Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்

Featured Replies

இங்கு கருத்தாடும் அனைவரும் ஆதாரங்களை இழந்து நிற்போரை ஆளுக்கொரு குடும்பத்தை ஆளுக்கொரு குழந்தையை பராமரிப்பீர்களா ? அப்படி மனிதாபிமானப்பணி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

சிதிலமாய்க் கிடக்கும் எங்கள் சிறுவர்கனை பெண்களை மீளவும் புதுவாழ்வு பெறும் வழிகளைத் திறந்து விடுவோம்.

ஆயிரமாயிரமாய் வேண்டாம் ஆளுக்கு ஒருவர் மாதம் பத்து யூரோ பங்களிக்க முடியுமானால் தயவு செய்து தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

இதை அனைவருரும் மனதால் ஏறு்றுக்கொள்ள வேண்டும்.

உணர்வால் உண்மைகளை ஒத்துக்கொள்வோரால் இலகுவாக விடுபட முடியும்.

இத்தோடு இப்பகுதியிலிருந்து விடைபெறுகிறேன். மனிதாபிமானப்பணிகள் செய்ய விரும்புவோர் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த கட்டத்தை தாண்டட்டும் எமது மக்கள்.

சாந்தி அக்கா உங்கள் கோரிக்கையில் ஒரு பிரச்சனை இருக்கின்றது.. மகிந்த போர் முடிந்ததும்(?) ஒரு கோரிக்கை வைத்தார் அதில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் நாட்டை கட்டியெழுப்ப வரவேண்டம் என்று கோரிக்கையை வைத்தார். அதன் அர்த்தம் நாங்கள் புலிகளினால் பாதிக்கப்பட்டதனால்தான் இங்கு புலம் பெயர்ந்து வந்ததாக இருக்கின்றது. இப்போது நாமக உதவச் சென்றால் அவர் கூறியதை ஒத்துக்கொள்வதாகும்.

இது யோசித்து செயற்படவேண்டிய ஒன்றாகும். நாங்கள் உதவச்சென்றால் உதவி நிறுவனங்களை அரசாங்கம் தடுப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

சாத்திரியார் தலைவர் இறந்ததபை;பற்றி அதிகம் யோசிக்கவில்லைபோல் இருக்கின்றது. அவருடைய பிரச்சனை ஜீ.ரீவியை

துரொக ஊடக என்று சொல்லிவட்டதுதான். அவர் எப்போதும் அந்த தொலைக்காட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கின்றார். அவரும் அந்த நிர்வாகத்தில் பங்குதாரரோ தெரியாது.

இங்கு பலரை பொறுதஇதவரை தேசியத்தைவிட தங்கள் சுயநலத்தை பாதுகாப்பதிலேயே கவனமாக இருக்கின்றார்கள்.

  • Replies 141
  • Views 31.1k
  • Created
  • Last Reply

தலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள்!

நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே.?

அவ்வாறு அல்ல அதற்கும் மேலாய் தலைவரை எமது சக மனிதனாக எண்ணியே தலைவர் இன்னும் வாழவேண்டும் என நினைக்கிறேன்! ஏன் என்றால் அவரை நாங்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறோம்! அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்! நாங்கள் மட்டும் நல்லா உல்லாசமா வாழவேண்டும் தலைவர் இறுதிவரை போராடி உயிர்விட வேண்டும்!

நல்ல மனம் வாழ்க!

வசி இலங்கை அரசாங்கம் இங்கு இடம் பெறும் போராட்டங்களை நிறுத்த வேண்டுமென்று விரும்புகின்றது. அது அவர்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கின்றது.அதனால்தான் அவர்கள் இங்குள்ள தமிழர்களை குறிவைக்கின்றனர். நாம் சோர்ந்து ஒடுங்கிவிட்டால் அவர்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லை. அதனால் புலம்பெயர் தமிழர்களில் சிலரை வளைத்து வைத்துள்ளனர்.

உண்மையில் இவர்கள் தலைவர் இறந்திருந்தாலும் அதை மறைத்து வைத்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.. ஆனால் இவர்கள் போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். இலங்கை அரசின் எண்ணத்தை செயற்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றார்கள். அதனால்தான் இவர்கள் விடாப்பிடியாக இருக்கின்றார்கள். இந்த தலைப்பை ஆரம்பித்த நண்பரை எனக்கு நன்றாக தெரியும். இவரைப்பற்றிய தகவல்களை என்னால் கூற முடியும். மோகன் அண்ணா அனுமதித்தால் கூறுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா உங்கள் கோரிக்கையில் ஒரு பிரச்சனை இருக்கின்றது.. மகிந்த போர் முடிந்ததும்(?) ஒரு கோரிக்கை வைத்தார் அதில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் நாட்டை கட்டியெழுப்ப வரவேண்டம் என்று கோரிக்கையை வைத்தார். அதன் அர்த்தம் நாங்கள் புலிகளினால் பாதிக்கப்பட்டதனால்தான் இங்கு புலம் பெயர்ந்து வந்ததாக இருக்கின்றது. இப்போது நாமக உதவச் சென்றால் அவர் கூறியதை ஒத்துக்கொள்வதாகும்.

இது யோசித்து செயற்படவேண்டிய ஒன்றாகும். நாங்கள் உதவச்சென்றால் உதவி நிறுவனங்களை அரசாங்கம் தடுப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

சாத்திரியார் தலைவர் இறந்ததபை;பற்றி அதிகம் யோசிக்கவில்லைபோல் இருக்கின்றது. அவருடைய பிரச்சனை ஜீ.ரீவியை

துரொக ஊடக என்று சொல்லிவட்டதுதான். அவர் எப்போதும் அந்த தொலைக்காட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கின்றார். அவரும் அந்த நிர்வாகத்தில் பங்குதாரரோ தெரியாது.

இங்கு பலரை பொறுதஇதவரை தேசியத்தைவிட தங்கள் சுயநலத்தை பாதுகாப்பதிலேயே கவனமாக இருக்கின்றார்கள்.

மகிந்த என்ன சொன்னார் எப்பிடிச் சொன்னார் என்பதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். மகிந்த வந்து எங்கடை சனத்தை வாழ வைப்பாரென்றும் நம்பவில்லை. ஆனால் தற்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் புலம்பெயர்ந்தவர்களால் செய்யப்பட வேண்டும். இன்னும் வணங்காததும் வன்னிக்கப்பலும் வருமென்று நம்பிக்கொண்டிருக்கும் அந்து மக்களுக்கான மறுவாழ்வு யாரால் கிடைக்கப்போகிறது ?

அரசு சொன்னதை ஏற்று எங்கள் பணிகள் தொடங்கவில்லை. நாங்களும் அந்தப்போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உரித்துடையவர்களாய் இருக்கிறோம். அவர்களை சிங்களவர் காப்பாற்றட்டும் நாங்கள் சிங்களவருக்குத் துணைபோகமாட்டோம் என சப்பைக்கட்டுக் கட்டி தங்கள் கடமையிலிருந்து (அல்லது காசு கொடுக்க வேண்மென்ற கஞ்சத்தனத்தால்) தப்பிக்க முயலும் சாதுரியமே உங்கள் கருத்து.

நாங்கள் உதவுவதை நேரடியாக அரசின் கையில் ஒப்படைப்பதில்லை. நிறுவனங்களின் ஊடாக சென்றடைய வைக்க வழிகள் இருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டேன்.

சாத்திரி என்னைப்போலவோ உங்களைப்போலவோ யோசிக்கவில்லை. ஒரு போராளியாக இருந்தவர். போராளியாக இருந்து அவரது குடும்பத்தையும் பலிகொடுத்தவர். தான் நேசித்த தலைவனுக்காக தன்னையும் வருத்தியவர். எனது 10வயதில் இருந்து(இப்போது எனக்கு35வயது) சாத்திரியென்ற போராளியை அறிந்த வகையில் சொல்கிறேன். ஊருக்குள் சறக்கட்டோடு சயிக்கிள்களில் காவலரண்களில் காவலிருந்து எங்கள் ஊர்களுக்கும் ஆமியின் வரவைத் தடுத்த போராளிகளில் ஒருவராக இருந்தவர்.

தான் நேசித்த தலைவனின் இழப்பை அல்லது மறைவை எல்லோரும் ஏற்றுக்கொண்டு அடுத்த தீர்வை ஏதிலியாக்கப்பட்ட மக்களுக்கும் போராட்டத்தில் தங்களை இணைத்து இன்று புனர்வாழ்வு என்ற பெயரில் வதைபடும் போராளிகளுக்கான புதுவாழ்வை விரும்புகிறார். அது உங்களுக்கு துரோகமாகவும் பிரச்சனையாகவும் இருக்கிறது.

ஜீரீவி ஒரு ஊடகம் என்பதன் கடமையை உணர்ந்தே அச்செய்தியை வெளியிட்டது. ஆனால் உங்கள் போன்று கனவுகாணும் உணர்ச்சிக்கொந்தளிப்பாளர்க

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பை ஆரம்பித்த நண்பரை எனக்கு நன்றாக தெரியும். இவரைப்பற்றிய தகவல்களை என்னால் கூற முடியும். மோகன் அண்ணா அனுமதித்தால் கூறுவேன்.

இதிலிருந்து உங்கள் தேசிய அக்கறையும் தமிழினத்தின் மீதான கரிசனையும் புரிகிறது. உங்களால் இந்த நண்பரைப்பற்றிக் கூற முடிந்தவையெல்லாம் உங்களுக்குள்ளிருக்கம் தனிப்பட்ட குரோதங்களன்றி வேறொன்றுமில்லை.

மோகன் அனுமதியுங்கள் அரிச்சந்தின் சோழன் உண்மைகளை உரத்துக்கூற. நீங்களே உண்மையான உங்கள் முகத்தை மறைத்து வைத்துக்கொண்டு ஒளிச்சு நிக்கிறியயள். நீங்கள் சொல்வதை எப்படி உண்மையென்று நம்புவது நமது களம். நீங்கள் குறிப்பிடும் நண்பர் தனது வாழ்விடம் தொடர்புகள் எல்லாவற்றையும் தந்துவிட்டுத்தானே நேர்மையாகக் கருத்தாடுகிறார். அப்படிச் செய்து கொண்டு நீங்களும். உண்மைகளைச் சொன்னால் உங்களை "புழுகன் அரிச்சந்திரன்" என்று சொல்லாமல் உண்மையான கடவுள் மகேசன் என்று சொல்வோம்.

உண்மையான பற்றாளர்களுக்கு இந்தத் தமிழ்ச்சாதி செய்த நன்மை இப்படியானவர்கள் போன்ற அநாமதேயங்களை வைத்து ஒதுக்கியதுதான்.

உணர்ச்சிகளுக்குள் அடிபட்டுப்போகாமல் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

உங்களால் ஒரு குழந்தைக்கான மாதாந்தம் பத்துயூரோ பங்களிக்க முடீயுமாயின் தொடர்ந்து கருத்தாடுங்கள்.

இப்பகுதியில் கருத்தாடுவதை தவிர்ப்பதாக இருந்தும் கருத்தெழுத நேர்ந்த துர்ப்பாக்கியத்துக்கு வருந்துகிறேன்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த பலர் புலத்தில் இருந்து கொண்டு வன்னியில் என்ன நடந்தாலும் கவலைப்படாமல் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என இருந்தார்கள் இப்பவும் இருக்குறார்கள் அவர்களை நினைத்தால் கவலையாகவும் ஆத்திரமாகவும் இருக்கும் ஆனால் இப்போது அவர்களை மாதிரி நானும் இருந்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது.30 வருட போராட்டம் ஒர் இரு நாளில் அழிந்து போய் விட்டது நாம் பலமாய் இருக்கையில் எம்மை திரும்பி பார்க்காத சர்வதேசம் நாம் பலமிழந்த பின் திரும்பி பார்க்குமா? இவ்வளவு நாளும் ஆர்ப்பாட்டத்திற்கு போய் பேரணியில் கலந்து கொண்டு சர்வதேசத்திற்கு இமெயில் மேல் இமெயில் அனுப்பியும் மக்கள் கொலை செய்யபடுவதை வேடிக்கை பார்த்த சர்வதேசம் இனிமேல் எங்களுக்கு உதவுமா? இது எனது ஆதங்கம் தப்பாயிருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில வர வர ஆய்வுகள் அறிக்கைகள் கூடிப்போச்சு... தேசியம் நடுநிலைமை எண்டு வாய் கிழிய கத்துறாக்கள் கொஞ்சநாள் ஓய்வேடுங்கோ plz. கொஞ்சநாள் உங்கடை கவலைகள் குறையும் வரையும் இருந்து சற்று பொறுத்து பிறகு வாங்கோ.......

இது குளம்ப்பிய குட்டையில் மேலும் குழப்பி குழப்பி மீன்பிடிக்கும் ஒரு சிலரின் பிளான் நல்லாவே வேலை செய்யுது..... நிர்வாகம் கவனிக்குமா என்பதுதான் கேள்விக்குறி!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி ஜெயம் பானு ஆகியோரும் இறந்து விட்டார்கள்.. அவர்களின் இறந்த படங்கள் மின்னஞ்சலில் உலாவந்தது.. என்னிடம் இருந்ததை அழிந்துவிட்டேன்.. ஆனால் யாழ்கள உறுப்பினர்கள் சிலரிடம் அது உள்ளது கேட்டு பார்க்வும். அவர்கள் பற்றிய சில நினைத்தே பார்க்கமுடியாத தகவல்கள் வெளியாகும்...

சாத்திரி அண்ணா உங்களால் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியுமா?

ஜெயம் அண்ணா எனது நெருங்கிய உறவினர்.ஆகவே தான் கேட்கிறேன். என்னால் இந்த தகவலை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது.

எனக்கு தொடர்பு பட்டவர்கள் ஊடாக நான் கேள்விப்பட்டது அவர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாக.

நான் ஒன்று சொல்கின்றேன்

உங்கள் கருத்துக்கள் யாவும் ஏதோ ஒரு பக்கத்தை தொங்கி நிற்பதாகவே கருதுகின்றேன்.

ஆனால் மற்றவர்களுடைய மனம் ஏதோரு வகையில் நோகடிக்கப்படுகின்றது.

ஒரு சிலர் வீரமரணம் அடைந்தது உண்மையாக இருக்கலாம் எனினும் உங்கள் கருத்துக்கள் யாவும் எல்லோரும் கொல்லப்பட்டதாக தான் சொல்லி நிற்கின்றது.

அல்லது சரணடைந்ததாக.

உங்கள் நிலைப்பாடு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

Edited by Bctamilan

சாத்திரி அண்ணா உங்களால் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியுமா?

ஜெயம் அண்ணா எனது நெருங்கிய உறவினர்.ஆகவே தான் கேட்கிறேன். என்னால் இந்த தகவலை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது.

எனக்கு தொடர்பு பட்டவர்கள் ஊடாக நான் கேள்விப்பட்டது அவர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாக

யெயம் அண்ணன் பானு அண்ணன் வீரமரணம் அடைந்ததை நீங்கள் நம்பலாம்

கீழ உள்ள இணைப்பில் அவர்கள் முகங்கள் தெளிவாக உள்ளது பார்க்கவும்.

http://www.mediafire.com/?sharekey=fa9efca...2db6fb9a8902bda

சாத்திரி அவர்களின் கருத்தில் எந்த தவறும் நிச்சயமாக இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

யாழில வர வர ஆய்வுகள் அறிக்கைகள் கூடிப்போச்சு... தேசியம் நடுநிலைமை எண்டு வாய் கிழிய கத்துறாக்கள் கொஞ்சநாள் ஓய்வேடுங்கோ plz. கொஞ்சநாள் உங்கடை கவலைகள் குறையும் வரையும் இருந்து சற்று பொறுத்து பிறகு வாங்கோ.......

இது குளம்ப்பிய குட்டையில் மேலும் குழப்பி குழப்பி மீன்பிடிக்கும் ஒரு சிலரின் பிளான் நல்லாவே வேலை செய்யுது..... நிர்வாகம் கவனிக்குமா என்பதுதான் கேள்விக்குறி!!!

இது என்னை வைத்து தான் எழுதி இருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படி என்றால் என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? இனி மேலாவது மற்றவர்களை துரோகி ஆக்காமல் எல்லோருடனும் சேர்ந்து வேலை செய்யுங்கள்.

யாழினி அக்கா வேலிக்கு ஓணான் சாட்சி அக்கா

தலைவர் இறந்தவிட்டார் என்று ஏன் பலர் வாதாடுகின்றனர். இஇவர்களுடைய உள்நோக்கம் என்ன? இதனால் இவர்களுக்கு என்ன இலாபம்? நண்பர்களே சிந்தித்து பாருங்கள். இவர்கள் ஏதோ வேலை திட்டத்தில்தான் இப்படி செய்கின்றார்கள். இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்று சொல்வது மற்றவர்களை சோர்ந்து போக செய்கின்றதல்லவா? இவர்கள் வேண்மென்றேதான் செய்கின்றார்கள். இவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். வன்னியிலுள்ள மக்களுக்கு உதவி செய்வதாக இருந்தாலும் தனிப்பட்ட நபர்களிடம் கொடுக்காதீர்கள். வேண்மென்றே பல தலைப்புக்களில் இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்பவர்கள் பற்றி கவனமாக இருங்கள்.

யாழினி அக்கா வேலிக்கு ஓணான் சாட்சி அக்கா

தலைவர் இறந்தவிட்டார் என்று ஏன் பலர் வாதாடுகின்றனர். இஇவர்களுடைய உள்நோக்கம் என்ன? இதனால் இவர்களுக்கு என்ன இலாபம்? நண்பர்களே சிந்தித்து பாருங்கள். இவர்கள் ஏதோ வேலை திட்டத்தில்தான் இப்படி செய்கின்றார்கள். இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்று சொல்வது மற்றவர்களை சோர்ந்து போக செய்கின்றதல்லவா? இவர்கள் வேண்மென்றேதான் செய்கின்றார்கள். இவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். வன்னியிலுள்ள மக்களுக்கு உதவி செய்வதாக இருந்தாலும் தனிப்பட்ட நபர்களிடம் கொடுக்காதீர்கள். வேண்மென்றே பல தலைப்புக்களில் இறந்துவிட்டார் இறந்துவிட்டார் என்பவர்கள் பற்றி கவனமாக இருங்கள்.

தலைவர் இறந்து விட்டார் என்பது கவலைப் படவேண்டிய விடயமே ஒழிய சோர்வடைய வேண்டிய விடயம் அல்ல. தலைவர் மேல் உள்ள விசுவாசத்தினை அவரின் இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை கண்டு பிடிப்பதிலும், அவரினால் நேசிக்கப் பட்ட போராளிகளின் தியாயங்களை போற்றுவதிலும் காட்டுங்கள். அவரால் தொடரப் பட்ட மக்களின் விடுதலைகான பயணத்தினை மேலும் முன்னெடுங்கள்.

தலைவரின் சாவு, அடர் துயர் நிரம்பிய நிகழ்வாக இருக்க வேண்டிய விடயமே தவிர சோர்ந்து போகும் விடயம் அல்ல. அவ்வாறு சோர்வடைந்தால் அது அவரிற்கு காட்டப் படும் உச்ச கட்ட அவமானமாகவே இருக்கும். அத்துடன் அதனைத் தான் எதிரியும் விரும்புவார்கள்

பிரபாகரன் எனும் சகாப்தம், அவரிற்கு பின்னாலும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும். அது தான் அவரிற்காக, இறுதி வரைக்கும் அவருடன் இருந்த பானு அண்ணா, ஜெயம் அண்ணா போன்ற உன்னத தளபதிகளுக்கான குறைந்த பட்ச நன்றிக் கடன்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இறந்து விட்டார் என்பது கவலைப் படவேண்டிய விடயமே ஒழிய சோர்வடைய வேண்டிய விடயம் அல்ல.

தலைவரின் சாவு, அடர் துயர் நிரம்பிய நிகழ்வாக இருக்க வேண்டிய விடயமே தவிர சோர்ந்து போகும் விடயம் அல்ல. அவ்வாறு சோர்வடைந்தால் அது அவரிற்கு காட்டப் படும் உச்ச கட்ட அவமானமாகவே இருக்கும். அத்துடன் அதனைத் தான் எதிரியும் விரும்புவார்கள்

பிரபாகரன் எனும் சகாப்தம், அவரிற்கு பின்னாலும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும். அது தான் அவரிற்காக, இறுதி வரைக்கும் அவருடன் இருந்த பானு அண்ணா, ஜெயம் அண்ணா போன்ற உன்னத தளபதிகளுக்கான குறைந்த பட்ச நன்றிக் கடன்.

இறப்பு தனக்கும் உண்டென்பதை ஒவ்வொரு போராளியும் அறிந்துதான் போராளிகள் ஆனார்கள். அவர்களது ஒவ்வொரு இழப்பும் நிழலி சொன்னது போல அடர்துயர்தானே ஒழிய அதுவே இறுதியான ஓய்வு அல்ல.

மிஞ்சிய 3லட்சம் பேரையும் காக்க எவருக்கும் துணிச்சலில்லை. தங்கள் மடியிலிருந்து 10யூரோ அந்த உயிர்களுக்காக கொடுக்க முடியாதவர்கள் தேசநலன் பேசுவதில் பயனில்லை. வேணுமானால் கருத்துமட்டும் எழுதி தங்களை புனிதர்களாக்கலாம்.

மக்களின் பணத்தில் வெற்றிலைக்கணக்குப் பார்க்க முடியாத வருத்தம் சிலரது கருத்தில் வெளிப்படுகிறது.

வியாபாரிகள் மிஞ்சியிருக்கும் மக்களை காப்பதற்கான வழிகளைத் தேடுவதுதான் அந்தத்தலைவனுக்கு செய்யும் நன்றிக்கடன்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் இங்கு ஆயுதப் போராட்டக்கனவில் இருப்பவர்கள் உங்கள் உறவுகள் யாராவது வவுனியா தடுப்பு முகாமில் இருந்தால் அவர்களிடம் சிறிது நேரம் தொடர்பு கொண்டு கதை;து விட்டு இங்கு வந்து கருத்தெழுதுங்கள்..ஏனென்றால் இன்று அங்கிருப்பவர்களிற்கு ஒருவேளை உணவும் ஒதுங்க ஒரு இடமும்மதான் உங்கள் உறவுகளை தேடிப்பிடிக்கமுடியாவிட்டால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரில் இருந்த அனைவருக்கும் துரோகி, ஒட்டுக்குழு , துரோகக்கும்பல், துணை இராணுவக்குழு என அனைத்து பட்டங்களும் வசவுகளும் வாரி வழயங்கியாகி விட்டது. ஏன் எதற்கு என்று கேட்காமல் நாங்களும் அழைத்துப்பழகி விட்டோம்

இப்போது வீழ்ந்தார் ? வீழ்த்தப்பட்டார் ? வாழ்ந்தார் ? , வாழ்கிறார் ? , என்ற வாதப்பிரதி வாதங்களுடன் துரோகி , விலைபோவிட்டான் என்ற புதுப்பட்டங்களை வழங்கத் தொடங்கி விட்டோம்

யாரும் மன்னிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ தயாரில்லை. கடந்த கால தவறுகளை ஏற்று நிகழ்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வெல்வதே

ஈழக் கனவை தாங்கி ஈழத்தின் விடிவிற்காய் வீரமரணம் அடைந்த அனைத்து விடுதலை போராளிகளுக்கும் , பொதுமக்களுக்கும்

நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய அஞ்சலி

இனியும் பிரிவு வேண்டாம்

ஐக்கியப்டுவோம் , கனவுகளை நனவாக்குவோம்

கனவுலகில் இருந்து விடுபட்டு, உண்மைகளை, தவறுகளை ஏற்று, இனி செய்ய வேண்டியவற்றை செய்வோம்!

60 வருடங்களுக்கு மேல் எம்மினத்தை சிங்களம் திட்டமிட்டு அழித்து வருகிறான். எம்மால் ஒருவரையாவது இதுவரை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியவில்லை. ஆனால் இன்று அதற்கான சூழ்நிலை சிறிதாவது தெரிகிறது. அதற்கான வேலைப்பாடுகளில் இறங்குவோம்.

நேற்றைய தினம் பிரித்தானியாவில் உள்ள மிகப்பிரபல சட்டத்தரணி ஐ.நா விசாரணைக்காக குரல் கொடுத்தது முக்கியமானது. அதனை விட அண்மைய நாட்களாக ஏறக்குறைய அனைத்து அமெரிக்க, பிரித்தானிய பத்திரிகைகள் இனவழிப்புகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8075277.stm

இனியும் ஆயுதப்போராட்டம் எனும் கனவுகளில் எம்மை மேலும் அழித்தொழிக்காமல், யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கான வேலைப்பாடுகளில் இறங்க வேண்டும். ஒருவேளை யுத்தக்குற்றச்சாட்டுகள் ஐ.நாவினால் விசாரிக்கப்பட்டு, மேற்குலகும் மேலும் ஆதரவு வழங்கினால் ஆயுதப்போராட்ட மூலம் சாதிக்க முடியாததை, சாதிக்கலாம். அது சர்வதேச அங்கீகாரத்துடன் எமக்கான விடிவையும் கொண்டு வரலாம்.

Edited by Nellaiyan

குறிப்பு:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் யுத்தக்குற்றம், இனவழிப்பு தொடர்பாக எம்மவர்கள் ஒரு அமைப்பை[Tamils Against Genocide (TAG)] தொடங்கி, அவ்வமைப்பில் முன்னால் அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் புறூஸ் வெயின், யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் வெற்றிகரமாக வழக்காடிய பேராசிரியர் பொயில் ஆகியோரையும் பல பணச்சுமைகள் மத்தியில் இணைத்து, யுத்தக்குற்றச்சாட்டுகள், இனவழிப்புகள் சம்பந்தமான ஆதாரபூர்வமான 1000 பங்கங்களுக்கு மேல் அடங்கிய ஆவணங்களை தயாரித்து அமெரிக்க செனட், இராஜாங்க திணைக்களம் போன்றவற்றுக்கும் சமர்ப்பித்து பல வேலைகளை தொடங்கினார்கள்.

அடுத்த கட்டமாக பிரித்தானியாவில் அதன் அமைப்பை இன்றைய ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் பங்கு பற்றும் ஜனனி போன்றோரையும் இணைத்து சில வேலைகளை ஆரம்பித்து, ஆவணங்கள், நிதியுதவிகள் போன்றவற்றை திரட்ட புறூஸ் வெயின் கூட லண்டன் வந்து சில கருந்தரங்குகளில் பங்கு பற்றினார். ஆனால் அதை குழப்பி அடித்து, அவ்வமைப்பை சிதறடிக்க பிரித்தானியாவின் இன்றைய தலைமைப்பூசாரி, மற்றும் தமிழைத்தவிர வேறொன்றும் தெரியாத/பொங்கு தமிழ் நிகழ்வுகளை உலகின் அனைத்துப் பகுதிகளிலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மூலையில் உள்ள மைதானங்களில் நடத்துவதால் தமிழர்களின் உரிமையை பெற்றுவிடலாம் என நம்பும் எமக்கு கிடைத்த அரசியல் சொத்தான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வேறு சிலரும் இணைந்து(பெயர்கள் குறிப்பிட விருமபவில்லை) தலை கீழாக நின்றார்கள்.

..... பாருங்கள் எங்களுக்கு கிடைத்த, எம்மை வழி நடத்த வந்தவர்களின் தூர நோக்குகளை!!!!!!

இனியும் இவர்கள் போன்றவர்கள் எம்மை வழி நடத்த அனுமதிக்க வேண்டுமா??????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கனவுலகில் இருந்து விடுபட்டு, உண்மைகளை, தவறுகளை ஏற்று, இனி செய்ய வேண்டியவற்றை செய்வோம்!

இனியும் ஆயுதப்போராட்டம் எனும் கனவுகளில் எம்மை மேலும் அழித்தொழிக்காமல், யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கான வேலைப்பாடுகளில் இறங்க வேண்டும். ஒருவேளை யுத்தக்குற்றச்சாட்டுகள் ஐ.நாவினால் விசாரிக்கப்பட்டு, மேற்குலகும் மேலும் ஆதரவு வழங்கினால் ஆயுதப்போராட்ட மூலம் சாதிக்க முடியாததை, சாதிக்கலாம். அது சர்வதேச அங்கீகாரத்துடன் எமக்கான விடிவையும் கொண்டு வரலாம்.

கனவுகளைவிட்டு விழித்தால் கள்வர்களின் கபடம் அம்பலமாகிவிடும் என்பதால் இன்னும் மக்களை கனவுகாண வைக்கும் வியாபாரிகள் இனியாவது தங்கள் போல முகங்களைக் கழற்றிவிட்டு அவலப்படும் மக்களுக்கு உருப்டியாக எதையாவது செய்ய முன்வர வேண்டும்.

சும்மா புழுகிப்புழுகி காலத்தை ஓட்டும் புழுகன் அரிச்சந்திரன்கள் புரிய வேண்டும் உண்மையை.

குறிப்பு:

..... பாருங்கள் எங்களுக்கு கிடைத்த, எம்மை வழி நடத்த வந்தவர்களின் தூர நோக்குகளை!!!!!!

இனியும் இவர்கள் போன்றவர்கள் எம்மை வழி நடத்த அனுமதிக்க வேண்டுமா??????

இந்தக் கள்வர்களை துரத்துங்கள். துணிந்து இவர்களை மக்களுக்கு அறியச் செய்யுங்கள். இதுவே இப்போது தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளில் முதன்யைமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே நடைபெறுகிற விடயங்களைப்பற்றிய அரை குறைத் தகவல்களுடன் .. அழுக்குத்துணியை வெளியில் வைத்துக் கழுவும் வேலையில் சிலர் இறங்கியுள்ளார்கள். இதற்கு அவர்களே அறியாமல் செய்கின்ற உளவியல் காரணம் ஒன்று இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை தோல்வியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, யாருடைய தலையிலாவது (scapegoat) இறக்கி தாங்கள் திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.

இப்பொழுது இவர்களுக்கு எதிரியாகத் தெரிவது சிங்கள இனவெறி அரசோ அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் மனிதவுரிமைகளைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத முரட்டு அரசுகளோ அல்ல. மாறாக இன்னொரு தமிழன் அல்லது தமிழர் குழு. இங்குள்ள தமிழர்கள் அல்லது தமிழர் அமைப்புகள் திறம்பட இயங்கின. அவை மீது குற்றம்சாட்ட எதுவுமில்லை என்று குறிப்பிட முடியாவிட்டாலும், இத்தகைய உட்பூசல்களால் பொது எதிரியை தவறவிட்டு விடும் அபாயம் உண்டு என்பதை உணர்ந்து கொண்டால் சரி.

கடந்த சில ஆண்டுகளாக தமிழர்கள் எதிர்கொண்டது பல்வேறுபட்ட நாடுகளின் மிகவும் சிக்கலான இராஜதந்திரம். இதில் தமிழர்கள் தோற்றுவிட்டாலும், அதுவே நீண்ட தூர வெற்றியின் ஒரு படியாக அமையக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. அதை முறையாக பயன்படுத்துவதிலதான் எமது இருப்பே தங்கியுள்ளது.

கடந்த காலத்தினைப்போன்று வெறும் உணர்ச்சியின்பால் செயற்பட்டாமல், புத்திசாலித்தனத்துடனும், தந்திரோபாயத்துடனும் நடந்துகொள்வோமாயின், நாங்கள் இந்த இழப்பிலிருந்து மீண்டுவர முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

Edited by MI7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நடைபெறுகிற விடயங்களைப்பற்றிய அரை குறைத் தகவல்களுடன் .. அழுக்குத்துணியை வெளியில் வைத்துக் கழுவும் வேலையில் சிலர் இறங்கியுள்ளார்கள். இதற்கு அவர்களே அறியாமல் செய்கின்ற உளவியல் காரணம் ஒன்று இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை தோல்வியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, யாருடைய தலையிலாவது (scapegoat) இறக்கி தாங்கள் திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.

இப்பொழுது இவர்களுக்கு எதிரியாகத் தெரிவது சிங்கள இனவெறி அரசோ அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் மனிதவுரிமைகளைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத முரட்டு அரசுகளோ அல்ல. மாறாக இன்னொரு தமிழன் அல்லது தமிழர் குழு. இங்குள்ள தமிழர்கள் அல்லது தமிழர் அமைப்புகள் திறம்பட இயங்கின. அவை மீது குற்றம்சாட்ட எதுவுமில்லை என்று குறிப்பிட முடியாவிட்டாலும், இத்தகைய உட்பூசல்களால் பொது எதிரியை தவறவிட்டு விடும் அபாயம் உண்டு என்பதை உணர்ந்து கொண்டால் சரி.

கடந்த சில ஆண்டுகளாக தமிழர்கள் எதிர்கொண்டது பல்வேறுபட்ட நாடுகளின் மிகவும் சிக்கலான இராஜதந்திரம். இதில் தமிழர்கள் தோற்றுவிட்டாலும், அதுவே நீண்ட தூர வெற்றியின் ஒரு படியாக அமையக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. அதை முறையாக பயன்படுத்துவதிலதான் எமது இருப்பே தங்கியுள்ளது.

கடந்த காலத்தினைப்போன்று வெறும் உணர்ச்சியின்பால் செயற்பட்டாமல், புத்திசாலித்தனத்துடனும், தந்திரோபாயத்துடனும் நடந்துகொள்வோமாயின், நாங்கள் இந்த இழப்பிலிருந்து மீண்டுவர முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

நாங்கள் ஆலமரம் இன்னமும் அசையமாட்டோம் ஆங்காங்கே சில கிளைகள் உடைந்தது போல சில குறைபாடுகள் இருந்தாலும பொது எதிரிக்கு எதிராய் இன்னனும் அசையாமல் நிற்கிறோம் என்று நீங்கள் இறுமாந்திருந்தாலும்.. ஆலமரத்தின் ஆணி வேரை புலத்தில் தங்கள் இருப்பையும் கையிருப்பையுமே பக்குவப்படுத்தப் படாத பாடுபடும் தேசியத்து வண்டுகள் அரித்துக்கொண்டிருக்கின்றத

இன்னமும் இங்கு ஆயுதப் போராட்டக்கனவில் இருப்பவர்கள் உங்கள் உறவுகள் யாராவது வவுனியா தடுப்பு முகாமில் இருந்தால் அவர்களிடம் சிறிது நேரம் தொடர்பு கொண்டு கதைத்து விட்டு இங்கு வந்து கருத்தெழுதுங்கள்..ஏனென்றால் இன்று அங்கிருப்பவர்களிற்கு ஒருவேளை உணவும் ஒதுங்க ஒரு இடமும்மதான்

என்ன சாத்திரியாரே!!!! இப்போ கொஞ்ச நாளா உண்மைகளை புட்டு புட்டு வைக்கின்றீர்கள். என்ன வெத்திலை சாத்திரம் முடிந்து இப்போ கிளி யோசியம் தொடங்கியதாய் கேள்விப்பட்டேன்... உண்மையா? உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்கின்றேன். கவனம் சாத்திரியாரும் விலைபோய் விட்டார் என்று அடுத்த தலைப்பு வந்தாலும் வரும் :D:D

கறையான்கள் கட்டிய புற்றில் கருநாகம் குடிபுகுந்துவிட்டது

புலி படுத்தால் சிறுநரிகள் ராஜங்கம் நடாத்தும்.

தண்டனைக்கு பயந்து தப்பி ஓடிவந்த தறுதலைகள் தற்போது வியாபாரம் நடாத்துகின்றது. வேலையற்று பிரான்சில் பொறுக்கி தின்னும் தறுதலை ஒன்று விடுதலைப்போரை உரசி பார்க்கின்றது. இது காலத்தின் கோலம். ஊடகமொன்றினற்காய் இழிதொழிலை செய்கின்ற நீ சிவமில்லை சவம். வயிற்று பிழைப்புக்காய் எப்படி வாழ்ந்தாலும் ஆனந்தம் என்றால் வாழ்நதுவிட்டு போ.

கறையான்கள் கட்டிய புற்றில் கருநாகம் குடிபுகுந்துவிட்டது

புலி படுத்தால் சிறுநரிகள் ராஜங்கம் நடாத்தும்.

தண்டனைக்கு பயந்து தப்பி ஓடிவந்த தறுதலைகள் தற்போது வியாபாரம் நடாத்துகின்றது. வேலையற்று பிரான்சில் பொறுக்கி தின்னும் தறுதலை ஒன்று விடுதலைப்போரை உரசி பார்க்கின்றது. இது காலத்தின் கோலம். ஊடகமொன்றினற்காய் இழிதொழிலை செய்கின்ற நீ சிவமில்லை சவம். வயிற்று பிழைப்புக்காய் எப்படி வாழ்ந்தாலும் ஆனந்தம் என்றால் வாழ்நதுவிட்டு போ.

இவைகள் போன்றவற்றால் தான் இன்று நாம் நமக்கான குழிகளையே தோண்டி, நானே அதில் இறங்கி மண்ணைத் அள்ளி போட்டு, எம்மை மூடியுள்ளோம்.

நாம் இன்று வரை விட்ட மிக முக்கிய தவறுகளில் ஒன்று, விமர்சனங்களை இல்லாது ஒழித்தது. சரி, பிழை தெரியாமல் போய் விட்டது ........ சாபம்!!!!!

இன்று மதியம் எனது தந்தையாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது ......." .... கேள்விப்பட்டீரோ? GTV சிறிலங்கா அரசுக்கு சொந்தமானதாம்! ...." ......

இதற்கு முன் K.P இந்திய உளவாளி, மட்டு/அம்பாறை அரசியல் பொறுப்பாளர் தயாமோகன் (எஞ்சியிருக்கும் ஓரிருவரில் தயாமோகனும் ஒருவர்) துரோகி, ........ கதைக்கும், உண்மைகளை சொல்லும், விமர்சிக்கும் அனைவரும் தற்போது துரோகிகள்!!!!

எங்கு போய் முடியப் போகிறது!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சரியான ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிற விடயத்தை வைத்து தேவையற்ற வாதங்களே எழுதப்படுகின்றன.ஏன் தமிழர்களே பிரிந்து நின்று வாதிடுகிறீர்கள்.இதற்காகவா தமிழர் போராடுனார்கள்.தமிழர்கள் ஒற்றுமை பலமாக இருக்க வேண்டிய கால கட்டத்தில் அவர்களைப் பிரித்து விடக்கூடிய அதாரமற்ற முன்னுக்குப் பின் முரணான செய்திகளை எழுதுவதால் என்ன இலாபம் இருக்கிறது. நட்டத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.இனி சர்வ தேசத்தை நோக்கிய எமது அரசியல் நகர்வுகளை ஒற்றுமையாக முன்னெடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மதியம் எனது தந்தையாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது ......." .... கேள்விப்பட்டீரோ? GTV சிறிலங்கா அரசுக்கு சொந்தமானதாம்! ...." ......

இதற்கு முன் K.P இந்திய உளவாளி, மட்டு/அம்பாறை அரசியல் பொறுப்பாளர் தயாமோகன் (எஞ்சியிருக்கும் ஓரிருவரில் தயாமோகனும் ஒருவர்) துரோகி, ........ கதைக்கும், உண்மைகளை சொல்லும், விமர்சிக்கும் அனைவரும் தற்போது துரோகிகள்!!!!

எங்கு போய் முடியப் போகிறது!!!!

யாருக்கு தெரியும் :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.