Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் உயிர்களுக்காக எதைச் செய்யவும் தயார்- ஒபாமாவின் யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் விருப்பம்: செ.பத்மநாதன்

Featured Replies

வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம். எனவே அமெரிக்க அரச தலைவரினால் கூறப்பட்ட வழிகளில் அமைதியை காண்பதற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.

மனிதப் பேரவலத்தை நிறுத்துமாறு அமெரிக்க அரச தலைவர் விடுத்த வேண்டுகோளை விடுதலைப் புலிகள் செவிமடுத்துள்ளனர். அதற்கு அமைவாக செயற்படுவதற்கு இணங்கியுள்ளனர்.

அனைத்துலக சமூகம் நியாயமாகவும் திறந்த மனதுடனும் செயற்பட வேண்டும் என்பதுடன், இரக்கமற்ற முறையில் வன்முறைக்கு இலக்காகும் மக்கள் தொடர்பில் முழுமையான பொறுப்புக்களையும் எடுக்க வேண்டும்.

எமது மக்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர். எமது மக்களின் எதிர்காலம் தொடர்பான முழுப்பொறுப்பையும் அனைத்துலக சமூகம் பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்க அரச தலைவரின் கோரிக்கையை சிறிலங்கா அரசும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன், இரத்தக்களரியை தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அது மேற்கொள்ள வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த 30 வருடங்களாக விடுதலைப் புலிகள் தமது மக்களின் உரிமைக்காக தீவிரமாக போராடி வந்துள்ளனர். அவர்கள் தம்மால் முடிந்தளவுக்கு தமது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

அமெரிக்க அரச தலைவரின் அண்மைய கருத்து எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே எமது மக்களின் நெருக்கடியான இந்த நிலையில் அவர் காத்திரமான பங்களிப்பை ஆற்ற முடியும்.

தற்போதைய மோதல்களை படைத்துறை வழியிலான தீர்வின் மூலம் நிறுத்த முடியாது. எமது மக்களுக்கு தேவையான கௌரவமானதும், சமத்துவமானதுமான இறுதியான தீர்வு அரசியல் வழிமுறைகளின் மூலம் தான் எட்டப்பட முடியும்.

எல்லாத்தரப்பும் உண்மையுடன் நடந்து கொள்ளும் பட்சத்தில் அரசியல் வழிமுறைகளில் இணைந்து கொள்வதில் எமக்குள்ள ஈடுபாடுகளை நாம் ஏற்கனவே வெளிக்காட்டி வந்துள்ளோம்.

அமெரிக்க அரச தலைவரின் வார்த்தைகள் நம்பிக்கை தருவதாக அமைவதனால் நடுநிலையான அனைத்துலக கட்சிகளின் அனுசரணையுடன் அரசியல் நீரோட்டத்தில் விடுதலைப் புலிகள் இணைந்து கொண்டு இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண மீண்டும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தீவில் வாழும் மக்கள் அனைவருக்கும் இரு ஒரு நல்ல சந்தர்ப்பம். நாமும் சிறிலங்கா அரசும் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும்.

அரசின் தற்போதைய நடவடிக்கை மேலும் பல ஆயிரம் மக்களின் படுகொலைகளுக்கே வழிவகுக்கும். அது கௌரவமான தீர்வுக்கு வழிவகுக்கப்போவதில்லை.

எனவே ஓபாமாவினால் கூறப்பட்ட வழிகளில் அமைதியை காண்பதற்கு நாம் எமது ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthinam

வன்னியின் நிலமையானது மிகப்பெரிய ஒரேபோக்கற்ற ஒரு மனிதப் பேரவலம் என்றும், இக்கட்டத்தில் மக்கள்மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ் இரக்கமில்லாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் எதையும் செய்ய தயார் எனவும், விடுதலைப் புலிகளின் வெளிவிகாரப் பொறுப்பாளர், செலவராசா பத்மநாதன், கூறியுள்ளார்.

தாம் ஓபாமாவின் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து எமது மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுளார். இரக்கமும் கண்ணியமும் இல்லாமல் குறிவைக்கப்படும் அப்பாவி மக்களைக் காப்பாற்றும் முழுப்பொறுப்பை சரவதேசச் சமுதாயமானது நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இப்பொழுது எடுக்க வேண்டும் என்றும் பத்மநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஓபாமாவின் நம்பிக்கைச் சொற்கள் தமக்கு ஊக்கமளிப்பதால் இவ் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுடைய ஒரு தீர்வு காணுவதற்கு, நடுநிலையான சர்வதேசக் கட்சிகள் முன்னெடுக்கக்கூடிய ஒரு அரசியல் நடைமுறைக்குள் நுழையும் நிலையில் தாம் உள்ளதாகவும் அவர் கூறினார். ஓபாமா கேட்டுக்கொண்டதுபோல் சமாதானத் தீர்வுக்காக தாம் ஒத்துழைக்கவும் சேர்ந்து வேலை செய்யவும் தயார் என்றும் பத்மநாதன் மேலும் குறிப்பிட்டுளார்

http://www.pathivu.com/news/1855/54/.aspx

நாம் எல்லாரும் இந்தியா எம்மை ஆ.........தரி என்று காட்டுக் கத்தல் கத்தி ஆதரவு கேட்டதிற்கு பதிலாக, அமெரிக்காவின் ஆதரவை இன்று கேட்பது போல் கேட்டிருந்தால் சிலவேளை சில மாற்றங்கள் வந்திருக்குமோ தெரியாது...

எம் எல்லாக் கண்களும் கெட்டுப் போகும் வேளையில் தான் சூரிய உதயம் பற்றிய புதிய சிந்தனைகள் வருகுது

  • கருத்துக்கள உறவுகள்

எம் எல்லாக் கண்களும் கெட்டுப் போகும் வேளையில் தான் சூரிய உதயம் பற்றிய புதிய சிந்தனைகள் வருகுது

இப்பவாவது வருகுதே :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எல்லாரும் இந்தியா எம்மை ஆ.........தரி என்று காட்டுக் கத்தல் கத்தி ஆதரவு கேட்டதிற்கு பதிலாக, அமெரிக்காவின் ஆதரவை இன்று கேட்பது போல் கேட்டிருந்தால் சிலவேளை சில மாற்றங்கள் வந்திருக்குமோ தெரியாது...

எம் எல்லாக் கண்களும் கெட்டுப் போகும் வேளையில் தான் சூரிய உதயம் பற்றிய புதிய சிந்தனைகள் வருகுது

காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் அமெரிக்காவுடன் போவதே அழகு..! :icon_idea:

இது காலங்கடந்த முடிவு என்பது எனது தனிப்பட்ட கருத்து.இந்தியாக்காற நாயளின்ர வாலைப் பிடிக்காம்ல் விட்டு இந்தியா எமக்கு எதிராக செயற்றடத் தொடங்கிய போதே புலிகள் இதைச் செய்திருந்தால் அமெரிக்கா சார்பு நிலை எடுத்திருந்தால் இந்தியா தானாகவே இறங்கி வந்திருக்கும்.நிலமை இவ்வளவு கொடுரம் நிறைந்ததாக இருந்திருக்காது.

இனியாவது இந்தியா எங்கட தொப்புள் கொடி மயிர் மட்டையென்று சொல்லுறத நிப்பாட்டுங்கோ.

இண்டைக்கு எங்கட ஒவ்வொருத்தர் வீட்டிலயும் நடக்கிற செத்த வீட்டுக்கு இந்ந இந்தியாக்காறன் தான் காரணம் என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

எமக்கு நாம் தான் துணை.

மிகவும் சரி. இந்தியா என்ற ஒரு அயல் நாட்டைப் பகைக்காவிட்டாலும் அந்த நாட்டை மீறும் செயற்பாடுகள் செய்யப்படவில்லை.

இருந்தாலும் இது திறக்கப்படப்போகும் பல வழிகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் ஒரு இஸ்ரேலிய நண்பன் உருவானது போல் சீன இந்திய பாகிஸ்தானிய ரஸ்சிய ஈரானிய அரசுகளுடன் ஒட்டி உறவாடும் சிறிலங்காவை வெட்டி இந்து சமுத்திரத்தின் இஸ்ரேலாக தமிழீழம் உருவாகட்டும் தமிழருக்கும் யூதருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. வேற்றுமை அமெரிக்காவை நேச சக்தி ஆக்காததே இப்போது காலம் கனிந்து வரும் போது சரியாக காய்களை நகர்த்தட்டும் அமெரிக்காவை நண்பனாக்கினால் ஐரோப்பாவும் நண்பர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.