Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது தாயை நீங்கள் தீவிரவாதி என்று அழைக்கும் எனது 'தம்பி' அம்மா என்று அழைத்தால் எனது தாயும் தீவிரவாதியா.?

Featured Replies

எனது தாயை நிங்கள் தீவிரவாதி எண்று அழைக்கும் எனது தம்பி அம்மா எண்று அழைத்தால் எனது தாயும் தீவிர வாதியா..?

லண்டனில் நடந்து வரும் போராட்டத்தில் எமது தேசிய கொடியை பறிக்கும் நடவடிக்கையை இங்கிலாந்து காவல்த்துறை செய்து வருகிறது.. புலிச்சின்னம் பொறித்து இருப்பதால் அது தீவிர வாதிகளின் சின்னம் எண்றும் காவல்த்துறையினர் சொல்கின்றனர்.. பல தமிழர்கள் அவர்களுடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்..

எனது கேள்விகள் இவைதான்... இங்கிலாந்தில் மற்றும் அனேக நாடுகளில் இருக்கும் கால்ப்பந்து கழகங்கள் முதல் பிரதேச சபை எல்லாம் கொடிகள் தாங்கி இருக்கும் போது நாங்கள் எங்களுக்காக ஒரு கொடியை வைத்து இருக்க கூடாதா...?

இந்த கொடியை தடை செய்தமைக்கான... ( தேசிய கொடியை) எந்தவிதமான சட்ட பூர்வமான பத்திரங்களையும் காவல்த்துற்றையிடம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்... அந்த சிவப்பு கொடி நடுவே இருக்கும் இலச்சினை புலிகளின் சின்னம் என்பது மட்டுமே அவர்களின் வாதம்... எங்களின் இலச்சினை அது, அந்த இலச்சினை எல்லா ஈழத்தமிழர்களுக்கும் பொதுவானது...

புலிச்சின்னம் பொறித்து "தமிழீழ விடுதலை புலிகள் "எண்று எழுதப்பட்ட சின்னமாக எமது போராளிச் சகோதரர்கள் பாவிப்பதால் அது எனது சின்னம் ஆக மாட்டாதா...?

அதைத்தான் கேட்கிறேன்.... எனது தாய் பெற்ற எனது தம்பி தீவிரவாதி எண்று அழைக்கப்பட்டால் , அந்த தீவிரவாதி( எண்று சொல்லப்படும்) தம்பி அம்மா எண்று எனது அம்மாவை அழைத்தால் எனது தாயும் தீவிரவாதியா...????

..எமது கொடி எமது எழுச்சியின் நிழல்... அது எமது கொடி...

எனது கொடியை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை...

Edited by மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா உமது கருத்தை நானும் வரவேற்கிறேன்

சரியாக சொன்னீர் தயா

  • தொடங்கியவர்

பொலிசாருடன் வாக்கு வாதங்கள் நடக்கின்றது.. அதுக்கு சிலர் தமிழனுக்கு நல்ல பேர் இருக்குதான் அதை கெடுத்து கொள்ள வேண்டாம் எண்று சிலர் அங்கே அறிவுரை சொல்கிறார்கள்...

அந்த நல்ல பேர் இவ்வளவு காலமும் பிரித்தானியாவில் இருந்து ஒரு கிலோ அரிசியை தன்னும் ஈழத்தவருக்கு அனுப்பி வைக்க இல்லை...

இது லண்டன் தமிழர்களின் எழுச்சியை சகித்துக்கொள்ளமுடியாத சிலரின் தூண்டுதல்கள்.

புலியின் முகம் (உண்மையான காட்டு புலியை சொல்கிறேன்) விடுதலைப்புலிகளின் சின்னத்தில் உள்ள புலிபோல இருக்கு என்று

லண்டன் மிருககாட்சி சாலைகளில் உள்ள புலி எல்லாத்தையும் கைது செய்யப் போகினமாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசாருடன் வாக்கு வாதங்கள் நடக்கின்றது.. அதுக்கு சிலர் தமிழனுக்கு நல்ல பேர் இருக்குதான் அதை கெடுத்து கொள்ள வேண்டாம் எண்று சிலர் அங்கே அறிவுரை சொல்கிறார்கள்...

இன்னும் அடிமை புத்தி போகவில்லை. எமது தேசிய கொடி என்று கூட சொல்ல பயப்படுபவர்களுக்கு பிறகு ஏன் நாடு. ?

பொலிசாருடன் வாக்கு வாதங்கள் நடக்கின்றது.. அதுக்கு சிலர் தமிழனுக்கு நல்ல பேர் இருக்குதான் அதை கெடுத்து கொள்ள வேண்டாம் எண்று சிலர் அங்கே அறிவுரை சொல்கிறார்கள்...

அந்த நல்ல பேர் இவ்வளவு காலமும் பிரித்தானியாவில் இருந்து ஒரு கிலோ அரிசியை தன்னும் ஈழத்தவருக்கு அனுப்பி வைக்க இல்லை...

கொடிக்கு தடை என்று சொல்லி முடக்க வைப்பதில் சில சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன. அவர்களின் நோக்கம் இந்த போராட்டத்தை 'புலிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்' என்று மக்கள் போராடுகிறார்கள் என்று காட்டுவதாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதி என அழைக்க படும் எனது தம்பி ......எனது தாயை அம்மா என அழைத்தால்எனது தாயும் தீவிரவாதியா .?............

அவனை தீவிரவாதியாகியது யார் ? ..................

  • கருத்துக்கள உறவுகள்

பிற் பகலில் கொடி பிடிப்பதற்கான தடையை நீக்கி விட்டார்கள்.இனி மேல் நாங்கள் கொடி பிடிக்கலாம் காவல் துறை அனுமதி கொடுத்து விட்டது.

உண்மையில் மகிழ்ச்சியாய் இருக்கிறது. தகவலுக்கு நன்றி ரதி

தயாவின் கருத்தை பார்த்தும் ஒருகணம் குழம்பி விட்டேன் ஆனால் ரதியின் கருத்துக்கு பின் எல்லாம் புரிந்து கொண்டேன்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28979

  • கருத்துக்கள உறவுகள்

தயா , உங்கள் கேள்வி நியாயமானது .

இன்று நான் வசிக்கும் நகரில் திடீர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தோம் .

அதில் வரக்கூடிய சட்டப்பிரச்சினைகளை சமயோசிதமாக தவிர்த்து ,

எங்கள் கவனயீர்ப்பை மக்களிடமும் , குறிப்பிட்ட அரசியல்வாதிகளிடமும் கொண்டு சேர்த்தோம் என்ற பெருமை உள்ளது .

பிற் பகலில் கொடி பிடிப்பதற்கான தடையை நீக்கி விட்டார்கள்.இனி மேல் நாங்கள் கொடி பிடிக்கலாம் காவல் துறை அனுமதி கொடுத்து விட்டது.

இவர்கள் யார் தடை செய்கிறதுக்கு, இந்த பிரித்தானிய ராணியால தானே இப்படி அலைகிறோம் உண்மையில இராணியின் அரண்மனைக்கு முன்னால் நின்று தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.

பறித்த சுதந்திரத்தை மீண்டும் தா என்று பிரித்தானியா விடம் கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.