ட உரும்பிராய் மண்ணின் விவசாயமே முண்ணனி வகிக்கின்றது. மரவள்ளிக்கிழங்கு, வாழை போன்ற பிரதான உற்பத்திகளும் அது தவிர இணை காய் கறி வகைகளையும் உரும்பிராய் மக்கள் பயிரிடுவது வழமை. அது போல புதிதாக அறிமுகப்படுத்தும் தானிய வகைகளை பயிரிட்டு வெற்றியீட்டுவதிலும் உரும்பிராய் மண் சளைத்ததல்ல. 1980ம் ஆண்டு காலப்பகுதியில் உரும்பிராயில் திராட்சை, உருளைக்கிழங்கு என்பன பயிரிடப்பட்டு வெற்றியீட்டப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.

பொன் விளையும் பூமி எங்கள் உரும்பிராய். மண்ணை நம்பி வாழும் விவசாயிகளால் எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கும். கரிய பனைகளும், உயரிய தென்னைகளும், இன்னருங்கனிச் சோலைகளும், இனிய நீர்ச் சுனைகளும் இங்கே ஆயிரமாயிரம். ஊரெங்கும் பரந்திருக்கும் வழிபாட்டுத்தலங்களும், கல்விக்கூடங்களும் காரியாலயங்களும், வியாபார நிலையங்களும், விளையாட்டுத்திடல்களும் எம்மவரின் திறன்களைப் பறைசாற்றி நிற்கின்றன. மரவள்ளிக்கிழங்கு, வாழை போன்ற பிரதான உற்பத்திகளும் அது தவிர இணை காய் கறி வகைகளையும் உரும்பிராய் மக்கள் பயிரிடுவது வழமை. அது போல புதிதாக அறிமுகப்படுத்தும் தானிய வகைகளை பயிட்டு வெற்றியீட்டுவதிலும் உரும்பிராய் மண்ண சளைத்ததல்ல.

ஆக்கம் - ரமா

http://www.karanthan.com/index20080529.php...008-05-29-07:34

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பிரியோசனமான பதிப்பு.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள ரமாவின் ஆக்கம்

இணைப்பிற்கு நன்றி நுணா அண்ணா... :lol:

ம்ம்..அது சரி கந்தப்பு தாத்தா :wub: ..(என்ன உரும்பிராய் பக்கம் நிற்கிறியள்) :wub: ..ஏதாச்சும் "பிளாஸ்பக்" இருக்கே..பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே..சரி சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன.. :wub:

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் சரியான் விருப்பம். இரசையா மாஸ்டர் வீட்டில இஞ்சி தேத்தண்ணி குடித்து போட்டு, தொட்டத்து கிணத்தில் நீச்சல் அடித்தை மறக்க முடியாது. அவர் தோட்டத்தில் மரவள்ளிக்கிழ்ங்கு பிடுங்கி அவித்து திண்டதையும் மறக்க முடியாது. முன் வீட்டில் களவாய் முத்திரிகை பழம் பிடுங்கி திண்டு...என்ன மண் அப்பா.. அம்மன் கோயில் பக்கத்தில் வேம்படி அக்காவையும் மறக்க முடியாது. பால அண்ணை கடை... நெக்ரோ சோடா...

Edited by பொன்னி

எனக்கும் சரியான் விருப்பம். இரசையா மாஸ்டர் வீட்டில இஞ்சி தேத்தண்ணி குடித்து போட்டு, தொட்டத்து கிணத்தில் நீச்சல் அடித்தை மறக்க முடியாது. அவர் தோட்டத்தில் மரவள்ளிக்கிழ்ங்கு பிடுங்கி அவித்து திண்டதையும் மறக்க முடியாது. முன் வீட்டில் களவாய் முத்திரிகை பழம் பிடுங்கி திண்டு...என்ன மண் அப்பா.. அம்மன் கோயில் பக்கத்தில் வேம்படி அக்காவையும் மறக்க முடியாது. பால அண்ணை கடை... நெக்ரோ சோடா...

அது சரி உங்களுக்கு அந்த பக்கம் என்ன வேலை பாருங்கோ?? :wub: ...(சொல்லவே இல்ல)...யாரவர் இராசையா மாஸ்டர் :wub: ..வீட்ட தேத்தன்னி குடிக்காம மிணகட்டு அங்க போய் தான் குடிக்கிறனியளே..(என்ன கொடுமை இது)..... :)

அது எல்லாம் இருகட்டும்..(எவா அவா அந்த வேம்படி அக்கா :wub: )...உது எல்லாம் நம்ம அக்காவிற்கு தெரியுமோ பொன்னி குரோ :D ...மொத்தத்தில உங்களாள ஒன்னையும் மறக்க ஏலாது என்டு சொல்லுறியள்..சரி அப்ப எதை மறந்து போனனியள் அதை சொல்லுங்கோ பார்போம் கேட்போம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: நுனாவிலான், நீங்கள் உரும்பிராயைச் சேர்ந்தவரா ? சொல்லவேயில்லை ? நான் எதோ நீங்கள் நுனாவிலைச் சேர்ந்தவர் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் உங்கள் பக்கத்தில் தான், கோண்டாவில் டிப்போவடி.

அதுசரி, உரும்பிராயில எங்க ? மருதனார் மடம் ரோட்டிலயோ அல்லது பலாலி ரோட்டிலயோ ?

உரும்பிராய்.....நானும் ஓடித்திரிந்த மண் !!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

உரும்புராயில் தான் சிவகுமாரன் பிறந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: நுனாவிலான், நீங்கள் உரும்பிராயைச் சேர்ந்தவரா ? சொல்லவேயில்லை ? நான் எதோ நீங்கள் நுனாவிலைச் சேர்ந்தவர் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் உங்கள் பக்கத்தில் தான், கோண்டாவில் டிப்போவடி.

அதுசரி, உரும்பிராயில எங்க ? மருதனார் மடம் ரோட்டிலயோ அல்லது பலாலி ரோட்டிலயோ ?

உரும்பிராய்.....நானும் ஓடித்திரிந்த மண் !!!!!!!!!

ரகுநாதன், நான் நுணாவிலை சேர்ந்தவன் தான். ஆனால் தேடலின் போது இப்பதிவு கிடைத்தது. எனது குடும்பத்தில் உரும்பிராயை சேர்ந்தவர்களும் உண்டு என்பது மேலதிக தகவல். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: நன்றி நுனாஸ்,

உரும்பிராயைச் சேர்ந்தவர் என்றால் உரும்பிராயான் என்றல்லவா வைத்திருப்பீர்கள் ! நான் யோசிக்கவில்லை, சரி நுனாவிலைப் பற்றியும் எழுதுங்களேன், எமது ஊர்களை அறிந்துகொள்வதும் நல்லதுதானே !

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: நுணாவிலில் எனக்கும் மிக நெருங்கிய உறவினர்கள் உள்ளார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
:) அதுசரி தமிழ்சிறி, நீங்கள் எந்த ஊர் ?
  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர்மடம் ரகுநாதன்.நீங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

:) தமிழ்சிறி,

நான் பலாலி வீதி கோண்டாவில். பலாலி வீதியால யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது கோண்டாவில் டிப்போவுக்குச் சற்று முன்னர்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: பார்த்தீர்களா ரகுநாதன், நாங்கள் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் தான் வாழ்த்திருக்கின்றோம்.

உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் கொக்குவிலில் அடியேன்..!

  • கருத்துக்கள உறவுகள்
:lol: உலகம் சின்னது லீ.

உண்மைதான் தமிழ் சிறி..!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தமிழ்சிறி, லீ !

நாங்கள் பக்கத்தில்தான் இருந்திருக்கிறோம், ஆனால் யாரையும் யாருக்கும் தெரியாது. இப்போது அறிந்து கொண்டது மகிழ்ச்சியே !

ரகுநாதன், நான் நுணாவிலை சேர்ந்தவன் தான். ஆனால் தேடலின் போது இப்பதிவு கிடைத்தது. எனது குடும்பத்தில் உரும்பிராயை சேர்ந்தவர்களும் உண்டு என்பது மேலதிக தகவல். :lol:

நுணாவில் கிழக்கா, மேற்கா...?

நான் யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர்மடம் ரகுநாதன்.நீங்கள் ?

அப்ப எங்கட நீதவான், சிதம்பரி வீட்டுக்கு கிட்டவோ?

அப்ப எங்கட நீதவான், சிதம்பரி வீட்டுக்கு கிட்டவோ?

அது ரவி அண்ணா என்னவோ நீதவான் சொந்தகாரர் மாதிரி சொல்லுறியள்... :lol: (அல்லாட்டி நிசமா சொந்தகாரர் தானோ)...யாரப்பா அவர்??.. :lol:

அது சரி உங்கன்ட உண்மையான் ஊர் என்ன தான் ஆக்கும்..(குழப்புறியள் பாருங்கோ :) )..ஒவ்வொரு "கெட்டபிலையும்" ஒவ்வொரு ஊரை சொல்லுறியள் அது தான் பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு, அவர் பல ஊர்கள் அடிபட்டு இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்,என்னுடைய வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் தான் நீதவானின் வீடும் உள்ளது யாழ்ரவி.

இமயமலைக்கு போக முன்னர் நீங்களும் கந்தர்மடத்திலா வசிச்தீர்கள்?

ஆமாம், நீதாவான்ர பெடியனும், நானும் ஒரே ஆழுக்கு லைன் போட்டனாங்கள். நீங்கள் எங்கு படித்தீர்கள்?

அது ரவி அண்ணா என்னவோ நீதவான் சொந்தகாரர் மாதிரி சொல்லுறியள்... :lol: (அல்லாட்டி நிசமா சொந்தகாரர் தானோ)...யாரப்பா அவர்??.. :lol:

அது சரி உங்கன்ட உண்மையான் ஊர் என்ன தான் ஆக்கும்..(குழப்புறியள் பாருங்கோ :) )..ஒவ்வொரு "கெட்டபிலையும்" ஒவ்வொரு ஊரை சொல்லுறியள் அது தான் பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

கற்றவனுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு...யாதும் ஊரே யாவரும் கேளீர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.