Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...!

இளங்கவி - கவிதை

பூக்களும் பூக்காத

கந்தக பூமியாய்....

பிணங்களின் குவியலில்

நிரம்பிட்ட பூமியாய்.....

கரும்புலி வேட்டைகள்

பல நடத்திட்ட பூமியாய்....

பாய்ந்த இரத்தத்தின்

ஈரம் காயாத பூமியாய்.....

நாம் வாழ்ந்த பூமியின்று

நடுத்தெருவில் தத்தழிக்க

நாய்களும் நரிகளும்

நக்குத் தீனிக்கு அலைகிறது.....

புத்தரின் சரித்திரம்

புதைந்து கிடக்குதாம்.....

அதை புனரமைத்துக் கட்டிவிட

புத்த பிக்குகள் அலையுதாம்....

போய்விடுங்கள் இங்கிருந்து

எங்கள் பிணங்கள் தான் கிடக்கிறது.....

நீர் விதைத்துவிட்ட விதைகளின்று

முளைப்பதற்காய் தவிக்கிறது.....

அநியாயத்தின் வெற்றி

அதிக நாள் நிலைக்காது.....

நியாயம் எங்கள் பக்கம்

நம் விடுதலையும் பொய்க்காது......

எத்தனை முறைகள் எம்மை

அடியோடு அழித்திருந்தாய்

இன்றும் இறுதியாய் ஓர்தடவை

அடியோடு அழித்துவிட்டாய்.....

நீ அழித்துவிட இதுவொன்றும்

அரையடிப் பூனையல்ல.....

அடங்காமல் பாய்ந்து நின்ற

ஆறடிப் புலியடா....! ; அது

தமிழன் அமைதிபெற்றால்

அமைதியாய் படுத்துவிடும்....

தமிழர் அழிவு கண்டால்

சிந்தித்துப் பார்

உனக்கு விடைதெரியும்.... ?

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:unsure:

வீரமான வரிகளுக்கு 100/100!!

உங்களுக்கு நீங்களே போட்டியாக எழுதுவது போல உள்ளது...ஒவ்வொரு முறையும் உங்கள் கவித்திறமையையும் எழுத்து திறமையையும் நீங்களே வெல்கிறீர்கள்...

பாராட்டுக்கள்.... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பல வேலைப் பழுக்களுக்கு மத்தியிலிலும் அவ்வப்போது. சமகால நிகழ்வுகளைத் அப்படியே வடிக்கும் உங்களின் திறமையை. எப்படி மெச்சுவது என்று தெரியவில்லை. இளவல் இளங்கவி அவர்களே. :unsure:

பிரியமுடன்:யாயினி கனா. :unsure:

அரையடிப் பூனையல்ல.....

அடங்காமல் பாய்ந்து நின்ற

ஆறடிப் புலியடா

....! ;

இது இப்ப சிந்திக்க வேண்டிய விடயம்

அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...!

இளங்கவி - கவிதை

....

நீ அழித்துவிட இதுவொன்றும்

அரையடிப் பூனையல்ல.....

அடங்காமல் பாய்ந்து நின்ற

ஆறடிப் புலியடா....! ; அது

தமிழன் அமைதிபெற்றால்

அமைதியாய் படுத்துவிடும்....

தமிழர் அழிவு கண்டால்

சிந்தித்துப் பார்

உனக்கு விடைதெரியும்.... ?

இளங்கவி

தலைப்பை பார்த்தும், ஓடிவந்து படித்தேன்... உங்கள் கவி படித்ததில் முழுத் திருப்பதி... மிகக் குறுகிய நேர இடைவெளிக்குள் மிக உணர்ச்சிபூர்வமான கவிகளை படைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

உண்மையான சில செய்திகள் படிக்கவே கசப்பாகவும், விரக்க்த்தியகவும் இருக்கும் இந்த நேரத்தில், உங்கள் உணர்ச்சிபூர்வமான கவிகள் என்னைபோன்று பலருக்கு மனஉறுதி தரும் என்பதில் ஐயமில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு... நீங்கள் சொன்னதும் ஒருவிதத்தில் உண்மைதான் போலிருக்கிறது... நான் கவிதை எழுத முதல் யோசிப்பது எனது முதல் கவிதையிலும் பார்க்க இது நன்றாக வரவேண்டுமென்பதே....

என்னையே நான் போட்டியாக நினைத்து எழுதுவது உண்மைதான் ஆனால் சில நேரங்களில் பிழைத்துவிடுவது உண்டு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

கிடைக்கும் நேரங்களில் அவசரமாக கணனி முன் அமர்ந்து யோசிப்பேன் எங்கள் அவலங்களையோ அல்லது வேறு உணர்வுகளையோ எப்படி மக்களுக்கு சொல்லலாம் என்று அது வரிகளாய் வந்து விடும்....

நாட்டுக்காக எத்தனையோ தியாகங்கள் நடைபெற்ற பொழுது எனக்கு சற்று நேரம் தானே!

நன்றி உங்கள் கருத்துக்கு....

மிகச் சரியான வரிகள்.வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jil

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...

அற்புதம்.........அற்புதம்.............

தமிழன் அமைதி கண்டால் அது அமைதியாய் படுத்து விடும்

உண்மை உண்மையிலும் உண்மை.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்கு

மிக்க நன்றி, எனது கவிதைகள் உங்களைப் போன்றோரின் உள்ளத்துக்கு மகிழ்சி அளிப்பதையிட்டு எனக்கு மிகுந்த சந்தோசம். எங்கள் முப்பது வருட வீரவரலாறு அடியோடு அழிக்கப்பட்டதாக நினைத்ததாலேயும் எங்கள் மக்களின் இழப்புக்களாலேயும் இலட்சோப லட்சம் மக்கள் மிகுந்த மன அழுத்தங்களுக்கு உள்ளான நிலையில்தான் தற்போது உள்ளனர்.

எங்கள் வீரம் அழிக்கப்படவில்லை உலக சதிகளினால் வீரர்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதுவே யதார்த்தம் .மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவே இந்தக் கவிதையை தர முயன்றேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sitpi

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamilmaran

இது தமிழனின் உரிமைப்போர் எமது உரிமைகளைக் கொடுத்துவிட்டால் பின்னர் போரெதற்கு....

நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது இளங்கவி உங்கள் சிந்தனையும் படைப்புகளும் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றன. வாழ்த்துகள்.

நன்றி இளங்கவி மீண்டும் ஓர் நல்ல கவிதைக்கு. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கவிதை மழை.................

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயத்தின் வெற்றி

அதிக நாள் நிலைக்காது.....

நியாயம் எங்கள் பக்கம்

நம் விடுதலையும் பொய்க்காது.

நீதி .........தூங்குவது போல் தெரிந்தாலும் அது ஒரு நாள் பூகம்பமாய் வெடிக்கும். நசுக்க பட்ட இனம் என்றோ ஒரு நாள் விடிவை காணும்.

பாராடுக்கள் இளங்கவி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara

மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு.... எப்போதும் என்னால் முடிந்தவற்றை தந்துகொண்டிருப்பேன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு.... உங்களைப் போன்றோரின் ஆதரவுதான் என்னை மேலும் மெலும் எழுதத் தூண்டுகிறது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலாமதி அக்கா

எங்களின் பக்கம் நியாயம் இருக்கிறது... நிச்சயம் வெற்ரி நமக்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.