Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனை பிடித்தே தீருவோம்: இலங்கை அரசாங்கம் சூளுரை

Featured Replies

:unsure:பிரபாகரனை பிடித்தே தீருவோம்: இலங்கை அரசாங்கம் சூளுரை :unsure:

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி கூறியுள்ள, இலங்கை பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்ல, முல்லைத்தீவில் முழுவீச்சில் புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் இராணுவம் அதன் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீரும் என்று கூறியிருக்கிறார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிர மடைந்திருப்பதால் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு விட்டன. தற்போது அவர்கள் முல்லைத்தீவில் மட்டுமே இருப்பதால் அங்கு அவர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது.

முல்லைத்தீவில் 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருவதாக இலங்கை இராணுவம் கூறி வருகிறது. இந்த நிலையில் கிளிநொச்சிக்கும், முல்லைத்தீவுக்கும் இடையே எல்லைப்பகுதியில் உள்ள தர்மபுரம் பகுதியில் பிரபாகரன் தங்கியிருந்ததாக கருதப்படும் ஆடம்பரமான குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பதுங்குகுழி படத்தை இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ளது.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பிரபாகரன் பதுங்கு குழிகளில் மாறிமாறி சென்று கொண்டிருக்கிறார். அவரை சுமார் ஆயிரம் புலிகள் பாதுகாத்து வருகிறார்கள். அவரை நாங்கள் பிடித்து விடுவோம். எங்கள் நோக்கம் எங்கள் மண்ணிலிருந்து தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பது தான் என்று ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கை இராணுவத் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பொன்சேகா விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு வெளியேறி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு பத்திரிகையாளர்களுக்கு தனது அரசு இல்லத்தில் சந்தித்து பேசிய பொன்சேகா, கிளிநொச்சி வீழ்ந்த பிறகு கடந்த 17 நாட்களில் முல்லைத்தீவில் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு இராணுவத்தினர் முன்னேறியிருப்பதாக தெரிவித்ததுடன், எதிர்பார்க்கப்பட்டதைவிட முல்லைத்தீவு வெகுவேகமாக தங்கள் கட்டுப்பாட்டில் வந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் ஆதிக்கம் செலுத்தி வந்த விடுதலைப்புலிகள் தற்போது முல்லைத்தீவில் உள்ள ஒரு சிறு காட்டுப் பகுதிக்குள் சுருக்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

புலிகள் இயக்கத்தில் தற்போது நன்கு பயிற்சிப் பெற்ற போராளிகள் ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். எனவே புலிகளுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் பொன்சேகா தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அவர் இலங்கையை விட்டு வெளியேறி இருக்கலாம். விடுதலைப் புலிகள் தற்போது தப்பிச் செல்வதற்குள்ள ஒரே வழி தென்கிழக்கு ஆசியாவை நோக்கி செல்வதற்கான கடல்மார்க்கம் தான் என்றும் அவர் கூறினார்.

http://www.tamilwin.com/

அறுவை தாங்க முடியல்ல. நம்முடைய அவலக்கரரும் அரசாங்கமும் ஒரே மாதிரித்தான் கதைக்கிறாங்கள். :rolleyes:

தலைவரின் நடமாட்டம் மட்டுமா? மேல்மறைப்புகள் அற்ற குளிக்கும் இடங்களை கூட மிகவும் துல்லியமாக பார்த்து ரசிக்கிறார்களாம்.இந்தியாவின

இவர் என்ன பக்கத்தில போய் நின்றவரா கணக்குப் பார்க்க :rolleyes:

பேசாமல் நான் கணக்குப் படித்த வாத்தியாரிடம் அனுப்பி விடலாம், காதை முறுக்குற விதத்தில் இவர் இப்படி கணக்குக் கூறுவதை நிறுத்தி விடுவார்.ஏன் என்றால் காதில் எத்தனை இடங்களில் சிவந்து இருக்கிரது என்று பார்க்கவே நேரம் சரியாய் இருக்கும் :rolleyes::rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில வேவு விமானங்களையும் சற்றலைற்களையும் செய்து வானத்தில விட்டால் அங்க போனவங்கள் வேற ஏதோ செய்யுறாங்கள் போல இருக்குதே. படங்களையெடுத்து அங்குள்ள காங்கிரஸ் அரசியல்வாதியளுக்கு அனுப்புகினமாம். உதவிட வேற என்னத்தைக் கிழிக்கப்போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

குலைக்கிற நாய் கடிக்காது என்பர்

பார்ப்போம் எதுவரை இவரின் ஆட்டம் என்று.........

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் எங்கே? : அதிரடித் தேடலில் சிங்கள ராணுவம்

on 21-01-2009 04:16

Favoured : None

Published in : செய்திகள், இலங்கை

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவது என்ற மூர்க்கத்துடன் சிங்கள ராணுவம் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்காக தனி விமானத்துடன் சிறப்பு அதிரடிப்படை ஒன்றையும் ராணுவம் அமைத்துள்ளதாக இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் முல்லைத்தீவை நாலாபுறம் இராணுவம் சூழ்ந்துள்ளது. இராணுவத்தின் 7 பிரிவுகள் முல்லைத்தீவை சூழ்ந்துள்ளன. பிரபாகரன் தப்பிவிடாமல் வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த இராணுவ அதிகாரி கூறினார்.

இலங்கையில் தமிழ் ஈழத்துக்காக போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் கடும் போர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. விடுதலைப்புலிகள் வசம் இன்னும் 20 கிலோ மீட்டர் அளவில் கடற்கரை பகுதி இருக்கிறது.

இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிக்க ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர் புதுக்குடியிருப்பு அல்லது விஷ்வா மடு என்ற இடத்தில் உள்ள அதிநவீன பாதாள அறைகளில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரபாகரன், தனது அதிவிரைவு படகில் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருக்கலாம் என்றும், நவீன குட்டி விமானத்தில் பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டுக்கு பறந்து சென்று விட்டதாகவும் உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன.

பிரபாகரன் மறைந்திருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று பிடிப்பதற்காக தனி விமானம் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் செல்லும் அதிரடி வீரர்கள் பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் இடத்தில் பரசூட் மூலம் குதிப்பார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களின் நடமாட்டத்தையும் இந்த சிறப்பு அதிரடிப் படை கண்காணித்து வருகிறது. எப்படியும் இராணுவம் பிரபாகரனை பிடித்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரபாகரன் கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்க முல்லைத்தீவு கடல் பகுதியை இலங்கை கடற்படை சுற்றிவளைத்துள்ளது. முல்லைத்தீவு வனப் பகுதியில் பிரபாகரன் எங்காவது மறைந்திருக்கிறாரா என்று இலங்கை விமானப்படை விமானங்கள் தீவிரமாகத் தேடி வருகின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமேடு பகுதிகளில் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

பிரபாகரன் தங்கியிருந்திருக்கலாம் என்று கருதப்படும் 2 பாதாள பதுங்கு அறைகளை இராணுவம் கண்டுபிடித்துள்ளது. இந்த பாதாள பதுங்கு அறைகளை கைப்பற்றியதால் பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுபோன்ற பல பாதாள அறைகளை பிரபாகரன் உருவாக்கியிருக்கக் கூடும் என்று தற்போது கருதப்படுகிறது.

பிரபாகரனை பாதுகாக்க கறுப்புப் புலி படை உள்ளது. இந்த படையினர் கடுமையாக பயிற்சி பெற்றவர்கள் பிரபாகரனுக்கு மிகவும் விசுவாசமானவர்கள். பிரபாகரனை பிடிக்க வேண்டுமானால் இவர்களை வீழ்த்திவிட்டுதான் பிடிக்க முடியும்.

அதிவேக நவீன படகு மூலம் பிரபாகரன் முல்லைத்தீவிலிருந்து தப்பி நடுக்கடலில் உள்ள கப்பலுக்குச் செல்ல முடியும் என்று இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா ஏற்கெனவே கூறியிருந்தார்.

ஆனால் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புக்கும் விஸ்வமேட்டுக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் அதி பாதாள அறையில் பிரபாகரன் தங்கியிருக்கக் கூடும் என்று இராணுவ அதிகாரிகள் சிலர் கருதுகின்றனர்.

தனது இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிக்காதவாறு அவர் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார் என்று கருதுகின்றனர். அவர் தப்பியிருக்க வழியில்லை. முல்லைத்தீவில் 30 கி.மீ. பரப்பளவில்தான் அவர் பதுங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தும் இராணுவ அதிகாரிகள் மத்தியில் உள்ளது.

பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ விடுதலைப் புலிகளின் இயக்க வரலாறு முடிவுரை எழுதப்பட்டுவிடும் என்று இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.

பிரபாகரன் மட்டுமின்றி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைப் பிடிக்கவும் இராணுவம் உஷார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில், "இலங்கை ராணுவம் வெற்றியின் விளிம்பில் இருக்கிறது. விடுதலைப்புலிகள் சரண் அடைவது தவிர, வேறு எந்த பேச்சுக்கும் இடம் இல்லை. பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க, அந்த நாடு கோரிக்கை விடுத்தால் பரிசீலிப்போம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.

தற்போதுள்ள நிலவரம் பற்றி, இலங்கை ராணுவ செயலாளர் கோதபயா ராஜபக்சே கூறியதாவது:-

பிரபாகரன், இதுவரை இலங்கையை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றால், அவரை விரைவில் பிடித்து விடுவோம்.

பிரபாகரனை பிடிக்க விசேஷ படை அமைக்கப்பட்டு உள்ளது. முல்லைத்தீவை சுற்றிலும் 7 படைப்பிரிவினர் சுற்றி வளைத்து முன்னேறுகிறார்கள். பிரபாகரன் இருக்கும் இடம் அறியப்பட்டால், உடனே அந்த இடத்தில் பாராசூட் வீரர்களை இறக்க விமானப்படையின் விமானங்கள் தயாராக உள்ளன.

அவரை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வேவு பார்க்கும் விமானங்களும், செயற்கைகோள் மூலம் இயங்கும் கருவிகளும், ரேடார் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவர் தங்கி இருந்த 2 பாதாள அறைகள் பிடிபட்டு உள்ளன. இது போன்று மேலும் சில இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இவ்வாறு ராணுவ செயலாளர் கூறினார்.

"வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு, பிரபாகரன் விரைவு படகில் சென்று, அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பலில் ஏறி தப்பி செல்லவும் வாய்ப்பு உண்டு" என்று ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,"விடுதலைப்புலிகள் தற்போது 1,600 பேர் மட்டும் இருப்பதாக உறுதியான தகவல் வந்து இருக்கிறது" என்றார்.

Last update : 21-01-2009 04:16

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் இப்படியான கருத்துக்கள், தமிழ் மக்களை அச்சமுறவைப்பதுடன், சோர்வடைய வைக்கும் நோக்கம் கொண்டவை. இதன் மூலம் தமிழ்மக்களைத் தளர்வடைய வைக்கலாம் என எதிர்பார்க்கின்றார்கள்.

ஆனால், இந்த நேரத்தில் நாம் எதிரியின் சவால்களை முறியடிக்க ஒன்றிணைய வேண்டியதே அவசியம். இப்படி ஒரு சவாலை எதிரி விடும்போது, அவனைத் தோற்கடிக்கத் தலைவர் கூட ஒன்றிணைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் செவ்வாய்க் கிரகத்துக்கு தப்பி ஓடிவிட்டார் என்று சொன்னாலும் சொல்லுவாங்கள்

இவர்களின் இப்படியான கருத்துக்கள், தமிழ் மக்களை அச்சமுறவைப்பதுடன், சோர்வடைய வைக்கும் நோக்கம் கொண்டவை. இதன் மூலம் தமிழ்மக்களைத் தளர்வடைய வைக்கலாம் என எதிர்பார்க்கின்றார்கள்.

ஆனால், இந்த நேரத்தில் நாம் எதிரியின் சவால்களை முறியடிக்க ஒன்றிணைய வேண்டியதே அவசியம். இப்படி ஒரு சவாலை எதிரி விடும்போது, அவனைத் தோற்கடிக்கத் தலைவர் கூட ஒன்றிணைவோம்.

உண்மை!

இந்த மனோவியல் யுத்தத்திலாவது தமிழர்கள் மனம் தளர்ந்து போகமாட்டார்களா என்று மகிந்தர் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலைவதன் காரணம் தலைவரை ஒருநாளும் சிங்களம் இராணூவ ரீதீயாக வெல்ல முடியாது என்னும் உண்மை மகிந்தருக்கு உறைக்க தொடங்கி இருப்பது தான்!

தம்பி உடையான் சிங்கள படைக்கஞ்சான்!

நீங்கள் தோள்கொடுத்தால் மகிந்தனின் வாலறுப்பான்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை!

இந்த மனோவியல் யுத்தத்திலாவது தமிழர்கள் மனம் தளர்ந்து போகமாட்டார்களா என்று மகிந்தர் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலைவதன் காரணம் தலைவரை ஒருநாளும் சிங்களம் இராணூவ ரீதீயாக வெல்ல முடியாது என்னும் உண்மை மகிந்தருக்கு உறைக்க தொடங்கி இருப்பது தான்!

தம்பி உடையான் சிங்கள படைக்கஞ்சான்!

நீங்கள் தோள்கொடுத்தால் மகிந்தனின் வாலறுப்பான்!

:rolleyes:

அட என்னப்பா இது மனோவியல் யுத்தம் மனோவியல் யுத்தம் எண்டு பயப்பிடுத்திறீங்கள் இதைப் பாத்தா எங்களுக்கு பயம் வரேல்லை சிரிப்புத் தான் வருது :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை சொல்லக்கூடாதென ஊடங்கங்களை ஊமையாக்கிய பின் இப்படியெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.