Jump to content

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்.......


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்.......

கவிதை - இளங்கவி.......

முள்ளிவாய்க்கால்....

தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....

மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்

நிலமெல்லாம் குளமாகி......

தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை

வீரம் சொல்லிய மண்.....

வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்

வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த

குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து

எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்

பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை

இலகுவாய் செய்துவிட்டு......

வெற்றியாம் வெற்றி....!

அவர்கள் வீரராம் விரர்....!

கோழையின் வெற்றி

உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....

வந்தவர்கள் போய்விட்டால்

உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்

விடாத பயம் உனக்கேன்....?

நீ நூற்றுவிட்ட விடுதலை தீ

நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே

பதில் அதற்கு உன்னிடம் தான்....!

என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....

உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை

ஏளனமாய் பார்க்காதே...

வரலாறுகள் படித்துப் பார்

பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்

நம் வீரம் விழவில்லை.....

விடுதலை கிடைக்கும் வரை

நாம் தூங்கப் போவதில்லை....

இளங்கவி

Link to comment
Share on other sites

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்.......

கவிதை - இளங்கவி.......

முள்ளிவாய்க்கால்....

தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....

மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்

நிலமெல்லாம் குளமாகி......

தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை

வீரம் சொல்லிய மண்.....

வேங்கைகை பல சாய்ந்த மண்....

...

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்

நம் வீரம் விழவில்லை.....

விடுதலை கிடைக்கும் வரை

நாம் தூங்கப் போவதில்லை....

இளங்கவி

தற்போதைய நிலைமையை கவிதை வடிவில் அருமையாகப் படைத்து இருக்கிறீர்கள் இளங்கவி, உங்கள் ஆக்கங்கள் தொடர எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் கவிதைகள் எல்லாருக்கும் புரியுற மாதிரி அழகான வரிகள்.. தர்போதைய நிலமையை கவி வரிகளாய் குடுத்து இருக்கிறிர்கள் பாராட்டுக்கள்...உங்கள் ஆக்கங்கள் தொடர என் வாழ்த்துக்கள்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை வீரம் சொல்லிய...மண் வேங்கை பல சாய்ந்த மண் ......

இனிமேல் , மண்டைஒட்டின் பூமியாக எலும்புகளின் குவியலாக ...காலிழந்த விவசாயி ...புத்தி பேதலித்த சிறார்களாக் ...உலகத்தின் ரசாயனக்கள் பரீட்சித்து பார்த்தபூமியாக ...உலகின் பார்வைக்கு காட்சி பொருளாகும் ஒரு காலம்........தென்னைகளும் காய்க்க மறுக்கும் உயரினங்கள் ...வாழ வகையற்று போகும் இவைகள் .... இன்று நாளை தெரியவரா ..........சில வருடங்கள் செல்ல இவைஎல்லாம் நடக்கும் ..என் உயிர் ...பிரிந்து விடலாம் ..என் சந்ததி சரித்திரமாய் படிக்கும். பொன் விளைந்த பூமி ....சாம்பல் மேடாய் ஆனதேன்.

Link to comment
Share on other sites

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்

நம் வீரம் விழவில்லை.....

விடுதலை கிடைக்கும் வரை

நாம் தூங்கப் போவதில்லை....

கவிதை அருமை. இளங்கவி, தொடர்ந்து கவிதைகளை வடியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான எழுத்து இளங்கவி.. மீண்டும் எனது பாராட்டுக்கள்.

உங்களை பற்றி நேற்றும் ஒரு கருத்தில் குறிப்பிட்டு பாராட்டி இருந்தேன்..

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry521075

இன்று இந்த கவிதையை வாசித்தது மகிழ்ச்சி. கவிதையின் தொடக்கத்தில் மனம் கனத்தாலும், இறுதி வரிகள் தேற்றி உற்சாகம் ஊட்டுவதாக இருக்கின்றன.

மேலும் எழுதுங்கள்... யாழ் களத்தில் மட்டும் அல்ல, உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகங்கள் வெளியிடலாம் (ஏற்கனவே நீங்கள் இதை செய்யாவிட்டால்!).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவி.எழுதுங்கள்,எழுதுங்கள் எமக்காய் ஒரு சுதந்திர பூமி கிடைக்கும் மட்டும். நாம் எல்லோரும் எங்கள் நாட்டின் சுத்தமான சுதந்திர காற்றை என்றோ ஓர் நாள் நிச்சயம் சுவாசிப்போம். :(

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.... முடியுமான நேரங்களில் நிச்சயம் எழுதுவேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

மிக்க நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு.....

இலகு தமிழில் எழுதினால் மனங்களை இலகுவில் சென்றடையும் என்பது எனது நம்ப்பிக்கை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்.......

கவிதை - இளங்கவி.......

முள்ளிவாய்க்கால்....

தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....

மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்

நிலமெல்லாம் குளமாகி......

தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை

வீரம் சொல்லிய மண்.....

வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்

வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த

குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து

எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்

பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை

இலகுவாய் செய்துவிட்டு......

வெற்றியாம் வெற்றி....!

அவர்கள் வீரராம் விரர்....!

கோழையின் வெற்றி

உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....

வந்தவர்கள் போய்விட்டால்

உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்

விடாத பயம் உனக்கேன்....?

நீ நூற்றுவிட்ட விடுதலை தீ

நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே

பதில் அதற்கு உன்னிடம் தான்....!

என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....

உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை

ஏளனமாய் பார்க்காதே...

வரலாறுகள் படித்துப் பார்

பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்

நம் வீரம் விழவில்லை.....

விடுதலை கிடைக்கும் வரை

நாம் தூங்கப் போவதில்லை....

இளங்கவி

யதார்த்தமான கவிதை

இன்னும் பல

கவிதைகள் படைக்க

வாழ்த்துக்கள் இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

கருத்துக்கு மிக்க நன்றி உங்கள் வலி புரிகிறது இனி எல்லாமே நம் கைக்க்லில்....

''சிதைந்து கிடப்பதை சீர் செய்ய

தோட்டக்காரராய் தெருவிலே இறங்குவோம்.....

வீட்டுக்காரராய் விஜய் படம் பார்க்காமல்...''

நம் கடமைகளை உரிய நேரத்தில் செய்யாமல் சந்தர்ப்பத்தை தொலைத்துவிட்டு அதை மீண்டும் தேடுகின்றோம். வலிமையோடு இருந்தபோது பயங்கரவாதமெனும் பூட்டு நம் கைகளில், பூட்டுண்டவனுக்கு பூட்டை உடைக்க நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இப்போது உலகத்திற்கு நாம் வலிமை இழந்தவர்கள், ஆனாலும் அதே பூட்டு இப்பவும் இருக்கிறது இனியாவது உடைக்க முயற்சிப்போமா...?

எங்கள் முயற்சிகள் தான் எம்மினத்தைக் காப்பாற்றும் நிலாமதி அக்கா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nunavilan

தொடர்ந்து என் கவிதைகளைப் படித்து கருத்துச்சொல்லிவருவதற்கு மிக்க நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

அருமையான எழுத்து இளங்கவி.. மீண்டும் எனது பாராட்டுக்கள்.

உங்களை பற்றி நேற்றும் ஒரு கருத்தில் குறிப்பிட்டு பாராட்டி இருந்தேன்..

இன்று இந்த கவிதையை வாசித்தது மகிழ்ச்சி. கவிதையின் தொடக்கத்தில் மனம் கனத்தாலும், இறுதி வரிகள் தேற்றி உற்சாகம் ஊட்டுவதாக இருக்கின்றன.

மேலும் எழுதுங்கள்... யாழ் களத்தில் மட்டும் அல்ல, உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகங்கள் வெளியிடலாம் (ஏற்கனவே நீங்கள் இதை செய்யாவிட்டால்!).

மிக்க நன்றி, நீங்கள் என் ஆக்கங்களைப் படித்து மற்றவர்கள் படிக்கத் தூண்டுமளவுக்கு கருத்துகளும் சொல்லிவருகிறீர்கள், மீண்டும் நன்றிகள்.....

நீங்கள் சொன்னது போல நானும் நினைத்திருந்தேன் ஆனால் இன்னமும் செய்யவில்லை, விரைவில் எனது கவிதைத் தொகுப்புக்களை வெளியிட முடிவு செய்துள்ளேன். நிச்சயம் அதை செய்ததும் உங்களுக்கு அறியத்தருவேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டது ஓர் நாள் நடக்கும். அதுவரை தொடர்ந்து உழைப்போம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.