Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை வரலாற்று புத்தங்களில் இருந்து துடைத்தழிக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை - 2009 படையினரின் வெற்றி ஆண்டெனவும் அறிவுப்பு

Featured Replies

2009ம் ஆண்டை 'படையினரின் வெற்றி ஆண்டு' என்று அறிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஓர் கொடியின் கீழ் இலங்கை இனத்தினரை திரட்டல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது, வடக்கு என்றவுடன் அடுத்தப்படியாக தெற்கு என்றே கூறவேண்டும், எனினும் வடக்கு என்றவுடன் கிழக்கு என்றே எமது இனத்தின் நாக்கு பழக்கப்படுத்தப்பட்டிருந்தத

Edited by thamizhanpan

ரொம்பத்தான்....

2009 அப்பிடியெண்டா 2010 வேறமாதிரி இருமடா கோணவாயா...

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

ம் ....... கொக்கரிப்பு கூடிப்போச்சு .

மதிகெட்டுப்போன மகிந்த அவர்களே!

விடுதலைபுலிகளை வரலாற்று புத்தகங்களில் இருந்து இனி எந்த கொம்பனாலும் துடைத்தழிக்க முடியாது!!

ஆனால் நீங்கள் ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறியப்படுவது வரலாற்று புத்தகங்களில் விரைவில் பதியப்படும்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களில் யுத்தத்தை முடித்து ஐந்தாவது வருடத்தில் பொருளாதார வளர்ச்சி கண்டு ஆறாவது வருடத்தில் மீண்டும் இன்னுமொருமுறை ஆட்சிக்கு வர தேர்தலில் தான் பெற்ற சாதனைகளைப் பிரச்சாரம் செய்யத் திட்டம் இட்டிருப்பார். தற்போது யுத்தம் நாலாவது ஆண்டிலும் நீடிக்கப் போகின்றதே என்ற கோபத்தில் உள்ளதால் இப்படியான அறிக்கைவிட வேண்டியதாக உள்ளது. யுத்தத்தை விரைவாக முடிக்க வீட்டுக்கொருவரைத் தருமாறு அழைப்புவிடும் மகிந்த விரைவில் "கரும்சிங்கங்கள்" எனும்படையையும் உருவாக்கவேண்டியும் வரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளை என்ன தமிழினத்தையே துடைக்கத்தான் நிக்கிறான் மச்சான்.

அதுசரி துடைக்கிறதுக்கு விளக்குமாறு தும்புதடி எல்லாம் யார் பாகிஸ்தானோ அல்லது சீனாவோ தரும்? அல்லது இந்தியாவிட்ட கடன வாங்கிற ஐடியாவோ?

பேசாம பிக்குமாரிட்ட கொன்டிராக்ட்டை கொடுத்தா, இன்னும் நூறு வருசத்தில தலையை

வேலுகம்பாய பிரபாகர என மாத்தி அவர்தான் தமிழரை இலங்கையை விட்டு துரத்தி அடித்த சிங்கள கீரோ என்று மாத்த மாட்டீனமே?

Edited by me_tamilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் மகிந்த! இரவெல்லாம் இலவுச்செய்தி கேட்டுக்கேட்டு தூக்கம் கெட்டுப் போயிருக்கும். கிளிநொச்சிக்கு தேதி சொன்னவர். கிளிஞ்சு தொங்குது சிங்களம். அவரும் என்னதான் செய்வார்.

ஏதாவது மகிந்த சிந்தனை (உளறல்) யை எடுத்து விட்டால்தானே பொழப்பு நடத்த முடியும். தமிழகத்தில் 17 ஆண்டுகளாக ஒரு பிணத்தை வைத்தே அரசியல் நடத்தும் காங்கிரஸ் முட்டாள் போல!!

  • கருத்துக்கள உறவுகள்

சிரிலங்காவின் தலைவர் தனது வீரபிரதாபங்களை அள்ளி வீசும் போது தனது நாட்டின் பொருளாதாரம் வங்கு றோத்து நிலயை அடைவதை பற்றி ஒரு நாலு வரி எடுத்து விட்டால் தான் நாட்டையே யாருக்கோ விற்று விட்டார் என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களில் யுத்தத்தை முடித்து ஐந்தாவது வருடத்தில் பொருளாதார வளர்ச்சி கண்டு ஆறாவது வருடத்தில் மீண்டும் இன்னுமொருமுறை ஆட்சிக்கு வர தேர்தலில் தான் பெற்ற சாதனைகளைப் பிரச்சாரம் செய்யத் திட்டம் இட்டிருப்பார். தற்போது யுத்தம் நாலாவது ஆண்டிலும் நீடிக்கப் போகின்றதே என்ற கோபத்தில் உள்ளதால் இப்படியான அறிக்கைவிட வேண்டியதாக உள்ளது. யுத்தத்தை விரைவாக முடிக்க வீட்டுக்கொருவரைத் தருமாறு அழைப்புவிடும் மகிந்த விரைவில் "கரும்சிங்கங்கள்" எனும்படையையும் உருவாக்கவேண்டியும் வரலாம்.

சிலவேளைகளில் அதையும் அவன் உருவாக்குவான்

ஆனால் நாங்கள்தான் அதன் அருமை தெரியாமல் இங்கே மாற்றிமாற்றி குத்தி மாய்க்கிறோம்

அதைத்தவிர வேறு எதுமுக்கியம் எமக்கு

இதைவிட வைக்கற்பட்டடை நாய்கள் மேலடா தமிழா.........

பேசாம பிக்குமாரிட்ட கொன்டிராக்ட்டை கொடுத்தா, இன்னும் நூறு வருசத்தில தலையை

வேலுகம்பாய பிரபாகர என மாத்தி அவர்தான் தமிழரை இலங்கையை விட்டு துரத்தி அடித்த சிங்கள கீரோ என்று மாத்த மாட்டீனமே?

கிகிகிகிகிகிகிகிகி :unsure:

வெற்றி ஆண்டு இல்லடா வெங்காயம் உங்க கூட்டத்துக்கு

பாடை கட்டும் ஆண்டு,

அழிக்க ஒன்று சேரும் எதிரியை நாம்தான் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேனும்,

இப்பொழுதே முடிந்ததை செய்வோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

35 ஆண்டுகளாக ஒரே அறிக்கை மீழ்பிரசுரமமாகிக் கொண்டே இருக்கின்றது.

ஏல்லாவற்றிற்க்கும் ஒரேகாரணம் இதை செய்து கொண்டிருப்பவர்களை விட தலை ஆட்டிக் கொண்டிருக்கும் சிங்கள மக்கள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

35 ஆண்டுகளாக ஒரே அறிக்கை மீள்பிரசுரமாகிக் கொண்டே இருக்கின்றது.

எல்லாவற்றிற்க்கும் ஒரேகாரணம் இதை செய்து கொண்டிருப்பவர்களை விட தலை ஆட்டிக் கொண்டிருக்கும் சிங்கள மக்கள்தான்.

தோல்வியின் விளிம்பில் இருக்கின்ற போது இப்படியான அறிக்கைகள் விடுவது இயல்பு; இது அரசியல்வாதிகளான அனைவருக்குமே (வாய்) கை வந்த கலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியின் விளிம்பில் இருக்கின்ற போது இப்படியான அறிக்கைகள் விடுவது இயல்பு; இது அரசியல்வாதிகளான அனைவருக்குமே (வாய்) கை வந்த கலைதான்.

எதை வைத்து அவன் தோல்வியின் விழிம்பில் நிற்கிறான் என்று சொல்கின்றீர்கள்???????????

  • கருத்துக்கள உறவுகள்

அதுபோல 2009ம் ஆண்டு பிறப்பிக்கின்ற வேளையில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகியவற்றிக்குள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி சகல தமிழ் மக்களையும் விடுதலைச் செய்யுமாறு புலிகளிடம் விருப்பத்துடன் கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறு செய்யாவிடின் புலிகளை தடைச்செய்வதில் மட்டும் நின்றுவிடாது வரலாற்று புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிந்து விடுவதற்கும் நான் பின்னிற்கமாட்டேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

யாழ்ப்பாண மக்களைச் சிறை வைத்து, எங்குமே சுதந்திரமாகப் போகவிடாமல் தடுத்து வைத்துள்ள நிலையைப் பற்றியும் எண்ணிப் பார்க்க..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை வைத்து அவன் தோல்வியின் விழி(ளி)ம்பில் நிற்கிறான் என்று சொல்கின்றீர்கள்???????????

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒவ்வொரு பிள்ளையைப் படைக்கு அனுப்பட்டாம்" என்று சொன்னவர். சரத்தும்.ரம்புக்கொல்லையும் 1500 புலிகள் தான் இருக்கினம் என்றும் சொன்னவை. இப்ப 'சர்வதேசமும் அதிலும் முக்கியமாக இந்தியராஜதந்திரம் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேறச்சொல்லிப்போட்டு புலிகளிடம் இருந்து பிரித்தாளும் தந்திரத்தைச்சொல்லிக்கொடுக்

  • கருத்துக்கள உறவுகள்
ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒவ்வொரு பிள்ளையைப் படைக்கு அனுப்பட்டாம்" என்று சொன்னவர். சரத்தும்.ரம்புக்கொல்லையும் 1500 புலிகள் தான் இருக்கினம் என்றும் சொன்னவை. இப்ப 'சர்வதேசமும் அதிலும் முக்கியமாக இந்தியராஜதந்திரம் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேறச்சொல்லிப்போட்டு புலிகளிடம் இருந்து பிரித்தாளும் தந்திரத்தைச்சொல்லிக்கொடுக்
  • கருத்துக்கள உறவுகள்

1-ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதுக்கு சிறு பிள்ளைகளும் தேவைப்படுகின்றார்கள்

இந்தளவு பிள்ளைகளை இயக்கத்தில்கூட நான் கண்டதில்லை

வளர்ந்தவர்கள் எல்லாரும் எலகிரி போன்ற கருத்துக்களங்களில் மட்டுமே தமது வீரத்தைக் காட்டுவதாலும், பிற நாடுகளுக்கு அகதிகளாக ஓடித்தப்பி விட்டதாலும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே சிறுவர்களை கள்ள சேர்டிபிகற் கொடுத்து இராணுவத்தில் சேர்க்கிறார்கள். மேலும் வளர்ந்த சிங்கள இளைஞர்கள் இல்லாததால் நங்கிகள் தற்போது தென்பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் தமிழ் இளஞர்களுக்கு வலைவீசுகிறார்களாம்.

2-நீங்கள் கூறுமாப்போல் ஸ்ரீலங்கா இராணுவம் கொழுத்து திரண்டு இருந்தால் மகிந்த எதற்கு வீட்டுக்கொன்டு தாருங்கள் என்று கெஞ்சுகின்றார்

வேறென்னத்துக்கு. சர்வதேச நாடுகள் இலவசமாக அள்ளிக் கொடுக்கும் ஆயுதங்களை வன்னிக்குக் கொண்டுபோய் புலிகளிடம் ஒப்படைக்கத்தான். வீட்டுக்கு ஒன்றுதா எனக் கேட்கும் மகிந்த விரைவில் வீட்டுக்கு மூன்று தாங்கோ எனக் கேட்பார் பாருங்கோ.

3-இத்தனை நாள் குறித்தும் எத்தனை தடவை முயற்சித்தும் ஏன் முக்கிய இடங்களையோ முக்கிய பகுதியாலேயோ அசைய முடியவில்லை

முக்கி முக்கிப் பார்த்தும் முக்கிய இடங்கள் அசையவில்லை என்பது உண்மைதான். அதனால்தான் முச்சந்திகளைப் பெரிய நகராகவும் பொட்டல் வெளிகளை மக்கள் செறிந்து வாழும் ஊர்களாகவும் பிரச்சாரம் செய்கின்றார்கள். உதாரணமாக கிளிநொச்சியில் அடம்பன் என்ற இடத்தைக் கொண்டு வந்து தமிழர்களுக்கே பூகோள சாஸ்த்திரம் கற்பிக்கின்றார்கள். முக்கிய இடங்கள் கைமாறும்போது அது தமிழர்களுக்கு முக்கியமில்லாத இடங்களாக மாறும். ஏனெனில் ஓர் இரவில் வெறும் சதுப்பு நிலத்தில் நகரம் உருவாக்கக்கூடிய திறமை படைத்தவர்கள் தமிழர்கள்..

4-நீங்கள் கூறுவதுபோல் 10 ஆயிரம் பேர்தான் புலினளிடம் இருப்பர் என்றால் 175 கி.மீற்றர் தூரத்தில் அல்லது எல்லையில் தொடர்ந்து போர்புரிவது சாத்தியமா???

10, 000 பேர் என்று சிங்களப்படை சொல்லவில்லை. முக்காலமும், மூவுலகமும் அறிந்த இராணுவ/அரசியல் விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்ற ஆய்வாளர் சொன்ன வார்த்தைகள் அவை. மூன்று பேர் முன்னுக்குப் போகும் போது 30 பேர் இறங்குகின்றார்கள் என்று வோக்கியில் சொல்ல அதைக் கேட்டு கிலிகொண்டு இராணுவம் முன்னுக்கு வராமல் பின்னிற்பதாலேயே 175 கி.மீ. தூரத்தையும் தக்கவைத்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.