Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதத் தாய் கைவிட்டாள் நாய்த் தாய் காப்பாற்றினாள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44951385_-6.jpg

தாய்மையுள்ளம் கொண்ட நாய் La China

14 வயதேயான ஒரு மனிதப் பெண்ணுக்கு பிறந்தது ஒரு ஆண் குழந்தை. சமுதாயத்துக்குப் பயந்தோ என்னவோ பிறந்த குழந்தையை வயல் வெளியில் குப்பை மேட்டில் போட்டுவிட்டு போய்விட்டாள் பெற்ற தாய்.

ஆனால் சில குட்டிகளிற்கு தாயான நாய் ஒன்றோ.. தன் குட்டிகளோடு குட்டியாய் அந்த மனிதக் குழந்தையையும் காப்பாற்றி பராமரித்திருப்பது மனித வர்க்கத்தையே ஒரு கணம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மனிதக் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இருந்து, குறித்த பெண் நாயால் 50 மீற்றர்கள் தொலைவில் இருந்த தனது குட்டிகளின் பராமரிப்பிடத்துக்கு காவிச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் நடந்தது இந்தியாவில் அல்ல தென் அமெரிக்க நாடான அஜென்ரீனாவில்.

8 வயதான அந்த நாய்க்குள்ள தாய்மை உணர்வு மனிதப் பெண்ணுக்கு தொலைந்து போனது ஆச்சரியப்படக் கூடியதாக இருப்பினும்.. இன்றைய பெண்களிடம் அது சாதாரணம் எனலாம்.

எனிப் பெண்களைப் பார்த்து "பிச்" என்று கூடச் சொல்லக் கூடாது. பெட்டை நாய்க்குக் கூட தாய்மையின் கடமை புரிகிறது.. ஆனால் பகுத்தறிவுள்ளவற்றுக்கு..???!

மூலச் செய்தி இங்கு:

http://news.bbc.co.uk/1/hi/world/americas/7577275.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமையான செய்தி :( அதுவும் நெடுக்குவின் கண்ணில் பட்டுவிட்டதே :(:( சொல்லி வேலையில்லையப்பா :rolleyes: நாயுமானவர் வாழ்க :rolleyes:

8 வயதான அந்த நாய்க்குள்ள தாய்மை உணர்வு மனிதப் பெண்ணுக்கு தொலைந்து போனது ஆச்சரியப்படக் கூடியதாக இருப்பினும்.. இன்றைய பெண்களிடம் அது சாதாரணம் எனலாம்.

சில விதிவிலக்குகள் விதியாகமுடியாது அண்ணை. சிலர் விடும் தவறுகளிற்காக எல்லாரையும் குற்றஞ்சாட்டக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில விதிவிலக்குகள் விதியாகமுடியாது அண்ணை. சிலர் விடும் தவறுகளிற்காக எல்லாரையும் குற்றஞ்சாட்டக்கூடாது.

உலகில் நாயில் விதிவிலக்கு இருக்கலாம்.. ஆனால் மனிதரில்..??!

ஆனால் நாயே இயற்கையான தாய்மை உணர்வுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்ற போது.. தாய்க்குலம் என்று போற்றக் காரணமான தாய்மையை அதன் இயல்பை இழந்த மனித விதிவிலக்குகள் தான் இன்று உலகில் அதிகம். எந்த நாயாவது தன் குழந்தையை கருவிலேயே அழிக்குமா..??! ஆனால் ஈவிரக்கமின்றி.. மனிதப் பெண் செய்கிறாளே..! அதன் வழி வந்ததாலோ என்னவோ.. இப்படியான அசுர குணங்கள்.. பெண்களிடம் இன்று அளவுக்கு மீறி வளரவே செய்கின்றன..! :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமையான செய்தி :( அதுவும் நெடுக்குவின் கண்ணில் பட்டுவிட்டதே :(:( சொல்லி வேலையில்லையப்பா :rolleyes: நாயுமானவர் வாழ்க :rolleyes:

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்மை உணர்வு எல்லா மிருகங்களிடமும் இருப்பது வழமைதான் ஆனால் இந்த நாய் ஒருபடி மேலே. இதை நாய் என்று சொல்லவே நான் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாய் நன்றிக்கு மட்டுமல்ல தாய்மைக்கும் தலைசாய்க்குது!!!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் வீர தீர விளையாட்டுகளில் இதுவும் ஒன்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் வீர தீர விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

அவர்கள் பதிலுக்கு சொல்வார்கள் 14 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்குவது ஆண்களின் வீர தீர விளையாட்டுக்களில் ஒன்று என்று..! :lol:

இந்த விவகாரத்தில்.. நீதி என்பது மனிதரிடத்தில் எல்லாத்தரப்பாலும் சாகடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இயற்கையான தாய்மை என்பது முற்றாகச் சாகடிக்கப்பட்டுள்ளது. நாய் கூட தன் குட்டியை விட்டுப் போகாது.. தன் உணர்வுக்கு எட்டிய வகையில்..! :)

Edited by nedukkalapoovan

எந்த நாயாவது தன் குழந்தையை கருவிலேயே அழிக்குமா..??! ஆனால் ஈவிரக்கமின்றி.. மனிதப் பெண் செய்கிறாளே..!

தனியே பெண் மட்டும் தனது கருவில் உள்ள குழந்தையைக் கொல்ல விருப்பப்படுவதில்லை. ஆண்கள் கருகலைப்பிற்கு பெண்களைத் தூண்டுகிறார்கள், வற்புறுத்துகிறார்கள் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் காதலியைக் கற்பமாக்கிவிட்டு ஆண்கள் கழன்று விட்டால் அந்தக் கற்பத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயம் பெண்ணிற்கு ஏற்படும். சிசுக்கொலை உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்குமெண்டு தெரிந்தும் தங்களின் உடல் சுகத்திற்காக ஆண்கள் இப்படிச் செய்வதை என்னெண்டண்ணை சொல்லுறது?

  • கருத்துக்கள உறவுகள்

தனியே பெண் மட்டும் தனது கருவில் உள்ள குழந்தையைக் கொல்ல விருப்பப்படுவதில்லை. ஆண்கள் கருகலைப்பிற்கு பெண்களைத் தூண்டுகிறார்கள், வற்புறுத்துகிறார்கள் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கருவுருக்கு அதே ஆண்கள் தான் காரணமாகிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். பின்பு பிள்ளைகள் என வரும் போது நைசாக நளுவுவதும் ஆண்கள் தான்.

கருவுருக்கு அதே ஆண்கள் தான் காரணமாகிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். பின்பு பிள்ளைகள் என வரும் போது நைசாக நளுவுவதும் ஆண்கள் தான்.

சரியாக சொன்னீர்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒட்டு மொத்த மனித இனத்தை விட நாய் எவ்வளவோ மேல். அவர்கள் எம் மீது காட்டும் அன்பு, அது ஈடு இணயற்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருவுருக்கு அதே ஆண்கள் தான் காரணமாகிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். பின்பு பிள்ளைகள் என வரும் போது நைசாக நளுவுவதும் ஆண்கள் தான்.

இது அந்தக் காலம். இப்போ பெண்களே ஆண்களை தவறான நடத்தைக்கு அழைத்துச் செல்லும் வகையில் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக பள்ளிச் சிறுமிகளே இதில் மிகவும் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களிடத்தில் தான் தவறான கர்ப்பமுறுதல்கள் (teenage pregnancy) அதிகமாக இருக்கின்றன. அப்படி இருக்கும் போது.. கருவுருவாவதற்கு ஆண்கள் மட்டுமே பொறுப்பு என்று நாம் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கும் அதில் சமபொறுப்பு உண்டு..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கருவுருக்கு அதே ஆண்கள் தான் காரணமாகிறார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். பின்பு பிள்ளைகள் என வரும் போது நைசாக நளுவுவதும் ஆண்கள் தான்.

ஊசி இடங்கொடாமல் நூல் நுழையாது..!!!

:)

பலாத்காரம் தவிர்த்து...

நான் நினைகிறேன்..உலகதில் உள்ள எல்லா ஆண்களையும், ஒரு தீவினில் போட்டு, வெடி குண்டை போட்டு விடவேன்டும். உலகம்,அமைதியாகிவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஊசி இடங்கொடாமல் நூல் நுழையாது..!!! :lol:

நீங்களுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைகிறேன்..உலகதில் உள்ள எல்லா ஆண்களையும், ஒரு தீவினில் போட்டு, வெடி குண்டை போட்டு விடவேன்டும். உலகம்,அமைதியாகிவிடும்!

இதைவிட பெண்களை இப்படிச் செய்வது சிறப்பு. ஏனெனில் ஆண்கள் அழிந்தாலும் பெண்கள் தமக்குள்ளேயே குடும்பம் நடத்தி ஆய்வுசாலை முறைகளில் குழந்தை பெற்றுக்க கருப்பையை பாவிக்கக் கூடும். எனவே அவர்களை பூண்டோடு அழித்துவிட்டால் பிரச்சனையே இல்லை. உலகம் அமைதியாகிடும்..! (அன்புக்குரிய பெண்கள் மன்னிக்க...!) :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :lol:

நானும் அந்தக் கோஸ்டிதான்..! :D

அதாவது, ஒரு கட்டட குத்தகக்காரர் கட்டடத்தைப் பிழையாக் கட்டி அது இடிஞ்சிட்டுது எண்டு வைப்பம். லோயர் வடிவமைப்பு பொறியியலாளரிடம் கேப்பார்.. இவர் இப்படி பிழையாக் கட்டினது தெரியுமா எண்டு. ஓம் எண்டால் ஆப்பு. இல்லை எண்டால் எஸ்கேப்பு. அதுமாதிரித்தான் இதுவும். பெண்கள் விட்டால் ஆர்தான் பூந்து விளையாட மாட்டினம்? ஆண்கள் காத்துமாதிரி. விட்டால் பிடிக்க ஏலாது. :)

சுய கட்டுப்பாடுதான் இதில முக்கியம். இந்த விசயத்தில கல்யாணம் கட்டின ஊசியே பல சமயம் கட்டுப் பெட்டியா இருக்குமாம்.. இளசுகளுக்கு சும்மா இருக்க ஏலாதோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயத்தில கல்யாணம் கட்டின ஊசியே பல சமயம் கட்டுப் பெட்டியா இருக்குமாம்.. இளசுகளுக்கு சும்மா இருக்க ஏலாதோ? :(

அதெண்டால் உண்மைதான். :) உலகமெல்லாம் ஒரேமாதிரியான பிரச்சனை போல இருக்கு... :D:lol:

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைவிட பெண்களை இப்படிச் செய்வது சிறப்பு. ஏனெனில் ஆண்கள் அழிந்தாலும் பெண்கள் தமக்குள்ளேயே குடும்பம் நடத்தி ஆய்வுசாலை முறைகளில் குழந்தை பெற்றுக்க கருப்பையை பாவிக்கக் கூடும். எனவே அவர்களை பூண்டோடு அழித்துவிட்டால் பிரச்சனையே இல்லை. உலகம் அமைதியாகிடும்..! (அன்புக்குரிய பெண்கள் மன்னிக்க...!) :D:)

ஆரப்பா உங்கடை அன்புக்குரிய பொண்டுகள்??அதையும் ஒருக்கால் விவரமாய் சொன்னியளண்டால் எங்களுக்கு வசதியாயிருக்கும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா உங்கடை அன்புக்குரிய பொண்டுகள்??அதையும் ஒருக்கால் விவரமாய் சொன்னியளண்டால் எங்களுக்கு வசதியாயிருக்கும் :)

இப்போதைக்கு அம்மாவைத்தான் சொல்ல முடியும்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.