Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூனியத்துள் இன்னும் எரியும் நெருப்பு

Featured Replies

மானத்தை தேட ஒரு வெளிச்சம்

என்னும் ஒளிர்கின்றது

நீயும் மனுசன் என்று கூறி

உயிர் எரியும் வாசம் வீசுகின்றது

பெருக்கெடுத்து ஓடும் குருதியின் மேல்

மிதந்து வரும் தீபங்கள்

தலை குனிந்து மண்டியிட்டு கூனிக் குறுகியவர்களின்

தோழ்களை எப்போதும் தொடும் ஒரு நேச நெருப்பு

எல்லாம் இழந்த பின்பும்

பயம் சூழ அடிமைத்தனம் வந்த பின்பும்

எட்ட இருந்து ஏவல் செய்யும்

என்போன்றவர்களும்

தூய ஒளியின் முன் குற்றவாளியாய் நிற்கின்றோம்

நாங்கள் தவறுடன் தான் பிறக்கின்றோம்

தவறை நியாயப்படுத்துவோம்

தவிர

எப்போதும் திருந்தியதில்லை

திருத்தம் பெற்ற ஒளிகள்

திசை காட்டி நிற்கின்றது

எதிரி கருமேகமாய் கவிழ்ந்து

எங்கள் நிலத்தை மறைத்தான்

எங்கள் துரோகங்கள்

புயலாய் வீசியது

இடிகளாய் குண்டுகள் முழங்க

குருதி ஆறாய் ஓடியது

இதற்குள் என்னும் நம்பிக்கையாய்

எரியும் நெருப்பு

இந்த நெருப்பொன்றுதான்

எனக்கும் என்பேரனுக்கும்

எஞ்சிய சொத்து

உயிர்கருகி எரியும் வாசம்

இன்னாளில் மணக்கின்றது

எனக்கும் எட்டப்பர்களுக்கும்

மண்டியிட்ட மக்களுக்கும்

மற்றும் அனைவருக்கும் மணக்கின்றது

இதுவரை எதிரியை சுட்டெரித்த நெருப்பு

இனி என்னைச் சுட்டெரிக்கும்

நான் மனுசனாக இருந்தால்

எல்லாம் இழந்த பின்பும்

பயம் சூழ அடிமைத்தனம் வந்த பின்பும்

எட்ட இருந்து ஏவல் செய்யும்

என்போன்றவர்களும்

தூய ஒளியின் முன் குற்றவாளியாய் நிற்கின்றோம்

நாங்கள் தவறுடன் தான் பிறக்கின்றோம்

தவறை நியாயப்படுத்துவோம்

தவிர

எப்போதும் திருந்தியதில்லை

திருத்தம் பெற்ற ஒளிகள்

திசை காட்டி நிற்கின்றது

இதுவரை எதிரியை சுட்டெரித்த நெருப்பு

இனி என்னைச் சுட்டெரிக்கும்

நான் மனுசனாக இருந்தால்

தன்னையும் தன் பிள்ளைகளையும், தன் குடும்பத்தினையும் மிகவும் பாதுகாப்பான சூழலில் வைத்துக் கொண்டு, தமக்குள் சன்னதம் கொண்டு, நெருப்பு வரிகள் எழுதி இன்னொருவனையும் அவனின் பிள்ளைகளையும் மட்டும் போரிற்காய் தயார் படுத்தி வெறும் கோசமுடன் வெற்று கவிதை எழுதும் புலம் பெயர் தமிழ் இலக்கியச் சூழலில் இப்படியான ஒரு சில இலக்கிய நேர்மை கொண்ட யதார்த்தமான கவிதைகள் வருவது சந்தோசமாக இருக்கின்றது.

எதிரி கருமேகமாய் கவிழ்ந்து

எங்கள் நிலத்தை மறைத்தான்

எங்கள் துரோகங்கள்

புயலாய் வீசியது

இடிகளாய் குண்டுகள் முழங்க

குருதி ஆறாய் ஓடியது

இதற்குள் என்னும் நம்பிக்கையாய்

எரியும் நெருப்பு

நாம் எம் மக்களுக்கு செய்த துரோகங்கள் தான் எமது வாழ்வாகியது. இறுதிக் கணம் வரைக்கும் மக்களை மீட்கின்றோம் என வீதியில் இறங்கி போராடிய போதும் எம் விரல்கள் ஒரே திசையை நோக்கியே குற்றம் சுமத்திய போது நாம் மக்கள் விடுதலை எனும் உன்னத கோட்பாட்டின் முன் அன்றே தோற்றுப் போனோம். எமக்கு மக்களை விட, எம் வரட்டு கெளரவம் முக்கியமாகிப் போன போது எஞ்சி இருந்த நம்பிக்கையும் எமக்குள்ளே சாகடிக்கப் பட்டது தான் யதார்த்தம்.

இதுவரை எதிரியை சுட்டெரித்த நெருப்பு

இனி என்னைச் சுட்டெரிக்கும்

நான் மனுசனாக இருந்தால்

வாழ்வின் இறுதி கணத்தின் ஈற்றுத் துளி வரைக்கும் இந்த நெருப்பு சுடும். வேணும் என்றால் அந்த சூட்டை தணிக்க ஒரு சில நூறு டொலர்களை வவுனியா வதை முகாமில் அடை பட்டிருக்கும் மக்களுக்கு கொடுத்து கொள்வோம். ஆனால் படுக்கைக்கு போன பின் நடு இரவில் திடீரென விழிக்கும் போது சூழும் சூனியம் எம்மை மனுசராக இருந்தால் நிச்சயம் சுட்டெரிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மானத்தை தேட ஒரு வெளிச்சம்

என்னும் ஒளிர்கின்றது

நீயும் மனுசன் என்று கூறி

உயிர் எரியும் வாசம் வீசுகின்றது

அழகான வரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெருப்பொன்றுதான்

எனக்கும் என்பேரனுக்கும்

எஞ்சிய சொத்து

உயிர்கருகி எரியும் வாசம்

இன்னாளில் மணக்கின்றது

எனக்கும் எட்டப்பர்களுக்கும்

மண்டியிட்ட மக்களுக்கும்

மற்றும் அனைவருக்கும் மணக்கின்றது

இதுவரை எதிரியை சுட்டெரித்த நெருப்பு

இனி என்னைச் சுட்டெரிக்கும்

நான் மனுசனாக இருந்தால்

சுகன் இதயத்தைத் திறந்து கொட்டியிருக்கிறீர்கள்

இதுவரை எதிரியைச் சுட்டெரித்த நெருப்பு

இனி என்னைச் சுட்டெரிக்கும் நான் மனிதனாக இருந்தால்.

நிச்சயமாய் சுட்டெரிக்கும்.

  • 3 years later...
  • தொடங்கியவர்

[size="3"]27/11/2012[/size]

[size="3"]தினமும்[/size][size="3"] [/size]

[size="3"]கங்கண கிரகணமாய் சிங்களம்[/size][size="3"] [/size]

[size="3"]சந்திர கிரகணமும் சூழ[/size][size="3"] [/size]

[size="3"]இருள் கவிழ்ந்த தேசத்தில் [/size][size="3"] [/size]

[size="3"]உயிரில் எரியும் விளக்குகள்[/size][size="3"] [/size]

[size="3"]குருடனுக்கு நடப்பதற்கு குச்சித் தடிபோல்[/size][size="3"] [/size]

[size="3"]இருட்டில் நடக்க ஒரு வெளிச்சம்[/size][size="3"] [/size]

[size="3"] [/size]

[size="3"]சூரிய கிரகணத்தால் அணைக்கவோ[/size]

[size="3"]சந்திரகிரணகத்தால் திருடிவிற்கவோ முடியாத விளக்குகள்[/size][size="3"] [/size]

[size="3"]இருள் கவிழ்ந்த தேசத்தில்[/size][size="3"] [/size]

[size="3"]வறண்ட விழிகளில் குருதியுடன் கசிந்து சுரக்கும்[/size][size="3"] [/size]

[size="3"]கண்ணீரில் இந்தத் திரிகள் தன்னில் பற்றிக்கொள்ளும்[/size][size="3"] [/size]

[size="3"]கிரகணங்கள் விலகும் வரை [/size][size="3"] [/size]

[size="3"] [/size]

[size="3"]சந்திர கிரணத்தில் பிறந்து[/size]

[size="3"]இருளை விலக்க மறுத்து [/size][size="3"] [/size]

[size="3"]வெளிச்சங்களை தேடி ஒடிய[/size][size="3"] [/size]

[size="3"]விட்டில் பூச்சியாய் நான் [/size][size="3"] [/size]

[size="3"]என்னெரு விளக்கில் விளுந்து மடியாமல்[/size][size="3"] [/size]

[size="3"]என்னை தற்காத்துக்கொள்ள[/size][size="3"] [/size]

[size="3"]தீபங்களை கையில் கொண்டு பறக்க முற்படுகின்றேன்[/size][size="3"] [/size]

[size="3"]அது இருள் கவிழ்ந்த தேசத்தின் சொத்து[/size][size="3"] [/size]

[size="3"]குருடனின் குச்சித்தடி[/size][size="3"] [/size]

[size="3"]இருகால் இழந்தவனின் ஊன்றுகோல்[/size][size="3"] [/size]

[size="3"]கண்ணீரை அர்த்தப்படுத்தி அதில் எரியும் விளக்கு[/size][size="3"] [/size]

[size="3"]என்ற தெளிவை இன்னாளில் மீளப் புதுப்பித்தக்கொள்கின்றேன்.[/size][size="3"] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உயிர்கருகி எரியும் வாசம்[/size]

[size=4]இன்னாளில் மணக்கின்றது[/size]

[size=4]எனக்கும் எட்டப்பர்களுக்கும்[/size]

[size=4]மண்டியிட்ட மக்களுக்கும்[/size]

[size=4]மற்றும் அனைவருக்கும் மணக்கின்றது[/size]

[size=4]இதுவரை எதிரியை சுட்டெரித்த நெருப்பு[/size]

[size=4]இனி என்னைச் சுட்டெரிக்கும்[/size]

[size=4]நான் மனுசனாக இருந்தால்[/size]

உயிர் கருகிய வாசனை, எல்லோருக்கும் தான் மணக்கின்றது!

சிலர் அந்த வாசனையைக் கூட, சாம்பிராணி வாசனையாகத் தானே, நினைக்கின்றார்கள்!

கவிதைக்கு நன்றிகள்!

உயிர்கருகி எரியும் வாசம்
இன்னாளில் மணக்கின்றது
எனக்கும் எட்டப்பர்களுக்கும்
மண்டியிட்ட மக்களுக்கும்
மற்றும் அனைவருக்கும் மணக்கின்றது

 

படைப்புக்கு மிக்க நன்றிகள் சுகன் என்கின்ற சண்ட மாருதன் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

 சிலர் தவிர மனிதம் மறந்து மந்தைகளாகிக் கொண்டிருக்கும் தமிழனை எதுவுமே ஒன்றும் செய்யப் போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.