Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிருந்தனின் கவிதைகள்

Featured Replies

நல்ல கவிதை

:?: :?: :?:

  • Replies 101
  • Views 11k
  • Created
  • Last Reply

நல்லாக இருக்கு இழப்பு கவிதை பிருந்தன். ஏன் காதலை வெளியிடத்தெரியாமல் இருந்தீங்க. யாழில் கேட்டிருந்தால் .................. :roll: :lol: :wink: :arrow:

அழகான கவிதை பிருந்தன் அண்ணா...

  • தொடங்கியவர்

சூரியமுகி,வெண்ணிலா,ப்ரியசகிக

பிருந்தன் உங்கள் கவிதைகள் எல்லாமே நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை நன்றி

  • தொடங்கியவர்

சங்கீத்,ஜோ இருவருக்கும் நன்றிகள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

இயந்திர மனிதன்

குளிர்ந்த காலைவேளையில்

பனித்துளிகள் மூடி நிற்கும்!

பனித்துளியின் பாரம் தாங்காது

இளம்தளிர்கள் தலை சாய்த்திருக்கும்!

அவற்றுக்கு விடுதலை கொடுப்பதற்கு

புறப்பட்டான் இளம் சூரியன்!

அவன் கதிர்பட்டவுடன் உருக்கிய

வெள்ளி போன்று கரைந்தோடியது பனி!

கதிரவனின் வருகையினால்தான்

எத்தனை ஆர்ப்பாட்டம்!

அவனை வரவேற்க

ஒவ்வொரு உயிரினமும் கானம்பாடின!

குஞ்சுகள் கூட தமது

சின்னவாயால் வரவேற்பு கொடுத்தன!

மொட்டுக்கள் அவிழ்ந்தன

பூ மணம் பரப்பின!

விலங்கினங்கள் கூட

கண் விழித்தன!

மனிதன் மட்டும்

போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!

அவனை எழுப்ப வேண்டும்

கடிகார சத்தம்!

இன்ப ஓசையில் எழும்பாத அவன்

இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.

நல்லாயிருக்கு அண்ணா இயந்திர மனிதன் பற்றிய கவிதை :P

கிட்டத்தட்ட நாம எல்லாரும் இயந்திரமயமாயிட்டோம் தானே ( நான் அலார்ம் அடிச்சாலும் எழும்ப மாட்டன் அம்மா அடிச்சுதான் எழும்புவன்) :oops: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதன் மட்டும்

போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!

அவனை எழுப்ப வேண்டும்

கடிகார சத்தம்!

இன்ப ஓசையில் எழும்பாத அவன்

இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.

சேவல் கூவி எழுந்ததில்லையோ.. என்ன தான் பண்ண பின்ன.. வெளியில அடிக்கிற குளிருக்கு.. கம்பளியை விட்டு விலக யாருக்கு மனசு வரும்... வைத்தெரிச்சலைக்கொட்டிக்காத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லாயிருக்கு பிருந்தன் :)

கவிதைப் போட்டிக்கு எழுதேல்லையா :P :)

ஜோவ் ஆருய்யா? கடவுளை வாழ்த்தவேணுமா.? அவர் எங்களை வாழ்த்தினால் போதாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிந்தன் அண்ணா கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :P

பிருந்தன் உங்கள் இயந்திர மனிதன் கவிதை நன்றாக உள்ளது, ம்ம்ம் புலம்பெயர் நாடுகளில் இயந்திர வாழ்க்கைதனே வாழுகிறோம்

மனிதன் மட்டும்

போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!

அவனை எழுப்ப வேண்டும்

கடிகார சத்தம்!

இன்ப ஓசையில் எழும்பாத அவன்

இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்

ம்ம் இது எனக்கும் நல்லாய் பொருந்துகின்றது. நிஐமாக எழுதியுள்ளிர்கள். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன்,

சோக்காயிருக்கு...வாழ்த்துக்க

  • 2 months later...
  • தொடங்கியவர்

கவிதைக் காதல்

காதல் என்பது இயற்கையானது

அது எல்லோருக்கும் சொந்தமானது!

எனது காதல் மாறுபட்டது

மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!

என் காதலியின் இளமை மறைவதில்லை

எனக்கு அவளிடத்தில் அன்பு குறைவதில்லை!

எனது காதல் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது

அவளோ இலக்கணத்துக்கு உட்பட்டவள்!

அன்று பலர் அவளுடன் காதல் புரிந்தனர்

இன்றும் பலர் அவளுடன் காதல் புரிகின்றனர்!

அவள் தேவர்குல தாசியுமல்ல

பூவுலக மாதவியுமல்ல!

அவளின் காதலில் முதன்மையானவன் கம்பன்

அவன் சரியான வம்பன்!

கண்ணதாசன் கூட காதலித்ததுண்டு

கம்பதாசன் கூட போட்டி போட்டதுண்டு!

பாரதி அவளுக்கொரு தாசன்

பாரதிதாசன் அவளுக்கொரு நேசன்!

வாலி போடுவார் அவளுக்கு வேலி

முத்துக்கள் பல கொடுத்தார், வைரமுத்து!

அவளே என்றும்

எனது பெரிய சொத்து!

அவளை வரையும்போது

சிலிர்க்குது எனது சித்து!

அவளே கவிதை நாயகி

எனது காதல் நாயகி.

காதல் என்பது இயற்கையானது

அது எல்லோருக்கும் சொந்தமானது!

எனது காதல் மாறுபட்டது

மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!

இந்த வரிகளை பார்த்தவுடன் வழமையான காதல் கவிதை என்று தான் நினைத்தேன். ஆனால் அழகாக நீங்கள் உங்கள் காதலியை அட கவிதையை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

சிறிது இடைவெளிக்கு பின்னால் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

அண்ணா இன்று தான் உங்கள் கவிதைகள் பார்த்தேன் வாழ்த்துக்கள் எல்லாம் நன்றாக உள்ளது

  • தொடங்கியவர்

வணக்கம் ரமா, சந்தியா உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ஆம் ரமா சிறிதுகாலம் களத்துக்கு வரமுடியவில்லை.

ஆகா கவிதைக் காதலா... நான் கவிதை தலைப்பை முதல் வாசிக்கயில்லை கவிதையை வாசித்துக் கொண்டு போக என்ன புதிர் மாதிரி போகுதே எண்டு நினைச்சிட்டு பேந்து தான் கவிதை தலைப்பை பார்த்தன் ... :( :oops:

கவிதையை நன்றாகத்தான் காதலிக்குறீங்க பிருந்தன் அண்ணா ....தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...! :P

வணக்கம் ரமா, சந்தியா உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ஆம் ரமா சிறிதுகாலம் களத்துக்கு வரமுடியவில்லை.

அடெ பெடியா என்னை மாதிரியே நீரும் கவிதை எல்லாம் நல்ல எழுதிறிர் எப்படி?

பிருந்தன் உங்கள்கவிதை கனக்க போயிருக்கும் என்று நினைத்தேன். நல்ல காலம் அதிகம் போகவில்லை. நானும் களம் அதிக நாட்கள் வரவில்லை.

உங்கள் கவிதையை தொகுத்து வையுங்கோ. பிறகு நூலாய் வெளியிடலாம். சஸ்பென்ஸ் கவிதை சூப்பர்.

பிரிந்தன் அண்ணா கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :P

நல்லா இருக்கிறதல தானே போடு இருக்கார் :twisted: :twisted:

கவிதைக் காதலை சுவைத்தோம் பிருந்தன். தொடருங்கள்.

"வாலி போடுவார் அவளுக்கு வேலி" என்கிற வரிகளின் கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? கவிதைக்கு வேலி போட முடியுமா? வாலி என்கிற சொல்லுக்காக வேலியை பயன்படுத்தியிருக்கிறீர்கள், ஆனால் கருத்து பொருத்தமாக இருக்குமா என்பது குழப்பமாகவே உள்ளது.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.