Jump to content

மிஞ்சியிருப்போரையும் இழப்போமா இல்லை....?


Recommended Posts

இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....?

(11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை)

பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப்

பதுங்குளி வாசலிலும்

பாதையோரச் சகதியிலும்

உழன்ற பொழுதுகளில்

உனக்கும் சாவுவரும்

என்றெண்ணியிருப்பாயா ?

நம்பிக்கையறுந்த வாழ்வு

நாளையுனக்கு இல்லையென்று

எப்போதாவது எண்ணியிருந்தாயா ?

எங்களைப்போல உனது மகளும்

மனைவியும் அம்மாவும் அக்காவும்

மருமக்களும் பற்றித்தானே

மனசுக்குள் அழுதிருப்பாய் ?

சாவரும் நாளின் முன்னிரவு

உனக்குச் சாவு நாளையென்று

சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ?

போரின் கொடிய வாய்க்குள்

போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ?

பாழும் பொஸ்பரஸ் குண்டுகள்

உன்மேல் வீழும்வரை உனக்கு எந்த

விபரீதமும் தெரிந்திருக்காது அல்லவா ?

ஒருவயது மகளும்

உன்னையே நம்பிய அம்மாவும்

உன் அன்பினியவளும்

மட்டும்தானே - உன்

மனதில் நின்றிருப்பர்.

செத்து நீ கிடந்த தெருவில்

உனைப்பார்க்கவே முடியாமல்

யாவரும் தாண்டியோடினராம்....

பின் வந்து பார்த்த போது

குருதிச் சேற்றில் நீ

முடிந்து மணிகள் ஆகியிருந்ததாம் ?

சுண்ணமிடிக்கச் சுடுகாடு கொண்டு செல்ல

உறவு கூடி ஒப்பாரி வைத்துன்

இழப்பின் வலி குறைக்க

அவகாசமில்லாமல் ஐயனே

அருகில் மண்கிண்டி

அப்படியே புதைத்துவிட்டு

உறவெல்லாம் திசைக்கொன்றாய்

சிதறியதாம்....

ஐயனே !

அந்தக்கணங்கள்

நேரில் நின்றது போல்

நெஞ்சு வலிக்கிறது.

34வயதில் போர் உன் வாழ்வு தின்று

போய்விட்டாய் கோபி.

இங்கு நம் வீடுகளில்

உன் நினைவுகளில்

அழுகையும் ஆற்றுதலில்லாத்

துயரமுமாய்....

மிஞ்சியிருப்போரையும்

இழப்போமா இல்லை

உயிருடன் பார்ப்போமா ?

15.02.09

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கும் விலைகள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது எத்தனை உயிர்கள் :mellow::lol:

Link to comment
Share on other sites

மரணத்தின் கடைசித்துளிகளில் என்ன எண்ணியிருப்பார் என்று நினைக்கவே மனதை பிசைகிறது.......... :)

கடைசித்துளிகள் யாருமற்று அனாதையாய் வீதியில் இறக்கும் கொடுமை என்னென்ன அவன் மனதில் உதித்திருக்குமோ ? தமிழன் விதியிதுவென்று எழுதப்படாத சட்டமாய்ப் போயிற்று எங்கள் வதி. :)

கொடுக்கும் விலைகள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது எத்தனை உயிர்கள் :(:(

கொடியவெறி அடங்காமல் கொத்தணிக்குண்டுகளைக் கொட்டிக் கொள்கிறான் பகைவன். என்ன சொல்ல ? இந்தவிதி மாறாதா ???????????

Link to comment
Share on other sites

எப்ப எங்களுக்கு விடிவு :icon_idea::)

இதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறோம். விடியுமென்ற நம்பிக்கைகள் இன்னும் இருக்கிறது.

இதயத்தில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் கவிதை...

இவன் நினைவில் அழுவதா இன்னும் எவர் உயிர் பிரிந்திடுமோ என ஏங்குவதா புரியவில்லை ? தொலைபேசிகள் அழைத்தால் உயிர் வலிக்கிறது. யாரைக்கொன்ற செய்தி வருமோ என்ற ஏக்கம் :D

Link to comment
Share on other sites

கவிதை நெஞ்சை பிழிகிறது. நாளொன்றுக்கு ஐந்தாறாக கொல்லப்பட்ட எம்மக்கள் என்று நூறு எனுமளவிற்கு கூடிவிட்டது. வன்னியில் ஒருவரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

கவிதை நெஞ்சை பிழிகிறது. நாளொன்றுக்கு ஐந்தாறாக கொல்லப்பட்ட எம்மக்கள் என்று நூறு எனுமளவிற்கு கூடிவிட்டது. வன்னியில் ஒருவரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

சாவுகளையும் துயரங்களையும் இடையிடை சில தொடர்புகள் சொல்லிவிடுகின்றன. இழப்புக்கள் எங்களைத் துரத்தியபடிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பின் வலியை எடுத்து வந்த கவிதை கண்டு எம் ஒவ்வொருவரது இதயத்திலும் இரத்தம் கசிகிறது. எம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்

Link to comment
Share on other sites

  • 4 years later...

ak_zps61b8b11e.png

 

புஸ்பநாதன் ஜெயகாந்(கோபி)11.02.2009 அன்று எறிகணைவீச்சில் உயிரிழந்தார். இன்று 5ம் ஆண்டு நினைவுநாள்.

 

5ஆண்டு நினைவு நாளின்று எங்கள் உயிரறுந்த பொழுதின் நினைவும் இன்று....!  உனது மகள் இன்று உன்னைப்போலவே உலகை வெல்லும் சக்தியாய் வளர்கிறாள்.

Link to comment
Share on other sites

மறக்க நினைத்தாலும் முடியவில்லை. இறக்குமட்டும் மாறாத வலி. மாற்றுவதற்கு கையிலேயே மருந்து உண்டு. மருந்தை வாய்க்குக் கொண்டுசெல்வதற்கு, ஒன்றுசேர மறுக்கும் விரல்கள் மோதிரங்கள் தேடுகின்றன. :(

 

கோபிக்கு அஞ்சலிகள்!!

Link to comment
Share on other sites

மறக்க நினைத்தாலும் முடியவில்லை. இறக்குமட்டும் மாறாத வலி. மாற்றுவதற்கு கையிலேயே மருந்து உண்டு. மருந்தை வாய்க்குக் கொண்டுசெல்வதற்கு, ஒன்றுசேர மறுக்கும் விரல்கள் மோதிரங்கள் தேடுகின்றன. :(

 

கோபிக்கு அஞ்சலிகள்!!

இந்த அவலமான இழப்புகளிலிருந்து மீள்வது ஒவ்வொருவரின் மரணத்தின் பின்னரேதான். இட்ட விதி இதுவாய் போனது என்ன செய்வோம். ஈரவிழி கசிய இழந்த உயிர்களின் நினைவுகளைச் சுமப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி பதவி, பிபிசி நியூஸ், குமாசி 3 மே 2024 பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்ற 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவை கானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 32 கலைப் பொருட்களைக் காண கானா மக்கள் அங்கு பெருங்கூட்டமாகத் திரண்டனர். "இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது," என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு கூறினார். இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை. அசான்டே அரசர், அல்லது அசான்டேஹேன் (Asantehene) என்னும் பதவி பாரம்பரிய அதிகாரத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடத்தில் அவரது முன்னோடிகளின் ஆன்ம பலம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவரது ராஜ்ஜியம் தற்போது கானாவின் நவீன ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஓய்வுபெற்ற காவல்துறை ஆணையரும், பெருமைக்குரிய அசான்டேவாசியுமான ஹென்றி அமங்க்வாடியா, ஆரவாரமான பறை ஓசைக்கு மத்தியில், “எங்கள் கெளரவம் மீட்டெடுக்கப்பட்டது,” என்று பிபிசியிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.   'கறை படிந்த வரலாறு' பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது), தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது) வழங்கப்பட்டது. ஆனால் தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள். விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 17 கலைப் பொருட்களை கானாவுக்கு கடனாக வழங்கியுள்ளது, மீதமுள்ள 15 கலைப் பொருட்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை. கானா தேசத்திற்குள் கலைப் பொருட்கள் மீண்டும் வந்திருக்கும் அதே நேரம் அசான்டேஹேனின் வெள்ளி விழா கொண்டாட்டமும் நடக்கிறது. "கானாவின் `அரச குடும்ப நகைகள்' என விவரிக்கப்படும் சில கலைப் பொருட்கள், 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அசான்டே போர்களின்போது கொள்ளையடிக்கப்பட்டன, இதில் 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்கெண்டி போரும் அடங்கும். மேலும் தங்க வீணை (சாங்குவோ) போன்ற பிற கலைப் பொருட்கள் 1817இல் ஒரு பிரிட்டிஷ் தூதருக்கு விருப்பத்துடன் வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,AFP "இந்தக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தயிருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றபோதிலும், இதைச் சுற்றியுள்ள வரலாறு மிகவும் வேதனையான ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஏகாதிபத்திய மோதல் மற்றும் காலனித்துவம் கொடுத்த காயங்களின் வடுக்களைச் சுமந்திருக்கும் கறை படிந்த வரலாறு அது" என்று இந்த விழாவிற்காக குமாசி வந்திருந்த விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் டிரிஸ்டம் ஹன்ட் கூறினார். கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கலைப் பொருட்களில் அரச வாள், தங்க அமைதிக் கோல் மற்றும் அரசரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தப் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அணியும் தங்கப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும். "இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளன. மேலும் அவை குமாசிக்கு கொண்டு வரப்பட்டது கலாசார பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது நல்லிணக்கத்தின் சான்று," என்று டாக்டர் ஹன்ட் கூறினார்.   தீராத சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரம்பரிய உடையில் கானா பெண்கள் கானா கொண்டுவரப்பட்டுள்ள கலைப் பொருட்களில் "இம்போம்போம்சுவோ (mpompomsuo)" என்று அழைக்கப்படும் வாள், அசான்டே மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள், அரசருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாள். அரச வரலாற்றாசிரியர் ஓசெய் - போன்சு சஃபோ-கண்டங்கா பிபிசியிடம் பேசுகையில், அசான்டேவில் இருந்து கலைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி, எங்கள் உணர்வு, எங்கள் முழு இருப்பு ஆகியவற்றை இழந்ததாக உணர்ந்தோம்,” என்றார். கலைப் பொருட்கள் மீண்டும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சர்ச்சைக்குரியதும்கூட. பிரிட்டன் சட்டத்தின்கீழ், விக்டோரியா & ஆல்பர்ட், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற தேசிய அருங்காட்சியகங்கள் தங்களுடைய சேகரிப்பில் உள்ள அபகரிக்கப்பட்ட பொருட்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கடன் ஒப்பந்தங்கள், கலைப் பொருட்கள் அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. பிரச்னைக்குரிய கலைப் பொருட்கள் மீது உரிமை கோரும் சில நாடுகள், இதுபோன்ற கடன்கள் பிரிட்டனின் உரிமையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர். கானா மக்களில் பலர் இந்தக் கலைப் பொருட்கள் நிரந்தரமாக நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்தப் புதிய கலைப் பொருட்களைக் கடனாக வழங்கும் செயல்பாடு, பிரிட்டிஷ் சட்டக் கட்டுப்பாடுகளைக் கடக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற வரலாற்று கலைப் பொருட்கள் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருமாறு ஆப்பிரிக்க நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன. 'இருண்ட காலனித்துவ வரலாற்றை' கையாள்வதில் இது ஒரு படி என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cp4gnpnv2gpo
    • சொர்க்க புரியிலை ..விக்கிறது சகஜமப்பா...பின்னர் திவாலாகிவிட்டதென்று கரணமடித்து..கடன்வாங்கி ..திரும்பவும் விற்பினம் ..அட டாக்டர் பையன்களா  ..விட்டுத்தள்ளுங்க..
    • இதுவும் ஒருவகை உருவக்கேலிதான். அவரது மீசை அவருக்கு மூக்கரிப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.
    • மெரினா கடற்கரையிலும் தமிழகத்தை ஆட்சி செய்த சிலர் அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் சமாதியில் ஈ காக்காவுக்கு கூட உணவு போட யாரும் இல்லை. ஆனால் ஏழைகளின் மனசை கவர்ந்த கப்டனின் சமாதியில் பல்லாயிரக்கணக்கானோர் பசியாறுகின்றனர். மீம்ஸ்களில் அதிகம் நையாண்டி செய்யப்பட்டவர்களில் ஒருவர் விஜயகாந்த். ஆனால் அவர் தான் பலரின் பசியை ஆற்றி இருக்கின்றார். அதை அவர் வாழ்ந்த காலத்தில் கொண்டாட எவரும் இருக்கவில்லை..  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.