Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவம் பஞ்சு ..........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலவம் பஞ்சு ..........

நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு

வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன்

,அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின . நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு

என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ள வில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன்

எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்

எல்லாராலும் விரும்பபட்டவள் .படிப்பிலும் கெட்டிக்காரி .

ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது.

அவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது

விழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .

மீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் . ராகவனும் மீனுவும் அருகருகே

,உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் ,

மீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் ? என்று ....பிறகு .அதன்

.பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் ? ஏன்று.... ஏன் கேட்கிறீங்க ?

அந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ? ........நீண்ட அமைதிக்கு பின் .....தனது முறை பையன்

அமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்னாள்

ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..

தொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது

...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....இவ்வளவு காலம் காத்து இருந்து

, அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்து

கடைசியில் ...........

வாசு பாடினான் .....மச்சான்....

.." என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் ....தன்னாலே இன்னொன்று கிடைத்துவிடும்

.....கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே ........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே ......

Edited by nillamathy

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமெரிக்கா ,லண்டன் ,பிரான்ஸ் கனடா இன்னும் பல நாட்டு மாப்பிள்ளைகளால சில காதல் கனவான்களூக்கு கடைசியில் ஆப்புதான் மிஞ்சுகிறது :unsure::lol:

வணக்கம் நிலாமதி அக்கா பழைய பாடசாலை நினைவை மீட்டதற்கு நன்றி

எங்கள் பாடசாலையில் இப்படி நடந்தது ஆனால் நாங்கள் எல்லாம் இப்படி பேசவில்லை ஏனென்று தெரியுமா எல்லாமே வுக்கிங்[booking] ஆகிவிட்டது எங்களுக்கு மேல் உள்ள மாணவர்களுடன்

அதனால வழிச்சி சாப்பிட்டுத்து வந்திட்டமாக்கும் <_<:unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

முனிவருக்கு ஆச்சிரமத்தில யாரவது ஆப்பு வைச்சவர்களா?

நிலாமதி பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முனிவருக்கு ஆச்சிரமத்தில யாரவது ஆப்பு வைச்சவர்களா?

நிலாமதி பாராட்டுக்கள்

என்ன புத்தன் முனிவரிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டு போட்டயள்

இந்த ஆப்புக்களாலதான் முனிவரானதே :unsure::lol:<_<

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சகோதரி!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ..................

,முனிவர்,புத்தன்,சுவி ,யாவருக்கும் என் நன்றி,உங்கள் கருத்துக்கள்,

தட்டிக்கொடுப்புகள் என்னை மேலும் ஆக்குவிக்கும்,

பாடசாலை நாட்களில் நடந்த பல காதல்கள் இலவு காத்த கிளி கதை ஆவது உண்டு தான்...

இலவம் பஞ்சோ காலம் வந்ததும் வெடித்து பறந்துவிடும்...

சில கிளிகளின் மனம் சிறகொடிந்த கிளியாக மாறிவிடுவதும் உண்டு.

ஆனால், பின்னர் அக்கிளிகளுக்கு நல்ல மாங்கனிகள் கிடைப்பதை பார்த்திருக்கிறேன்.

நல்ல கதை அக்கா, பொருத்தமான தலைப்புடன் <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லிகை வாசன் .....இலவம் பஞ்சு வாசித்து கருத்து சொன்னமைக்கு. ..வரவேற்கிறேன். தங்கள் கருத்தை .

  • கருத்துக்கள உறவுகள்

இலவம் பஞ்சு கதை யதார்த்தமானது. நன்றி நிலாமதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவிற்கு

பள்ளிக்காதலை நினைவூட்டி பள்ளிக்கே கொண்டுசென்று விட்டீர்கள், பெரும்பாலும் எல்லோருக்கும் முதல் காதல் அது பெரும்பாலும் பள்ளிக்காதலாய் தான் இருக்கும் அது தோல்வியில் தான் முடியும் அதை மிகவும் யதார்த்தமாகச் சொன்னதற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துகிறேன்.

இளங்கவி

ஓ..நம்ம நிலா(மதி) அக்காவின்ட கதையோ..யோ..!!

அப்ப இதில பல விசயங்கள் இருக்க தான் செய்யும்..கொஞ்சம் இருங்கோ வடிவா வாசிக்கிறன் கதையை..யை..ஓ இந்த முறை நம்ம நிலா(மதி) அக்கா..கா.. :o

கிராமத்து காற்றுடன் இறங்கி கலக்கிட்டா..டா கடசி கட்டம் அப்படியே எண்ட கண்களிளே நிற்குது எண்டா பாருங்கோவன் நிலாமதி..தி அக்கா..கா.. :wub:

அது சரி கடசியா ஒரு பாட்டு வருதே..அது என்னவோ நம்ம நிலா(மதி) அக்கா "பீலிங்கா" படிக்கிற மாதிரி இருக்கு சரி எண்டாலும் இலவம் பஞ்சு..வெடித்து பறக்கிறது வாழ்த்துகள்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

இந்த அமெரிக்கா ,லண்டன் ,பிரான்ஸ் கனடா இன்னும் பல நாட்டு மாப்பிள்ளைகளால சில காதல் கனவான்களூக்கு கடைசியில் ஆப்புதான் மிஞ்சுகிறது :wub::lol:

வணக்கம் நிலாமதி அக்கா பழைய பாடசாலை நினைவை மீட்டதற்கு நன்றி

எங்கள் பாடசாலையில் இப்படி நடந்தது ஆனால் நாங்கள் எல்லாம் இப்படி பேசவில்லை ஏனென்று தெரியுமா எல்லாமே வுக்கிங்[booking] ஆகிவிட்டது எங்களுக்கு மேல் உள்ள மாணவர்களுடன்

அதனால வழிச்சி சாப்பிட்டுத்து வந்திட்டமாக்கும்

ம்ம்..முனி மாமு..மு அப்ப வழித்து சாப்பிட்டிட்டு வந்தது இருகட்டும் இப்ப ஆச்சிரமத்தில எப்படி..டி வழித்து தான் சாப்பிடுறியளே..??.. :wub:

இல்ல..ல கேட்டனான்..சாப்பாடு நன்னா இருந்தா நானும் வர தான்..விளங்கிச்சோ..சோ..!!..எனக்கு எண்டா நம்ம முனி மாமுவிற்கு ஏதோ ஒரு "துக்காமான் பிளாஸ்பக்" இருக்கு அது தான் ஆச்சிரமத்தில காவியை போட்டு கொண்டு திரியிறதாபடுது.. :(

நெசமோ முனி மாமு..முமுமு..!! :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..முனி மாமு..மு அப்ப வழித்து சாப்பிட்டிட்டு வந்தது இருகட்டும் இப்ப ஆச்சிரமத்தில எப்படி..டி வழித்து தான் சாப்பிடுறியளே..??.. :wub:

இல்ல..ல கேட்டனான்..சாப்பாடு நன்னா இருந்தா நானும் வர தான்..விளங்கிச்சோ..சோ..!!..எனக்கு எண்டா நம்ம முனி மாமுவிற்கு ஏதோ ஒரு "துக்காமான் பிளாஸ்பக்" இருக்கு அது தான் ஆச்சிரமத்தில காவியை போட்டு கொண்டு திரியிறதாபடுது.. :wub:

நெசமோ முனி மாமு..முமுமு..!! :o

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா ஆச்சிரமத்தில் சாப்பாட்டை பற்றி சொல்லவா வேண்டும் சூப்பரோ சூப்பர் வழிச்சி ,வழிச்சி தரை கூடதேய்ந்து போய் விட்டது பாருங்கோவன் அப்படி சுவையான சாப்பாடு.

ஆனால் உங்களை எங்கள் பக்கமே எடுக்கமாட்டம் அல்ல உங்களை பற்றி எனக்கல்லோ தெரியும்

எனக்கே சாப்பாடு இல்லாமல் போய் விடும் பிறகு சுருங்காத இடமெல்லாம் சுருங்கி போய்விடும் ஆக்கும்

மாமுக்கு என்ன பிளஸ்பக் என்று தெரியும் தானே சொன்னால் யாழ்களம் அதிருமல்ல!!!!

சொல்லாமல் தான் காவி உடை போட்டநான்

....................அப்ப நான் வரட்டா ஜமுனா

உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .

:lol: நல்லா இருக்கு இந்த விருந்துபசாரம். ஆனால் அண்டைக்கு பசிக்காது. அப்படி பசித்தாலும் சாப்பிட முடியாதுப்பா

அதுசரி அன்ரி உங்க காலத்திலும் இது நடந்ததோ :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க வெண்ணிலா ......இப்படி சொல்லிடீக ...பள்ளிக்காலம் பொன்னான காலமுங்க ..

நாங்களும் என்ஜாய் பண்ணினமில்ல....எங்கே சில நாளாக காணோம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.