Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்.......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்.......

கவிதை - இளங்கவி.......

முள்ளிவாய்க்கால்....

தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....

மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்

நிலமெல்லாம் குளமாகி......

தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை

வீரம் சொல்லிய மண்.....

வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்

வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த

குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து

எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்

பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை

இலகுவாய் செய்துவிட்டு......

வெற்றியாம் வெற்றி....!

அவர்கள் வீரராம் விரர்....!

கோழையின் வெற்றி

உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....

வந்தவர்கள் போய்விட்டால்

உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்

விடாத பயம் உனக்கேன்....?

நீ நூற்றுவிட்ட விடுதலை தீ

நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே

பதில் அதற்கு உன்னிடம் தான்....!

என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....

உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை

ஏளனமாய் பார்க்காதே...

வரலாறுகள் படித்துப் பார்

பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்

நம் வீரம் விழவில்லை.....

விடுதலை கிடைக்கும் வரை

நாம் தூங்கப் போவதில்லை....

இளங்கவி

Edited by ilankavi

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்.......

கவிதை - இளங்கவி.......

முள்ளிவாய்க்கால்....

தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....

மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்

நிலமெல்லாம் குளமாகி......

தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை

வீரம் சொல்லிய மண்.....

வேங்கைகை பல சாய்ந்த மண்....

...

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்

நம் வீரம் விழவில்லை.....

விடுதலை கிடைக்கும் வரை

நாம் தூங்கப் போவதில்லை....

இளங்கவி

தற்போதைய நிலைமையை கவிதை வடிவில் அருமையாகப் படைத்து இருக்கிறீர்கள் இளங்கவி, உங்கள் ஆக்கங்கள் தொடர எனது வாழ்த்துக்கள்.

உங்கள் கவிதைகள் எல்லாருக்கும் புரியுற மாதிரி அழகான வரிகள்.. தர்போதைய நிலமையை கவி வரிகளாய் குடுத்து இருக்கிறிர்கள் பாராட்டுக்கள்...உங்கள் ஆக்கங்கள் தொடர என் வாழ்த்துக்கள்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை வீரம் சொல்லிய...மண் வேங்கை பல சாய்ந்த மண் ......

இனிமேல் , மண்டைஒட்டின் பூமியாக எலும்புகளின் குவியலாக ...காலிழந்த விவசாயி ...புத்தி பேதலித்த சிறார்களாக் ...உலகத்தின் ரசாயனக்கள் பரீட்சித்து பார்த்தபூமியாக ...உலகின் பார்வைக்கு காட்சி பொருளாகும் ஒரு காலம்........தென்னைகளும் காய்க்க மறுக்கும் உயரினங்கள் ...வாழ வகையற்று போகும் இவைகள் .... இன்று நாளை தெரியவரா ..........சில வருடங்கள் செல்ல இவைஎல்லாம் நடக்கும் ..என் உயிர் ...பிரிந்து விடலாம் ..என் சந்ததி சரித்திரமாய் படிக்கும். பொன் விளைந்த பூமி ....சாம்பல் மேடாய் ஆனதேன்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்

நம் வீரம் விழவில்லை.....

விடுதலை கிடைக்கும் வரை

நாம் தூங்கப் போவதில்லை....

கவிதை அருமை. இளங்கவி, தொடர்ந்து கவிதைகளை வடியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான எழுத்து இளங்கவி.. மீண்டும் எனது பாராட்டுக்கள்.

உங்களை பற்றி நேற்றும் ஒரு கருத்தில் குறிப்பிட்டு பாராட்டி இருந்தேன்..

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry521075

இன்று இந்த கவிதையை வாசித்தது மகிழ்ச்சி. கவிதையின் தொடக்கத்தில் மனம் கனத்தாலும், இறுதி வரிகள் தேற்றி உற்சாகம் ஊட்டுவதாக இருக்கின்றன.

மேலும் எழுதுங்கள்... யாழ் களத்தில் மட்டும் அல்ல, உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகங்கள் வெளியிடலாம் (ஏற்கனவே நீங்கள் இதை செய்யாவிட்டால்!).

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவி.எழுதுங்கள்,எழுதுங்கள் எமக்காய் ஒரு சுதந்திர பூமி கிடைக்கும் மட்டும். நாம் எல்லோரும் எங்கள் நாட்டின் சுத்தமான சுதந்திர காற்றை என்றோ ஓர் நாள் நிச்சயம் சுவாசிப்போம். :(

பிரியமுடன்:யாயினி கனா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.... முடியுமான நேரங்களில் நிச்சயம் எழுதுவேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

மிக்க நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு.....

இலகு தமிழில் எழுதினால் மனங்களை இலகுவில் சென்றடையும் என்பது எனது நம்ப்பிக்கை....

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்.......

கவிதை - இளங்கவி.......

முள்ளிவாய்க்கால்....

தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....

மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்

நிலமெல்லாம் குளமாகி......

தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை

வீரம் சொல்லிய மண்.....

வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்

வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த

குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து

எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்

பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை

இலகுவாய் செய்துவிட்டு......

வெற்றியாம் வெற்றி....!

அவர்கள் வீரராம் விரர்....!

கோழையின் வெற்றி

உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....

வந்தவர்கள் போய்விட்டால்

உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்

விடாத பயம் உனக்கேன்....?

நீ நூற்றுவிட்ட விடுதலை தீ

நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே

பதில் அதற்கு உன்னிடம் தான்....!

என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....

உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை

ஏளனமாய் பார்க்காதே...

வரலாறுகள் படித்துப் பார்

பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்

நம் வீரம் விழவில்லை.....

விடுதலை கிடைக்கும் வரை

நாம் தூங்கப் போவதில்லை....

இளங்கவி

யதார்த்தமான கவிதை

இன்னும் பல

கவிதைகள் படைக்க

வாழ்த்துக்கள் இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

கருத்துக்கு மிக்க நன்றி உங்கள் வலி புரிகிறது இனி எல்லாமே நம் கைக்க்லில்....

''சிதைந்து கிடப்பதை சீர் செய்ய

தோட்டக்காரராய் தெருவிலே இறங்குவோம்.....

வீட்டுக்காரராய் விஜய் படம் பார்க்காமல்...''

நம் கடமைகளை உரிய நேரத்தில் செய்யாமல் சந்தர்ப்பத்தை தொலைத்துவிட்டு அதை மீண்டும் தேடுகின்றோம். வலிமையோடு இருந்தபோது பயங்கரவாதமெனும் பூட்டு நம் கைகளில், பூட்டுண்டவனுக்கு பூட்டை உடைக்க நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இப்போது உலகத்திற்கு நாம் வலிமை இழந்தவர்கள், ஆனாலும் அதே பூட்டு இப்பவும் இருக்கிறது இனியாவது உடைக்க முயற்சிப்போமா...?

எங்கள் முயற்சிகள் தான் எம்மினத்தைக் காப்பாற்றும் நிலாமதி அக்கா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

தொடர்ந்து என் கவிதைகளைப் படித்து கருத்துச்சொல்லிவருவதற்கு மிக்க நன்றிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

அருமையான எழுத்து இளங்கவி.. மீண்டும் எனது பாராட்டுக்கள்.

உங்களை பற்றி நேற்றும் ஒரு கருத்தில் குறிப்பிட்டு பாராட்டி இருந்தேன்..

இன்று இந்த கவிதையை வாசித்தது மகிழ்ச்சி. கவிதையின் தொடக்கத்தில் மனம் கனத்தாலும், இறுதி வரிகள் தேற்றி உற்சாகம் ஊட்டுவதாக இருக்கின்றன.

மேலும் எழுதுங்கள்... யாழ் களத்தில் மட்டும் அல்ல, உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகங்கள் வெளியிடலாம் (ஏற்கனவே நீங்கள் இதை செய்யாவிட்டால்!).

மிக்க நன்றி, நீங்கள் என் ஆக்கங்களைப் படித்து மற்றவர்கள் படிக்கத் தூண்டுமளவுக்கு கருத்துகளும் சொல்லிவருகிறீர்கள், மீண்டும் நன்றிகள்.....

நீங்கள் சொன்னது போல நானும் நினைத்திருந்தேன் ஆனால் இன்னமும் செய்யவில்லை, விரைவில் எனது கவிதைத் தொகுப்புக்களை வெளியிட முடிவு செய்துள்ளேன். நிச்சயம் அதை செய்ததும் உங்களுக்கு அறியத்தருவேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டது ஓர் நாள் நடக்கும். அதுவரை தொடர்ந்து உழைப்போம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Edited by ilankavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.