Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைத்தங்கல் முகாங்கள்......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடைத்தங்கல் முகாங்கள்......

கவிதை.....

இடைத்தங்கல் முகாங்களில்

எங்கள் துன்பங்களும் தெரியாமல்

தம் வாழ்வு அங்கே

ஏனென்றும் புரியாமல்

தீராத பசியினிலும்

மணல்வீடு கட்டும் ; நம்

மழலைகளின் முகம் பார்த்தேன்...!

அனைத்து உணர்வுகளும்

அடங்கும் நிலை மரணம்....!

அங்கேயும் அதே நிலைதான்

அதைப் பார்ப்போர்க்கும்

அதே நிலைதான்.....

உயிர்காக்க ஓடிவந்து

உயிர்மட்டும் காத்துவிட்டு

உணர்வெல்லாம் செத்து

உறவெல்லாம் பறிகொடுத்து

உறக்கம் ஏதுமின்றி

ஒவ்வோர் மூலையிலும்

ஒதுங்கிவிட்ட நம்

உறவு கண்டேன்...!

கோத்தபாய வாசகமாய்

தமிழீழ குமரிகளின்

பருவத்தின் அழகுதனை

பார்த்து அனுபவித்து

படுகொலை செய்வதற்கு

பத்திரமாய் முகாமொன்று

அதன் பெயரோ

விசாரணை முகாமென்று....!

இந்து சமுத்திரத்தை

இரத்தத்தால் நிரப்புதற்கு

எம் இளைஞர்களை கொன்றுவிட

இன்னொரு முகாமொன்று.....!

அம்மை வருத்தம் கூட

அவர்களின் செயலென்று

என் மனதில் சந்தேகம்; அதனால்

எழுதுகிறேன் என் கோபம்

உயிரியல் கிருமியினால்

இனப்படுகொலையை நடத்துகிறான்....!

உலகத்தின் பார்வையிலே

அதை இயற்கையென்று சொல்லுகிறான்....!

ஐ. நா பிரதி நிதி வந்தாராம்....!

மக்களின் அவலங்களை பார்த்தாராம்...!

எம்மக்கள் சொன்ன அவலங்களை

எதிரிகள் மொழிபெயர்க்க

அமைதியாக கேட்டாராம்..!

அனைத்தும் கண்துடைப்பு

எம் இனத்தை அழித்துவிட

நடக்கிறது சதியொன்று....!

உடைத்திடுவோம் இச் சதிவலையை

உணர்வுகொண்டு போராடி

சமீப ஒற்றுமையின் அதிர்வலையை

நாம் உணருவது புரியலையா...?

அனைத்து நம் உறவுகளே

மறந்திடுங்கள் நம் வேற்றுமையை

காட்டிடுங்கள் நம் ஒற்றுமையை

உடல்களை எரித்தவர்க்காய்

உருக்கிடுங்கள் நம் உணர்வுகளை....

நாம் சேர்ந்து விட்டால்

வெகு தூரம்; விடுதலைக்காய்

செல்லத்தேவையில்லை நம் பயணம்

பிரசவத்தின் கடைசிவலி

நாம் கண்டுவிட்டோம்

இது நம் இறுதிவலி.....!

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின உணர்வோடு ........தாயக துயர் கண்டு கவி படைத்த இளங் கவியே ,

சொல்ல ஒரு வார்த்தை இல்லை நம் சோதரர் படும் துயரம். கவியில் வந்த சோகமும் ,

படைத்த விதமும் நன்றாக் இருக்கு . என் பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய வாசகமாய்

தமிழீழ குமரிகளின்

பருவத்தின் அழகுதனை

பார்த்து அனுபவித்து

படுகொலை செய்வதற்கு

பத்திரமாய் முகாமொன்று

அதன் பெயரோ

விசாரணை முகாமென்று....!

இந்து சமுத்திரத்தை

இரத்தத்தால் நிரப்புதற்கு

எம் இளைஞர்களை கொன்றுவிட

இன்னொரு முகாமொன்று.....!

உண்மை நிலையை கவிதை வடிவில் வடித்த இளங்கவிக்கு நன்றி. கவிதையின் மேல் இடைத்தங்கல் முகாமின் படம் ஒன்று போடப்பட்டால் கவிதையை இன்னும் மெருகூட்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள், மனதில் தோன்றும் எல்லாவிதமான உணர்வுகளையும் கொன்றுவிட்டு இன்று எல்லோர் மனங்களிலும் மேலோங்கி நிற்கும் ஓர் உணர்வு சோகம்.. விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கம்...

இதன் வெளிப்பாடே இந்தக்கவிதை...

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்ன யோசனை மிக அருமை அதில் எல்லோரும் தெரிந்து கொள்ள மறைமுகமாக ஓர் செய்தியும் அடங்கியுள்ளது. அது என்னவென்றால் நான் இந்த கவிதை எழுதும் போது என் மனதில் மேலோங்கியிருந்த உணர்வு சோகம் அதனாலே இதை எழுதிமுடித்தவுடன் அதை வாசகர்களுக்கு தந்தேன் வேறு ஒன்றையுமே என்னால் சிந்திக்க முடியவில்லை அதாவது அவசர முடிவு எடுப்பவர்களைப்போல. ஆனால் அதை நீங்கள் படித்தபோது நிதான மன நிலையில் இருந்தபடியால் இந்தக்கவிதையின் உணர்வு மக்களிடம் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி அதைத் தடுப்பதற்குரிய முன்னெடுப்புக்களை எடுக்க அதிகமாகத் தூண்டவிக்கும் என்பதை யோசித்திருக்கிறீர்கள்.

இந்தச் செய்தி பலபேரின் சிந்தனைகள் மற்றும் யோசனைகள் ஒன்றுசேர்ந்து எங்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது எந்தத்தடையையும் உடைக்கமுடியும் என்று சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

விரைவில் உங்கல் எண்ணத்தை நிறைவேற்றுகிறேன். மிக்க நன்றி....

இளங்கவி

நல்ல அர்புதமான கவிதை இளங்கவி.. இது கவிதை இல்லை ஒரு மனிதனோட எண்ணம்..அது அப்படியே அழகாய் வடித்து இருக்குறிர்கள்.. உங்களுக்கு எனது பாரட்டுக்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி......

நீங்கள் சொன்னது போல என் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் என்ணங்களை வரிகளால் சொல்லியிருக்கிறேன்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

இடைத்தங்கல் முகாங்கள்......

கவிதை.....

இடைத்தங்கல் முகாங்களில்........

அனைத்து நம் உறவுகளே

மறந்திடுங்கள் நம் வேற்றுமையை

காட்டிடுங்கள் நம் ஒற்றுமையை

உடல்களை எரித்தவர்க்காய்

உருக்கிடுங்கள் நம் உணர்வுகளை....

நாம் சேர்ந்து விட்டால்

வெகு தூரம்; விடுதலைக்காய்

செல்லத்தேவையில்லை நம் பயணம்

பிரசவத்தின் கடைசிவலி

நாம் கண்டுவிட்டோம்

இது நம் இறுதிவலி.....!

இளங்கவி

வார்த்தைகளல்ல ................ உண்மை.

தமிழின ஒற்றுமையொன்றே விடியலுக்கான திறவுகோல். எமது இளையோரை சிதைத்து எம்மினத்தைக் கருவறுத்து மெல்லத்துடைத்தழிக்கிறது சிங்களம். நாமோ இங்கு செயவதறியாது இதயங்கள் ரணமாக ..........

கவிதை மெய்ப்பட உழைப்போமா தமிழர்களே ! உலகத் தமிழர்களே !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர் ஜீ

மிக்க நன்றிகள்...

என்ன தவத்தில் இருந்தீர்களா பல நாட்களாக காணவில்லை..... ஒரேயடியாக உட்காராதீர்கள் உங்களுக்கு தெரியாமலே ஆப்பு வைத்திவிடும் உலகமிது..... :wub::(

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nochchi

நடக்கும் உண்மையைத்தான் என் கவிதையில் சொல்லியிருந்தென். இந்த இனப் படுகொலையை தடுக்க எங்கள் ஒற்றுமையால் தான் முடியும். மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ

மிக்க நன்றிகள்...

என்ன தவத்தில் இருந்தீர்களா பல நாட்களாக காணவில்லை..... ஒரேயடியாக உட்காராதீர்கள் உங்களுக்கு தெரியாமலே ஆப்பு வைத்திவிடும் உலகமிது..... :lol::o

இளங்கவி

எனக்கேயா இளங்கவி கொஞ்சம் கஸ்ரம் தான் சரி ஆட்கள் யார் என்று சொல்லுங்க ஒரு கை பார்ப்போம் :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர் ஜீ

ஆக்களுக்கா பஞ்சம்.....! இல்லை ஆப்புக்குத்தான் பஞ்சமா....? அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டிட்டிவரை ( ஒரு ரைம்ஸ் ) க்காக தமிழனுக்கு ஆப்புவைக்கவென்று பலபேர் திரிகிறார்கள் கன நேரம் உட்காந்தால் எழும்பமுடியாது, மிக அவதானமாக இருக்கவும்.

இளங்கவி

'ilankavi

நியமான உண்மைகளை

உணர்வோடு தந்த வரிகள்

உண்மையில் அற்புதம்

என்று தீரும் இந்த துயரம்

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான கவி வரிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nige

எல்லோரும் நம்பிக்கையுடன் போராடுவோம் விரைவில் எங்கள் துயரம் தீரும் என நம்புவோம்....

மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு....

இளங்கவி

theeya

மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.