Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.

Featured Replies

எம் உயிர் மூச்சு தமிழீழம் எம் இலட்சியக் கனவு தமிழீழம். தலைவரின் வழியில் மாவீரரின் காலடித்தடத்தில் எந்த எதிர்ப்பு வந்தாலும் அஞ்சாது தொடர்ந்து நடப்பேன் என இத்தால் உறுதியளிக்கின்றேன்

ஜானா

  • Replies 65
  • Views 7.7k
  • Created
  • Last Reply

மாவீரர்களின் கனவுகள் நனவாகும் வரை,

என்னால் முடிந்த வரை எனது பங்களிப்பை வளங்குவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் எண்ணத்தினை நெஞ்சில் நிறுத்தி விடுதலைப்பாதையில் நடை போடுவோம்.

அவரது எண்ணத்தினை நாம் செயல்படுத்துவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சிய வேங்கைகளின் அணிவகுப்பில் நானும் தயார்

தமிழரின் தாகம் தமிழீழதாயகம் என்று உரத்து உலகின் செவிப்பறைகளில் அறைவோம்!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தாகம் தமிழீழதாயகம்

  • கருத்துக்கள உறவுகள்

அன்று கொல்லப்பட்ட 25 ஆயிரம் பொதுமக்கள் தொடர்பாக எல்லோரும் மறந்து விடடீர்களா? தலைவர் வழி நடப்போம் என்பதே மக்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுப்பதில் இருந்து தாN ஆரம்பிக்கின்றது. தலைவர் பற்றிய ஆராட்சியை விட்டு விட்டு இலங்கையரச பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம்.

இப்போது இந்த நேரத்தில் நாங்கள் ஒன்றுமே செய்யாமல் விட்டால் என்றைக்குமே எமக்கு எவ்வித பலனுமே கிடைக்கப் போவதில்லை...

எம் போராட்டத்தில் இழந்தது எல்லாமே வீணாகி விடும்...

ஆராச்சியும், அஞ்சலியும் நாற்காலி மனிதர்களுக்கு அடுத்த கட்ட நகர்வுக்கு தேவையா இருக்காம் நாசம் பண்ணிவர்களுக்கு நாற்காலி தேவையாக இருக்க மேலும் நாசம் பண்ண. நம்பிக்கை துரோகிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீத்திற்காக எனது ஆதரவும் பங்களிப்பும் என்றும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழமே எமது உயிர்மூச்சு! எமது தாய்மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தளராது எனது பங்களிப்பும் தொடரும் என்று உறுதிமொழிகிறேன், இது விதைக்கப்பட்டுள்ள எமது மாவீரர்களின் மேல் சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

Edited by Tigerblade

தறிக்கத் தறிக்க தழைப்பவர்கள் தமிழர். வேறெந்த இனமும் இவ்வளவு தூரத்துக்கு தாக்குப் பிடித்திருக்க முடியுமா என்பது ஐயமே. ஈழத்தமிழினத்தின் சுயபாதுகாப்புக்கு தமிழீழத் தாயகமே என்ற தமிழர்களின் ஏகோபித்த முடிவு இன்று மீளவும் வலுப் பெறுகிறது. தமிழினம் விடுதலை பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

எங்கள் நெஞ்சைத் தொடும் உணர்வுப் பாடல்களைப் படித்துப் பாருங்கள்.

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை

முடிசூடும் தமிழ் மீது உறுதி.

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்

வரலாறு மீதிலும் உறுதி.

விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை

வீரர்கள் மீதிலும் உறுதி.

இழிவாக வாழோம், தமிழீழப் போரில்

இனிமேலும் ஓயோம் உறுதி.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே! இங்கு

கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?

குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் - அன்று

செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

வல்லமை தாருமென்றெண்ணி

உம்வாசலில் வந்து உமை வணங்குகின்றோம்.

உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு

சத்தியம் செய்கின்றோம்.

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்

சந்ததி தூங்காது - எங்கள்

தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின்

தாகங்கள் தீராது.

எங்கே எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது

உரைத்தது தமிழீழம் - அதை

நிரைநிரையாகவே நின்றினி விரைவினில்

நிச்சயம் எடுத்தாள்வோம்.

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனியர(சு) என்றிடுவோம் - எந்த

நிலைவரும் போதிலும் நிமிர்வோம், உங்கள்

நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

புதுவை இரத்தினதுரை

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து

பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்

கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து

கவலை மிகுந்தாலும் - வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து

கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்

தொட்டு வளர்த்த தமிழ்மகளின்

துயர் துடைக்க மறப்பேனா?

உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன்.

Edited by Small Point

கொண்ட லட்சியத்திலும் கொள்கையினிலும் குன்றிடாது எம்மண் விடிவிற்காய் தம் உயிரை துச்சமென மதித்து இறுதிவரை எம் மண்ணிற்காய் வாழ்ந்து இன்று மாவீரர் கல்லறைகளில் உறங்கும் அந்த காவல் தெய்வங்களின் மீது சத்தியம். எத்தடை வரினும் என் தாயக போராட்டம் தளராது தொய்யாது முன்னெடுக்க உறுதுணையாய் இருப்பேன். என் பிள்ளைக்கும் அந்த உணர்வை ஊட்டுவிப்பேன். உடலில் உயிர் இருக்கும்வரை தலைவனின் பாதையில் நான் நடப்பேன். இது சத்தியம். - ந.பரணீதரன்

Edited by Paranee

சிங்கள வர்க்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது எமக்காக ஒரு நாடு இல்லையே என்ற ஏக்கம் அதிகரிக்கிறது. தமிழீழம் ஒன்றே தமிழினத்தை நிலைக்கச் செய்யும். ஒப்பற்ற தலைவனின் இலட்சியப் பாதையில் இறுதிவரை பயணிப்பேன்.

மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை! இதை எவரும் மாற்றிட முடியாது.....நாம் எடுத்த இலட்சியப் பாதையில் எந்த மாற்றமுமின்றி எனது பயணம் தொடரும்!

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப் போராட்டமென்பது புலம்பெயர்ந்த மக்களுக்காக அவர்களால் மட்டும் நடாத்தப்படும் ஒரு போராட்டமாக அல்லாமல் மீண்டும் தாய் மண்ணிலுள்ள எமது உறவுகளையும் இணைத்துக்கொண்டால் மட்டுமே எமது போராட்டம் வெற்றிபெறும். குற்றுயிரும் குலையுயிருமாயிருக்கும் எமது சொந்தங்களை தேற்றி நாம் இழந்த கட்டுமானங்களை எழுப்பி நிறுத்த வேண்டும். நடந்தவற்றை நாம் ஒரு பாடமாக படித்து அது இனிமேல் தமிழினத்துக்கு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எமது தேசியத் தலைவர் உயிருடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டிய காலம் ஒன்று வந்தால் அதை ஏற்றுக்கொள்ள நாம் மனத்தை திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து செயல்படுவோம். ஒரு நாள் மௌனம் கலைந்து அவர் குரல் கொடுக்கும் வரை காத்திருப்போம்.

அன்று போல் என்றும் என் தலைவனுக்கும் பிறந்த தாய் நாட்டுக்கும் விசுவாசமாய் போராட்டத்தில் இணைந்திருப்பேன் என்று இந்த வணங்காமுடி உறுதிமொழிகூறுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை என் மண்ணில்

புதைத்தாய் பகைவனே!

என் மண்ணை

எங்கே புதைப்பாய்?

(உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன்.)

கல்லறையில் உறங்கும் நம் காவல்தெய்வங்களின் கனவுகளை நனவாக்கி எம்மினம் விடிவுபெற என்னால்முடிந்தவரை எனது பங்களிப்பை தொடர்ந்து செய்வேன். மனிதராய் வாழ்வதெனில்; தமிழராய்த் தலைநிமிர்ந்து வாழ்வோம்.அடிமையாய் வாழ்வதைவிட தமிழராய்ச் சாவதேமேல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.