Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றரே உள்ளது - நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றரே உள்ளது - நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் நான்கரை கிலோமீற்றர் தூரமே உள்ளது. கிளிநொச்சியினை விரைவில் கைப்பற்றி வடக்கை மீட்போம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, அங்குள்ள இலங்கை மக்கள் மத்தியில் உரைநிகழ்த்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் நியூயோர்க் விகாரைக்கு சென்று பௌத்த குருமார்களது ஆசீர்வாதங்களைப் பெறுவதுண்டு. வெளிநாடுகளில் உள்ள எமது உறவுகளைப் பார்ப்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும். அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் மிகுந்த கரிசனை கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளில் வாழும் உங்களுக்கு கடந்த 3 வருடங்களாக நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் மற்றும் அபிவிருத்தி நிலைமைகள் பற்றித் தெளிவுபடுத்துவது எனது கடமையாகும். 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கையர்கள் எனக்கு நாட்டைக் கையளிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்றே எதிர்பார்த்தனர். அவர்களது அந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் நிலைநாட்ட இன்று என்னால் முடிந்துள்ளது.

புலிகள் இயக்கத்தினர் வட.கிழக்கை தம்வசம் வைத்துக்கொண்டு அங்கு பிறிதொரு ஆட்சியை நடத்திக்கொண்டிருந்த போதே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன். அதுபோன்று, நான் ஆட்சிக்கு வந்ததுமே புலிகள் நிராயுதபாணிகளாக நின்ற படை வீரர்களைக் கொன்றனர். கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர்.

பின்னர், புலிகள் அப்பாவிப் பொது மக்களுக்கு குடிப்பதற்கும் விவசாயம் செய்ய முடியாதவாறும் மாவிலாறை மூடினர். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், அவர்கள் தீர்வினைக் காண சம்மதிக்கவில்லை. அவர்களுக்குத் தேவைப்பட்டது யுத்தமே. பின்னர் நாம் அப்பாவி மக்களின் அடிப்பøத்ட தேவைப்பாடுகள் உட்பட அவர்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குமென மாவிலாறினைக் கைபற்றுவதற்கான மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

மாவிலாறு நடவடிக்கை மூலமாக மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக முழுக் கிழக்கையும் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க எம்மால் முடிந்தது.

- வீரகேசரி

060513madaithivu1.jpg

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டினுடைய ஐனாதிபதி பேசுவதுபோல் இல்லையே இவர் பேச்சு

தெருச்சண்டியன்போல் தெரிகிறது

மகிந்தவின் நாக்குக்கும் நெற்றிக்கும் நாலரை அங்குல தூரமே இருக்கிறது!

ஆனாலும் அவர் நாக்கினால் தன் நெற்றியை தொடுவது எவ்வளவு தூரம் சாத்தியம்???

அப்படியே தொட்டாலும் நாக்கை எவ்வளவு நேரம் நெற்றியிலேயே வைத்துக்கொண்டிருக்க முடியும்???

  • கருத்துக்கள உறவுகள்

சாண் ஏற முளம் சறுக்கும் மகிந்த வெற்றி மப்பில் இருக்கிறார் தெளிந்த பின்பே விளங்கும்

அது வரை குலைக்கட்டும் :):wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் நாக்குக்கும் நெற்றிக்கும் நாலரை அங்குல தூரமே இருக்கிறது!

ஆனாலும் அவர் நாக்கினால் தன் நெற்றியை தொடுவது எவ்வளவு தூரம் சாத்தியம்???

அப்படியே தொட்டாலும் நாக்கை எவ்வளவு நேரம் நெற்றியிலேயே வைத்துக்கொண்டிருக்க முடியும்???

நாக்கால் நெற்றியை தொடும் உவமானம்... இது வரையில் எங்கும் கேட்டதில்லை. உங்கள் கண்டுபிடிப்பா? வித்தியாசமாக நன்றாக இருக்கிறது. :)

கிளிநொச்சியை கொடுக்க ...., ஒரு சில நாட்களுக்குள் சிங்களவனுக்கு கொடுக்கப்படலாம், ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க போயும் இவற்ர அலப்பறை குறையவில்லை :)

ம்ம்ஹிம்ம் என்னத்த சொல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் நாக்குக்கும் நெற்றிக்கும் நாலரை அங்குல தூரமே இருக்கிறது!

ஆனாலும் அவர் நாக்கினால் தன் நெற்றியை தொடுவது எவ்வளவு தூரம் சாத்தியம்???

அப்படியே தொட்டாலும் நாக்கை எவ்வளவு நேரம் நெற்றியிலேயே வைத்துக்கொண்டிருக்க முடியும்???

ஏன் அவ்வளவு தூரம் போவான்.. நாக்கால் மூக்கைத் தொடட்டன் பாப்பம்..! அது இன்னும் அருகில் இருக்குது..! :)

கள நிலவரங்கள் மாறலாம் வெற்றிவேல்..! அகலக் கால் பதிக்க அனுமதிப்பதில் எமக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படலாம்..!

  • கருத்துக்கள உறவுகள்

:) கொக்காவிலில் இருந்து கிளிநொச்சி நகர் மத்தி 22 கிலோ மீற்றர்கள். அப்படியிருக்க மகிந்த 4 கிலோமீற்றர்தான் எண்டு சொல்லுறார். விமானத்திலிருந்து குதிக்கப்போறார் போல கிடக்கு !!!! விழுந்து தெறிச்சுதெண்டால் ஒண்டும் மிஞ்சாது !!!! எதையெண்டு கேக்கிறியளே? சொல்லத்தேவையில்லை எண்டு நினைக்கிறன்.

கள நிலவரங்கள் மாறலாம் வெற்றிவேல்..! அகலக் கால் பதிக்க அனுமதிப்பதில் எமக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படலாம்..! :wub:

உண்மை நெடுக்கு. கள நிலவரங்கள் எங்களை விட புலிகளுக்கு நன்கே தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். அப்படியிருந்தும் ராணுவம் முன்னேறும் அளவைப் பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கு. முடிவுகள் எப்போதுமே சரியாகத்தானிருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் சாதகமில்லாத கள நிலவரத்தைக் கூட தமக்குச் சார்பாக மாற்றக்கூடியவர்களே இறுதியில் வெற்றிபெறுவார்கள். ஆகவே பொறுத்திருப்போம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.