Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்ச்சியில் நிலை மாறாமல் இருந்தால், பின் வளர்ச்சி ஏற்படும்

Featured Replies

காட்டு பலம் காட்டி சம்பூரை பிடித்தவர்கள்

வீரியங்கள் தாம் பேசி விரைந்தனர் வன்னி நோக்கி

காரியங்கள் கைமீறி போகுதென்றே - சம்பூரை

விட்டு பிரிகின்றார்; வீரியங்கள் என்னாச்சு

அடர்ந்த கானகத்தின் எல்லையோர கிராமத்தின் ஒரு மாலை பொழுதில் இளைஞ்சன் ஒருவன் அங்கிருந்த குடிசை நோக்கி வருகிறான். பசி வந்தால் பத்தும் பறந்துபோவும் என்பார்களே அதனால் தானவோ என்னவோ அங்கிருந்த மூதாட்டியிடம் உணவு கேட்கின்றான். அடுக்களைக்கு செல்கிறால் பாட்டி, அங்கேயோ அனைத்தும் கழுவி கவிழ்திருக்கிறது மெல்ல திரும்பியவள், திருப்பி அனுப்பாமல், தின்பதற்க்கு சில பழம் கொடுத்து, சிறிது காத்திரு தம்பி, சூடான உணவை சுவையுடன் தருகிறேன் என்றே அகன்றாள் அவ்விடம் விட்டு அவன் பதில் மொழி கேளாமல். காத்திருந்தான் இளைஞன் கடும் பசியுடன். சூடான உணவுடன் வந்த பாட்டி, சுட சுட பரிமாறினால். கடும் பசி காரணமாக கண பொழுதும் பொறுக்கேன் இனி என்றே, ஆக்க பொறுத்த அவன் ஆற பொறுக்காமல் அள்ளி வாயில் வைத்தான் அளரிவிட்டான் அவனையரியாமல், அருகிலிருந்த பாட்டி கேட்டால் சூடு பொறுக்கலையா தம்பி நீயும் அவனைப்போல் அவசர காரனாக இருக்கிராயே என கூறக் கேட்ட இளைஞ்சன், யார் அவன் என்றே வினவ. பாட்டியும் பகின்றால் நம் சிவாஜி மகராசன் அவசர பட்டு அவுரங்கசீப்பின் படை மீது பாய்வது போல் நீ உணவின் மத்தியில் கைவக்கிறாயே. சாப்பாட்டை பரப்பி விட்டு ஓரத்திலிருந்து உண்டு வா. உணவு சுடாது என்றாள். திகைத்து போன இளைஞ்சன் திரும்பி அவளை பார்த்து நன்றி கூறினான் உணவுக்காக மட்டுமல்ல. தனக்கு ஒரு போரியல் தத்துவத்தை தந்த்தற்காக.

ஆம் சகோதரர்களே, அவன் அந்த இளைஞன் வேறு யாருமல்ல மராட்டிய மாவீரன் சிவாஜி, அவன் தான் பிரமாண்டமான அவுரங்கசீப் பின் படைகளை பரவவிட்டு தன் சிறிய படை கொண்டு அவர்களை தாக்கியழித்து மராட்டிய சாம்ராஜியத்தை நிறுவினான்.

எனது அருமை சகோதரர்களே,

இது வரலாற்றை வழிகாட்டியாக கொண்டவர்களுக்கு வழிகாட்ட அல்ல மாறாக, துவண்டு விடும் தோழர்கள் துவலாமல் இருப்பதற்க்கும், தலைவனின் தந்திரோபாயத்தில் தவறு கானும் சகோதரர்கள் விளங்கி கொள்வதற்க்கே

1) தனது வீழ்ச்சி குறுகிய காலத்துக்கு மட்டுமே, விரைவில் மீளலாம் என்ற நம்பிக்கையுடைய தளபதி எதிரியின் வெற்றியை புறக்கனிக்கலாம்.

2)எதிரியை காட்டிலும் குறுகிய காலத்தில் முன்னேற்றமடைய இயலும் என நம்பிக்கை கொள்ளும் தளபதி, சிறிது கால பின்னடைவை பற்றி கவலை கொள்ள தேவையில்லை

3)எதிரியினால் முற்றிலுமாக அழிக்கப்படாத படை, எந்த நேரத்திலும் தன்னை சுதாரித்து கொண்டு மீண்டு விடும்.

4) வீழ்ச்சியில் நிலை மாறாமல் இருந்தால், பின் வளர்ச்சி ஏற்ப்படும்

5) பெரிய முயற்ச்சியின் சிறிய பயனே வீழ்ச்சியாகும்

6) தோல்வி என்பது பெரிய விஷயமல்ல, முயற்சியே முக்கியம்.

இவற்றுடன் ஈழத்தின் இன்றைய போர் வடிவத்தை ஒப்பிட்டு பார்த்தால், நமக்கு ஓரளவு நம்பிக்கை வரும். வரவேண்டும். வலிந்து உதவி செய்ய வேண்டும் அதுதான் வெற்றியை விரும்புபவர்கள் செய்ய வேண்டியது.

விமர்சனங்கள் வரவேற்க பட வேண்டியவை ஆனாலும், அவை காலமறிந்து செய்யபட வேண்டும். விமர்சனங்கள் எதிர் மறை விளைவைஏற்படுத்தா வண்ணம் செய்யலாம். நமக்கு நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தும் கருத்துக்களை தவிற்க கோருவதை எதிரி செய்யும் செய்தி தணிக்கையுடன் ஒப்பிடுவது என்பது. சரியானது அல்ல. எப்படி ஆயினும் எதிரி எதற்காக தனிக்கை செய்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாலே இது போன்ற ஒப்பீடுகளும் குறையும் என மனமாற நம்புவோம்.

பேருக்கு தமிழராக இல்லாமல், போருக்கு துணை செய்யுங்கள், யாருக்கு வேண்டும் இந்த பிழைப்பென்றே துரோகிகளை இகழ்ந்திடுங்கள். நளைய வெற்றி நமக்கே சொந்தம்.

தமிழர்கள் ஒன்றினைந்தால் தறுக்கர்களின் செருக்கழியாதா????

நன்றி

சிவராஜா

1) தனது வீழ்ச்சி குறுகிய காலத்துக்கு மட்டுமே, விரைவில் மீளலாம் என்ற நம்பிக்கையுடைய தளபதி எதிரியின் வெற்றியை புறக்கனிக்கலாம்.

2)எதிரியை காட்டிலும் குறுகிய காலத்தில் முன்னேற்றமடைய இயலும் என நம்பிக்கை கொள்ளும் தளபதி, சிறிது கால பின்னடைவை பற்றி கவலை கொள்ள தேவையில்லை

3)எதிரியினால் முற்றிலுமாக அழிக்கப்படாத படை, எந்த நேரத்திலும் தன்னை சுதாரித்து கொண்டு மீண்டு விடும்.

4) வீழ்ச்சியில் நிலை மாறாமல் இருந்தால், பின் வளர்ச்சி ஏற்ப்படும்

5) பெரிய முயற்ச்சியின் சிறிய பயனே வீழ்ச்சியாகும்

6) தோல்வி என்பது பெரிய விஷயமல்ல, முயற்சியே முக்கியம்.

அருமை! அருமை! சகோதரரே!! நன்றிகள் பல!!!

நன்றி அண்ணா உங்கள் கருத்துகளுக்கு..

நம் தேசியத்தலைவரைப்பற்றி யாரும் யாருக்கும் பறைசாற்றத்தேவையில்லை..

தருணமும்..தகமையும் அவருக்கு தெரியும்.. வெற்றிக்கென்று உதித்த வீரர் அவர்..

அவர் மீது தமிழ்மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இமயத்த்திலும் பெரிது..

அதை அவர் எடுக்கப்போகும்.. எதிர்கால நகர்வுகள் சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

இராஜ கோபுரம் எங்கள் தலைவன்

பாரெங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்

தடை நீக்கி வழிகாட்டும் தலைவன்

வந்த பகைவென்று முடிகொண்ட தலைவன்

-இராஜகோபுரம்

காலமெல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர்மூச்சு

காலமெல்லாம் கைதந்த ஒளிவீச்சு

கரிகாலன் தமிழரின் உயிர்மூச்சு

-இராஜகோபுரம்

கண்ணெனத் தமிழரைக் காக்கும் காவலனே

கன்னித் தமிழுக்கு வாய்த்த கதிரவனே

கோடை காலத்தில் குளிர்விக்கும் நிலவே

கொட்டும் மழை நாளில் குடையான அழகே

-இராஜகோபுரம்

குளிரான இளங்காலை என நிறைந்தவனே

நெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே

ஓயாது உழைத்திடும் அலையாகும் கடலே

தமிழீழம் தனைநோக்கி விரைகின்ற படகே

-இராஜகோபுரம்

http://www.metacafe.com/watch/1270331/raja...nkal_thalaivan/

வணக்கம் சிவராஜா அண்ணா

அருமையான கருத்து. உங;களுக்கு எமது நன்றிகள்.

Edited by ATOZ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருந்து எழுதும் அண்ணன் சிவராஜாக்கு நன்றிகள்

தொடருங்கள் உங்கள் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்

தொடருங்கள்

.............

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு பலம் காட்டி சம்பூரை பிடித்தவர்கள்

வீரியங்கள் தாம் பேசி விரைந்தனர் வன்னி நோக்கி

காரியங்கள் கைமீறி போகுதென்றே - சம்பூரை

விட்டு பிரிகின்றார்; வீரியங்கள் என்னாச்சு

நன்றி சிவராஜா.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிவராஜா அவர்களுக்கு , அருமையான பதிவு ,என் நன்றிகள் . நிலாமதி j

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.