Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் பிரதமருக்கு கொழும்பில் ஏற்பட்ட "அதிர்ச்சி" சம்பவம்

Featured Replies

இந்தியப் பிரதமருக்கு கொழும்பில் ஏற்பட்ட "அதிர்ச்சி" சம்பவம்

[ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:22 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தெரியவருவதாவது:-

சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு சென்றிருந்தார்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்த அவர், சிறப்பு உலங்குவானூர்தி மூலம் அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து உச்ச பாதுகாப்பு கொண்ட வாகன அணி மூலம் சிறிலங்கா அரசு தலைவர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முன்னும் பின்னும் வாகனங்கள் பாதுகாப்பு வழங்க, இந்தியப் பிரதமரின் வாகனத்தை கபில ஜெயசேகர என்பவர் ஓட்டிச்சென்றார்.

சிறிலங்கா அரச தலைவர் அலுவலகத்தில் இந்தியப் பிரதமரை சேர்ப்பித்தவுடன், அவரை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நடைபெற்றன. சந்திப்பை நிறைவு செய்துகொண்டு வெளியே வந்து தனது வானத்தில் ஏறினார் இந்தியப் பிரதமர். ஆனால், அவரது வாகனத்தை வரும்போது ஓட்டிவந்த கபில ஜெயசேகரவை காணவில்லை. உடனே அங்கு பதற்றம் ஏற்பட்டது.

உடனே, வரும்போது பிரதமரின் பாதுகாப்பு வாகன அணியில் வந்த இந்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், பிரதமரின் வாகனத்தை ஓட்டுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டார். பதற்றம் நீங்கி, வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெல்ல மெல்ல நகரத் தொடங்கின.

அப்போது, எங்கிருந்தோ ஓடிவந்த - வரும்போது இந்தியப் பிரதமரின் வாகனத்தை ஓட்டிவந்த கபில ஜெயசேகர - வாகன அணி புறப்பட்டுவதைக் கண்டு பதற்றமடைந்து, இந்தியப் பிரதமர் பயணம் செய்த வாகனத்தை கலைத்துச் சென்று, அதன் பின் ஜன்னல்களை தட்டி நிறுத்தச் சொன்னார்.

இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை ஓடிச்சென்று பிடித்துவந்து நிலைமையை எடுத்துக்கூறி, பிரதமரின் வாகன அணி தொடர்ந்து பயணம் செய்ய ஒழுங்கு செய்தனர்.

இந்த சம்பவத்தை கேள்வியுற்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, குறிப்பிட்ட வாகன ஓட்டுனர் கபில ஜெயசேகரவை நேரடியாக அழைத்து, சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியதுடன் இனிமேல் பாதுகாப்பு விடயத்தில் கவனமாக இருக்கும்படி எச்சரித்தும் அனுப்பியுள்ளார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது, எங்கிருந்தோ ஓடிவந்த - வரும்போது இந்தியப் பிரதமரின் வாகனத்தை ஓட்டிவந்த கபில ஜெயசேகர - வாகன அணி புறப்பட்டுவதைக் கண்டு பதற்றமடைந்து, இந்தியப் பிரதமர் பயணம் செய்த வாகனத்தை கலைத்துச் சென்று, அதன் பின் ஜன்னல்களை தட்டி நிறுத்தச் சொன்னார்.

இதனை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை ஓடிச்சென்று பிடித்துவந்து நிலைமையை எடுத்துக்கூறி, பிரதமரின் வாகன அணி தொடர்ந்து பயணம் செய்ய ஒழுங்கு செய்தனர்.

இந்த சம்பவத்தை கேள்வியுற்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, குறிப்பிட்ட வாகன ஓட்டுனர் கபில ஜெயசேகரவை நேரடியாக அழைத்து, சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியதுடன் இனிமேல் பாதுகாப்பு விடயத்தில் கவனமாக இருக்கும்படி எச்சரித்தும் அனுப்பியுள்ளார்.

வாகனத்திலை திறப்பை விட்டு விட்டு ,

ஒண்டுக்கு , இரண்டுக்கு இருக்கப் போனவரோ ?

  • கருத்துக்கள உறவுகள்

கபில ஜெயசேகர , விடிய போக வேண்டிய இடத்துக்கு போகவில்லை போல. ஜெயராஜ் பெர்ணாண்டோ போல தானும் சேர்த்து கைலாயம் போக வேண்டும் என கூட யோசித்து இருக்கலாம்.மகிந்த சிந்தனை மகிந்தவுக்கே தெரியாத போது கபில எம்மாத்திரம். :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

உந்த லட்ச்சனத்ில ஏழட்டுக்கப்பல் பாதுகாப்பு வேற :lol:

நான் நினைக்கிறேன் ராஜிகாந்திக்கு துப்பாக்கியால் அடித்த போன்று எதாவது செய்ய ஒழுங்கு

செய்ய போயிருப்பார்....

எப்படியும் ஆத்திரம் இருக்குமல்லவா ....

இந்தியபடை ஒருவிதமான நெருக்குதல் மூலம் தான் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இந்திய

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க.....இது பிடிக்காமல் இருந்திருக்கும்....

பாதுகாப்பு அமைச்சர் நாராயணனும் வாடகைகாரில் தங்குமிட போனாராம்...

இதுவும் ஒருவிதமான பழிவாங்கல்... தெரிந்து நடக்கும்....

காட்டுமிராண்டி ஆட்சியிடம் எங்கே பண்புகள் இருக்கும்......?

எல்லாம் போலிவேசங்கள்..... இதுவும் தமிழருக்கு நன்மையாக முடியும் இந்தியாவிற்கு எதாவது

சூடு ? சுரணை இருந்தால்?

அட நாராயணன் சிங்கு பாப்பா எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி வைத்தியம் தான் போல. அழிறப்பர் கல்குலேற்றர் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சு போட்டு வாழ்க்கை வெறுத்துப் போய் நிப்பினம் போலை.

இந்த கலகத்தால தெற்காசியவென்ன அமெரிக்கா வெல்லாம் பேரதிர்ச்சியாம்... புஸ்சுக்கு வயித்தாலையும் போட்டுதாம்.

ஓம் சுக்கோப்பி ஒண்டு வைச்சு குடுத்தா நல்ல இருக்கும். அதை குடிச்சுப் போட்டு சிலவேளை தமிழீழத்தை அங்கிகாரிச்சாலும் அங்கீகரிப்பார் புஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போது, எங்கிருந்தோ ஓடிவந்த - வரும்போது இந்தியப் பிரதமரின் வாகனத்தை ஓட்டிவந்த கபில ஜெயசேகர - வாகன அணி புறப்பட்டுவதைக் கண்டு பதற்றமடைந்து, இந்தியப் பிரதமர் பயணம் செய்த வாகனத்தை கலைத்துச் சென்று, அதன் பின் ஜன்னல்களை தட்டி நிறுத்தச் சொன்னார்.

இதை நடிகர் வடிவேலு எப்படி செய்திருப்பார் என யோசித்து பார்த்தேன் தாங்ங்ங்ங்கமுடியவில்லை :unsure:

கிகிகிக்கி வடிவேல் போல அழுதிருப்பாரோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.