Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் கடற்படையினர் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் வடக்கில் 6 ஆயிரம் ஏக்கரில் இலங்கை கடற்படையினர் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ள உள்ளதாக மேலதிக பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி அமைச்சர் தர்மதாச பண்டா தெரிவித்துள்ளார். கைவிடப்பட்ட நிலங்களில் இந்த பயிர் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. வடக்கில் 25 ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகையை பயிரிட இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தபானம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதில் 6 ஆயிரம் ஏக்கரில் கடற்படையினர் இந்த பயிர் செய்கையில் ஈடுபட உள்ளதாகவும் தர்மதாச பண்டா குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர மூன்று வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 400 ஏக்கரிலும், திருகோணமலையில் ஆயிரம் ஏக்கரிலும் மரமுந்திரிகையை பயிரிட மேலதிக பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டில் காணப்படும் அனைத்து வெற்று காணிகளிலும் மரமுந்திரிகையை தனியாருடன் இணைந்து பயிரிட உள்ளதாகவும் மரமுந்திரிகை உற்பத்தியில் உலகில் உள்ள 10 நாடுகளில் ஒன்றாக இலங்கை கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தர்மதாச பண்டா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தலா 200 ஏக்கரிலும் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 100 ஏக்கரிலும் மரமுந்திரிகை பயிரிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....10887&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இவை அனைத்தும் திட்டமிட்ட எமது வளச் சுரண்டல்களாகும். இவை சிங்களக் குடியேற்றத்தின் முதல் அடிப்படை நகர்வுகளாகும். மன்னார் கொண்டச்சியில் 1980களில் மரமுந்திரிகையை மையமாகக் கொண்ட ஒரு சிங்களக் குடியேற்றத்தை அப்போதைய ஜே ஆர் அரசு ஆரம்பித்தது. பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் 1990 வாக்கில் கொண்டச்சி இராணுவ முகாம் மீது நடத்திய முற்றுகைத் தாக்குதலை அடுத்து அங்கிருந்த குடியேற்றவாசிகளும் இராணுவமும் பின்வாங்கி ஓடின. அந்த வரலாறு மீண்டும் இப்போ மீளப்பட இருக்கிறது. கொண்டச்சி இராணுவ முகாம் தாக்குதலில் எம்மது அன்புக்குரிய போராளிகள் பலர் தமது இன்னுயிர்களை தாயக மண்ணின் பாதுகாப்பிற்காக அளித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழர் நில ஆக்கிரமிப்பை.. வேடிக்கை பார்த்துக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் "எக்கத்துக்கரண்ண" கோசம் போடும் தமிழர் கூட்டமைப்பினர் உட்பட தமிழர் அரசியல் சக்திகளாக தம்மை காட்டிக் கொள்வோர் எனியும் குறட்டை விடும் நிலையை தவிர்த்துக் கொள்வது நன்று. :unsure:

Edited by nedukkalapoovan

உதை இராணுவத்தினரிடம் குடுத்துப்போட்டு கடற்படையினர் கடலிலபோய் மீன்பிடிக்க இல்லாட்டிக்கு முத்து குளிக்கலாமே?

மேலும்.. பல இலட்சம் மிதிவெடிகள் புதைக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றை அகற்ற படையினரை பயன்படுத்தலாமே?

விமானப்படையினர் என்ன செய்யப்போறீனமாம்? பறக்கும்தட்டுபற்றி ஆராய்ச்சி செய்யலாம்? பீதுருதாலகால மற்றும் இதர மலைகளை துப்பரவு செய்யலாம்? இல்லாட்டிக்கு மலையகத்தில் தேயிலைச் செய்கை மேற்கொள்ளலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறு ஒன்றுமில்லை.........நிலச்சுவீகரி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் பலமிழந்த நிலையை அரசு தனக்கு சாதகமாக நன்கு பயன்படுத்தப்போகிறது. அரசில் இருந்து மைல் நீளமாக அறிக்கை விடும் டக்ளஸ் போன்றவர்கள் இதனை தடுக்கலாமே. அல்லது அறிக்கைகள் பம்மாத்தோ. கூட்டணி காரர் என்ன சொன்னாலும் அரசு கேட்கும் நிலையில் இல்லை. மாறாக அவர்களை பிரிக்க சதி தான் செய்து கொண்டிருக்கிறது.

இப்படி முந்திரி பயிர் தமிழ் இடங்களில் பயிரிடப்போகிறோம் என்று சொல்லி தனது பொருளாதாரத்தை ஈடு கட்ட வெளிநாடுகளில் உதவி பெறும் மற்றொரு காரணியும் உண்டு.

அகதிகளை குடியேற்ற வழி செய்யாமல் முந்திரிகை நடுகை என தொடங்குவது நிச்சயமாக வேறு பல காரணங்களுக்காக தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இது மீண்டும் ஒரு இரத்தக் களரிக்கு வழிவகுக்கப் போகிறது.மகிந்த கொம்பனி ஆடும் ஆட்டம் பயங்கரமாக இருக்கிறது. புலிகள் அழியட்டும் என்று சொன்னவர்கள் எல்லாம் சொந்தக் காணிக்குள்ளேயே சிங்களவனிட்ட அடிமையாக வேலை செய்யப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு மாற்றுக் கருத்தளர்களும், சனநாயக வாதிகளும், நடுநிலையாளர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை? இவ்வளவு காலமும் புலிகளைக் காரணம் காட்டி சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் மீதான இன அழிப்பை நியாயப்படுத்தி வந்த இவர்கள் இனி என்னத்தை வைத்து இப்போது நடக்கும் அநியாயங்களை நியாயப்படுத்தப் போகிறார்கள்? இதில் அநியாயம் என்னவென்றால் புலிகளின் 100% ஆன ஆதரவினால் தமிழர் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் வென்ற ஆசாமிகள் பலரும், தமக்கும் புலிகளுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லையென்று சத்தியம் செய்வதும், சிலர் இன்னொரு படி மேலே போய் அரசு வடக்கில் தற்போது எடுத்துவரும் மீள்கட்டுமாணம் என்ற பெயரிலான தமிழர் நிலத்தின்மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு தமது முற்று முழுதான ஆதரவு இருப்பதாக கூறுவதும்.

ஆகத் தமிழர் இவ்வளவு காலமும் சண்டையிட்டதும் 26000 போராளிகளையும் 125,000 மக்களையும் தியாகம் செய்து போராடியதும், காரை நகர்க் கடலில் மீன்பிடிக்கவும், 6,000 ஏக்கரில முந்திரிச் செய்கையும் நடப்பதற்காகத்தானே? இனியென்ன எல்லாம் சுபம், விரும்பியதெல்லாம் நடக்குது !!!!!இனிப் போராட்டமும் தேவையில்லை, ஒரு மயிரும் தேவையில்லை. மீனையும் முந்திரிக்கொட்டையையும் சாப்பிட்டுக்கொண்டு நேரம் தவறாமல் கக்கூசுக்குப் போய்க்கொண்டிருப்பாம். சுதந்திரமும் மண்ணும் !!!ஆருக்கு வேணும்?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.