Jump to content

இனி கலைஞரை திட்டினால்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த பதின்மூன்றாம் தேதி தே.மு.தி.க. சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் `ஆளும் தி.மு.க.வினரை சுட்டுக் கொல்லணும்' என்று விஜயகாந்த் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயகாந்துக்கு சரியான பதிலடி கொடுக்க தி.மு.க.வினர் காத்துக் கொண்டிருக்க, அதற்குத் தோதாக வந்து வாய்த்தது, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுடப்படுவதைக் கண்டித்து கலைஞர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கடந்த பத்தொன்பதாம் தேதி நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அன்பழகன், ஆற்காட்டார் உள்பட பல தி.மு.க. தலைவர்களும் விஜயகாந்தை ஒரு பிடிபிடித்து விட்டுத்தான் சிங்கள கடற்படை விவகாரத்தையே பேசினார்கள்.

தமிழகம் முழுக்கவே இப்படி என்றால், விஜயகாந்த் வில்லங்கத்தை விதைத்துச் சென்ற ராமேஸ்வரம் நிலவரத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? விஜயகாந்த்துக்கு எதிராக அனலே பறந்தது.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல் நடிகர் விஜயகாந்தின் பேச்சுக்கு ஒரு நடிகரைக் கொண்டே பதிலடி கொடுத்து புளகாங்கிதப்பட்டுக் கொண்டது ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.

அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருமான முகவை குமார் என்கிற நடிகர் ரித்தீஸை விஜயகாந்துக்கு எதிராகக் கொம்பு சீவி விட, உண்ணாவிரதப் பந்தலில் விஜயகாந்தை விளாசித் தள்ளிவிட்டார் அவர்.

`வாடா, போடா, அடேய்' என்று விஜயகாந்தை குறிப்பிட்டு ரித்தீஸ் பேசிய பத்து நிமிடப் பேச்சுக்கு கூட்டத்தில் விசில் பறந்தது. ஒருகட்டத்தில் தன் பேரனின் பேச்சைக் கேட்டு சுப. தங்கவேலனே கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்.

அப்படி என்னதான் பேசினார் ரித்தீஸ்?

``டேய், யாரு மாவட்டத்துல வந்து யாரைத் திட்டுறே... என் தலைவரையா திட்டுறே... என் தாத்தாவையா திட்டுறே... வயசுக்கு ஒரு மரியாதை தர வேணாம்? கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர். அவர் வயது என்ன? அவர் அரசியல் அனுபவம் என்ன? அவரோட கால் தூசுக்குப் பெறுவியா நீ? வயசுக்கு மரியாதை தரணும்னு முட்டாளுக்குக் கூட தெரியுமேடா. இவ்வளவு வயசாகி உனக்கு ஏன் அது தெரியாமல் போச்சு?'' என்று ஆரம்பித்து, ``இனிமே நீ ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்ளே நுழைஞ்சுடுவே? நுழைஞ்சு பாருடா. நாங்க யாருன்னு உனக்குக் காட்டறோம். இனிமேல் கலைஞரைத் திட்டினால் உனக்குக் கருமாதிதாண்டா. இனிமே இந்த மாவட்டத்துக்குள்ளே எங்கேயும் நீ நுழையக்கூடாது. அப்படி மீறி நுழைஞ்சா நடக்குறதே வேற'' என்று அனல் கக்க ரித்தீஸ் பேசி முடித்ததும் ஏக விசில்.

ஒன்றியத் தலைவர் ஒருவர் பேசும் போது, ``டேய், விஜயகாந்த். முதலமைச்சர் கனவா கண்டுக்கிட்டு இருக்கே நீ. இதோ பாரு. இந்த தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா நமீதா வந்தாலும் வருமே தவிர. நீ எந்தக் காலத்திலும் வர முடியாது!'' என்று கூற, அதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க வந்த மு.க. ஸ்டாலின், விஜயகாந்தை விளாசுவார் என்று ஒட்டுமொத்த கூட்டமும் ஏகப்பட்ட ஆர்வத்தோடு காத்திருக்க. அவரோ தனக்கு உடல்நலமில்லாத காரணத்தைச் சொல்லிவிட்டு, `கச்சத்தீவை மீட்பது ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு' என்று பேசி ஐந்து நிமிடத்திலேயே தன் உரையை முடித்துக் கொண்டார்.

அன்றைய ராமேஸ்வரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்துக்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்ததன் மூலம் ரித்தீஸ்தான் அன்றைக்கு ரியல் ஹீரோவாகி விட்டார்.

நாம் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``விஜயகாந்துக்கு என்னங்க அரசியல் பின்பலம் இருக்கு? மக்களுக்காகப் போராட்டம் நடத்தி ஒரு தடவையாவது ஜெயிலுக்குப் போயிருக்காரா? அவருக்கு என்ன தகுதி இருக்கு, என் தலைவனையும் (கலைஞர்) என் தாத்தாவையும் (சுப. தங்கவேலன்) விமர்சனம் பண்ண? அரசியல் விமர்சனம் என்பது நாகரிகமா, ஆரோக்கியமா இருக்கணும். உடனே நீங்க, ராமேஸ்வரம் உண்ணாவிரதப் பந்தல்ல நான் விஜயகாந்தைப் பத்தி பேசினது மட்டும் நாகரிகமானதான்னு கேட்கலாம். விஜயகாந்த் மாதிரி ஆட்களுக்கு அப்படிப் பேசினாதான் புத்தியில் ஏறும். தவிர, பொதுக்கூட்டத்துல ஒன்றைப் பேசிட்டு அதை மறுநாளே மறுத்துப் பேசுற கோழை நான் கிடையாது. நான் ராமநாதபுரத்து மறவன். ஒரு நாக்கு... ஒரு சொல்தான் எனக்கு. அவரு பேசின பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டே ஆகணும். இல்லாட்டி இந்த மாவட்டத்துக்குள்ளே அவரு நுழையவே முடியாது!'' என்று வெடித்தவரிடம் நாம்,

`` `கலைஞரை இனி திட்டினா, விஜயகாந்துக்கு கருமாதிதான்' என்று நீங்கள் பேசியது மிகமிக அநாகரிகமில்லையா?'' என்று கேட்டோம். ``அவரு மட்டும் `தி.மு.க. காரர்களை சுட்டுத் தள்ளணும். கொல்லணும்னு பேசலாம், நான் அப்படி பேசக் கூடாதா? இதோ பாருங்க சார், கலைஞரோட அரசியல் அனுபவமும், வயதும் எவ்வளவு பெரிய விஷயம்? அவரோட நிழல் தன் மேலே படாதான்னு தொண்டர்கள் மட்டும் இல்ல, படிச்சவங்களே ஏங்கிக்கிட்டு இருக்காங்க. அவரைப் போய் `நீ...' `வா...' `போ'...ன்னு மரியாதை இல்லாம பேசுனா பொறுத்துக்கிட்டு இருக்க முடியுமா? ஒரு தி.மு.க காரனா மட்டுமில்லே, என்னோட தாத்தா (சுப. தங்கவேலன்) என் ரத்தத்துல சின்ன வயசுலேயே ஊட்டி வளர்த்த திராவிடக் கழக உணர்வோடயும் சொல்றேன். கலைஞரைத் திட்டுறதை விஜயகாந்த் இனிமே அடியோட நிறுத்திக்கணும். இல்லேன்னா, அவருக்கு கருமாதிதான். உங்ககிட்டே சொன்ன இதே கருத்தை எத்தனை ஆயிரம் பேர் முன்னிலையிலும் நான் மறுபடி மறுபடி சொல்லுவேன். சொன்னதைச் சொல்லலேன்னு அந்தர்பல்டி அடிக்க நான் ஒண்ணும் கோழை இல்லே!'' என்றார் முகவை குமார் என்ற ரித்தீஸ்.

ஆக மொத்தத்தில்,அரசியலில் நாகரிகம் என்பது கவலைக்குரியதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!

படங்கள் : க. லோகேஷ்

வல்லம் மகேசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவருமான முகவை குமார் என்கிற நடிகர் ரித்தீஸை விஜயகாந்துக்கு எதிராகக் கொம்பு சீவி விட, உண்ணாவிரதப் பந்தலில் விஜயகாந்தை விளாசித் தள்ளிவிட்டார் அவர்.

``டேய், யாரு மாவட்டத்துல வந்து யாரைத் திட்டுறே... என் தலைவரையா திட்டுறே... என் தாத்தாவையா திட்டுறே... வயசுக்கு ஒரு மரியாதை தர வேணாம்? கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர். அவர் வயது என்ன? அவர் அரசியல் அனுபவம் என்ன? அவரோட கால் தூசுக்குப் பெறுவியா நீ? வயசுக்கு மரியாதை தரணும்னு முட்டாளுக்குக் கூட தெரியுமேடா. இவ்வளவு வயசாகி உனக்கு ஏன் அது தெரியாமல் போச்சு?'' என்று ஆரம்பித்து, ``இனிமே நீ ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்ளே நுழைஞ்சுடுவே? நுழைஞ்சு பாருடா. நாங்க யாருன்னு உனக்குக் காட்டறோம். இனிமேல் கலைஞரைத் திட்டினால் உனக்குக் கருமாதிதாண்டா. இனிமே இந்த மாவட்டத்துக்குள்ளே எங்கேயும் நீ நுழையக்கூடாது. அப்படி மீறி நுழைஞ்சா நடக்குறதே வேற'' என்று அனல் கக்க ரித்தீஸ் பேசி முடித்ததும் ஏக விசில்.

இந்த எருமை மட்டும் வயசுக்கு மரியாதை குடுக்குதா? பிறகு இது அதை திட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலையும் கலைஞரை திட்டும் பொழுது வயதை பார்த்து திட்டவும்.உங்களது பிறப்பு சன்றிதழை இனைத்தால் ந்ல்லம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிலையும் கலைஞரை திட்டும் பொழுது வயதை பார்த்து திட்டவும்.உங்களது பிறப்பு சன்றிதழை இனைத்தால் ந்ல்லம்.....

அந்த நடிகன் மாதிரி அவ்வளவுக்கு நல்லவன் நானில்லை.

Link to comment
Share on other sites

டேய், விஜயகாந்த். முதலமைச்சர் கனவா கண்டுக்கிட்டு இருக்கே நீ. இதோ பாரு. இந்த தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா நமீதா வந்தாலும் வருமே தவிர. நீ எந்தக் காலத்திலும் வர முடியாது!'' என்று கூற, அதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு.

ஓ..உது என்னும் நன்னா இருக்கே :lol: ..நமீதா அக்கா முதலமைச்சர் ஆனா எப்படி இருக்கும் யோசித்து பார்த்தன் நினைக்கவே முடியல..அவா முதலமைச்சரா வந்தா எல்லாத்தையும் திறந்து விடுவா எண்டு நினைக்கிறன்..(சரி ஒருத்தரும் என்னை ஏசி போடாதையுங்கோ)..!! :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா திட்டுறவனும் உருபடமாட்டான் திட்டுறதை கேட்கிறவனும் உருபடமாட்டான்" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

``டேய், விஜயகாந்த். முதலமைச்சர் கனவா கண்டுக்கிட்டு இருக்கே நீ. இதோ பாரு. இந்த தமிழ்நாட்டுக்கு அடுத்த முதலமைச்சரா நமீதா வந்தாலும் வருமே தவிர. நீ எந்தக் காலத்திலும் வர முடியாது!''

நீங்கள் நமீதாவை முதலமைச்சர் ஆக்கி (அழகு)பார்த்தாலும் பார்ப்பியள்....................

தாங்கமுடியல............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: முந்தி ஜெயலலிதா, இப்ப நமீதாவா? நல்லாயிருக்குத் தமிழ்நாட்டு அரசியல். சினிமாவில தனது சதையைக் காட்டி கவர்ச்சி நடனமாடிய ரெண்டாந்தர நடிகையைத்தானே "அம்மா", " தெய்வம்" என்று வழிபடுகிறீர்கள். நமீதா என்ன சக்கீலாவைக் கூட முதலமைச்சராக்குவீர்கள்.

வாழ்க தமிழ்நாட்டு அரசியல் ஞானம் ! புல்லரிக்குது போங்கோ !!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேணும் நாலும் தெரிஞ்சவர்களே,

எனக்கொரு சந்தேகம், நீங்கள் இவ்வளவு பேரும், மூண்டு பயன் படாத அரசியல் வாதிகளுக்கும் ஆக குறைந்தது ரெண்டு நடிகர்களுக்கும் விளம்பரம் தேடி குடுத்திருக்கிரியள், அவர்களும் அதயே எதிர்பாத்திருப்பினம். உது உங்களுக்கு தெரியாதோ?

சாக்கடை அரசியலுக்கு சேறு வார்க்கும் பணி செப்பனே செய்யப்பட்டது.....

அடுத்து சாக்கடை நாறுது எண்டு குளறும் பணி தொடரும்.

எனகென்ன வெண்டால் உதே விளம்பரத்த ரெண்டு நல்ல பயன் உள்ள சனத்துக்குசெய் திருந்தால் இங்க நாலு சனம் பயன்படுத்தியிருக்கும் அவ்வளவும் தான்,

இவை எல்லம் முக்கிய!!! செய்திகள் தான், என்ன என்னைபோன்ர பட்டினத்து பட்டிக்காடுகளுக்கு விளக்கம் குறைவு பாருங்கோ...

நாலும் தெரிஞ்சவா நன்னா நடத்துங்கோ.... வாழ்க வாழ்க....

Link to comment
Share on other sites

ஓ..உது என்னும் நன்னா இருக்கே :icon_idea: ..நமீதா அக்கா முதலமைச்சர் ஆனா எப்படி இருக்கும் யோசித்து பார்த்தன் நினைக்கவே முடியல..அவா முதலமைச்சரா வந்தா எல்லாத்தையும் திறந்து விடுவா எண்டு நினைக்கிறன்..(சரி ஒருத்தரும் என்னை ஏசி போடாதையுங்கோ)..!! :icon_idea:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா திட்டுறவனும் உருபடமாட்டான் திட்டுறதை கேட்கிறவனும் உருபடமாட்டான்" :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா

நீங்க காவிரிதண்ணீரைதானே சொல்றீங்க? :lol:

எப்படி கண்டுபிடிச்சன் பாத்தீங்களே :huh:

Link to comment
Share on other sites

ஜமுனா

நீங்க காவிரிதண்ணீரைதானே சொல்றீங்க? :unsure:

எப்படி கண்டுபிடிச்சன் பாத்தீங்களே :rolleyes:

அட..சரியா கண்டுபிடித்திட்டியள் பாருங்கோ.. :lol: (நான் அதை தான் சொன்னான்)..வேற நேக்கு என்ன தெரியும் நான் சின்ன பிள்ள அல்லோ..நீங்க என்ன நினைக்கிறியள் இந்த அக்கா வந்தா காவேரி பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் தானே..?? :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட..சரியா கண்டுபிடித்திட்டியள் பாருங்கோ.. :o (நான் அதை தான் சொன்னான்)..வேற நேக்கு என்ன தெரியும் நான் சின்ன பிள்ள அல்லோ..நீங்க என்ன நினைக்கிறியள் இந்த அக்கா வந்தா காவேரி பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் தானே..?? :mellow:

அப்ப நான் வரட்டா!!

வாந்தா சரிவரும்தான்.

ஆனா நாமதான் ஒரு குலுக்கலை இளக்கிறோம் :huh:

[அட நான் சொன்னது அதிஸ்ரத்தை]

பேபிக்கு புரியாதல்லோ அதுதான் விளக்கிசொன்னேன் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o முந்தி ஜெயலலிதா, இப்ப நமீதாவா? நல்லாயிருக்குத் தமிழ்நாட்டு அரசியல். சினிமாவில தனது சதையைக் காட்டி கவர்ச்சி நடனமாடிய ரெண்டாந்தர நடிகையைத்தானே "அம்மா", " தெய்வம்" என்று வழிபடுகிறீர்கள். நமீதா என்ன சக்கீலாவைக் கூட முதலமைச்சராக்குவீர்கள்.

வாழ்க தமிழ்நாட்டு அரசியல் ஞானம் ! புல்லரிக்குது போங்கோ !!!!!

:mellow::huh: ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

கேட்கவே கேவலமா இருக்கு

Link to comment
Share on other sites

வாந்தா சரிவரும்தான்.

ஆனா நாமதான் ஒரு குலுக்கலை இளக்கிறோம் :rolleyes:

[அட நான் சொன்னது அதிஸ்ரத்தை]

பேபிக்கு புரியாதல்லோ அதுதான் விளக்கிசொன்னேன் :lol:

ஓமோம் எனக்கு விளங்கவே இல்லை என்ன குலுக்கல் எண்டு நீங்க சொன்னா பிறகு தான் விளங்கிச்சு ராஜா அண்ணா எண்டா பாருங்கோவன் :unsure: ..மற்றதண்ணா குமுதத்தில ஒரு பகிடி வாசித்தனான் அதையும் உங்களோட பகிர்ந்து கொள்ளுறன் சரியா.. :lol:

"சேது கால்வாய் திட்டதிற்கு

நமீதா கால்வாய் திட்டம்"

என்று வைத்தால் எங்கள்

கட்சி முழு ஆதரவும் தரும்

என்பதனை தெரிவித்து

கொள்கிறேன்" :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஓமோம் எனக்கு விளங்கவே இல்லை என்ன குலுக்கல் எண்டு நீங்க சொன்னா பிறகு தான் விளங்கிச்சு ராஜா அண்ணா எண்டா பாருங்கோவன் :unsure: ..மற்றதண்ணா குமுதத்தில ஒரு பகிடி வாசித்தனான் அதையும் உங்களோட பகிர்ந்து கொள்ளுறன் சரியா.. :lol:

"சேது கால்வாய் திட்டதிற்கு

நமீதா கால்வாய் திட்டம்"

என்று வைத்தால் எங்கள்

கட்சி முழு ஆதரவும் தரும்

என்பதனை தெரிவித்து

கொள்கிறேன்" :unsure:

அப்ப நான் வரட்டா!!

பாத்தீங்களே நான் விளக்கம்தரவில்லை என்டால் கஸ்ரப்பட்டு இருப்பியள் என்ன?

ம் உங்கள் குமுதம் பகிடி நல்லாய் இருக்கு:rolleyes:

மற்றது

நான் நெடுக்காலைபோவானுக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துள்ளேன்

[இதுவரை 10 அரைபேர் பதிஞ்சு இருக்கினம்]

நீங்கள் கொள்கைபரப்பு செயலாளராக செயல்படமுடியுமா?

என்னடா சின்னபேபியை பாத்து இப்படி கேக்கிறானே என்டுகோவிக்கிறேல்லை!

ஜம்மு சின்னதிலேயே பழுத்தபேபிதானே அதுதான் கேட்டேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் எனக்கு விளங்கவே இல்லை என்ன குலுக்கல் எண்டு நீங்க சொன்னா பிறகு தான் விளங்கிச்சு ராஜா அண்ணா எண்டா பாருங்கோவன் :D ..மற்றதண்ணா குமுதத்தில ஒரு பகிடி வாசித்தனான் அதையும் உங்களோட பகிர்ந்து கொள்ளுறன் சரியா.. :lol:

"சேது கால்வாய் திட்டதிற்கு

நமீதா கால்வாய் திட்டம்"

என்று வைத்தால் எங்கள்

கட்சி முழு ஆதரவும் தரும்

என்பதனை தெரிவித்து

கொள்கிறேன்" :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி......

நீங்கள் ஆழம் தெரியாமல் காலை விடப்போறீங்கள்

............ ஆதாவது சேது கால்வாய் திட்டமென்பது நடுக்கடலில் செய்வது. உங்களுக்கு அவ்வளவு நீச்சல் தெரியுமோ?

திட்டத்தை தொடக்க உங்களைம் ஆதரவு தந்தவர்கள் எனும் பேரில் அழைத்தால்....... நீங்களும் போகவேண்டாமா தடுமாறி ஏதும் ஆகி நீங்கள் கடலின் உள்ளே நீங்களே முழுதாய் மூள்கினால் என்ன நிலை??? யோசிக்க வேண்டாமா ஜம்மு.

நமீதா என்றவுடன்.... சும்மா எழுந்தமாத்திரத்தில் ஆதரவு கொடுப்பதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரை திட்டுவதா??? அவர் எவ்வளவு பெரிய கட்சி வைத்திருக்கிறார்.......

Link to comment
Share on other sites

பாத்தீங்களே நான் விளக்கம்தரவில்லை என்டால் கஸ்ரப்பட்டு இருப்பியள் என்ன?

ம் உங்கள் குமுதம் பகிடி நல்லாய் இருக்கு

மற்றது

நான் நெடுக்காலைபோவானுக்கு ரசிகர்மன்றம் ஆரம்பித்துள்ளேன்

[இதுவரை 10 அரைபேர் பதிஞ்சு இருக்கினம்]

நீங்கள் கொள்கைபரப்பு செயலாளராக செயல்படமுடியுமா?

என்னடா சின்னபேபியை பாத்து இப்படி கேக்கிறானே என்டுகோவிக்கிறேல்லை!

ஜம்மு சின்னதிலேயே பழுத்தபேபிதானே அதுதான் கேட்டேன்

ஒம்..அண்ணா நீங்க விளக்கம் தராட்டி நான் என்னவெல்லாம் நினைத்திருப்பன்..நன்ன காலம் அப்படி எல்லாம் நடக்கல என்ன :D ..ஓ பேஷா கொள்கையை பரப்பு செயலாளர் ஆகலாமே ஆனா ஒன்னு நான் அறிக்கை விடுவன் சொல்லிட்டன்.. :lol: (எண்ட நீண்ட நாள் ஆசையில இதுவும் ஒண்டு)...அதுக்கு உங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை தானே ராஜா அண்ணா..

சா..சா உதுக்கு எல்லாம் நான் கோவிப்பனோ...என்னை நியமித்திட்டியள் தானே எனி பாருங்கோவன் வலு கெதியில....இப்போதைக்கு அங்கால நான் சொல்ல மாட்டன்..(காலம் அதை சொல்லும்)... :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி......

நீங்கள் ஆழம் தெரியாமல் காலை விடப்போறீங்கள்

............ ஆதாவது சேது கால்வாய் திட்டமென்பது நடுக்கடலில் செய்வது. உங்களுக்கு அவ்வளவு நீச்சல் தெரியுமோ?

திட்டத்தை தொடக்க உங்களைம் ஆதரவு தந்தவர்கள் எனும் பேரில் அழைத்தால்....... நீங்களும் போகவேண்டாமா தடுமாறி ஏதும் ஆகி நீங்கள் கடலின் உள்ளே நீங்களே முழுதாய் மூள்கினால் என்ன நிலை??? யோசிக்க வேண்டாமா ஜம்மு.

நமீதா என்றவுடன்.... சும்மா எழுந்தமாத்திரத்தில் ஆதரவு கொடுப்பதா?

இல்ல..இல்ல நான் கால விடமாட்டன் அல்லோ மற்றவையின்ட காலை விட்டு பார்த்து போட்டு தான் எண்ட காலை விடுவன் உதில எல்லாம் நான் வலு கவனம் அல்லோ :lol: ..சப்பா இப்படி எல்லாம் பிரச்சினை இருக்கோ உது எனக்கு தெரியாம போச்சே..(எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா).. :lol:

அப்படி நான் கடலுகுள்ள விழ போறன் எண்டா நமீதா அக்காவையும் இழுத்து கொண்டு அல்லோ விழுவன் உங்க தான் ஜம்மு பேபி நிற்குது..(அப்ப நான் தப்பிடமாட்டன்).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்மு அறிக்கை மட்டும்தான் விடவேணும். அறிக்கையிலை சொல்லுற ஒண்டும் செய்யிறேல்லைச் சொல்லிப் போட்டன். :lol::D:lol: இது எப்படியிருக்கு??? (யம்முவின் கருத்துகளை வாசித்து, வாசித்து எனக்கும் அப்படியே எழுத வருகிறது :icon_mrgreen::lol: )

நமீதா அக்காவையும் இழுத்துக் கொண்டு விழுந்தால், நீங்கள் இன்னும் ஆழமாக அல்லோ விழுவீங்கள். அவன்ர எடைக்கு நல்லாக் கீழேதான் போவீங்கள். பிறகெங்கே தப்பிறது??? :lol::):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: பேசாமல் நமீதாவையோ அல்லது சக்கீலா அக்காவையோ கலைஞருக்கு திருமணம் முடித்து வைத்து விடுங்கள். அவரும் சந்தோசப்பட்டமாதிரியும் இருக்கும், தொண்டர்களுக்கும் இன்னொரு புரட்சித் தலைவி கிடைத்த மாதிரி இருக்கும். என்ன நான் சொல்லுறது ?!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பேசாமல் நமீதாவையோ அல்லது சக்கீலா அக்காவையோ கலைஞருக்கு திருமணம் முடித்து வைத்து விடுங்கள். அவரும் சந்தோசப்பட்டமாதிரியும் இருக்கும், தொண்டர்களுக்கும் இன்னொரு புரட்சித் தலைவி கிடைத்த மாதிரி இருக்கும். என்ன நான் சொல்லுறது ?!

எந்த புரட்சி ரகு :lol::lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol: அதுதானப்பா,கலியாணம் முடிக்காமலயே பிள்ளை பெறுவது. அம்மா ஜெயலலிதாவைக் கேட்டாச் சொல்லித் தருவா!!!!!
Link to comment
Share on other sites

யம்மு அறிக்கை மட்டும்தான் விடவேணும். அறிக்கையிலை சொல்லுற ஒண்டும் செய்யிறேல்லைச் சொல்லிப் போட்டன். இது எப்படியிருக்கு??? (யம்முவின் கருத்துகளை வாசித்து, வாசித்து எனக்கும் அப்படியே எழுத வருகிறது :lol::lol: )

நமீதா அக்காவையும் இழுத்துக் கொண்டு விழுந்தால், நீங்கள் இன்னும் ஆழமாக அல்லோ விழுவீங்கள். அவன்ர எடைக்கு நல்லாக் கீழேதான் போவீங்கள். பிறகெங்கே தப்பிறது???

அட...நான் அறிக்கை மட்டும் தான் விடுவன் அல்லோ.. :o (அதை நிறைவேற்றுவது எல்லாம்)..என் கையில் இல்லை எல்லாம் அவன் செயல் எண்டு சொல்லிடமாட்டன்..(இது எப்படி இருக்கு??) :o ...அச்சோ உங்களுக்கும் என்ன மாதிரி எழுத வருதோ நன்னா இருக்கே..(போற போக்கை பார்த்தா நானும் சூப்பர் ஸ்டார் ஆகிடலாம் போல இருக்கு)... :o

நான் பகிடிக்கு...தமிழ் அச்சு அக்கா..எண்ட கருத்தை வாசிக்கிறவை எல்லாரும் பாவங்கள் தான்..நான் என்ன செய்ய நான் தானே கொழந்தை.. :D

ஓ..நீங்க அப்படி யோசிக்கிறியளோ..நான் ஏன் நமீதா அக்காவை இழுத்து கொண்டு பாயிறன் எண்டு சொன்னனான் எண்டா..அவாவை காப்பாத்தை பலபேர் குதிப்பீனம் அல்லோ :o ..அப்ப நான் அவாவை பிடித்து கொண்டு தப்பிடமாட்டன் இதை தான் சொல்லுறது "ஒரு கல்லில இரண்டு அப்பிள்" எண்டு..(எப்படி நம்ம அறிவு)..இதையும் பகுத்தறிவு எண்டு சொல்லலாம்..ஆனா என்ன ஒருத்தரும் சொல்ல மாட்டீனம்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாளையுட‌ன் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடியுது..........................
    • இது ஏற்க்கனவே நான் எழுதிய கருத்து.அதை ஆட்டையை போட்ட கவி அவர்களை மென்மையாக கன்டிக்கிறேன்.😀
    • பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
    • இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.