Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிசே தமிழனுக்கு விருது

Featured Replies

இணைப்புக்கு நன்றி இளைஞன்.

இளங்கோவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

யாழ் களத்தில் நல்ல ஆக்கங்கள் வந்தால் அவர்கள் பாராட்டப்படுதல் வழமை தானே ஜம்மு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களையெண்டெல்லோ நினைச்சனான். :wub:

நினைக்கிறது தான் நினைக்கிறிங்கள்...சந்தோசமா நினைக்கிறது... உந்த முழி முழிச்சு நினைக்க ஒருத்தரும் நம்ப மாட்டினம் இல்லோ... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடற்றவனின் குறிப்புகளுக்கு கிடைத்த அங்கிகாரம் புலம்பெயர் இலக்கியத்திற்கு கிடைத்த அங்கிகாரமாகும்.

அவரது கவிதைமொழி புதியது. தனக்கான கவிதை மொழியை அவர் கண்டடைந்துள்ளார்.

அவரது கவிதை சொல்லல் முறை சிறப்பானது.

தொடர்ந்தும் எழுத வேண்டும் இளங்கோ.

எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால்..யாழ்களத்திள் இருக்கும் படைப்பாளிகளுக்கு..கு உங்களாள் ஆன உற்சாகத்தையும்..ம் வாழ்த்துகளையும் தெரிவியுங்கோ..

அம்பி ஒலிம்பிக் விளையாட்டில யாழ்பாணத்தில இருக்கும் ஒரு கிராமவாசி சிறந்த ஓட்டகாரனா இருந்தாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கவில்லை என்று ஏங்கலாம்.காரணம் அவன் முதலில் தெரிவு செய்ய பட வேண்டும் யாழ்மாவட்டத்தில் பின் சிங்கள பெரும்பான்மையிடம் சிறந்த வீரனான் தெரிவு செய்யபட வேண்டும் பிறகு தெற்காசியாவில் சிறந்த வீரனாக தெரிவு செய்ய பட வேண்டும் அதன் பின் ஆசியாவின் சிறந்த வீரனாக தெரிவு செய்யபட வேண்டும்.

இதன் பிறகு தான் ஒலிம்பிக்கில பதக்கம் எடுக்கிறதை பற்றி சிந்திக்கலாம் இதை மாதிரி தான்,யாழ்களம் ஒரு யாழ்பாண குக் கிராமம் அதில நீங்கள் பொழுது போக்கிறது கிறுக்கலாம் அதை வைத்து கொண்டு உங்களுக்கு பதக்கம் வேண்டும் என்று போர் கொடி தூக்க கூடாது.

ஒலிம்பிக்கில பதக்கம் கிடைக்கலை என்று கவலைபடாது கிராமத்தில விசில் அடித்து உசுபேற்றுவங்க மாதிரி யாழில உங்களை வாழ்த்து கூறி உசுபேற்றுவங்களை மதித்து அவர்களுகாக படைப்புகளை கொடுத்து அவர்களிடம் இருந்து விருதுகளை பெறுங்கள்.வாழ்க யாழ்களம்.வாழ்க யாழ்கள படைப்பாளிகள் (நான் உட்பட)

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பிறகு தான் ஒலிம்பிக்கில பதக்கம் எடுக்கிறதை பற்றி சிந்திக்கலாம் இதை மாதிரி தான்,யாழ்களம் ஒரு யாழ்பாண குக் கிராமம் அதில நீங்கள் பொழுது போக்கிறது கிறுக்கலாம் அதை வைத்து கொண்டு உங்களுக்கு பதக்கம் வேண்டும் என்று போர் கொடி தூக்க கூடாது.

ஒலிம்பிக்கில பதக்கம் கிடைக்கலை என்று கவலைபடாது கிராமத்தில விசில் அடித்து உசுபேற்றுவங்க மாதிரி யாழில உங்களை வாழ்த்து கூறி உசுபேற்றுவங்களை மதித்து அவர்களுகாக படைப்புகளை கொடுத்து அவர்களிடம் இருந்து விருதுகளை பெறுங்கள்.வாழ்க யாழ்களம்.வாழ்க யாழ்கள படைப்பாளிகள் (நான் உட்பட)

ஜம்முவின் கேள்வியில் நியாயம் இருக்குத்தானே. யாழ் களத்தில பொழுதுபோக்கினா ஒலிம்பிக்கில ஓட முடியாது என்று தீர்மானிக்கும் நாம்.. வலைப்பூவில் பொழுது போக்கி ஒலிம்பிக்கில் ஓட முடியும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்பதாக எல்லோ இருக்குது.

நாளைக்கு யாழ் களமும் ஒரு விருதை உருவாக்கி.. அதை ஜம்முக்கு வழங்கினால்.. ஜம்முவும்.. விருது பெற்றவன் ஆகிவிடுவான்..! அவனும் ஒலிம்பிக்கில் ஓடியவனாகி விடுவான்.

விருதை உருவாக்கிறது ஒன்றும் பெரிய வேலையில்ல. ஆனால்.. அந்த விருது எவ்வகையில் தரப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் முக்கியமானது.

இணைய உலகில்.. எங்கோ ஒரு மூலைக்குள் நடக்கும் சின்ன விசயமும்.. பெரிதாக விளம்பரப்படுத்தப்படக் கூடிய சூழல் இருப்பதால்.. விருதுகள் தொடர்பில்.. அவற்றின் நியாயமான தன்மைகள் தரங்கள் தொடர்பில்.. அவதானமாக இருப்பது சிறப்பு..!

ஓரிருவரின் அவதானிப்பில் வழங்கப்படும் விருதுகள்.. 3 வருடம் பல்கலையில் கல்வி கற்றுப் பெறும் பட்டத்துக்கு நிகரானது அல்ல..!

நம்ம சிம்புவுக்கும் தான் விருது கொடுத்திருக்காங்க.. ஏன்.. திரிசாவுக்கும் தான் விருது கொடுத்திருக்காங்க.. எல்லாம் கலை இலக்கிய பணிக்குத்தான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏலாதி வருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுக்கும், டி.சே தமிழனுக்கும்(இளங்கோ) மனமார்ந்த வாழ்த்துகள்.

விருதுகளால் அடையாளப்படுத்தப்படும் படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்பு அதிகரிக்கிறது.

  • தொடங்கியவர்

இளங்கோவின் ஏற்புரை முழுமையாக. அவரது வலைப்பதி வொன்றிலிருந்து.

நன்றி: http://padamkadal.blogspot.com/2008/08/blog-post_15.html

பொய்த்துப் போன பருவங்கள்

'...சிறுவர்கள்

தொலைந்துகொண்டிருக்கும் நாட்டை

பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு

நேசித்தல் என்பது கூட

நம்மை நாமே சிதைத்து உருவழிப்பதுதான்...'

சிறுவ‌ய‌திலேயே உயிருக்காய் த‌ப்பியோடி ஓடி அக‌தி வாழ்க்கை ப‌ழ‌க்க‌மாயிற்று விட்ட‌து. ப‌தினமூன்று வ‌ய‌துக்குப் பிற‌கு முற்றாக‌ நான் வாழ்ந்த‌ ஊருக்குப் போக‌ முடியாத‌ அள‌வுக்கு போர் மிக உக்கிர‌மாகியிருந்தது. அவ்வ‌ப்போது 'ச‌மாதான‌ச் சூழ‌ல்' வ‌ந்து ஆக‌க்குறைந்த‌து தாம் வாழ்ந்த‌ இருப்பிட‌த்தைப் பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் ப‌ல‌ருக்கு வாய்த்தாலும் என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, இராணுவ‌ உய‌ர்பாதுகாப்பு வ‌ல‌ய‌ம் (High Security Zone) ப‌குதிக்குள் வ‌ருவ‌தால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ பின்னாட்களில் பார்க்க‌ முடிந்ததில்லை. இஃதொரு பெரிய‌ இழ‌ப்புமில்லை. இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் போர் ‍ -நான் ஈழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தைவிட‌ - இன்னும் ப‌ல‌ம‌ட‌ங்கு உக்கிர‌மாய் ப‌ல நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளை ப‌லி கொண்டும், இட‌ம்பபெய‌ர்க்க‌வும் செய்து கொண்டிருக்கும்போது என‌க்காய் விதிக்க‌ப்ப‌ட்ட‌ அகதி வாழ்வில் நான் ஒர‌ள‌வு 'ஆசிர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன்' என்றுதான் சொல்ல‌வேண்டும். ஏனெனில் இன்று ஆக‌க்குறைந்த‌து, உயிருக்காவ‌து உத்த‌ர‌வாத‌ம‌ளிக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்க‌ முடிகிற‌து; எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்றபோது அவ்வவ்போது எழுதிக்கொண்டிருக்க முடிகின்றது.

போரிற்குள் சிறுவ‌ய‌திலிருந்து வாழ்ந்ததாலோ என்ன‌வோ, மூர்க்க‌மாய் விம‌ர்ச‌னங்க‌ளை வைக்க‌வும் எதிர்கொள்ள‌வும் ப‌ழ‌கிய‌ அள‌வுக்கு பாராட்டுக்க‌ளையோ வாழ்த்துக்க‌ளையோ எப்ப‌டி ஏற்றுக்கொள்வதென்று தெரிய‌வில்லை. எழுதிய‌ ஒரு ப‌டைப்புக்கு எப்போதாவது சிறு பாராட்டுக் கிடைக்கும்போது மிகுந்த‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடே அதை உள்வாங்கிக்கொள்ள‌ முடிகின்ற‌து.

எழுதுவ‌தில் பிரிய‌முடைய‌ ஒருவ‌ருக்கு தான் எழுதிக்கொண்டிருப்ப‌து ம‌லையிடுக்குக‌ளில் ச‌ல‌ன‌ம‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌தோ என்ற‌ நினைப்பை, எவ‌ரின‌தோ க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌மோ, சிறு பாராட்டோ நெகிழ‌ச் செய்துவிடுகின்ற‌து. பிற‌ர் த‌ன‌து எழுத்தைக் க‌வ‌னிக்கின்றார்க‌ள் என்ற‌ நினைப்பு தொடர்ந்து பொறுப்பாக‌ எழுதுவதற்கான ஒருவிதமான மனோநிலையைத் தரத்தான் செய்கின்றது.

ஒரு புதிய‌வ‌னுக்கு, அவ‌ன் யாரென்று அவ‌ன‌து பின்புல‌ங்க‌ள் அறியாது, அவ‌ன‌து ப‌டைப்பை ம‌ட்டுமே முன்னிறுத்தி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் ஒரு விருது என்ற‌வ‌கையில், த‌மிழ்நாட்டு க‌லை இல‌க்கிய‌ ம‌ன்ற‌ம் - தக்கலை சார்பாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் நீங்க‌ள் என‌து தொகுப்பான‌ 'நாட‌ற்ற‌வ‌னின் குறிப்புகளுக்கு' வ‌ழ‌ங்கும் 'ஏலாதி இலக்கிய விருதை' ஏற்றுக்கொள்கின்றேன். இவ்விருதை என‌க்கான‌ அங்கீகார‌மாய் அல்லாது, இனி எழுதுகின்ற‌போது பொறுப்போடும், முதிர்ச்சியை நோக்கி செல்வ‌துமாக‌ எழுத‌வேண்டுமென்ற‌ நினைவூட்ட‌வே -இவ்விருதை- ஏற்றுக்கொள்கின்றேன் என‌க் கூறிக்கொள்ள‌ விரும்புகின்றேன்.

இவ்விருதை வ‌ழ‌ங்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தேர்வுக் குழுவிற்கும் ந‌ன்றி சொல்கின்ற‌ அதேவேளை 'அடையாள‌ம்' சாதிக்கிற்கும் என‌து த‌னிப்ப‌ட்ட‌ நன்றியைச் சொல்ல‌ப் பிரிய‌ப்ப‌டுகின்றேன். எழுதுகின்ற‌ ஒருவ‌னுக்கு ஒரு ந‌ல்ல‌ ப‌திப்பாள‌ர் ‍அதுவும் த‌மிழ்ச்சூழ‌லில் கிடைப்ப‌து அரிது. எவ்வ‌ள‌வோ தொலைவிலிருந்தாலும், என‌து க‌விதைக‌ளைத் தொகுப்பாக்க‌ வேண்டுமென்று பிரிய‌ப்ப‌ட்ட‌போது, எந்தத் தயக்கமுமில்லாமல் வெளியிட முன்வந்தவர் சாதிக். அது ம‌ட்டுமில்லாது, இவ்விருதுக்கும் பிர‌திக‌ளை எனது அனுமதியிற்குக் காத்திருக்காது, தனது சுயவிருப்பில் அனுப்பியும் வைத்து உதவியவர். இவ் இனிய கணத்தில் சாதிக்கின‌தும், உங்க‌ள் அனைவ‌ரின‌தும் க‌ர‌ங்க‌ளை நெகிழ்வுட‌ன் ப‌ற்றிக்கொள்கின்றேன். இறுதியாக‌, நான் சிறுவ‌ய‌தில் அக‌தியாய் அலைந்ததைவிட‌ மிக‌க் கொடுமையான‌ சூழ்நிலைக்குள் இன்று ஈழ‌த்திலும் உல‌கெங்கிலும் சிறார்க‌ள் அக‌திக‌ளாக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்றார்க‌ள். அகதிகளாக்கப்பட்டுக்கொண்டிர

என்னை சொல்ல இல்லை தானே... : இல்லை சும்மா கேட்டனான்......

ஏன் மாமா..மா நாங்களே எங்களை குறைச்சு மதிபிடனும்..ம்..!! :)

அவரும் சாதாரணமா வலைபூவில் எழுதினவர் தானே..நாளைக்கு நீங்க கூட சிறந்த படைப்பாளி ஆகிட முடியாது எண்டு ஏன் நினைக்கிறியள்.. :(

இலக்கியம் மற்றும் தமிழ் புலமை இருந்தா தான் சிறந்த தமிழ் படைப்பாளி ஆகலாம் எண்டு வரையறை இல்லை தானே இல்லாதுவிடில் அப்படி வரையறை இருக்கிறதா..?? :(

நிச்சயமாக எனக்கு தெரியாது தெரிந்தா கூறவும்.. :o

அப்ப நான் வரட்டா!!

யாழ் களத்தில் நல்ல ஆக்கங்கள் வந்தால் அவர்கள் பாராட்டப்படுதல் வழமை தானே ஜம்மு.

ஒம்..அண்ணா இல்லை எண்டு நான் கூறவில்லை..இந்த கருத்தை நான் சிலருக்காக..க மட்டுமே பதிந்தனான்..சொல்ல போனா உறைக்கிறவைக்கு உறைச்சிட்டு.. :)

அது என் கருத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறன்..அத்துடன் இன்னொரு வினாவையும் தொடுக்கிறன் அதாவது யாழ்களத்தை எடுப்போமே உதாரணதிற்கு.. :)

இங்கே ஒரு சிறந்த படைப்பாளி வருகிறார்..எண்டு வையுங்கோவன் அதே போல் கன்னி படைப்புடன் இன்னொருவரும் வருகிறார் எண்டு வைத்து கொண்டால்..!! :lol:

அந்த சிறந்த படைப்பாளி தன் சொந்த பேரில் அந்த கன்னி படைப்பாளியை வாழ்த்த மாட்டார் மாறாக இன்னொரு பேரில் வந்து ஏளனிப்பார் அல்லது வாழ்த்துவார்..இது ஏன்..?? :)

விடை தெரியுமா..!! :D

அப்ப நான் வரட்டா!!

ஒலிம்பிக்கில பதக்கம் கிடைக்கலை என்று கவலைபடாது கிராமத்தில விசில் அடித்து உசுபேற்றுவங்க மாதிரி யாழில உங்களை வாழ்த்து கூறி உசுபேற்றுவங்களை மதித்து அவர்களுகாக படைப்புகளை கொடுத்து அவர்களிடம் இருந்து விருதுகளை பெறுங்கள்.வாழ்க யாழ்களம்.வாழ்க யாழ்கள படைப்பாளிகள் (நான் உட்பட)

ஓ..அப்படியா மாம்ஸ்..ஆனா இந்த யாழ்கள குக் கிராமத்தில தான் சில பெரிய பெரிய ஓட்ட வீரர்களும் ஓடி கொண்டிருக்கிறார்கள் என்பது மறுபதிற்கில்லை தானே.. :)

அப்ப நான் வரட்டா!!

ஓரிருவரின் அவதானிப்பில் வழங்கப்படும் விருதுகள்.. 3 வருடம் பல்கலையில் கல்வி கற்றுப் பெறும் பட்டத்துக்கு நிகரானது அல்ல..!

ம்ம்..தாத்தா..தா சரியாக சொன்னீர்கள்..நீங்களாவது நான் கூறியதை புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்..ள்..!! :)

மற்றது தாத்தா..

நீங்கள் குறிப்பிட்ட இந்த கருத்துடன் என்னால் ஒத்து போக ஏலாது..து..ஏன் எண்டால்..3 வருடம் பல்கலைகழகத்தில் பயின்று பெறும் விருதிற்கு எந்தவொரு விருதும் ஈடாகமாட்டாது என்பது எவ்வளவு தூரம் சரி எண்டு பார்த்தால்..ல்.. :D

ஒலிம்பிக்கில ஓடுறவையை விட நல்லா ஓட கூடிய ஒருத்தன் இருப்பான்..ஆனா அவனுக்கு "சான்ஸ்" கிடைக்காம இருந்திருக்கலாம் அல்லவா..?? :(

கிடைத்திருந்தால் இவர்களை விட அவன் நன்றாக ஓடி இருக்கலாம் அல்லவா..!!..ஆகவே ஒருவரின் திறமையை எந்தவொரு விருதும் மூலமும் கணித்திட முடியாது..

அதே நேரம் தற்பொழுது பல்கலையில் கூட காசை கொடுத்து பட்டத்தையும் பெற்று விடலாம் அல்லவா பிறகு என்ன தாத்தா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

3

வருடம் பல்கலையில் கல்வி கற்றுப் பெறும் பட்டத்துக்கு நிகரானது அல்ல..!

சாமியோவ் ..நீங்க..ரொம்பத்தான் பீத்திக்கீறீங்க..உந்த பல்கலையல.குறிப்பட் ட வரையறைக்குட் பட்ட பாட விதானத்துக்கு அமைய .யாரோ எழுதி வைச்ச குறிப்புகளை படிச்சு ..கிழிச்சு எடுக்கிற சர்ட்டிப்க்கிட்டிலை என்ன பெருமை இருக்கு சாமி...

உதிலும் பார்க்க நம்ப பேட்டை யிலை சேரியிலை எவ்வளவங்க கிறீயீட்டிவ் திங் உள்ள மனிசங்க இருக்காங்க என்று உங்களுக்கு தெரியுமா...

அவங்களுக்கு அவங்கட டிறமையை காட்ட ஒரு சான்ஸ் கிடைச்சா..உங்க பல்கலை ஆக்கள் எல்லாம் கிட்ட நிக்க ஏலாதுங்க...

  • கருத்துக்கள உறவுகள்

சாமியோவ் ..நீங்க..ரொம்பத்தான் பீத்திக்கீறீங்க..உந்த பல்கலையல.குறிப்பட் ட வரையறைக்குட் பட்ட பாட விதானத்துக்கு அமைய .யாரோ எழுதி வைச்ச குறிப்புகளை படிச்சு ..கிழிச்சு எடுக்கிற சர்ட்டிப்க்கிட்டிலை என்ன பெருமை இருக்கு சாமி...

உதிலும் பார்க்க நம்ப பேட்டை யிலை சேரியிலை எவ்வளவங்க கிறீயீட்டிவ் திங் உள்ள மனிசங்க இருக்காங்க என்று உங்களுக்கு தெரியுமா...

அவங்களுக்கு அவங்கட டிறமையை காட்ட ஒரு சான்ஸ் கிடைச்சா..உங்க பல்கலை ஆக்கள் எல்லாம் கிட்ட நிக்க ஏலாதுங்க...

உந்த விருதுகளோட எந்தப் பல்கலைக்கழத்தில போய் படிக்கலாம்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அங்கீகார மட்டம் இருக்கிறது.

உந்த விருதுகளுக்கு உள்ள அங்கீகாரமட்டங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டால் அன்றி.. இவற்றைப் பற்றி அவற்றின் வலுவைப் பற்றி தீர்மானிப்பது சிரமமானது..!

பல்கலைக்கழக பட்டங்கள் காசு கொடுத்து வாங்க முடியும் என்றால்.. அது அந்த கல்வி நிறுவனத்தின் குறைபாடே அன்றி பட்டத்தினதல்ல..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏலாதி விருது பெற்ற டிசே தமிழனுக்கு வாழ்த்துக்கள்.. நாட‌ற்ற‌வ‌னின் குறிப்புகள் ஐரோப்பாவிலும் விற்பனைக்கு உண்டா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.