Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு

Featured Replies

பூநகரி வெற்றியை ஒரு வார விழாவாக கொண்டாடுகிறது சிறிலங்கா அரசு

[சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 11:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதற்கு தலைநகர் கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் தொடர் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பூநகரி ஊடாக செல்லும் ஏ-32 வீதியை படையினர் முழுமையாக கைப்பறிய செய்தியை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடாக இன்று சனிக்கிழமை இரவு அறிவித்ததுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.

இதனையடுத்து அரச தலைவர் செயலகத்தின் ஆலோசனையில் விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள கிராமங்களில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு வெற்றி விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்களை விமல வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல் வெற்றி விழா மிக விரைவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

புதினம்

சரி சரி ரெம்பத் துள்ளாதீங்க. அப்புறம் சகிச்சிக் கொள்ள மாட்டீங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்க இன்னும் முடியலையே நாங்கள் இன்னும் ஆரம்பிக்கேலயே பேந்து வெக்கப்படவேண்டிவரும்

சரி வென்றவன் கொண்டாடுவதில் தப்பும் ஏதும் இல்லை. இந்த செய்தி அறிவித்தவுடன் கொழும்பின் பல பகுதிகளிலும் வெடிசுட்டு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டதாக கொழும்பில் இருந்து வந்த தொலைபேசி மூலம் அறிய முடிந்தது. சரி சில அரச தலைவர்களால் செய்ய முடியாததை துட்ட கெமுணு செய்து போட்டார். பெருமை தான் மூன்று நாள் என்ன முப்பது நாளும் கொண்டாடுங்கள். இதை பார்த்து அபலைகள் இங்கு அழுவது தான் எமக்கு வேதனையாய் இருக்கின்றது. இராணுவம் அங்கு வரும் இங்கு வரும் என்று எங்களுக்கு தெரிந்த இந்த தந்திரங்கள் விடுதலைப்புலிகளுக்கு தெரியாததா? எல்லாம் தமிழர் தம் படையின் நிகழ்ச்சி நிரலின் படியே நடைபெறுகின்றது. எல்லாமே நன்றாகவும் கச்சிதமாகவும் நடைபெறுகின்றது. முடிவு என்ற ஒன்று இருகின்றது அல்லவா? ஆக பொறுத்தீர்கள், ஆறவும் பொறுங்கள்.

இந்த செய்தி அறிவித்தவுடன் கொழும்பின் பல பகுதிகளிலும் வெடிசுட்டு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. எதுவித இழப்பும் இல்லாமல் இன்று தமிழர்களால் சிங்களவருக்கு பூநகரி தந்திர அடிப்படையில் தற்காலிகமாக விட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் 1993 இல் ஒபரேசன் தவளை நடவடிக்கை என்ற ஒன்று ஞாபகம் இருக்கின்றதா? அன்று அந்த இடத்தில் இருந்து பலவந்தமாக சிங்களவர்கள் விரட்டப்படும் போது கொல்லப்பட்ட 1349 சிங்கச்சிப்பாய்களை புலிப்படை எண்ணி கணக்கெடுத்த போது நாம் எப்படி கொண்டாடினோம். இன்றும் இவர்கள் எல்லாம் தமிழ் மண்ணில் தான் கடைசியாக கண் மூடவேண்டும் எண்று இருந்தால் அது அவர்கள் தலைவிதி. அதை யாரால் மாற்ற முடியும்.

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாடுங்க அதிலை தப்பில்லை.

அது உங்க உரிமை.

பட்டறிவுகளுடன் தொடரும் ஈழப்போர், இனி வரும் தலைமுறைகளுக்கும் ஓர் பாடம்.

சிங்களத்தை வெல்லும் வியூகம், தமிழீழத்தின் எதிர்கால இருப்பின் அரிச்சுவடாகும்.

வெடிககுடன் வெற்றி கொண்டாட்ங்கள் மட்டக்குளி நரேகன்பிட்டியில் நடக்கிறது ...... பாhக்க மனம் வெம்புகிறது .... முற்றாக தோற்றுவிட்டு விடடடோமா என்று ??? இல்லை .இல்லவே இல்லை .... இறுதியில் வெல்லப் போவது நாம் தான்.

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரி பிரதேசத்தை சிறிலங்கா படையினர் கைப்பற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கொழும்பிலும் சிங்கள கிராமங்களிலும் வெடி கொழுத்தி கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்தார் புவியாழ்வார்

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்பது அதிக பெரும்பான்மையான சிங்களவர்களின் உள்விருப்பு. இதுவரை காலமும் தமிழர்களுக்கு நியாயமான தீர்வைக் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்களே வெடி கொளுத்தி ஆரவாரித்தாலும் ஆச்சரியமில்லை. இத்தகைய செயல்கள் மூலம் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தி, தமிழர்களுக்குத் தனிநாடு தேவையென்பதை உணர்த்துவதனால் தமிழ்த் தேசியத்தை பலமாக்க தம்மையறியாமலேயே உதவுகின்றார்கள். அந்தவகையில் இப்படிப்பட்ட ஆரவாரங்கள் நன்மையானவையே!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெடியெல்லாம் கொழுத்தமாட்டோம்...............????

உண்மையில் எங்களது வெற்றி ஒருவிடியலின் வெற்றி

நிச்சயம் கொண்டாடுவோம்

ஆனால் யாரையும் புண்படுத்தாமல்...............

எல்லோரையும் அரவணைத்து..................

எல்லோரும் சேர்ந்துநின்று..............

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் அப்ப நீங்களே ஒதுக்கொள்கின்றீகள் தமிழன் பிரதேசம் அன்னிய நாடு என்று.இல்லாட்டில் எந்த அரசாவது தனது ஆதிக்குட்பட்ட பிரதேசத்தை ஆக்கிரமத்தற்க்கு வெடி கொழுத்தி கொண்டாடுமா. :D

மோதறை, மட்டகுளிய, பகுதிகளில் மதியம் செய்தியில் பூநகரி வெற்றிச்செய்தி அறிவிக்கபட்டவுடன் தோட்ட சிங்களவர்களால் வெடிகள் கொளுத்தப்பட்டதாம். பின்னர் மாலை இரவு என செய்திகள் வரும் போதும் சந்திகளில் நின்று கூச்சல் இட்டு வெடிகொழுத்தி மகிழ்ந்தார்களாம். வீதியால் செல்லும் தமிழர்களை கேலி செய்கின்றார்களாம். எங்கே உங்கள் தலைவர் என கேட்கின்றார்களாம்.

சிங்களவனின் நாட்டில் போய் குந்தியிருந்தால் இனிப்பு கொடுப்பானுகள் தான் வேண்டி சாப்பிட வேண்டியது தானே ஏன் வடக்கிலும் கிழக்கிலும் நிலம் இல்லையா அவர்களுக்கு இருப்பதற்கு

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி கைப்பற்றப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடியான சிங்கக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.