Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்

Featured Replies

பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்..

வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.

  • Replies 105
  • Views 61.2k
  • Created
  • Last Reply

பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்..

வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.

நன்றி: நிதர்சனம்

http://www.nitharsanam.com/?art=26840

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கல்மடு குளம் வாவி அனைக்கட்டு புலிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாக பாதுகாப்பு இனையத்தளத்தினை ஆதாரம் காட்டி சக்தி வானொலி செய்தி வெளியிள்ளது.இதனால் வெள்ளம் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டதாக தகவல்கள் உலாவுது!! உண்மையா?????

  • கருத்துக்கள உறவுகள்

கல்மடுக்குளம் உடைக்கப்பட்டு பரந்தன் முல்லைத்தீவு பாதையில் இராமநாதபுரத்துக்கும் தர்மபுரத்துக்கும் இடையில் வெள்ளம் பாயவிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் சிறிலங்காவில் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

bcsbb455naa0bm45nlz0hl55_20090124_07.jpg

அவர்கள் படத்தில் போட்டு இருப்பது முத்தையன் கட்டு குளம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி உண்மையாக இருந்தால் எமது வீரர்கள் இழப்பின்றி

களமாடி வெற்றிபெற வேண்டுவோம்.

சிங்களவனும் வெளிக்கிட்டான் தமிழனை சந்தோச படுத்த.

இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை..உண்

மையானால் மகிழ்ச்சி. இருந்தாலும் நாம் நிதானமாக இருக்கவேண்டிய நேரம் இது.

களமாடும் வேங்கைகளுக்கும் உறுதுணையாகவுள்ள வன்னி உதிர உறவுகளுக்கும் எமது அன்பு கலந்த வாழ்த்துக்கள்.

* வதா *

:Dகுளக்கட்டு உடைக்கப்ட்டது உண்மை. ஆனால் சரியான தகவல்கள் இதுவரை வரவில்லை. தமிழ்நெற் கூட இதுபற்றி இதுவரை ஒன்றும் தெரிவிக்கவில்லையே. எனவே சரியான தகவல்கள் வரும்வரை பொறுத்திருப்பதே நல்லது. :(
  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இது உண்மை வசி...

இப்படித் தொடர்ந்து பொதுமக்கள் காயமுற்றால் மருத்துவ சேவை வழங்கவே முடியாது போய்விடும். எம் மக்களைக் காப்பாற்ற அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது மீண்டும் பீரங்கித் தாக்குதல்: வன்னியில் இன்று 10 தமிழர்கள் படுகொலை; 26 சிறுவர்கள் உட்பட 114 பேர் படுகாயம்

இதில் 26 பேர் குழந்தைகள். நாங்கள் வெறுமனே வெற்றிச் செய்திகளுக்கு மட்டுமே நின்று ஆர்ப்பாரிப்பது எம் கடமையை நிறைவு செய்து விடுமா?? நிதர்சனம்காரரைகன் கண்டால் செருப்பால் அடிப்பேன். தேவையில்லாத வேலைகளைச் செய்வதற்கு...

எதிரி அழிய வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் அதைப் பற்றி ஆர்ப்பாரிப்பது எம் கடமையல்ல

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இது உண்மை வசி...

இப்படித் தொடர்ந்து பொதுமக்கள் காயமுற்றால் மருத்துவ சேவை வழங்கவே முடியாது போய்விடும். எம் மக்களைக் காப்பாற்ற அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

இதில் 26 பேர் குழந்தைகள். நாங்கள் வெறுமனே வெற்றிச் செய்திகளுக்கு மட்டுமே நின்று ஆர்ப்பாரிப்பது எம் கடமையை நிறைவு செய்து விடுமா?? நிதர்சனம்காரரைகன் கண்டால் செருப்பால் அடிப்பேன். தேவையில்லாத வேலைகளைச் செய்வதற்கு...

எதிரி அழிய வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் அதைப் பற்றி ஆர்ப்பாரிப்பது எம் கடமையல்ல

உண்மையாகவா நான் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சோட செய்தி பார்த்தனானே

குளக்கட்டு உடைக்கப்பட்டதென்று போட்டிருப்பார்கள். இவ்வளவு இராணுவத்தினர் இறந்தார்கள் என்றுமா போட்டிருக்கின்றார்கள் ?? :D:(

சிறீலங்கா கண்டனம் தெரிவிச்சிருக்காம்

1000 மேற்பட்ட படையினர் பலி இந்த ஆண்டின் பெரும் மனித அவலம்

இரணைமடு குளத்துக்கு வடகிழக்காக உள்ள மிகப்பெரும் அணைக்கட்டுகளில் ஒன்றான கல்மடு அணைக்கட்டின் ஒரு பகுதியினை தமிழீழ விடுதலைப்புலிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து வெடிக்க வைத்ததன் காரணமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதான வீதியை நோக்கியிருந்த கல்மடுகுளத்தின் மிகப்பெரும் அணைக்கட்டு கதவே இவ்வாறு குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்தன.

இந்த கதவு தகர்;க்கப்பட்டதும் சுனாமி போன்ற பேரலை படையினர் முன்நகர்வை மேற்கொண்ட பகுதி நோக்கி அடித்துச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

கொடுக்கவேண்டியவைகளையும் விரைவுபடுத்துங்கள்

தயவு செய்து அங்கு முன்னோக்கி பாயவேண்டுமென்றால் இங்கும் நீங்கள் முன்னோக்கி நகர்ந்தால் மட்டுமே வெற்றி நிரந்தரம்........

கனடா C M R வானொலியிலும் கூறினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கல்மடுப் பகுதியில் பாரிய இழப்புக்களை சிறிலங்கா இராணுவம் சந்தித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்குமிடையில் பாரிய மோதல்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்திருப்பதாக ஊர்ஜீதப் படுத்தப் படாத ஆரம்பகட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கல்மடுக்குளத்தை உடைத்து விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் பெரும்தொகையான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குளம் உடைக்கப்பட்டுள்ளதை சிறிலங்கா இராணுவத் தரப்பினர் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

இந்தச் செய்தி எழுதப்படுவம்வரை இறந்தவர்களின் தொகை குறித்து எதுவும் உறுதிப்படுத்த முடியவில்லை.

-தமிழ்கனேடியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பீ.சி

இப்பொழுதைய நேரச்செய்தியிலும் எதுவும் சொல்லவில்லை

ஐரோப்பியநேரம்19.00

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் புலம்பெயர் தமிழரின் ஆதரவு போதாமைதான் காரணம்

கொடுக்கவேண்டியவைகளை நாம் கொடுத்திருந்தால்

குளத்தை திறந்துதான் கொளுத்தவேணும் என்றில்லை............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டுகளை போட்டு குடும்பம் குடும்பமாக எமது மக்களை கொன்று குவிப்பது நியாயம் என்றால் இந்த செய்தி கேட்டு இங்க மக்கள் மகிழ்ந்ததும் நியாயம்தான்.

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

இதேவேளை இந்த தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

இதேவேளை இந்த தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளை போடேக்க பாத்து போடுங்கோ.. இந்த செய்திகள்ள எங்கட மக்கள் படுற அவலங்களை மறக்காம இருந்த சரி..நடகட்டும் நடக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கல்மடுக்குள அணைக்கட்டை இன்று காலை விடுதலைப்புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளமையினால், பரந்தன் பூநகரி பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படையினரின் நகர்வை தடுப்பதற்காக அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை கொண்டு கல்மடுக்குள அணைக்கட்டை புலிகள் தகர்த்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்னியில் உள்ள கல்மடுக்குள அணைக்கட்டு விடுதலைப்புலிகளினால் திட்டமிட்டு தகர்க்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி கூறியுள்ளதாக வேறொரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

எனினும் பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புபட்ட செய்திகள்

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

  • கருத்துக்கள உறவுகள்

குளம் தகர்ப்பால்.... என்ற செய்தியைச் சிறிலங்கா அரசு வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் கொண்டு செல்ல முயலும் என்பதைக் குறித்தவர்கள் அவதானமானக இருக்க வேண்டும். ஒரு யுத்த அரங்கில் அப்படிச் செய்வது தொடர்பான செய்தி பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது குறித்து பொறுப்புள்ள ஊடகவியளார்கள் கவனிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.