Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே!: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் அனிதா பிரதாப்

Featured Replies

அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி அடுத்த ஆண்டிலேயே!: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் அனிதா பிரதாப்

[செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 04:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார்.

"புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை 1984 ஆம் ஆண்டு இந்திய சஞ்சிகை ஒன்றுக்காக முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப். இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் தனது பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், இலங்கையில் தனது ஊடகவியல் அனுபவம் தொடர்பில் "இரத்தத்தீவு" என்ற நூலை எழுதியிருந்தார்.

இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பலவற்றில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம் ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

பேட்டியின் முழுவிவரம் வருமாறு:

இலங்கையில் பரவலடைந்துள்ள வன்முறைகளின் முடிவு எங்கே என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

இலங்கையில் இன வன்முறை என்பது கொடிய வளைவுகளாக அதிகரித்துக்கொண்டே உள்ளன. ஒருகாலத்தில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் காணப்படும். பின்னர், குறையும். பிறகு, மீண்டும் அதிகரிக்கும். இவை உடனடியாக முடிவுக்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படுமானால், இன்னும் அதிகரிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

தற்போது தனக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சிறிலங்கா அரசு கருதுகின்றது. அதனால், அது தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் நாட்டமாகவுள்ளது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச்செய்வதன் மூலம் அவர்களை பேச்சு மேசைக்கு கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அரசு எண்ணுகிறது என்று நான் நினைக்கின்றேன். கடந்த அரசுகளும் இதேபோன்றுதான் செயற்பட்டன. ஆனால், அவர்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை.

"என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்."

அரசு இதனை மறுத்திருக்கின்றது. ஆனால், அது உண்மை என்றால், அரச தலைவரின் உலங்குவானூர்தி அணி மீதான தாக்குதல் பாரதூரமான விடயம். இந்த தாக்குதலானது, சிறிலங்கா அரசின் "இதயம்" வரை அண்மித்து தாக்குதல் நடத்தக்கூடிய சக்தியை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டியுள்ளது.

புலிகளின் இவ்வாறான தாக்குதல்களுக்கு பதிலளிப்பதானால், அவர்களை முறியடிக்கும் முயற்சியில் அரசு இன்னமும் கூடுதலாக செயற்பட வேண்டியிருக்கின்றது.

ஆனால், அவ்வாறான அரசின் பதில் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால்- மக்கள் ஆதரவின் மூலம்- விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பெற்றுக்கொள்வார்கள்.

இலங்கையில் நிலவும் தற்போதைய இராணுவ நிலைமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழந்து விட்டார்கள் என்று கருதுகின்றீர்களா?

ஆம். விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற கருத்துநிலை ஒன்று உள்ளது.

ஆனால், கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், நிகழ்காலம் தமக்கு பாதகமாக அமையும்போதெல்லாம் புலிகள் தமது நடவடிக்கைகளை 'அடக்கி வாசித்துள்ளார்கள்'.

ஆனால், அக்காலப்பகுதியில் அவர்கள் சோம்பல் முறித்துக்கொண்டோ- நேரத்தை வீணடித்துக்கொண்டோ இருப்பதில்லை.

அந்தவகையில், அவர்கள் தற்போது பெரும் தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றா

தலைவரை ஒருக்கா பார்த்து பேட்டி கண்டவ எண்டதுக்கா புலிகளின் அரசியல் ஆலோசகர் எண்டமாதிரியில்லோ சொல்லுறா!

என்னதானிருந்தாலும் புலிகளும் தலைவரும் ஒரு தனி விடுதலை அமைப்பெண்டதை அவ எந்த ஒரு இடத்திலையும் உறுதியா சொல்ல இல்லை...

பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை ஒருக்கா பார்த்து பேட்டி கண்டவ எண்டதுக்கா புலிகளின் அரசியல் ஆலோசகர் எண்டமாதிரியில்லோ சொல்லுறா!

என்னதானிருந்தாலும் புலிகளும் தலைவரும் ஒரு தனி விடுதலை அமைப்பெண்டதை அவ எந்த ஒரு இடத்திலையும் உறுதியா சொல்ல இல்லை...

நன்றாகத்தானே கூறியுள்ளார்

நாங்கள் சொல்லுமாப்போல் அவரும் சொல்லுவார் என எதிர்பார்ப்பது அழகல்ல...........

பல இடங்களில் விடுதலைப்போராளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஆன வித்தியாசத்தை விளங்கப்படுத்தியுள்ளார்

அவை புலிகளைத்தானே குறிக்கின்றன???

  • கருத்துக்கள உறவுகள்

அவாக்கு புரியுது அறிவு கேட்ட அரசியல் வாதிகளுக்கு புரியவில்லையே

மிக விரைவில் புரியும் காலமும் நேரமும் கூடி வரவேண்டும் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

Island of Blood: Frontline Reports from Sri Lanka

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

நன்றாகத்தானே கூறியுள்ளார்

நாங்கள் சொல்லுமாப்போல் அவரும் சொல்லுவார் என எதிர்பார்ப்பது அழகல்ல...........

பல இடங்களில் விடுதலைப்போராளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஆன வித்தியாசத்தை விளங்கப்படுத்தியுள்ளார்

அவை புலிகளைத்தானே குறிக்கின்றன???

குகதாசன்!

அவவை குறைசொல்லவெண்டு எண்டதுக்காக நான் சொல்லவில்லை.. இந்த வருடமில்லை அடுத்த வருடம்தான் சண்டை அதுகும் அமரிக்க மற்றும் இந்திய தேர்தல்களின் முடிவுகளுக்குப்பிறகுதான் புலிகள் தாக்குவார்கள் என்று கூறியுள்ளார்....

அவ அப்பிடி எதிர்வுகூறியதும் அப்பிடி கூறும்போது புலிகள் ஒரு முளுமையான ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பு எண்டு அறுதியா சொல்லப்படவில்லை அதைத்தான் சொன்னேன்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி,

அனித்தா பிரதாப் நெடுங்காலமாகவே புலிகள் தொடர்பாக கட்டுரை எழுதி வருகிறார். அவரின் புலிகள் தொடர்பான பார்வை மற்றய இந்திய பத்திரிகையாளரிலும் வேறுபட்டது. இப்படிச் சொல்வதால் அவரை நான் புலிகளுக்கு ஆதரவானவர் என்று நிறுவ வரவில்லை. அவரது மனதில் புலிகள் தொடர்பாக ஒரு மென்மையான பக்கம் உண்டு என்றுதான் சொல்ல வருகிறேன். இதற்காக அவர் தமிழருக்குச் சார்பானவரா என்றால் என்னிடம் பதிலில்லை.

இந்திய பிராந்திய ஆதிக்க மனோநிலைக்குள் அகப்பட்டிருக்கும் எந்தப் பத்திரிகையாளரும் அந்த மனோபாவத்தை எதற்காகவும் விட்டுக் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் உண்மைகளை அவ்வப்போது ஒத்துக்கொண்டே வருகிறார்கள்.

மற்றையது, புலிகள் இவர் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசை !

நன்றி ரகுநாதன்...

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன்!

அவவை குறைசொல்லவெண்டு எண்டதுக்காக நான் சொல்லவில்லை.. இந்த வருடமில்லை அடுத்த வருடம்தான் சண்டை அதுகும் அமரிக்க மற்றும் இந்திய தேர்தல்களின் முடிவுகளுக்குப்பிறகுதான் புலிகள் தாக்குவார்கள் என்று கூறியுள்ளார்....

அவ அப்பிடி எதிர்வுகூறியதும் அப்பிடி கூறும்போது புலிகள் ஒரு முளுமையான ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பு எண்டு அறுதியா சொல்லப்படவில்லை அதைத்தான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது அவருடைய கணிப்பு மட்டுமே........

அதேநேரம் எம்மை கேவலப்படுத்தியெழுதும் இந்திய பத்திரிகையாளர்கள் மத்தியில்

தலைவரைப்பற்றியும் போராளிகளைப்பற்றியும் பேச எழுத ஆசைப்படும் இவர்களில்

முட்டையில் மயிர்புடுங்கும் வேலை......???

இருப்பதையும் இழக்கவே வழியமைக்கும் என்பதால் அப்படியெழுதினேன் ...........

மற்றும்படி தங்களைப்பற்றியோ தங்கள் விசுவாசம்பற்றியோ எனக்கு துளியும் முரண்பாடு கிடையாது......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.