Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ...........

தாயாக மண்ணில் இருந்து ..விரும்பியோ விரும்பாமலோ .

.புலம் பெயர்ந்து வந்த எங்களை ,ஆதரித்த இம் மண்ணுக்கு

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ,கொடியவனின் குண்டுமழை இல்லாமல் ,

உணவு உடை உறையுள் தந்த ஆண்டவனுக்கும் நன்றிகள்

நிலாமதி i

கனடாவுக்கு 141 வது வருட வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய கனடா தின நல்வாழ்த்துகள்!

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!

உந்தன் மைந்தர்கள்

உண்மை தேச பக்தர்கள்!

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ எழில் கண்டு வைப்போம்!

எங்கும் உள்ள நாம், ஓ கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!

எம்நிலப் புகழைச் சுதந்திரத்தை

என்றும் இறைவன் காத்திடுக!

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

O Canada!

Our home and native land!

True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,

The True North strong and free!

From far and wide,

O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!

O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மண்ணில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் கனடா தின வாழ்த்துக்கள்.

நிம்மதியா வாழ கிடைத்த நாட்டுக்கு நன்றி சொல்லும் உங்களுக்கு நன்றி!

வரும் கால அவுஸ்திரெலிய பிரதமர் மதிபிற்குறிய வேற யாரும் இல்ல நானே தான்..கனடா வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. <_<

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரும் கால அவுஸ்திரெலிய பிரதமர் மதிபிற்குறிய வேற யாரும் இல்ல நானே தான்..கனடா வாழ் அனைத்து மக்களிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.. :huh:

அப்ப நான் வரட்டா!!

அட நான் தான் மப்பிலை அலம்புறன் எண்டு பாத்தால் இவன் பாவி என்னைவிட மோசமாய்க்கிடக்கு <_<

அப்ப நான் நடக்கட்டே!!!

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு. <_<

நாங்கள் கனடிய குடிமக்கள் நன்றி செலுத்துறம். நெடுக்காலபோவானுக்கு பொறாமையா இருக்கிதோ? ஏன் உங்களுக்கு இன்னும் யூகேயில மட்டை ஒண்டும் கிடைக்க இல்லையோ? <_<

தாய்நாட்டில கிடைக்காத சுதந்திரம் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. தாய்நாட்டில கிடைக்காத வசதிகள் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. அப்பிடி எண்டால் நன்றி சொல்லிறது முறைதானே?

மற்றது, கனடாவில இருக்கிற முக்கால்வாசிப்பேரும் வந்தேறு குடிகள்தான். கனடா நாட்டை கட்டி எழுப்பினதில முக்கிய பங்கு வகிச்சது இங்கு வந்து குடியேறிய இமிகிரண்ட்ஸ் தான். கனடா நாட்டின் ஜெனரல் கூட ஒரு வந்தேறு குடிதான்...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கனடிய குடிமக்கள் நன்றி செலுத்துறம். நெடுக்காலபோவானுக்கு பொறாமையா இருக்கிதோ? ஏன் உங்களுக்கு இன்னும் யூகேயில மட்டை ஒண்டும் கிடைக்க இல்லையோ? :wub:

தாய்நாட்டில கிடைக்காத சுதந்திரம் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. தாய்நாட்டில கிடைக்காத வசதிகள் எமக்கு கனடா நாட்டில கிடைச்சு இருக்கிது. அப்பிடி எண்டால் நன்றி சொல்லிறது முறைதானே?

மற்றது, கனடாவில இருக்கிற முக்கால்வாசிப்பேரும் வந்தேறு குடிகள்தான். கனடா நாட்டை கட்டி எழுப்பினதில முக்கிய பங்கு வகிச்சது இங்கு வந்து குடியேறிய இமிகிரண்ட்ஸ் தான். கனடா நாட்டின் ஜெனரல் கூட ஒரு வந்தேறு குடிதான்...

கனடாவிலோ இல்ல மேற்குலகிலோ வசதிகள், சுதந்திரங்கள் எல்லாம் தமிழர் ஏற்படுத்திக் கொண்டவையல்ல முரளி. ஏலவே வெள்ளைக்காரன் அமைந்திருந்த அடித்தளத்தில் தான்... அவனுக்கு கூலி செய்து அனுபவிக்கப் போனவை இவை. இதற்காக அவர்கள் செய்த திருகுதாளங்கள் கனடா அறியுமோ தெரியாது நாங்கள் அறிவம். பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை புரட்டிப் போட்டவையும்.. பாஸ்போட் தலை மாத்தினவையும்.. ஒன்றுக்கு நாலு மனிசி என்று பறந்தவையும்... இவர்களை எல்லாம் கனடா நாட்டுக் குடிமக்கள் என்பதா... கேவலமாக இருக்கிறது..! :wub:

கனடா உள்வாங்கிக் கொள்கிறது. திறமைசாலிகளை. அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுது. அவர்கள் கனடாவின் விருப்பில் அழைக்கப்படுகிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக கள்ள மட்டை போடுறவனும் கனடாவுக்கு உதவுறானா.. அவனையும் கனடா விரும்பி அழைத்தா கொண்டது.. வந்த இடத்தில் துரத்த வழியில்லாமல் உள்வாங்கிக் கொண்டவை கனடா பெருமைப்படும் படியா நடக்கினம்..???! :wub:<_<

நான் எனது தாய் மண்ணின் விடுதலை வேட்கையை எனது வசதிக்காக காட்டி வாழ முனையல்ல. அடுத்தவன் கஸ்டப்பட்டு கட்டி எழுப்பின தேசத்தில நான் கூலியா வாழ்வன் என்ற நிலை தான்.. எம்மவருக்கு நாடற்ற நாதியற்ற நிலையை உருவாக்கக் காரணம்..!

இதைத்தான் அன்று பொன்னம்பலம், அருணாச்சலம் போன்றவர்கள் சிங்களவனோட சேர்ந்து சுதந்திரமா வாழுறம் எண்டவை. இன்று அவர்களின் சந்ததி எவனோ ஒருவன் போராடி உருவாக்கின சுதந்திரத்தின சேதத்தில அழையா விருந்தாளியா போய் நின்று கொண்டு விசிலடிச்சான் குஞ்சுகளா விசிலடிக்கிறது... கேவலமா இருக்குது..! அதுவும் அவையின்ர பூர்வீக நிலம் ஆக்கிரமிப்பாளனாலை விழுங்கப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்..!

நானும் கனடாவை வாழ்த்துவன்.. எப்ப கனடா என்ற தாய் மண்ணின் விடுதலையை அங்கீகரித்து நிற்கும் போது..! நானும் கனடாவுக்கு நிகரா தமிழீழத்தில இருந்து கொண்டு வாழ்த்துவன் கனடாவை. இப்ப அடிமையாக் கிடந்து கொண்டு வாழ்த்த நான் தயாரில்லை..! இப்ப இந்த வாழ்த்துகள் ஏற்கப்படுகுதோ உதாசீனப்படுகுதோ என்பதை வெள்ளைக்காரன் தான் தீர்மானிக்கப் போறான். :huh:

Edited by nedukkalapoovan

சரி சரி உங்கட ஒப்பாரிகள் விளங்கிது. நான் இண்டைக்கு கனடா தின கொண்டாட்டத்துக்கு போன இடத்தில எண்ட கைத்தொலைபேசிக்கால எடுத்த பதிவு ஒண்டு இருக்கிது பாருங்கோ. :huh:

உங்களுக்கு தெரியுமோ தெரியாது.. இரண்டாம் உலகமகாயுத்தம் நடந்தாப்பிறகு ஜேர்மனியும் அதிண்ட கூட்டாளி நாடுகளும் தோல்வி அடைஞ்ச உடன அங்க இருந்த போர்க்குற்றம் செய்த மகா கொலையாளி -- பாதகர்களும் தஞ்சம் அடைஞ்ச நாடுகளில கனடாவும் ஒண்டு. <_<

கனடா நாட்டின் பெருமை வந்து பல் கலாச்சாரத்துக்கு மதிப்பு குடுக்கிறது. உங்கட நாடுகளில உதுகள காண ஏலாது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாட்டின் பெருமை வந்து பல் கலாச்சாரத்துக்கு மதிப்பு குடுக்கிறது. உங்கட நாடுகளில உதுகள காண ஏலாது.

ஏன் இல்ல. சிறீலங்காவில கொண்டாடல்லையா. பல்லின நிகழ்வுகள்..???!

கூலிகளாக இன்னொரு கூட்ட மக்களை வைச்சுப் பிழைக்கும் நாடுகள் எல்லாம் இதைக் கொண்டாடும். கூலிகளைத் திருப்திப்படுத்த..!

வெள்ளைக்காரன் கெட்டிக்காரன். ஆட்சி அதிகாரம் உள்ள தேசத்தை தன்ர கைக்குள்ள வைச்சுக் கொண்டு உங்களை கூலியா வைச்சுப் பிழைச்சுக் கொள்கிறான். கூலிகள் கூலி என்பதை உணர்ந்தால் வீண் சிரமம் என்பதைக் கருத்தில் கொண்டு இப்படியான நிகழ்வுகளை நடத்திக்கிறது. ஆனால் உண்மையில் தாயகம் பூர்வீகம் என்று வரும் போது வெள்ளைக்காரன் தன்னிலையை பாதுகாத்து தன் தேசத்தோடு நின்று கொள்ள.. கூட்டத்தோடு கூட்டமா நின்று கூப்பாடும் போடும் கூலிகள்.. தனிச்சு நிற்பினம்.

நன்றி. உங்கள் காணொளிப் பகிர்வுக்கு.

கனடா நாட்டு நிகழ்வுகளை.. மலரப் போகும் தமிழீழ தேசத்தின் குடிமகனாய், கனடாவுக்கான ஒரு விருந்தாளியாய் கண்டு மகிழ்கிறேன். <_<

Edited by nedukkalapoovan

ஓமுங்கோ நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். <_< அப்ப தமிழீழத்தில லண்டனில உழைச்ச காசவச்சு சமாளிச்சுக்கொண்டு உழைக்காமல் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு வாழப்போறீங்கள் எண்டு சொல்லுறீங்கள் என? :huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஓமுங்கோ நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும். <_< அப்ப தமிழீழத்தில லண்டனில உழைச்ச காசவச்சு சமாளிச்சுக்கொண்டு உழைக்காமல் காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு வாழப்போறீங்கள் எண்டு சொல்லுறீங்கள் என? <_<:D

ஏன் தமிழீழம் மக்கள் அற்ற பாலைவனமாகவா காட்சியளிக்கிறது..??! உழைப்புக்கு வழியற்ற தேசமாவா இருக்கிறது. எத்தனையோ வெளிநாடுகளில் படிச்ச ஆக்கள் ஏன் புலம்பெயர்ந்த நாடுகளில தங்க முடிஞ்சும் ஊருக்குப் போய் பணியாற்றினம். அவைக்கு என்ன லூசா..??! அதுதான் தாயகப் பற்று. (உ+ம்: கனடா பல்கலைக்கழகத்தின் கெளரவப் பேராசிரியராகச் சம்பளம் வாங்கிக் கொண்டு தாயகத்தில் சைக்கிள் ஓடி.. தோட்டம் செய்து.. மக்களின் கல்வி வளர்ச்சிக்காய் உழைத்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் துரைஸ் தியறியின் சொந்தக்காரர் பேராசிரியர் துரைராஜா.. தமிழன் இல்லையா..???! வசதியை அவர் தான் மண்ணில் காணேல்லையா. எனது மூத்த நண்பர்களில் பலர் படித்துப் பட்டம் பெற்று வெளிநாடு வர வசதி இருந்தும், நிர்வாகத்துறைக்குள் இருந்து சிங்கள அரசின் பட்டதாரிகள் நிர்வாகிகளாகி எமது மண்ணுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று நிர்வாகத்துறைப் பரீட்சை எழுதி.. இன்று உதவி அரச அதிபர்களாக, அதிகாரிகளாக வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர் அவர்கள் மனிதர்களாகத் தெரியவில்லையா..??! <_< )

தன் மண்ணை உலகத்தில உயர வைத்து அதில தான் வாழுறதை உலகம் மதிக்கனும் என்ற உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் தான்.

நாளை தமிழீழமும் சிங்கப்பூர் போல ஆகி.. கனடா போன்றவை பொருளாதார நலிவடைந்தால்.. உங்களைப் போன்றவர்கள்.. ஐயோ.. தமிழீழம் எங்கள் தாய் வீடு.. அதை மறக்கச் சொல்வது அநியாயம் என்று இதையே மாற்றிப் பாடுவீர்கள்... கனடா சுரண்டல் பொருளாதாரத்தால் செழிப்புற்று இருக்கிற படியால்.. பழந்தின்னி வெளவால்களாக நீங்கள் அதனை மொய்க்கிறீர்கள்.. அவ்வளவே. தமிழீழம் தரிசாகக் கிடப்பதால் அதனை விட்டு ஓடுகிறீர்கள். ஆனால் அந்தத் தரிசிலும் தோப்பை உருவாக்க முடியும் என்று செயற்படுறவங்களும் இருக்காங்க முரளி. அதுதான் தாய் நாட்டின் மீதான உண்மையான பற்று. அதைத்தான் நாட்டுப் பற்று என்பது. இது வேசம். அடுத்தவன் ஆடுறான்.. நானும் ஆடுவம் என்ற நிலை.

மாற்றான் தாய் நல்ல அழகா உடுத்தி இருக்கிறாள் என்பதற்காக அவள் ஒரு தடவை தூக்கி வைத்திருந்தாள் என்பதற்காக கந்தல் சேலையோடு இருக்கும் உண்மையைத் தாயை மறந்து பட்டுச் சேலையில் உள்ளவளே தாய் என்று சொல்வது தமிழர்களுக்கு கை வந்த கலை. இருந்தாலும் அதற்கு விதிவிலக்கான தமிழர்களும் உளர் முரளி. கந்தலோ காய்ந்தவளோ.. உயிர் கொடுத்தவளே தாய். மற்றவள் செவிலி. :D

எவர் குந்தி இருக்கிற நாட்டில வாழுறது வசதி என்று சொல்கிறார்.. ஈழத்தில் வசதியை இனங்காணாதவரே..!

ஈழத்தில் பொருளாதாரத்தை ஈட்ட முடியாதவர்களுக்கு கனடா அரசின் வரிப்பணப் பிச்சையும் மக்டொன்ல்ட் வேலையும் நாகரிகமான வசதியான வாழ்வாகத் தெரியலாம். அதேவேளை ஈழத்தில் பொருளாதாரத்தை ஈட்டக் கூடியவனுக்கு கனடாவில் வாழ்வு அவமானமாகத் தெரியலாம். :)

Edited by nedukkalapoovan

நாளை தமிழீழமும் சிங்கப்பூர் போல ஆகி.. கனடா போன்றவை பொருளாதார நலிவடைந்தால்..

எப்படி வேணுமானாலும் சொல்லுங்கோ, ஆனால் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு பகிடி விடாதீங்கோ. <_< நீங்கள் எல்லாரும் ஒவ்வொரும் முறையும் நாம் சிங்கப்பூராக மாறுவோம் என்டு சொல்லிக்கொண்டு போகேக்க, சிங்கப்பூரோ பல மடங்கு இன்னும் பாய்ச்சலாக முன்னேறி போய் கொண்டிருக்கிறது...சிங்கப்பூர

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வேணுமானாலும் சொல்லுங்கோ, ஆனால் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு பகிடி விடாதீங்கோ. <_< நீங்கள் எல்லாரும் ஒவ்வொரும் முறையும் நாம் சிங்கப்பூராக மாறுவோம் என்டு சொல்லிக்கொண்டு போகேக்க, சிங்கப்பூரோ பல மடங்கு இன்னும் பாய்ச்சலாக முன்னேறி போய் கொண்டிருக்கிறது... சிங்கப்பூர் அரசு அடுத்த 100 ஆண்டுகளுக்கு என்ன செய்யவேண்டும் என்டு சொல்றதில்லை. சத்தம் போடாமல் செய்து முடிச்சிடும்.. <_<

இந்தக் குணம் தமிழீழத்தை நிர்வகிக்கும் புலிகளிடமும் உள்ளது. தமிழீழம் என்ற தனியரசு அமையின் நிச்சயம் அது தென்னாசியாவின் சிங்கப்பூர் ஆகும். அப்போது அடுத்தவனின் வரிப்பணத்தில் வசதியா வாழலாம் என்று தாய் நாட்டை காட்டிக் கொடுத்து ஏதிலி என்று ஓடியவர்கள் வாய்பிளந்து நிற்பார்கள்.. ஏன் மீள ஓடியும் வருவார்கள்.

நான் காண்கிறேன் தானே.. ஓடி வந்தவை படுற பாடு. இப்போ இதே கருத்தை ஈழத்தில் இருப்பவனா நான் சொன்னால் எரிச்சலில சொல்லுறான் என்பீனம்.. தங்கட பலவீனங்களை மறைக்க. இங்க இருந்து பார்க்கிறம் தானே.. வெள்ளைக்காரனே தலைகுனியிற மாதிரிக்கு இவை நடந்து கொள்ளுற விசயங்களை. இதுவும் ஒரு வகையில ஈழத்துக்கு நல்லம் தான். இவர்கள் அங்க இருந்து வறுமையில் வாடி வறுமைக் கோட்டை நீட்டுவதிலும்.. இங்க வந்து இப்படியாவது கஸ்டப்பட்டு வாழலாம் என்று உணர்கிறார்கள் பாருங்கள்.. அது முக்கியமானது. <_<

ஊரில ஒரு றாத்தல் பாணுக்கு 5 சதம் வரி போட்டிட்டாங்கள்.. என்ற உடன "இவை நாடு பிடிக்க முதலே இவ்வளவு வரி போடினம்.. புடிச்சா" என்று கேள்வி கேட்ட கோடரிக்காம்புகள்.. இங்க இரவு பகலா நித்திரையின்றி உழைக்கிற காசில 20 - 25% வரியாக் கட்டேக்க எந்த மறு பேச்சும் இல்ல. குப்பை போடுறதுக்கும் தனிய வரி கட்டிட்டுத்தான் போடினம், றோட்டில வாகனம் ஓடவும் தனிய வரி கட்டினம்... ஊரில குப்பையை வீட்டுக்க புதை என்றாலும்.. வேலியால, மதிலால கொட்டிற காட்டுமிராண்டிக் கூட்டம் (நான் சாரணிய இயக்கம் சார்ந்து போய் நம்ம மக்களுக்கு இதைப் பல தடவை சொல்லி செய்தும் காட்டி இருக்கிறன்.. ஆனால் மறுநாள் வாழைத் தண்டுகள் வீதியில உருளும்.. அந்த வகையில சொல்லுறன்) வெள்ளைக்காரனின்ற வெள்ளைத் தோலுக்கு மரியாதை செய்ய இந்தளவுக்கு திருந்த முடிஞ்சிருக்கு என்றது ஒரு பக்கம் சந்தோசமா இருக்குது..! :)

Edited by nedukkalapoovan

இந்தக் குணம் தமிழீழத்தை நிர்வகிக்கும் புலிகளிடமும் உள்ளது. தமிழீழம் என்ற தனியரசு அமையின் நிச்சயம் அது தென்னாசியாவின் சிங்கப்பூர் ஆகும்.

புலிகளிடம் இருக்கலாம்.. ஆனால் மக்களிடம்... <_<

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் இருக்கலாம்.. ஆனால் மக்களிடம்... <_<

அப்படி இருக்கிற மக்கள் இருக்கினம். எனது நண்பன் கூட கேம்பிரிச்சில் பி எச் டி (கட்டுமானப் பொறியியல்) எடுத்துவிட்டு ஊருக்குப் போய் பணியாற்றி வருகிறான். அவனுக்கு புகலிட நாடுகளில் வாய்ப்புக்கள் தேடி வந்த போதும் அவன் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தாயகச் சேவையை உணர்ந்து போயிருக்கிறான். அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய உண்மை. அவர்களும் அதனை விரும்புவதில்லை. <_<

Edited by nedukkalapoovan

அட நான் தான் மப்பிலை அலம்புறன் எண்டு பாத்தால் இவன் பாவி என்னைவிட மோசமாய்க்கிடக்கு <_<

அப்ப நான் நடக்கட்டே!!!

ஏன்...ஏன்..ஏன்..??..(நான் வரும் காலத்தில அவுஸ் பிரதமர் ஆக கூடாதே தாத்தா) :) ..ஒமோம் இப்ப நான் பேசுறது எல்லாம் அப்படி இப்படி தான் இருக்கும் நான் அவுஸ் பிரதமர் ஆகி அறிக்கை விடக்க தெரியும்.. <_< (அது தான் இப்ப உங்க அறிக்கை விட்டு பழகிறேன் எண்டா பாருங்கோவன்)..

எங்க நடக்கபோறியள்..கொஞ்சம் இருந்திட்டு போங்கோவேன் தாத்தா.. <_<

அப்ப நான் வரட்டா!!

கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு. :D

ஏன்..அப்படி சொல்லுறியள் தாத்தா.?? <_< ..இப்ப பாருங்கோ கடலில ஒரு கப்பல் பயணிக்கிறது நடுகடலில அது சேதமாகி விட்டா..(இன்னொரு கப்பல் அந்த பக்கம் வருது)..அதில எல்லாரும் ஏற ஏலாது கொஞ்ச பேர் ஏறி தப்பித்து கொள்ளீனம் எண்டு வையுங்கோவன்.. :)

அது பிழையா எண்டு உங்கட்ட கேட்டா உங்க பதில் என்ன..??

இல்ல அந்த கப்பலில இருந்திருக்க வேண்டும் எண்டு சொல்லுவியளோ..இல்லாட்டி மற்ற கப்பலில ஏறி தப்பி நடுகடலில இருக்கிற கப்பலை மறுபடி பழைய மாதிரி மீட்க பாடுபட வேண்டும் எண்டு சொல்லுவியளோ..!! <_<

அப்படி மற்ற கப்பலில பாய்ந்து வந்தவை நடுகடலில தத்தளிக்கிற கப்பலை மறந்து போனது வேற கதை சரியோ..அதுக்காக எங்கள காப்பத்தி கரை சேர்த்த கப்பலிற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் அல்லவா.??

என்ன நான் சொல்லுறது சரி தானே தாத்தா..!! :D

நாளை மீட்ட இந்த கப்பலிற்கு இப்படியான பரிதாபமான நிலை உருவாகும் போது...(உந்த கப்பலில் உண்மையான மைந்தர்களும் இவ்வாறு தான் செய்ய எத்தணிப்பார்கள்) :( ..என்ன நான் சொல்லுறது சரியோ..அப்படியாயின் கரை ஒதுங்க வந்தவர்கள் என்ன நினைப்பார்கள்..

அவர்களின் நினைவில்..(சிலரின்) நடுகடலில் தத்தளிக்கும் தங்கள் கப்பலா?? அல்லது கரை ஒதுக்கிய இந்த கப்பலா எண்ட கேள்வி எழும் அல்லோ..அப்போது அவர்களின் நிலையை சற்று சிந்தித்து பார்தீர்களாயின்..(அவர்களும் பாவம் தானே)... <_<

ஆனபடியா தாத்தா...கரை ஒதுக்கிய கப்பலிற்கு நன்றி செலுத்துகிறார்கள் அவர்கள்..(அவர்களின் உள்ளெண்ணம் நமக்கு தேவையில்லை)..ஆனால் நன்றி செலுத்துவது அழகு தானே.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே கனடாவிலை கப்பலோட்டிய தமிழர் கொஞ்சப்பேர் இருக்கினம் <_<

அதுதான் கொஞ்சகாலத்துக்கு முந்தி ஜேர்மனியிலை இருந்து தனிக்கப்பல் புடிச்சு கனடாவுக்கு போய்ச்சேர்ந்தவை :)

அதுக்கு பிறகு எங்களுக்கு இஞ்சை நல்ல மரியாதை அதுதான் நாயைவிட கேவலம் <_<

எங்கடை சனம் ஒரு நாளும் இருக்கிறதை வைச்சு திருப்திப்பட மாட்டினம் <_<

உண்மையிலேயே கனடாவிலை கப்பலோட்டிய தமிழர் கொஞ்சப்பேர் இருக்கினம் :D

அதுதான் கொஞ்சகாலத்துக்கு முந்தி ஜேர்மனியிலை இருந்து தனிக்கப்பல் புடிச்சு கனடாவுக்கு போய்ச்சேர்ந்தவை :D

அதுக்கு பிறகு எங்களுக்கு இஞ்சை நல்ல மரியாதை அதுதான் நாயைவிட கேவலம் :D

எங்கடை சனம் ஒரு நாளும் இருக்கிறதை வைச்சு திருப்திப்பட மாட்டினம் <_<

ஓ..அப்படியே தாத்தா ஒரு வேளை எங்கன்ட குருவும் கப்பல் ஓட்டினவரோ யாருக்கு தெரியும்.. :) (நான் சொன்னது "பேப்பரில" செய்து கப்பல் விட்டது பத்தி).. :(

அது சரி ஏன் தாத்தா "கனடாவிற்கு" போன கப்பலில நீங்க போகல்ல..??..(போயிருந்தா இன்னைக்கு எங்கையோ போயிருப்பியள்)..சரி அதை விடுவோம்.. <_<

எங்கன்ட நாட்டில நாயிற்கு நல்ல மரியாதை கொடுக்கிறவை அல்லோ..ஆனபடியா நீங்க நாயை விட கேவலம் எண்டு எல்லாம் சொல்லபடாது..(நாய்கள் சார்பாக இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்).. :D

இருக்கிறதை வைத்து திருப்திபடுறதோ இது என்ன சின்னபிள்ளதனமா இருக்கு..(அவன் ஒரு மாடி வீடு கட்டினா நாங்க இரண்டு மாடி வீடு கட்டனும் என்ன தாத்தா)..இப்படி பாட்டி சொல்லுறதில்லையோ உங்களுக்கு.. <_<

அப்ப நான் வரட்டா!!

இந்தாபாருங்கடா துவங்கீட்டாங்கள்..

அண்ணை... நெடுக்கு எழுதுறது எண்டால் சும்மா இப்பிடி அப்பிடி எழுதிக்கொண்டு போகலாம்... ஆனா நடைமுறை வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் யோசிக்கவேணும்.

நமக்கு முதலில நம்மட வாழ்க்கை முன்னேற்றம்தான் முக்கியம். அதுக்குப்பிறகுதான் மிச்சம். தன்னை அறிந்து தானம் செய் எண்டு சொல்வார்கள்.

ஓமோம் நீங்கள் தாராளமா ஊரில போய் இருங்கோ. அதுக்காக வெளிநாட்டில இருக்கிறவன் எல்லாம் தாயகத்த மறந்தவங்கள் எண்டு இல்ல. மற்றது இந்த நவீன உலகில ஊருக்குப் போய்த்தான் சேவை செய்யவேணும் எண்டுற தேவை இல்லை. வெளியில இருந்துகொண்டே தாயகத்தத கட்டி எழுப்ப தாராளமாக உதவி செய்யமுடியும்.

ஊரில இருந்து கோவணத்தோட வந்தம் கனடாவுக்கு. இஞ்ச வந்தாப்பிறகுதான் வாழ்க்கை எண்டால்... சுதந்திரம் எண்டால்.. என்ன எண்டே நமக்கு விளங்கிச்சிது. அப்படியான ஒரு நாட்டுக்கு நன்றிகூறுவது தப்பு எண்டால் எங்க கொண்டுபோய் தலைய முட்டுறது எண்டு தெரிய இல்ல.

இஞ்ச எல்லாருமே கஸ்டப்பட்டு உழைப்பவர்கள்தான். பெரிய CEO கூட சின்னச் சின்ன சில்லறைத்தனமா வேலைகள் எல்லாம் செய்வாங்கள்.

உங்க இருந்து எழுத்தில வித்துவத்துவம் காட்டாமல் முதலில ஒருக்கால் கனடாவுக்கு வாங்கோ. கனடாவில வந்து கொஞ்சக்காலம் இருந்து பாருங்கோ. அதுக்கு பிறகு உங்கட விமர்சனங்கள கனடா எப்பிடி இருக்கிது எண்டு சொல்லுங்கோ. :wub:

அப்படி இருக்கிற மக்கள் இருக்கினம். எனது நண்பன் கூட கேம்பிரிச்சில் பி எச் டி (கட்டுமானப் பொறியியல்) எடுத்துவிட்டு ஊருக்குப் போய் பணியாற்றி வருகிறான். அவனுக்கு புகலிட நாடுகளில் வாய்ப்புக்கள் தேடி வந்த போதும் அவன் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தாயகச் சேவையை உணர்ந்து போயிருக்கிறான். அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய உண்மை. அவர்களும் அதனை விரும்புவதில்லை. :wub:

்இது ஒன்றே போதும். நிச்சயம் எதிர்கால சிங்கப்பூர்தான். நீங்க எப்ப போறீங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.