Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் புலிகளின் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது குறிப்பைத் தயவு செய்து மதவாதம் ஆக்க வேண்டாம். 25-6-2006 எழுதி http://sooriyan.com/index.php?option=conte...212&Itemid=, http://www.tamilbrisbane.com/content/view/111/1/ ஆகிய இணையத்தளத் தொடர்புகளில் வெளியான கட்டுரையை இணைக்கிறேன்:

மயானங்கள் - புதைகுழிகள் - துயிலும் இல்லங்கள்;

புனிதன்

இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடங்கள் என்ற வரையில் மயானங்கள் - புதைகுழிகள் - துயிலும் இல்லங்கள் மூன்றுக்கும் ஒரே அர்த்தம்தான். ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவம் உடையவை. அவைகளின் தாக்கங்களும் வேறுபட்டவை.

மயானங்கள்

இயற்கையாகவோ அன்றி இயல்பான சூழ்நிலையில் அனர்த்தமாகவோ இறந்தவரை அடக்கம் செய்யும் இடம் அல்லது ஈமக்கிரியைகள் செய்யும் இடம் மயானம். தீயிட்ட உடலின் சாம்பலை கடலில் கரைத்து இயற்கையுடன் இணைப்பது, அடக்கம் செய்த இடத்தில் சமாதியோ அல்லது சிலுவையோ அமைத்து திவசங்களின் போது அந்த இடத்தை கோயிலாகக் காண்பது, இஸ்லாமிய மதத்தவர் போல ஒன்றுமே நிறுவாமல் இயற்கையுடன் இணைப்பது - பள்ளிவாசலில் சிலைகள் படங்கள் எதுவும் இல்லை - அனைத்துமே இயற்கையுடன் - இறைவனுடன் - உடலைச் சங்கமமாக்கும் சம்பிரதாயம். மரபு. தமிழினத்தில் பல மதங்கள் இருந்தாலும் அவை யாவும் இச் சமய தத்துவத்தில் ஒன்றாக இருக்கின்றன.

புதைகுழிகள்

போர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்குச் சாசனமான, 'ஜெனீவா ஒப்பந்தம்', இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்துலக நாடுகளாலும் ஏற்றுக் கைச்சாத்திடப் பட்டது. இதில் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், அகதிமுகாம்கள், வழிபாட்டுத் தலங்கள், போன்ற பல தாக்கப்படக் கூடாதவையாகவும், பொதுமக்கள், உதவிநிறுவனத்தினர், நோயாளிகள், போன்ற பலர் தாக்கப்படக் கூடாதவர்களாகவும் வகைப் படுத்தி விதிகளாக்கப் பட்டுள்ளன. போர்க் கைதிகள் எவ்வாறு நடத்தப் படவேண்டும் என்பது கூட விதியாக்கப் பட்டுள்ளது. இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் உலகில் கடந்த 50 ஆண்டுகளாகச் தம்மை ஆளும் அரசினாலும் மற்றவர்களாலும் சந்தித்த, இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கிற, ஒரே இனம் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இலங்கைத் தமிழினம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் (Guinness Book of Records) இடம் பெறவேண்டும். இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் செய்தவர்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து - பூசி மெழுகி - உடல் அடக்கம் செய்யும் இடம்தான் புதைகுழிகள். துரையப்பா விளையாட்டரங்கு, செம்மணி, கைதடி இன்னும் எத்தனையோ? என்றோ ஒருநாள் இவை அனைத்தும் தோண்டப்படும். அன்று உண்மை அம்பலமாகும். மயானத்துக்குப் போனவர்கள் நாலு பேருக்கு நன்றி சொன்னால் போதும். ஆனால் புதைகுழிக்குள் போனவர்கள் படைப் பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரம் இட்டவர்களுக்கும் பதில் சொல்லும் வரை போகவே மாட்டார்கள். உடல் தானே புதைக்கப் பட்டது. உயிரில்லையே.

துயிலும் இல்லங்கள்;

போர்கள் நடந்து முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைவுத் தூபிகள் போரிட்ட நாடுகளின் நகரங்களில் முக்கிய இடங்களில் நிறுவப்படும். அவற்றில் போரில் உயிர் நீத்தவர்களின் பட்டியல் செதுக்கப் பட்டிருக்கும். ஆனால் போர் நடந்து முடியும் முன்னரே போரில் மரணித்த மீட்கப் பட்ட வீரர்களின் உடல்களைப் புதைத்தும், உடல்கள் மீட்கப் படாத மரணித்த வீரர்களை நினைத்தும் வேறு வேறு கிராமங்களில் தேர்ந்தெடுத்த இடங்களில் தூபிகளை அமைத்து – எம் வீரர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் இந்த இல்லங்களில் துயில்கிறார்கள். அவர்களின் உடல்கள் இங்கே விதைக்கப் பட்டிருக்கின்றன - என்று ஒரு புதிய சித்தாந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இந்தச் சித்தாந்தத்தை விளக்கிட 'விரித்திட விரித்திடப் பொருள் பலவாய் வெளி வந்தன வந்தன வந்தனவே' என்று பாரதியின் 'தம்பி கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே' பாஞ்சாலி சபத வரிகளிடம் அடி எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

உடல்கள் விதைகள் என்றால் விதைத்த சில நாட்களில் அவை முளைத்துவிடும். அதாவது ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது பல போராளிகளல்லாதோர் மனங்களில் அந்த விதை வேர் விடுகிறது. போராளிகள் முளைப்பார்கள். ஓரணு உயிரினம் பலவாக Multiple Fission of cells என்ற வகையில் பெருகுவது போல. இது மேலே கூறிய சித்தாந்தத்தின் ஒரு விரிவு.

அருச்சுனன் அபிமன்யுவுக்குச் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும்போதே வியூகங்களை உடைத்துச் செல்வதைக் கற்பித்தது போல எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கர்ப்பத்திலேயே ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது, அவன் வித்துடல் துயிலும் இல்லங்களில் தகுந்த மரியாதையுடன் விதைக்கப் படும்பொழுது, பல போராளிகள் வேர் விடுவார்கள். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் வேறொரு விரிவு.

எம் இனவிடுதலைக்கு இந்த இளம் வயதில் போராளிகள் வாழ்வை அனுபவிக்காது உயிரைக் கொடுத்தார்களே! நாம் என்ன செய்தோம்? என்ற வினாவை துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்களின் உயிர்களில் கரைத்து விடுகிறது. வேர் விடுகிறது. போராளிகள் மரணிக்கவில்லை என்றால்தானே மறைந்த போராளிகளின் உயிர்கள் அங்கு செல்பவர்களின் உயிர்களுடன் உறவாடமுடியும். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் பிறிதொரு விரிவு.

இன்றைய இணையத்தளங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப் படுகின்றன என்ற செய்தியை வாசித்தேன். ஒரு புறம் கோயில்கள் இடிக்கப் படுகின்றன என்ற வேதனை. மறுபுறம் இச் செய்கையின் விளைவு செய்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே என்ற அவர்களின் அறியாமையைப் பார்த்த பரிதாபம். மறைந்த போராளிகளின் விதைகளில் முளைத்த மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்ப்பவை. அந்த மரங்களை வேரோடு சாய்த்தாலும் நிலத்திலிருந்து முழுமையாக பிடுங்கப் படாத தும்பு வேர்களிலிருந்தும் முளைப்பவை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். என்பது பழமொழி. ஆனால் போராளிகளோ இருந்தால் ஆயிரம் பொன். இறந்தால் பல்லாயிரம் பொன். நினைவுகள் சிதைக்கப் பட்டால் கோடி பொன் என்பது புதுமொழி. இல்லை. மேலே கூறிய சித்தாந்தத்தின் இன்னுமொரு விரிவு.

ஒரு கோயில் கட்டுவதன் தாக்கத்தை விட அதை இடிப்பதன் தாக்கம் பல மடங்கு கூடியது. தமிழ் நாடு மாநில முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு கண்ணகி சிலை உடைக்கப் பட்டதன் தாக்கத்தைப் போன்றது. இதற்கு உதாரணமாக குழந்தையின் கையில் கரடிப் பொம்மை (வுநனனல டீநயச) என்று வேறொருவர் கூறியதைக் கூட கலைஞரால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. எப்படி அது செமிக்கும்? இதே நிலையில்தான் ஈழத் தமிழ் நெஞ்சங்கள் 'மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப் படுகின்றன' என்ற செய்தியைக் கேட்டுக் கொதிக்கின்றன.

மீண்டும் அந்த மண் மீட்கப் படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.

மயானங்கள் - புதைகுழிகள் - துயிலும் இல்லங்கள் மூன்றும் வௌ;வேறுதான். துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.

Edited by Punithan

  • Replies 63
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் வான் புலிகள் குண்டுகளை வீசினர்: கொழும்பு இணையத் தளம்

[சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2009, 06:26 பி.ப ஈழம்] [பி.கெளரி]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வான் புலிகள் நடத்திய தாக்குதலின் போது வானூர்திகள் குண்டுகளை வீசிய பின்னர் இலக்கு நோக்கி தற்கொலை தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத் தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வான்படை தலைமையகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதலை நடத்திய வானூர்தியும் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது தாக்குதலை நடத்திய வானூர்தியும் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர் தலா இரண்டு குண்டுகளை வீசியுள்ளன.

வான்படை தலைமையகம் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய வானூர்தி குண்டுகளை வீசிவிட்டு வீழ்ந்து வெடித்துள்ளது.

ஆனால், கட்டுநாயக்க பகுதியில் தாக்குதல் நடத்திய வானூர்தி குண்டுகளை வீசிவிட்டு இலக்கை நோக்க தாழ்வாக பறந்த வேளை படையினரின் பீரங்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளது.

இதனிடையே, இத்தாக்குதலில் வான்படை தலைமையகம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதுடன், அதன் அதிர்வலைகளே இறைவரி திணைக்களத்திற்கும் அதிக சேதங்களை விளைவித்துள்ளது.

வான்படை தலைமையகம் மீதான தாக்குதலில் இரு உயரதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையாக காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்! நீலப்புலிகளுக்கு!!!

candle5le3.gifவரலாற்று நாயகர்களே!, எம் இதயங்களில் என்றும் நீங்கள்!!
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நான் இந்தப்பகுதியில் எழுதிய கருத்தையே நெருடல் இணையத்தளத்தில செய்தியாய் போட்டிருக்கிறார்கள்.சனம் பார்த்துவிட்டு நான்தான் நெருடல் நிருபர் என நினைக்கப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

ர்ழஅந » செய்திகள் » வான் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

வான் கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

21. 02. 2009இ 11:40 செய்திகள் எத்தனை பெறுமதியான சொத்துக்கள் அவர்கள் தமிழரின் உளவுறுதியை வான்வரை உயர்த்தியவர்கள். நம்மிடம் நவீன விமானங்கள் இல்லாததே இவர்களின் இழப்புக்கு காரணம். புலம் பெயர்ந்த தமிழர்களே காலம் அறிந்து செயற்படுவீர்.இந்த அடி ஆக்கிரமிப்பாளர்களுக்கும் புலிகளை அழிக்க நினைப்பவர்களுக்கும் கொடுக்கப்பட்ட நெத்தியடி!!!!!

இதுதான் அது

வீர வணக்கம் !!

Edited by Dash

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.. அர்த்தமுள்ள மரணத்திற்கு முன் தமிழர்களுக்கு எழுதியது மாவீரன் வாசியுங்கள் நன்றி புதினம்..

விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

[சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2009, 09:19 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009

தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009

தமிழீழம்.

அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,

நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.

அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?

உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.

அன்புக்குரிய மக்களே!

எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!

எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?

யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.

அன்புக்குரிய மக்களே!

எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.

அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள

  • கருத்துக்கள உறவுகள்
k.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

இதை முதலில் நாங்கள் நிரூபித்தாக வேண்டும் இந்த புலம்பெயர்ந்த நாடுகளில்

Edited by paavalan

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.!!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நான் இந்தப்பகுதியில் எழுதிய கருத்தையே நெருடல் இணையத்தளத்தில செய்தியாய் போட்டிருக்கிறார்கள்.சனம் பார்த்துவிட்டு நான்தான் நெருடல் நிருபர் என நினைக்கப்போகுது.

முன்பு மின்னல் நகைச்சுவையாக எழுதிய கருத்தொன்றை ஒரு இணையம் செய்தியாக வெளியிட்டு இருந்தது. பல இணையங்கள் ஆர்வக்கோளாறு காரணமாக தீர விசாரிக்காமல் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.