Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிர்ப்பக்கம்


Recommended Posts

  • Replies 305
  • Created
  • Last Reply

ஆம் வசி வாழ்த்துக்கள். விளக்கமாகச் சொல்வதென்றால் இருவரும் தமது குதிரைகளை மாற்றி ஓடும்போது தமது குதிரைதான் பின்னால் வரவேண்டுமென்பதற்காக தாம் ஓடும் குதிரைகளை இருவரும் மிக வேகமாக ஓட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

இந்த இடத்தில் ஆறுகள் இருக்கும். ஆனால், தண்ணீர் இருக்காது. நகரங்கள் இருக்கும். ஆனால், கட்டடங்கள் இருக்காது. காடுகள் இருக்கும். ஆனால், மரங்கள் இருக்காது. அங்கு மலைகள் இருக்கும். அதை நீங்கள் எளிதாகத் தாண்டலாம். இவை எல்லாமே நமது பூமியில் உண்மையில் உள்ளவைதான். அப்படி என்ன இடம் அது?

Link to comment
Share on other sites

ஆ இரசிகை என்னாச்சு உங்களுக்கு ஒரு படத்தை வச்சுக் கொண்டு உவ்வளவு கற்பனையெல்லாம் பண்ணுறீங்க. படம் என்பது சரிதானே.

:idea: :?:

Link to comment
Share on other sites

இயற்கைக் காட்சி பற்றி வரைந்த படம்?????

:roll: :roll:

:P

Geography எனப்படும் புவியியல் வரைபடம் :)

Link to comment
Share on other sites

ஒருவரை எனது தந்தையார் 1983 ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், திகதியில் மதியம் சந்தித்தேன். அப்போது தனது வயது 22 என்றார். அதே நபரை அப்பாவின் நண்பர் ஒருவர் 1987 ம் ஆண்டு மாசி மாதம் பத்தாம் நாள் நடுநிசியில் சந்தித்த போது தனது வயதை 18 என்று கூறியுள்ளார்!

அந்நபர் ஏன் அப்படிக் கூறினார்?

Link to comment
Share on other sites

உங்கள் அப்பாவோ, மற்றைய நபர் திகதி ஆண்டை மாறி எழுதி விட்டார்கள்

உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் மன்னிக்கவும் உங்கல் விடை தவறு :cry:

Link to comment
Share on other sites

லாலா லாலா லாலா விடையைச் சொல்லுங்களேன் ப்ளிஸ். எனக்கு கொஞ்சம் இருக்கும் மூளையும் போகப்போகுது

Link to comment
Share on other sites

லாலா லாலா லாலா விடையைச் சொல்லுங்களேன் ப்ளிஸ். எனக்கு கொஞ்சம் இருக்கும் மூளையும் போகப்போகுது

பொறுமை பொறுமை களத்தில் பல அறிவு ஜீவிகள் இருப்பதால் அவர்களின் பதில்களுக்கு யாம் காத்திருக்க வேண்டும் :)

Link to comment
Share on other sites

வயதைக் கூட்டுவதற்கு பதிலாக குறைத்து விட்டார்

இது கடி கேள்வி கிடையாதே? கொஞ்சம் சிரத்தையோடு சிந்தித்தால் பதில் கையில். :)

Link to comment
Share on other sites

ஒருவரை எனது தந்தையார் 1983 ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம்' date=' திகதியில் மதியம் சந்தித்தேன். அப்போது தனது வயது 22 என்றார். அதே நபரை அப்பாவின் நண்பர் ஒருவர் 1987 ம் ஆண்டு மாசி மாதம் பத்தாம் நாள் நடுநிசியில் சந்தித்த போது தனது வயதை 18 என்று கூறியுள்ளார்![/color']

அந்நபர் ஏன் அப்படிக் கூறினார்?

இது நடந்தது கிறீஸ்தூக்கு முன்போல... (BC)

Link to comment
Share on other sites

ரசிகை எனக்கு விடை விளங்கவில்லை. விளக்கம் தருகிறீர்களா?

அந்த நபர் கி.மு பிறந்திருப்பார்.

அதாவது கிறிஸ்துவுக்கு முன்.

எனக்கு வடிவாக விளங்கப்படுத்த தெரியவில்லை.

தல உதவி செய்யுங்களன்

Link to comment
Share on other sites

தலயை காணலை ரசிகை. எனக்கு தெரிந்ததை சொல்லுறேன். கிறித்துவுக்கு முன் (BC) வருடங்கள் அதிகரித்து செல்லாமல் குறைந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன், அதாவது இந்த வருடம் 2005 என்றால் அடுத்த வருடம் 2004 ஆக இருக்கும். அதன்படி பார்த்தால் குறிப்பிட்ட நபரை 1987 இல் தந்தையின் நண்பர் பார்த்த போது 18 வயது ... அதன் பின்பு நான்கு வருடங்கள் கழித்து 1983 இல் தந்தை சந்தித்த போது வயதும் நான்கால் அதிகரித்து 22 ஆகியிருக்கும், என்ன சரிதானே? BC வருடங்கள் அதிகரிப்பதில்லை குறைந்து தான் செல்கின்றன என்பதை வேறு யாராவது தான் உறுதிப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

ஆண்டு எப்பொழுதும் அதிகரித்துத் தான் செல்கிறது, அது குறைவடைந்து செல்வதில்லை. ஆனால் காலத்தைக் கணிப்பதற்கு கிறிஸ்துவின் பிறப்பினை ஓர் எல்லையாகக் கொள்கிறார்கள். எண்களிற்கு 0 ஓர் எல்லை போல் 0 அடுத்து வந்தால் +1, அதற்கு முன் வந்தால் -1.

அதே போல் கிறிஸ்துவிற்கு முன் பத்து வருடங்கள் என்றால் கி.மு 10 என்றும் கிறிஸ்துவிற்கு பின் 10 வருடங்கள் என்றால் கி.பி. 10 என்றும் கூறுகிறார்கள்.

இவ்வருடம் 2005 என்றால் அதன் கருத்து கி.பி 2005 ஆகும். அதாவது கிறிஸ்து பிறந்து 2005 ஆண்டுகள் கடந்து விட்டது.

அதேபோல் "5000, 3000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன" என வரலாற்றாசிரியர்களினால் குறிப்பிடப்படுவன, முறையே கி.மு 2995 (5000-2005), கி.மு 995 (3000-2005) ஆகும்.

என்ன கூடக் குழப்பிவிட்டேனா :?: :wink:

Link to comment
Share on other sites

ஒருவரை எனது தந்தையார்

அந்நபர் ஏன் அப்படிக் கூறினார்?

இரசிகை கேட்கிறேன் என்று தப்பா நினைக்காதீங்க உங்களின் தந்தையாரிற்கு எத்தனை வயது??? :wink:

****+1987+2005=****+3992 :shock: :shock: :shock:

அடேங்கப்பா :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
    • இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா?  தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.  
    • தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார். கடைசியாக வரும் என்று கணித்துள்ளார்கள்.
    • அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார்.  நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற  சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.