Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடமேறினால் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும்: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் இல.கணேசன்

Featured Replies

இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

‌சி‌‌றில‌ங்கா‌வி‌ற்கு ‌இ‌ந்‌தியா நி‌தியுத‌வி அ‌ளி‌ப்பது எ‌‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்: இல.கணேச‌ன்!

''அம‌ை‌தி ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றி வரு‌ம் இ‌ந்‌திய அரசு, சி‌றில‌ங்கா அரசு‌க்கு ‌நி‌தியுத‌வி அ‌ளி‌த்து வருவது எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்'' எ‌ன்று இல.கணேச‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர். செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று த‌மிழக பா.ஜ.க தலைவ‌ர் இல.கணேச‌ன்...

http://upge.wn.com/?t=cheetah-article/post...e67141aac3240c2

  • கருத்துக்கள உறவுகள்
அங்கு பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று போராடுபவர்கள் குரல் கொடுத்திருப்பார்களேயானால், இன்று நாடு தழுவிய பேரெழுச்சி ஏற்பட்டிருக்கும். அதுபோன்று செய்யத்தவறியதால்தான் இப்போது இந்த நிலமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றத

..........அந்தவகையில்இ தற்போது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுடன் இணைந்து எவ்வளவு தூரம் உங்களின் கட்சி பங்காற்றுகின்றது?

எம்மிடம் அவர்கள் வரட்டும் பேசுவோம். இந்த விடயத்தில் எல்லோருமே கருத்தொற்றுமையுடன் இருக்கின்றோம் என்று சொல்ல இயலாது. பல்வேறு கோணங்களில் சிந்திக்கின்றோம்.

.................. இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு என்று சொன்னாலும்கூட அதில் எமக்குள் வேறுபாடு உள்ளது என்பது உண்மை.

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது - அவர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்கள் - மேற்கொள்ளப்படும்போது - அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராக உள்ள நீங்கள்இ பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு எதிரான அரச அடக்குமுறைக்கு போராட்டம் தீர்வு என்று முடிவெடுத்து போராடுகின்றபோது அதற்கு பகிரங்கமான உங்கள் ஆதரவையோ அல்லது கருத்தையோ ஏன் தெரிவிக்க மறுக்கின்றீர்கள்?

இல்லை. அது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஏனெனில் எப்படிப்பட்ட வழியில் விடுதலை கிடைக்கவேண்டும் என்று முடிவு செய்வது அந்த நாட்டு மக்களின் முடிவு. அது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அவர்களின் முயற்சியை விமர்சனம் செய்யவும் விரும்பவில்லை. எனது கருத்தையும் எனது கட்சியின் கருத்தையும்தான் நான் சொல்லியிருக்கின்றேன்.

:icon_mrgreen:

துவங்கியாச்சு... :lol: :lol: :lol:

எப்படி எல்லாம்... எங்கிருந்தெல்லாம்... உணர்சிகள்.... தத்துவங்கள்.... யதார்தங்கள்.... நாம் கனக்க இவ்வளவு காலம்.... எவ்வளவு காலம்.... பாத்திற்றோம் "எமக்கு விடுதலை ஒன்று மட்டுமே வேண்டும" வேறு ஒன்றும் அல்ல... பிச்சைவேண்டாம் நாயை பிடி... அந்த மாதிரி... :rolleyes:

Edited by Netfriend

யாழ்.குடா நாடு விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் வந்தவேளை அதனை முறியடிப்பதற்காக இந்தியப் படையினர் பாரியளவிலான நடவடிக்கை ஒன்றிற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போதைய மத்திய ஆட்சியாளர்கள் பாரதிய ஜனதா கட்சி என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

நான் எனது செய்திகளை வெளியிடும்போது இனி இந்துக்கள் கொல்லப்பட்டனர் எனத்தான் வெளியிட இருக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறுக்க முடியாத உண்மை. எப்போ ஈழத்தில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட தொடங்கினார்களோ அன்று பிடித்த சனியன் தான்........ இப்போ சகல பகுதிகளையும் படிப்படியாக இழக்க வேண்டியுள்ளது.

சில மதத்தவர்களை முதன்மை படுத்தி சிலரை தள்ளி வைக்க தொடங்கியதால் இன்று ?????????????????.

போதாக் குறையாக அதை உறுதிப்படுத்த படங்களையும் வெளியிட்டு.......................

விடுதலை போராட்ட காலங்களில் எக்காரணத்தை கொண்டும் மதங்கள் சாதிகள் பற்றி பேசுவதை தவிர்த்தல் வேண்டும் என்பதை புரியாமல் உளருபவர்கள் இருந்தால் இது தான் நிலை.

ஏதோ வெள்ளை உடுப்பு போர்த்தவர்கள் மேதாவிகள் உலக அரசியலில் ஆதிக்கம் உள்ளவர்கள் என்று நம்பியதால் வந்த வினை இது எல்லாம்.

இன்று பிள்ளையானின் வெளிநாட்டு பிரச்சாரத்துக்காகவும் வெள்ளை உடுப்பு போட்டவர்களில் சிலர் தான் உலக வலம் வருகின்றார்கள் என்பது உரியவர்களுக்கு தெரியுமா??

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எனது செய்திகளை வெளியிடும்போது இனி இந்துக்கள் கொல்லப்பட்டனர் எனத்தான் வெளியிட இருக்கிறேன்

மிக நல்ல முடிவு :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே மதம் என்பதற்காக மதவாதம் என்கின்றீர்களே, ஒரே தமிழினம் என்பதற்காக தமிழர்கள் ஆதரவளிப்பது இனவாதமாகுமா? யார் ஆதரவு தந்தாலும் முதலில் அதற்கு நன்றி சொல்வதே சிறப்பாகும்.

இன வாதத்துக்கு மதவாதம் போட்டியா?... அப்படிப்பார்க்கப்போனா மதமற்றவர்கள் எல்லாம் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா?...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக ஆதரவு தருகின்றார்கள். அதை ஏன் கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னேன். ஒரே இன், ஒரே மதம், ஒரே மொழி, என்று ஆதரவளிக்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கொண்டிருக்கலாம்.

அவை மதவாதம், இனவாதம், மொழிவாதம், பிரதேசவாதம் என்ற ஏதோ ஒரு பிரிவுக்குள் அடக்கப்படக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக ஆதரவு தருகின்றார்கள். அதை ஏன் கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னேன். ஒரே இன், ஒரே மதம், ஒரே மொழி, என்று ஆதரவளிக்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கொண்டிருக்கலாம்.

அவை மதவாதம், இனவாதம், மொழிவாதம், பிரதேசவாதம் என்ற ஏதோ ஒரு பிரிவுக்குள் அடக்கப்படக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

அவை மதவாதம்இ இனவாதம்இ மொழிவாதம்இ பிரதேசவாதம் என்ற ஏதோ ஒரு பிரிவுக்குள் அடக்கப்படக்கூடியது

இல்லை இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல..........

கருணாவின் பிரச்சினையின்போது தலைவர் அவர்கள் மிக ஆழமான கருத்தை முன்வைத்திருந்தார்

இவை அனைத்தும் இருக்கும் ஒருவனிடமே தேசப்பற்றும் இருக்கும் என............

அதேநேரம் இது மற்றவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேண்டும் அவ்வளவே........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.