Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக் கதையை வாசிச்சு சந்தோசப்படுவமோ???

Featured Replies

முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்!

[ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 03:35.51 AM GMT +05:30 ]

வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன?

அதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன? வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும்

கிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன? போரீடும் வலுவை ஸ்ரீலங்கா இராணுவம் இழந்து விடும் சூழல்தான்; கிளிநொச்சியில் இருந்தது.

போர்க்களத்தையோ அல்லது போரையோ எந்த நகரமும் தீர்மானிப்பதில்லைத்தான், இருந்த போதும் வலுவான ஒரு படைபலத்துடன் புலிகள் அங்கு போராடிய போதும், திடீரென கிளிநொச்சியை விட்டு, அதைத் தொடர்ந்து ஆனையிறவு முகமாலையென விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாகப் பகுதியாக விளங்கிய இடங்களையெல்லாம் கைவிட்டுப் போவதற்கான உண்மைக் காரணம் என்ன?

ஸ்ரீலங்கா இராணுவம் வடபோர்முனைக்கான போர் வாயைத் திறந்தபோது இருந்த எதிர்பார்ப்போ, அல்லது கிளிநொச்சியின் வாசல் வரைக்கும் வந்து போரிட்ட திறனோ இங்கு முக்கிய இடத்தைப் பெறவில்லை. வடபோர் முனையில் ஸ்ரீலங்கா படைகள் சண்டையிட்டு பிடித்த இடங்களை விடவும் புலிகள் பின்வாங்கிய இடங்களை படைத்தரப்பினர் பிடித்தனர் என்பதுதான் உண்மை. தந்ரோபாய அடிப்படையில் இடங்களை விட்டு விடுதலைப் புலிகள் பின் வாங்கினார்கள் என்பதுதான் இன்றுவரை இருக்கக் கூடிய யதார்த்தம்.

தந்ரோபாய நடவடிக்கையாக இருந்தாலும, விட்டுக் கொடுப்பின் தன்மை அல்லது விட்டுக் கொடுக்கவென நினைத்த தூரம் இவையாவும் ஒன்றாக சேர்ந்து கொண்டதுதான் இன்றைக்கு நடக்கக் கூடிய முல்லைத்தீவு மீட்கும் போர் என்றால் மிகையாகாது. முல்லைத்தீவை ஸ்ரீலங்கா இராணுவம் மீட்டுவிடும் என்றோ அல்லது விடுதலைப் புலிகளை ஸ்ரீலங்கா அரசு அழித்து விடும் என்றோ அர்த்தமில்லை. கனவு காண்பது என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான சுதந்திரம் மகிந்த அன்ட் கொம்பனிக்கும் ஒரு கனவிருக்கிறது அவர்களும் காண்கிறார்கள்.

உண்மையில் அரசு திறந்த வடபோர் முனையானது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய திருப்பு முனையாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்கப் போவதில்லை. தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைப்படி, அவருடைய கடந்தகால போர் வியூகங்களை வைத்து உற்று நோக்கும் போது

ஒரு உண்மை புலப்படும். இராணுவ முகாங்களைத் தேடி சண்டைகளை நகர்த்துவதை விட, அவர்களை இருந்த இடத்துக்கே வரவழைத்து யுத்தம் நடத்துவதன் மூலம் இலக்கை அடையலாம் என்ற கணிப்பாகக் கூட இருக்கலாம்.

ஸ்ரீலங்கா அரசின் சிந்தனையில் இராணுவத் தீர்வு ஒன்றுதான் போரை முடிவுக்கு கொண்டு வரும். இராணுவ வெற்றி மூலம் சமாதானத்தை ஏற்படுத்தி விடலாம் என நம்புகிறது அரசாங்கம்.

ஆகவேதான் அவர்களுடைய சிந்தனை ஓட்டத்திற்கு ஒத்திசைவான போக்கினைக் கொண்டு, அரசாங்கத்தின் இராணுவ பலத்தின் மீது மோதுவதைப் பார்க்கிலும்,

இராணுவ வெற்றியென்ற மமதையில் போரைத் திணித்துக் கொண்டிருக்கும் அரச படைகள் மீது, மெது மெதுவாக வருடிக் கொடுத்தவாறே வாலை நறுக்கும் வித்தையாகக் கூட இந்தப் போரை தேசியத் தலைவர் அவர்கள் வகுத்திருக்கலாம்.

1990 விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் நடவடிக்கை மூலம் கிளிநொச்சி,ஆனையிறவு முகமாலை [/b]என நீண்ட போரானது பின்பு அரியாலை வரை காலை நீட்டிக் கொண்டது. அப்போது ஸ்ரீலங்கா படைகளின் மீது அதிக அக்கறை கொண்ட நாடாக இன்றுவரை விளங்கக் கூடிய இந்திய அரசின் தலையீடானது, அந்தப் போர் நடவடிக்கையை கைவிட வேண்டியதாகிப் போய்விட்டது.

தமிழீழ விடுதலைப் போரானது தமிழர் தேசங்களை முற்று முழுதாக மீட்டு, தமிழர் நிலப்பரப்புக்களை ஒரு இராணுவ சஞ்சாரமற்ற பிரதேசமாக உருவாக்குவதே தேசியத் தலைவர் அவர்களுடைய நோக்கம்.

இந்த வன்னிப் போரானது ஸ்ரீலங்கா அரசுக்கும், படைத்தரப்பினருக்கும் அவர்களுடைய நலன்சார் வல்லாதிக்க நாடுகளுக்கும் ஒருபெரும் வெற்றியாக காட்சி கொடுத்தாலும். வன்னிமண் அதன் புவிசார் அமைப்பு என்பதெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சாதகமானவைகளே! விடுதலைப் புலிகள் மரபுப் போர்முறையில் தேர்ச்சி பெற்றவர்களாக பல களங்களில் நிருபித்திருந்தாலும் கரந்தடித் தாக்குதல், கரும்புலித் தாக்குதல் என்பவற்றில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். களங்கள் மாறும் போது யுத்த குணங்களையெல்லாம் மாற்றி போராடக்கூடிய அளவுக்கு தேசியத் தலைவர் அவர்கள் தனது போராளிகளையும் தளபதிகளையும் உருவாக்கி இருக்கன்றார் என்பதுதான் நிஜம்.

அகலக் காலெறிவதில்தான் ஸ்ரீலங்கா படைகளின் வெற்றி அல்லது சிங்கள இனவாதிகளின் குதூகலம் என்றால்? அதன் அர்த்தத்தை அறிவதற்கு நீண்டகாலம் தேவைப்படாது.

உண்மையில் விடுதலைப்புலிகளின் பொறிக்குள்தான் இராணுவமும் உலக வல்லரசுகளும் விழுந்து விட்டனரோ என்ற சந்தேகமும் பரவலாக உள்;ளது.

இன்று அரசாங்கம் திறந்துள்ள முல்லைத்தீவுக்கான போர் என்பது. முழு படைபலத்துடன் கூடிய யுத்தமாக உருவாக்கம் பெற்றள்ள நிலையில், முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாகக்கூட இந்தப் போர் இருக்கலாம்.

அல்லையூர்-சி.விஜயன் (இத்தாலி)

இதை வாசிச்சாசு ஆனா சந்தோசம் வரேல்ல.... வேற ஒண்டுதான் வருது.

ஈழப்போர் இன்று போராட்டத்துடன் என்ருமட்டுமிருந்த நிலைமாறி வேறெங்கோவெல்லாம் போட்டுது.... இன்னும் போராட்டம் சண்டை நிலங்களை பிடித்தல் என்றிருந்தா சுத்தி சுத்தி சுப்பற்ற கொள்லைகுள்ள தான் நிப்பம்.

உலக ஓட்டத்துக்கு ஏற்றமாதி நாங்களும் முடிவெடுக்கும் சக்கதியை அவர்கள் பாணியிலேயே அணுகவேண்டும். இதுக்கு முக்கியமா எல்லாரும் ஒன்ருபட்டு உழைக்வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்!

[ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 03:35.51 AM GMT +05:30 ]

இதை வாசிச்சாசு ஆனா சந்தோசம் வரேல்ல.... வேற ஒண்டுதான் வருது.

ஈழப்போர் இன்று போராட்டத்துடன் என்ருமட்டுமிருந்த நிலைமாறி வேறெங்கோவெல்லாம் போட்டுது.... இன்னும் போராட்டம் சண்டை நிலங்களை பிடித்தல் என்றிருந்தா சுத்தி சுத்தி சுப்பற்ற கொள்லைகுள்ள தான் நிப்பம்.

உலக ஓட்டத்துக்கு ஏற்றமாதி நாங்களும் முடிவெடுக்கும் சக்கதியை அவர்கள் பாணியிலேயே அணுகவேண்டும். இதுக்கு முக்கியமா எல்லாரும் ஒன்ருபட்டு உழைக்வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போரானது தமிழர் தேசங்களை முற்று முழுதாக மீட்டு, தமிழர் நிலப்பரப்புக்களை ஒரு இராணுவ சஞ்சாரமற்ற பிரதேசமாக உருவாக்குவதே தேசியத் தலைவர் அவர்களுடைய நோக்கம்.

இந்த வன்னிப் போரானது ஸ்ரீலங்கா அரசுக்கும், படைத்தரப்பினருக்கும் அவர்களுடைய நலன்சார் வல்லாதிக்க நாடுகளுக்கும் ஒருபெரும் வெற்றியாக காட்சி கொடுத்தாலும். வன்னிமண் அதன் புவிசார் அமைப்பு என்பதெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சாதகமானவைகளே! விடுதலைப் புலிகள் மரபுப் போர்முறையில் தேர்ச்சி பெற்றவர்களாக பல களங்களில் நிருபித்திருந்தாலும் கரந்தடித் தாக்குதல், கரும்புலித் தாக்குதல் என்பவற்றில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். களங்கள் மாறும் போது யுத்த குணங்களையெல்லாம் மாற்றி போராடக்கூடிய அளவுக்கு தேசியத் தலைவர் அவர்கள் தனது போராளிகளையும் தளபதிகளையும் உருவாக்கி இருக்கன்றார் என்பதுதான் நிஜம்.

அகலக் காலெறிவதில்தான் ஸ்ரீலங்கா படைகளின் வெற்றி அல்லது சிங்கள இனவாதிகளின் குதூகலம் என்றால்? அதன் அர்த்தத்தை அறிவதற்கு நீண்டகாலம் தேவைப்படாது.

உண்மையில் விடுதலைப்புலிகளின் பொறிக்குள்தான் இராணுவமும் உலக வல்லரசுகளும் விழுந்து விட்டனரோ என்ற சந்தேகமும் பரவலாக உள்;ளது.

இன்று அரசாங்கம் திறந்துள்ள முல்லைத்தீவுக்கான போர் என்பது. முழு படைபலத்துடன் கூடிய யுத்தமாக உருவாக்கம் பெற்றள்ள நிலையில், முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாகக்கூட இந்தப் போர் இருக்கலாம். !

அல்லையூர்-சி.விஜயன் (இத்தாலி)

கருத்தியல் ரீதியான ஒற்றுமைப்பாடும் செயற்றிறனும் மிக்க நகர்வுகளுளே இன்று தேவையானது. வெறும் உணர்சிமயமான , மந்திர தந்திர மாயாஜாலப் பார்வைகள் மாற்றம் பெற்று ஒரு யதார்த்த பூர்வமான பங்காற்றலின் காலமாக தமிழினம் இதைப் பார்க்க வேண்டும். புலிகள் செய்வார்கள் என்றுவிட்டு நாம் எங்கள் பாட்டிலே இருந்து ஆய்வுகளையும், களமுனைச் செய்திகளையும் பார்த்துவிட்டு மாற்றம் வருமென்றும், மந்திரத்தால் மாங்காய் விழுமென்றும் இருப்போமாயின், இதுவே நாம் செய்யும் வரலாற்றுத் தவறாக இருக்கும். இதற்காகப் புலம் பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகள் போதுமா?, என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இதுவரை செய்துவிட்டோம், இனி என்ன செய்வது என்று இருக்க முடியாது. பொருளதவி, பொருளுதவி என்பது நான்கு எண்களைக் கடந்தாக வேண்டும். குறைந்தது நான்கு எண்களையாவது தொடும் விதமாகப் பங்களிப்பு மாறவேண்டியது காலத்தின் தேவையாகிறது. எதிரியானவன் 17 நாடுகளின் பின்புலத் துணையோடு, நாமோ தன்னம் தனியாக, எனவே உலகத் தமிழர்களே! இது உங்களின் காலம். இன்றைய காலகட்டத்தில். எப்படி எமது வீட்டுப் பிரச்சினையொன்றுக்காக முகம் கொடுப்போமோ அப்படிக் கொடுக்கவேண்டும். இல்லாவிடின் கடன்பட்டாவது கரையேற்றுவோம் தமிழ்த்தாயை என்று எல்லோரும் முடிவெடுக் வேண்டும். முடிவெடுத்து , சிறீலங்கா இராணுவத்தின் முடிவையும் தமிழினத்தின் விடிவையும் நாமே காணவேண்டும். களமுனையைப் பலப்படுத்தவோம். அப்போதுதான் இது போன்ற நிகழ்வுகளை நாம் தரிசிக்க முடியும்.

உண்மையில் விடுதலைப்புலிகளின் பொறிக்குள்தான் இராணுவமும் உலக வல்லரசுகளும் விழுந்து விட்டனரோ என்ற சந்தேகமும் பரவலாக உள்;ளது.

அல்லையூர்-சி.விஜயன் (இத்தாலி)

இத்தாலியில் இருந்துதானே எழுதுறீங்க. அப்ப சரி

3 வருடங்களாக ஒரு தொகுதி ஆட்டுப் புழுக்கைகள் எழுதி மூக்குடைஞ்சு போய் இருக்கினம். இப்ப எலிப்புழுக்கைகள் வெளிக்கிட்டிருக்கு போல கிடக்கு. இந்த புழுக்கைகள் எல்லாம் ஏமாத்திறது அப்பாவி புலம்பெயர்ந்த மக்களையே அன்றி சிங்களவரையே சர்வதேசத்தையோ அல்ல.

ஏமாந்த புலம்பெயர்ந்த மக்கள் செய்ய வேண்டியதை செய்யாது வாய்பாத்ததும் கள யதார்த்தங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டதற்கு எதிர்மறையாக மாறிய பொழுது நம்பிக்கை இழந்து போராட்டத்திற்கு மேலும் பாதிப்பை கொடுத்தது கொடுத்து கொண்டிருக்கு.

சிங்களவரும் துரோகிகளும் செய்த பிரச்சாரத்தால் வந்த பாதிப்புகளை விட இந்த புழுகைகளின் நடத்தையால் வந்த பாதிப்புகள் அதிகம். ஏன் என்றால் எதிரிகளையும் துரோகிகளும் தம்மை தெளிவாக இனம்காட்டிய படி எழுதினார்கள் மக்களும் அவர்களிற்குரிய இடத்தில் வைத்திருந்தார்கள்.

இத்தாலியில் இருந்துதானே எழுதுறீங்க. அப்ப சரி

^_^ஏன் உங்களுக்கும் வாசிக்க உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போச்சா ?? :wub:

பேசாமல் இதை எழுதியவர் அல்லையூர்-சி.விஜயன் (இத்தாலி) என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக

அல்லைக்கை-சி.விஜயன் (இத்தாலி) என்று குறிப்பிட்டிருக்கலாம்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

அல்லையூர்-சி.விஜயன் (இத்தாலி) எப்ப வெளிக்கிட்டவர் அது தான் படம் காட்ட. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ இத்தாலியிலை இருந்துமா

12086.gif

  • கருத்துக்கள உறவுகள்

கிளிஞ்சுது போ.ஏற்க்கனவே இருக்கிற தலையிடி கானாது என்று இவர்வேற :rolleyes:

சிலந்தி வலை பின்னுவதற்கு பல தடவை தோற்றும் முயன்று வென்றதைப் பார்த்து தோல்வியில் துவண்டிருந்த ஒரு ஐரோப்பிய மன்னன் வென்றதாக கேள்விப்பட்ட ஞாபகம்.

அந்த ஐரோப்பிய மன்னன் யார்?

பெயர் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்..............

சிலந்தி வலை பின்னுவதற்கு பல தடவை தோற்றும் முயன்று வென்றதைப் பார்த்து தோல்வியில் துவண்டிருந்த ஒரு ஐரோப்பிய மன்னன் வென்றதாக கேள்விப்பட்ட ஞாபகம்.

அந்த ஐரோப்பிய மன்னன் யார்?

பெயர் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்..............

நெ...

24ம் துட்டகைமுனு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.