Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியா கவிதைகள்

Featured Replies

மறந்துவிட்டாயம்மா...!

marandhuvidai_176.jpg

நானும் கருப்பையில் தான்

கற்பம் தரித்தேன்

என்னையும் பத்து மாதம் தான்

சுமந்து பெற்றாள்

தாய்ப்பால் ஊட்டித்தான்

சீராட்டினாய்

இவர்தான் தந்தை என்றும்

அறிமுகப்படுத்தினாள்

இது ஆண்சாதி என்றும்

இது பெண்சாதி என்றும்

இது தாவரங்கள் என்றும்

இது விலங்கினம் என்றும்

அவள்தான் அன்று இனம்

காட்டினாள்!

ஆனால்...

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்

அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!!

எழுதியவர்: நித்தியா

  • Replies 220
  • Views 28.5k
  • Created
  • Last Reply

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்

அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்

உண்மையான வரிகள்.

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்

அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!!

உண்மைதான் :lol:

அருமையான வரிகள் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வரிகள் நன்றி

-----------------------

jothika

தோèர உன் தாயின் காலத்தில் துரோகம் இல்லை

ஏமாத்து இல்லை நட்பின் அருமை புரிந்த காலம்

துரியோதனனுக்கு நல்லவர்கள் தெரியவில்லை

தருமனுக்கொ கொடியவர்கள் புரியவில்லை

மனது செய்யும் மாயம் தொèர இது

புரிந்து கொண்டால் அது தான் கீதை நண்பா.......

கவிதைக்கு நன்றி இளைஞன். எந்த நித்தியா? யாழ் கள நித்தியாவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நல்ல கவிதை...

ஆனால்...

சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்

அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்

பணம் உறவின் வேடம் என்றும்

மதம் பகையின் தோழன் என்றும்

சாதி காதலின் எதிரி என்றும்

இந்த வரிகள் உண்மையா இருக்கு......

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும். நன்றிகள். மதன், யாழ் களத்தில இருக்கிறது நித்திலாதானே? நித்தியா என்று யாரும் இருக்கிறார்களா?

  • தொடங்கியவர்

நான் ஆண்மகனாய் இருந்திருந்தால்...

sevv_193.jpg

தமிழிலே மோட்சம் கண்டு

என் காதலிக்காக கவி

பல்லாயிரம் பாடி இருப்பேன்!

இவ்வுலகையே போருக்கு

அழைத்து உன் புன்னகைக்காகப்

போராடி இருப்பேன்!

வன்முறையே வேண்டாமெனின்

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து

மகானாக தாரகை உன்

கரம்பற்றி இருப்பேன்!

உன் செவ்வாய் "நீதான் உலகம்" -என்று

ஒருவரி மொழிந்திருந்தால்..

தேவதை உன்னுடன் செவ்வாயில்

குடியேறி இருப்பேன்!

ம்.. ம்.. ம்..

போயும் போயும் -உன்

நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!!

எழுதியவர்: நித்தியா

உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும்

ஏன் அவரே வந்து எழுதாரோ....எழுதினால் பாராட்டாலாம்..இல்ல ஆளைப் பாராட்ட முடியாது....! வரி சுமந்து கருதந்த தமிழுக்கு பாராட்டுக்கள்...! இதையும் அங்கு சேர்த்துவிடுங்கள்..! :wink: :P

  • தொடங்கியவர்

மனு

manu_911.jpg

பேச மொழி இருந்தும்

பேச உதடுகள் இருந்தும்

பேச முடியாத ஊமையாக..

கேட்க பல விடயம் இருந்தும்

கேட்க செவிகள் இருந்தும்

கேட்க முடியாத செவிடாக..

பார்க்க பல வண்ணம் இருந்தும்

பார்க்க கண்கள் இருந்தும்

பார்க்க முடியாத குருடாக..

இரசிக்க பலவகை இருந்தும்

இரசிக்க மனது இருந்தும்

இரசிக்க முடியாத பாவியாக..

இறைவா!

உணர்வு எனும் மனுவை உன்னிடம்

சமர்ப்பிக்கிறேன்..

என்னவன் நினைவுகளை மட்டும் தந்து

நிசமாகவே என்னை

ஊனமுற்றவளாய் இருக்க விடு!!!

எழுதியவர்: நித்தியா

உங்கள் கருத்துக்களுக்கு எனது நன்றிகள்
என்று நித்தியா குறிப்பிடச் சொன்னார். :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. ம்.. ம்..

போயும் போயும் -உன்

நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!!

என்ன இப்ப தான் பெண்கள் என்ன என்னவெல்லாமோ செய்யிறாங்க. இவங்க இதுக்கே தயங்கிறாங்க. :P :wink:

அதானே? அதென்ன பெண்பிறவி

அல்லவா எடுத்திருக்கிறேன்!!! :?: :!:

பெண்களை பெண்களே தாழ்த்திக்கலாமா

நித்தியா? :P :lol:

உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும். நன்றிகள். மதன், யாழ் களத்தில இருக்கிறது நித்திலாதானே? நித்தியா என்று யாரும் இருக்கிறார்களா?

இளைஞன் இதோ

nithiya8vv.png

:roll: :roll: :roll:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

:lol: அருவி...

இப்பொழுதுதான் எழுதப் பழகுகிறார் போல. விரைவில் தானே எழுதுவார் என்று நம்புகிறேன்.

ஒரு மொழி

an_684.jpg

அன்று உன் உதடு உரைந்த

மொழியினையே

செவிமடுத்த என் செவிகள்

இன்று இரங்கியும், தவறிக்கூட

உன் உதடு

ஒரு மொழியேனும்

உரைக்க மாட்டாதா

என தவம் கிடக்கின்றன...!

எழுதியவர்: நித்தியா

  • தொடங்கியவர்

கண்கள்

123333111_763.jpg

என் காதலன்

கண்ணைவிட்டு

ஒருபோதும் நீங்குவதில்லை..

ம்.. ஆமாம்

மிக நுட்பமான வடிவத்தில்

கண்ணோடு மணியானதால்

நான் தவறிக்

கண்ணிமைத்தாலும்

அதனால்

அவன் வருந்துவதில்லை

எழுதியவர்: நித்தியா

  • தொடங்கியவர்

காட்டுப் பூவே

kaadu-poove3_452.jpg

பெயர் அறியாத

அழகான மலரே..

நான் கண்ட மலர்களுக்குள்

நீ மிருதுவான மலர்

என்பதில் கொஞ்சம்கூட

ஐயம் இல்லை

ஆனால்...

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

உன்னைவிட மிகவும்

மிருதுவானவன்

தயவுசெய்து உன்

செருக்கை

விட்டொழி...

எழுதியவர்: நித்தியா

யார் இந்த நித்தியா? :roll:

ம்ம் கவிதைகள் நன்றாக உள்ளன

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

உன்னைவிட மிகவும்

மிருதுவானவன்

தயவுசெய்து உன்

செருக்கை

விட்டொழி...

இந்த வரிகள அழகாக உள்ளன :lol:

யார் இந்த நித்தியா? :roll:

யாரா இருந்தால் உங்களுக்கு என்ன? கவிதையை இரசியுங்கள். :oops: :roll: :P

நான் இளைஞனை கேட்டேன் ரசிகை..உங்களை இல்லை :roll:

பெயர் அறியாத

அழகான மலரே..

நான் கண்ட மலர்களுக்குள்

நீ மிருதுவான மலர்

என்பதில் கொஞ்சம்கூட

ஐயம் இல்லை

ஆனால்...

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

உன்னைவிட மிகவும்

மிருதுவானவன்

தயவுசெய்து உன்

செருக்கை

விட்டொழி...

கவி வரிகள் அருமையாக இருக்கு... நல்லா எழுதுறாங்க ..எல்லாக்கவிதையும் சூப்பர்.. :P

நல்ல கவிதைகள்.

நன்றி இளைஞன், இணைத்ததற்கு.

பாராட்டுக்கள் நித்தியா

கவிதைகளுக்கு நன்றி. விரைவில் அவரே தன்னுடைய கவிதைகள் இணைப்பார் என நம்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.