Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செருப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகான மாடி கட்டிடம் அதை சூழ மாமரங்கள்,தென்னை மரங்கள் என்று ஒரே சோலை வனம் தான்.ரோஜா மலர்,அலரி மலர்கள் செவ்வரத்தம் மலர்கள் பல வித வண்ணங்களிள் பூத்து குலுங்கும் இதற்கு சொந்தகாரர் ஒரு வெள்ளைகார சாமியார் அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஜயரும் வசித்து வந்தார்கள்.

சுரேஷின் தந்தை அந்த ஊரில் வேலை மாற்றலாகி வந்தவுடன் அந்த மாடி வீட்டிற்கு அருகாமையில் வீடு வாடகைக்கு எடுத்து கொண்டார்.சுரேஷ் சிறு பையன் அப்பொழுது.வீட்டிற்கு குடிபெயர்ந்த அடுத்த நாள் மாடிவீட்டில் ஒரே மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டவனுக்கு அங்கு செல்ல வேண்டும் போல தோன்றவே பெற்றோருடன் அனுமதி பெற்று கூட்டத்துடன் கூட்டமா சென்றான்.வெளியே மதிய உணவிற்காக ஏழைகள் காத்து கொண்டிருந்தார்கள் உள்ளே உயர் குடி மக்கள் உணவருந்தி கொண்டிருந்தார்கள் அவர்கள் உணவருந்திய பின் இவர்களுக்கு வழங்கபடுமாம் என்று அந்த கட்டிடடத்தி பணி புரியும் ஒரு உயர்குடிமகன் வந்து சொல்லி கொண்டே இருந்தான்.

அவர்களின் சாப்பாடு முடிந்தவுடன் கதவை திறந்தது தான் தாமதம் வெளியே நின்ற மக்கள் உள்ளே ஒரே ஓட்டமாக ஓடினார்கள் சுரேஷியும் ஓடி போய் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டான் இவர்களுக்கும் உணவு பரிமாறபட்டது வெள்ளைகார சாமியார் எல்லோருக்கும் உணவுகளை பரிமாறி கொண்டு உசாராக வேலை பார்த்து கொண்டிருந்தார்.சுரேஷ் சாப்பாடு முடிந்தவுடன் வீட்டை போய் பெற்றோருடன் நடந்தவற்றை சொன்னான் உனக்கு இங்க சமைத்து வைத்திருக்கிறன் எதற்கு அங்க போய் சாப்பிடனி என்று அதட்டலாகவே அம்மா கேட்டா.

ஏழைகள் உணவருந்தும் இடத்தில் நீ ஏன் போய் சாப்பிடனி என்று ஒரு விரிவுரையே நடத்தி விட்டா சும்மா தான் பார்க்க போனான் என்று சொல்லி அவன் சமாளித்து கொண்டான்.

நாட்கள் செல்ல அங்க பணிபுரியும் ஜயருடன் பழக தொடங்கினார் சுரேஷ் ஜயரும் அந்த ஆச்சிரமம் மற்றும் வெள்ளைகார சாமியாரின் சரித்திரம் எல்லாம் சொன்னார்.

வெள்ளைகார சாமியார் இளம் வயதில் எங்கன்ட கருத்த சாமியார் ஒருவரை சந்திக்க போயிருக்கிறார் அந்த எங்கன்ட கருத்த சாமியார் சொன்னவராம் "எந்த மிதிவடி கட்டையை கொண்டு போய் பூசை செய் என்று"இதை தேவ வாக்காக எடுத்து கொண்டு இந்த வெள்ளைகார சாமியார் மிதிவடி கட்டையை (செருப்பு) வெள்ளியிள் செய்து ஒரு ஆச்சிரம் அமைத்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமைகளிள் அன்னதானம் வழங்கி கொண்டு தன்னுடைய குரு பக்தியை உலகிற்கு காட்டி கொண்டிருந்தார்.

செருப்பு யாராவது கும்பிடுவீனமா அம்மா? என்று தனது சந்தேகத்தை தாயிடம் கேட்டான் தாயும் உணர்ச்சிவசபட்டு அப்படி சொல்ல கூடாது இராமரின் பாதரட்சையை அவனுடையை தம்பி அரியணையில் வைத்து அரசாச்சி செய்தவன் என்று விளக்கம் கொடுத்தார்.சுரேஷிற்கு அன்றிலிந்து மிதிவடிகட்டை,பாதரட்சை என்றால் ஏதோ உயர்த்தியான விடயம் என்று எண்ண தொடங்கிவிட்டான்.

காலங்கள் ஓடின அவனும் உயர்கல்விக்காக வெளிமாகாணம் சென்று படிப்பை தொடரும் பொழுது தனது பாடசாலை மாணவியை பார்த்து கண்ணால் பேச அவள் பதிலிற்கு "செருப்பு பிஞ்சிடும்" என்று வாயால் பதில் சொன்னாள் செருப்பை இதற்கும் பயன்படுத்தாலம் என்று மனதில் நினைத்து கொண்டால்.

காதலை வெறுத்து அவள் செருப்பு பிஞ்சிடும் என்று சொல்லவில்லை ஏற்கனவே தனது காதலை இன்னொருவருக்கு பறிகொடுத்ததால் காதலின் புனிதத்தை பாதுகாக்க தான் செருப்பை பயன்படுத்தி இருந்தாள் என்று பிறகு தான் சுரேஷ் புரிந்து கொண்டான்.

பிரபல சினிமா நட்சத்திரத்தின் செருப்பு ஏலத்தில் நல்ல விலைக்கு விற்கபட்டதாக பத்திரிகை செய்திகளை பார்த்த சுரேசிற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஒருவன் பக்தியால் மிதிவடி கட்டையை (செருப்பை) தலை மேல் வைத்து பூசை செய்கிறான்,இன்னொருத்தன் பாசத்தால் செருப்பை அரியணையில் ஏற்றுகிறான்,இன்னொருத்தி காதல் புனிதத்தை பாதுகாக்க செருப்பை தூக்கிறாள் மற்றவனோ ஏலத்தில் பணத்தை கொடுத்து செருப்பை வாங்கிறான்.

என்று யோசித்து கொண்டே நடந்தவன் திடிரேன அவனது செருப்பை பார்த்த போது தான் விளங்கியது அது தன் செருப்பு அல்ல கோவிலில் யாரின்டையோ செருப்பை மாறி போட்ட விசயம்.

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது முதல் படைப்பிற்கு (நான் நினைக்கிறன் படைப்பு என்று) வாழ்த்தி கருத்து கூறிய வெண்ணிலா,வாசகன்,முனிவர்,கந்த

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நன்று தொடரட்டும்

காலங்கள் ஓடின அவனும் உயர்கல்விக்காக வெளிமாகாணம் சென்று படிப்பை தொடரும் பொழுது தனது பாடசாலை மாணவியை பார்த்து கண்ணால் பேச அவள் பதிலிற்கு "செருப்பு பிஞ்சிடும்" என்று வாயால் பதில் சொன்னாள் செருப்பை இதற்கும் பயன்படுத்தாலம் என்று மனதில் நினைத்து கொண்டால்.

இதைதான் நிறைய தடவை கேட்டிருக்கிறேன் நண்பர்களுடன் போகும் போது புத்தன் :blink::blink::lol::):rolleyes:

வாழ்த்துகள் புத்தன். இன்னும் எழுதுங்கள்.

கோயிலில் எடுத்த செருப்பை எப்படி அழகாக பயன்படுத்தியிருக்கிறீங்கள் (கதையில்).... :blink::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தன்........பாத்ரட்சைக்கு இவ்வளவு மதிப்பா .........சில சமயம் நடந்து செல்கையில் காலை வாரி விட்டுவிடும் . நல்ல கதை ...சொல்லிச சென்ற விதம் அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனுக்கு

மனிதனின் வாழ்கை தத்துவத்தை செருப்பை வைத்து சொன்ன விதம் அழகு. அதுதான்..! ..சில கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் வாழ்க்கை முழுவதும் குழப்பங்களுடன் அலைவதிலேயே வாழ்க்கை முடிந்து விடும் ...?. :blink:

மேலும் முடித்த விதமும் அழகு..... செருப்பை சுட்டதைச்.... சொன்னேன்....! :lol::blink:

தகவலுக்கு...., செருப்பு துலைந்தால் உங்களை பிடித்த சனி விலகுவதாகச் சொல்லுவார்கள். புதுச் செருப்பு என்று அடித்திட வேண்டாம் அதைச் தொலைத்தவனின் சனி உங்களிடம் வந்துவிடுமாம்.. ( என் சொந்த அக்காவின் நம்பிக்கை).. :rolleyes:

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பை வைத்து அழகாய் ஒரு கதை.

வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்-இசா- மல்லிகைவாசம்-நிலாமதி-இளங்கவி-கறுப்பியக்கா--வாசித்து கருத்து கூறியதற்க்கு நன்றிகள்-----வாசிக்கும் வாசகருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பு நல்லதொரு கற்பனை. வாழ்த்துக்கள்.

புத்தனின் சுரேஷ் ஒரு இடக்கு முடக்கான ஆளாத்தான் இருக்கு.

இப்ப புலத்தில் கனபேர் அம்மளாச்சி ஆத்தாச்சி என்று செருப்புகளை அனுப்பி பூசையும் செய்யினம்.

இனிமேல் புத்தன் வரும் வழியில் செருப்புக்களை வைப்பதில்லையென முடிவெடுத்துள்ளேன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் பொது இடங்களில் செருப்புக்கு டோக்கன் வைப்பது. பு(த்)து செருப்பை மாத்திப் போட்டுக் கொண்டு போவதைத் தடைசெய்யும்!!! :icon_mrgreen::icon_mrgreen:

ம்ம்..ஒருத்தனின்ட வாழ்க்கையில செருப்பு எவ்வளவு தூரம் தான் வெளையாடுது..து நிசமா என்னால முடியல்ல..ல மாம்ஸ் எல்லாம் சரி..ரி.. :lol:

கதையில ஒருவா செருப்பை தூக்கி காட்டினவா எண்டு சொல்லி இருக்கிறியள்..ள் அது உங்களுக்கு நடந்ததே சொல்லவே இல்ல..ல.. :icon_mrgreen: கோயிலில் தூக்கின செருப்புடன் பயணிக்கு "செருப்பின் பயணம்" அருமை வாழ்த்துகள்..ள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இப்ப புலத்தில் கனபேர் அம்மளாச்சி ஆத்தாச்சி என்று செருப்புகளை அனுப்பி பூசையும் செய்யினம்.

இனிமேல் புத்தன் வரும் வழியில் செருப்புக்களை வைப்பதில்லையென முடிவெடுத்துள்ளேன். :icon_mrgreen:

சாந்தி..தி அக்கா எண்ட ஒரு சோடி செருப்பு வீட்ட சும்மா இருக்கு..கு உங்க நாட்டு பக்கம் அனுப்பி வைத்தா வியாபாரம் எப்படி இருக்கும்..ம் எண்டு சொன்னியள் எண்டா..டா.. :icon_mrgreen:

அனுப்பி வைக்கிறன்..ன் செருப்பை..பை... :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

செருப்பு கதை நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ புத்துமாமா.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,சுவி,ஜம்முபேபி,வெண்ணி

  • கருத்துக்கள உறவுகள்

புத்ஸ்! உங்களின் நல்ல மனதுக்கு நீங்கள் செருப்பை வாழ்க,வாழ்கவென வாழ்த்தினாலும் அது தன்பாட்டுக்கு தேய்ந்து கொண்டுதான் போகும்! இது நியூட்டனின் நான்காம் விதி!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.