Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார்.

பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர் க.இந்திரகுமார் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் காலமாகிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது எழுத்தால் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் எழுதிய 'மண்ணிலிருந்து விண்ணுக்கு' என்ற நூலிற்கு இலங்கை, இந்திய (தமிழக) அரசுகளால் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். இன்னும் பல நூல்கள எழுதி வெளியிட்டவர். இவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.30 மணிவரை Eastham, London இல் நடைபெறும்.

டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார்.

பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர் க.இந்திரகுமார் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் காலமாகிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது எழுத்தால் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் எழுதிய 'மண்ணிலிருந்து விண்ணுக்கு' என்ற நூலிற்கு இலங்கை, இந்திய (தமிழக) அரசுகளால் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். இன்னும் பல நூல்கள எழுதி வெளியிட்டவர். இவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.30 மணிவரை Eastham, London இல் நடைபெறும்.

இவரது பெயரை மாத்திரம் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் தமிழீழ நிலவரம், அரசியல் பிச்சனைகள் அல்லது அங்குள்ள இன்னல்கள் பற்றி ஏதாவது எழுதியுள்ளாரா அல்லது பேசியுள்ளாரா அல்லது அவற்றுள் ஏதாவது விதத்தில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதுபற்றி அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால், நானும் தெரிந்துகொள்ள உதவும்.

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளராகவும் மருத்துவராகவும் பணியாற்றிய டாக்டர் இந்திரகுமார் லண்டனில் ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை 1958 களில் சென்.தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.

இவர் வாடைக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேற்படி திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.

விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் பிரசுரமாகியது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா? இலங்கேஸ்வரன் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.

அவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இவரது மறைவு எழுத்துலகிற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் பேரிழப்பாகும்.

-தினக்குரல்-

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

தகவலுக்கு நன்றி .

டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார்.

பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர் க.இந்திரகுமார் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் காலமாகிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது எழுத்தால் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் எழுதிய 'மண்ணிலிருந்து விண்ணுக்கு' என்ற நூலிற்கு இலங்கை, இந்திய (தமிழக) அரசுகளால் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். இன்னும் பல நூல்கள எழுதி வெளியிட்டவர். இவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.30 மணிவரை Eastham, London இல் நடைபெறும்.

வானத்தின் வர்ணங்களை (எனக்குத் தெரிந்த வரையில்) முதன் முதலில் தமிழில் தந்தவர். அப்பலோ(இலக்கம் தெரியவில்லை) தாழ்வமுக்கத்தால் இரத்தம் சுண்டி இறந்து போன மூன்று விண்வெளிவீரர்களுக்காக (படங்களுடன் அவரது மண்ணிலிருந்து விண்ணிற்கு புத்தகத்தில் போட்டிருந்தார்) மனித நேயத்துடன் அழுத என் கண்களில் அவருக்காகவும் கண்ணீர்த்திவலைகள்.

****

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாரின் பிரிவாலும் வாடும் அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

செல்லமுத்து வாத்தியார், உங்களுடனும், உங்கள் நண்பர் உண்டியல் ஜயதேவனுடனும் அவர் நெருங்கிப்பழகியதாக அறிகிறேன். உங்களது துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

எழுத்தாளராகவும் மருத்துவராகவும் பணியாற்றிய டாக்டர் இந்திரகுமார் லண்டனில் ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை 1958 களில் சென்.தோமஸ் கல்லூரியிலும் பின்னர் யாழ்.இந்துக்கல்லூரியிலும் பின்னர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.

இவர் வாடைக்காற்று திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேற்படி திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.

விண்வெளியில் வீரகாவியம் என்ற கட்டுரையைத் தொடராக தினகரனில் எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக இந்தியாவில் பிரசுரமாகியது. 1997 இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. 1983 கலவரத்தை அடுத்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா? இலங்கேஸ்வரன் போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.

அவர் தனது இறுதித் காலத்தை மருத்துவம், எழுத்துத்துறைக்கும் அப்பால் பழ.நெடுமாறனுடன் இணைந்து செயலாற்றியதுடன் உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இவரது மறைவு எழுத்துலகிற்கும் தமிழ்த் தேசியத்துக்கும் பேரிழப்பாகும்.

-தினக்குரல்-

தகவலுக்கு நன்றி தூயவன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

M17 அவர்களே! உங்களுடைய கருத்து தவறானது. என்னுடைய நண்பர்கள் யார் என்பதை அறியும் சக்தி உங்களுக்கு இல்லை. இது ஒருவருடைய துயர் பகிர்தல் பகுதி என்பதை மட்டும் மனதில் கொண்டு கருத்துக்களைப் பரிமாறுங்கள்.

தமிழின்மேல் உள்ள பற்றினால்தான் டாக்டர் இந்திரகுமார் என்னுடன் நண்பராக இருந்தார். என்னைவிட அவருக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவருடைய தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன். பல தமிழ் எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். 1999 ஆம் ஆண்டு முகத்தார் யேசுரட்னம் உட்பட பன்னிரண்டு எழுத்தாளர்களை ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமிருந்து இலண்டனுக்கு அழைத்து பன்னிருவர்களுடைய நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட வைத்த பெருமைக்குமுரியவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை வேறு, ஆனால் தமிழ் உலகிற்கு அவரின் இழப்பு ஓர் பேரிழப்பு. அவரின் இழப்பு பற்றிய செய்திகளை யாரும் வெளியிடாததின் காரணத்தால்தான் நான் இக்களத்திலே எழுதியிருந்தேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த மருத்துவருக்கு எமது அஞ்சலிகள்.

டாக்டர் இந்திரகுமாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளிக்கு அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.