Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடபகுதியில் பாகிஸ்தான் படையினருக்கு சிறிலங்கா பயிற்சி: குழப்பத்தில் இந்தியா

Featured Replies

வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்கான படைப் பயிற்சி நிலையங்களை அமைக்கப்போவதாக சிறிலங்கா தரைப் படைத் தளபதி ஜகத் ஜயசூரிய அறிவித்திருப்பதையடுத்து இந்தியத் தரப்பு குழப்படைந்திருப்பதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள ஆசிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஆதிக்கப் போட்டியை எவ்வாறு திறமையாகவும் தந்திரோபயமாகவும் பயன்படுத்தி அதனைத் தமக்கு சாதகமாகக்கிக்கொள்வது என மகிந்த ராஜபக்ச அரசு திட்டமிட்டு காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'டெயிலி மிரர்' ஆங்கில நாளேடு விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அதில் முக்கியமான பகுதிகளை இங்கு தருகின்றோம்:

"இந்தியாவின் தென் கரையோரப் பகுதிக்கு அண்மித்ததாக எதிரி நாட்டு படையினர் முகாமிடுவது தமது பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என இந்தியப் ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருப்பதையடுத்தே இந்த விடயத்தையிட்டு இந்தியத் தரப்பு விழிப்படைந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தென்பகுதியில் அணுசக்தி நிலையங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா சிறிலங்காவுக்கு முழுமையான ஆதரவை வழங்கியமைக்குப் பிரதான காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளிடம் இருந்த வான் படைதான் எனவும் இந்திய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

விடுதலைப் புலிகள் தமது வான் படையை தொடங்கியபோது இந்தியா அதிர்ச்சியடைந்தது. இது தென்னிந்தியாவில் உள்ள தமது படை முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என இந்தியா கருதியமையே இதற்குக் காரணம்.

வான் புலிகள் தமது செயற்பாடுகளை தொடங்கிய உடனடியாகவே அவற்றின் பறப்பைக் கண்டறிவதற்கான கதூவீகளை இந்தியா வழங்கியது. அத்துடன், தென்னிந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் கதூவீகளை இந்தியா பொருத்திக்கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிக்க வேண்டும் என இந்தியா கருதியது. அதனால்தான் இதனைச் செய்வதற்கான உதவிகளை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கியது.

வலிந்த தாக்குதல்களுக்கு உரிய ஆயுதங்களைத் தாம் சிறிலங்காவுக்கு வழங்கவில்லை என இந்தியா தெரிவித்திருந்தாலும் கூட, அவ்வாறான ஆயுதங்களைக் கூட இந்தியா வழங்கியது என்பது இப்போது வெளிப்படையாகி இருக்கின்றது.

இந்தியா ஆயுதங்களை வழங்கிய அதேவேளையில், சீனா, பாகிஸ்தான் ஆகியன ஆயுதங்களை வழங்குவதற்கு தடையாகவும் இருக்கவில்லை. தமக்கு எதிராக உருவாகக்கூடிய ஒரு அமைப்பை அழிப்பதற்கு இந்த நாடுகள் உதவுகின்றன என்ற அடிப்படையிலேயே இந்தியா இதனைப் பார்த்தது.

ஆனால், உள்நோக்கம் எதுவும் இல்லாமல் சீனாவும், பாகிஸ்தானும் சிறிலங்காவுக்கு உதவவில்லை. போர் முடிவடைந்திருக்கும் நிலையில் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுதல் என்ற போர்வையில் பெருமளவு இந்தியப் படையினர் தற்போது வடபகுதியில் இறக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதனால், வடபகுதியில் முகாம்களை அமைப்பதற்கு உதவுவதற்கு சீனா முன்வந்திருக்கும் அதேவேளையில், தமது படையினருக்கு வடபகுதியில் பயிற்சியளிக்க வேண்டும் என பாகிஸ்தான் சிறிலங்காவைக் கோரி இருக்கின்றது.

பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கை சிறிலங்காவினால் நிராகரித்துவிடக்கூடிய ஒன்றல்ல. தற்போதைய அரசின் காலத்தில் மட்டுமன்றி முன்னைய ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் இருந்தே சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் படைத்துறை ரீதியாகப் பெருமளவுக்கு உதவி வந்திருக்கின்றது.

இந்தியா விடுதலைப் புலிகளுக்கு உதவிய காலத்தில் கூட பாகிஸ்தான் போரை முன்னெடுப்பதற்காக சிறிலங்காவுக்கே உதவி வந்திருக்கின்றது.

பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கையால் இந்தியாவே பெரும் அதிர்ச்சியடைந்து இருப்பதாகத் தெரிகின்றது. சீனாவும், பாகிஸ்தானும் சிறிலங்காவுக்கு உதவியது விடுதலைப் புலிகளால் உருவாகிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காகவே எனக் கருதிய இந்தியாவைப் பொறுத்தவரையில், பாகிஸ்தான் வடபகுதியில் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக வருவது ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது.

இந்திய ஆய்வாளர்கள் சிலரின் கருத்துப்படி தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைகள், விடுதலைப் புலிகளால் இந்தியா எதிர்கொண்டிருக்கக்கூடிய அச்சுறுத்தலைவிட மிகவும் பாரியது. போர் முடிவுக்கு வந்தபின்னர் சீனாவையும், பாகிஸ்தானையும் பயன்படுத்தி சிறிலங்காவால் தம்மை அச்சுறுத்த முடியாது என்றே இந்தியா கணக்குப் போட்டிருந்தது.

அத்துடன், சிறிலங்காவில் இந்த நாடுகளின் செல்வாக்கும் தேய்ந்து போய்விடும் என்றே இந்தியா கருதியது.

தற்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கும் போது இந்தியாவின் இந்த நம்பிக்கை யதார்த்தமாவதற்கு பாகிஸ்தானும், சீனாவும் அனுமதிக்கும் போல தெரியவில்லை. இந்த நிலைமை சிறிலங்காவுக்குச் சாதகமாகவே உள்ளது. இந்த ஆசிய ஆதிக்கப் போட்டியை மகிந்த ராஜபக்ச அரசு திறமையாகவும், தந்திரோபயமாகவும் பயன்படுத்தி முழுமையாக தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthinam

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆய்வாளர்கள் சிலரின் கருத்துப்படி தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைகள், விடுதலைப் புலிகளால் இந்தியா எதிர்கொண்டிருக்கக்கூடிய அச்சுறுத்தலைவிட மிகவும் பாரியது. போர் முடிவுக்கு வந்தபின்னர் சீனாவையும், பாகிஸ்தானையும் பயன்படுத்தி சிறிலங்காவால் தம்மை அச்சுறுத்த முடியாது என்றே இந்தியா கணக்குப் போட்டிருந்தது.

அத்துடன், சிறிலங்காவில் இந்த நாடுகளின் செல்வாக்கும் தேய்ந்து போய்விடும் என்றே இந்தியா கருதியது.

அடியெடா ..... சக்கை எண்டானாம் .

இந்தியா , இலங்கை விவகாரத்தில் போட்ட கணக்கு எப்ப சரியாக இருந்திருக்கின்றது .

விடுதலைப் புலிகள் எத்தனை தரம் சொல்லியிருப்பார்கள் .... " இந்தியா எமது நட்பு நாடு" என்று ,

எல்லாவற்றையும் உதறித்தள்ளிய இந்தியாவுக்கு , இதுவும் வேணும் இன்னும் வேணும் .

இந்தியாவின் தென்பகுதியில் அணுசக்தி நிலையங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா சிறிலங்காவுக்கு முழுமையான ஆதரவை வழங்கியமைக்குப் பிரதான காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளிடம் இருந்த வான் படைதான் எனவும் இந்திய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

விடுதலைப் புலிகள் தமது வான் படையை தொடங்கியபோது இந்தியா அதிர்ச்சியடைந்தது. இது தென்னிந்தியாவில் உள்ள தமது படை முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என இந்தியா கருதியமையே இதற்குக் காரணம்.

வான் புலிகள் தமது செயற்பாடுகளை தொடங்கிய உடனடியாகவே அவற்றின் பறப்பைக் கண்டறிவதற்கான கதூவீகளை இந்தியா வழங்கியது. அத்துடன், தென்னிந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் கதூவீகளை இந்தியா பொருத்திக்கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிக்க வேண்டும் என இந்தியா கருதியது. அதனால்தான் இதனைச் செய்வதற்கான உதவிகளை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கியது.

:unsure:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடியெடா ..... சக்கை எண்டானாம் .

இந்தியா , இலங்கை விவகாரத்தில் போட்ட கணக்கு எப்ப சரியாக இருந்திருக்கின்றது .

விடுதலைப் புலிகள் எத்தனை தரம் சொல்லியிருப்பார்கள் .... " இந்தியா எமது நட்பு நாடு" என்று ,

எல்லாவற்றையும் உதறித்தள்ளிய இந்தியாவுக்கு , இதுவும் வேணும் இன்னும் வேணும் .

தமிழர்களை அழிக்க உதவியா இந்தியாவினது தென்மண்டலப் பொருளாதார மையங்கள் மீது இனிக் குண்டுகள் வெடிக்கப்போகிறது. எங்களுக்கு மகிழ்வே. வடக்கையும் தெற்கையும் பாக்கிஸ்தான் தாக்க , சீனாவும் குட்ட அப்போதுதான் இந்தியத் திமிர் உணரும். தமிழரின் குருதியில் இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்று கண்ட கனவு பொய்த்து, தமிழீழமே இந்தியாவிற்கான பாதுகாப்புக்கு உதவும் என்பதை அனுபவ ரீதியாகப்படிக்கப் போகிறது.

எங்களை அழித்தவர் அழிந்துபோகவே. இங்கொரு நீதி தோன்றிட வேண்டுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர் அனைவரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு செங்கம்பள வரவேற்பு வரவேற்பு வழங்வதுடன் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்கி இயலுமானால் ஏவுகணைகளை இந்தியாவின் வடதிசை நோக்கி நிறுவுவதற்கு தமது காணிகளையும் வழங்கி ஆதரவு கொடுக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.

விடுதலைப் புலிகள் தமது வான் படையை தொடங்கியபோது இந்தியா அதிர்ச்சியடைந்தது. இது தென்னிந்தியாவில் உள்ள தமது படை முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என இந்தியா கருதியமையே இதற்குக் காரணம்.

வான் புலிகள் தமது செயற்பாடுகளை தொடங்கிய உடனடியாகவே அவற்றின் பறப்பைக் கண்டறிவதற்கான கதூவீகளை இந்தியா வழங்கியது. அத்துடன், தென்னிந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் கதூவீகளை இந்தியா பொருத்திக்கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிக்க வேண்டும் என இந்தியா கருதியது. அதனால்தான் இதனைச் செய்வதற்கான உதவிகளை சிறிலங்கா அரசுக்கு இந்தியா வழங்கியது.

புலிகளின் வான்படைய விட இந்தியா முக்கியமாக அளிக்க நினைத்தது புலிகளின் ஊடுருவி தாக்கும் திறண் கொண்ட கரும்புலிகள் அமைப்பை.. தமிழர்களின் நடமாட்டம் உள்ள கட்டுநாயக்காவில் புலிகளின் சிறு படையணி பெரிய சேதத்தை விளைவித்த போதையும் விட முழு சிங்கள பகுதியான அனுராதபுரத்தில் புலிகளின் ஓரளவு பெரிய படையணி ஊடுருவி ஏற்படுத்திய சேதங்களால் இந்தியா அதிர்ந்து போனது என்பதுதான் உண்மையானது. ( புலிகளை விட புலிகளின் உத்திகளை மற்றவர் பின் தொடர்ந்து இந்தியாவுக்கு சேதம் விளைவித்து விடுவார்களோ என்பதுதான் இந்தியாவின் முக்கியமான அதிர்ச்சிக்கு காரணம்)

அதன் பின்னர் தான் அவசரமான ஒரு கூட்டதின் பின்னர் இலங்கைக்கு விமானங்களுக்கு கடன் களுக்கு பிணை நிற்பது முதல் முழுமையான உதவிகளை செய்வது என முடிவு எடுக்க பட்டது.. புலிகளின் விமானங்கள் என்பது ஒரு பகுதியான கதை மட்டுமே...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமானப்படையினால்த்தான் அவர்கள் அழிக்கப்பட வேண்டி வந்தது எனும் பூச்சாண்டியை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தவித வெற்றிகரமான தாக்குதல்களையும்(புலிகளின் தரைப்படையின் துணையின்றி) வான்புலிகளால் நடத்தமுடியவில்லை என்ற உண்மை இந்தியாவுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை ஏற்க முடியாது. குறைந்தது கொலன்னாவையில் 1995 இல் மீதம் விடப்பட்ட எரிவாயுத்க் குதங்களையோ அல்லது சப்புகஸ்கந்தையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைகளையோ புலிகளால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். சிங்கள விமானப்படையின் சில விமான ஓடுபாதைகளையும், ஒரு சில அரச ராணுவ கட்டடங்களையும் மட்டுமே அவர்களால் அழிக்க முடிந்ததென்பதும் நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

ஆனால் புலிகள் ஏனைய தாக்குதல் அணிகள் நடத்திவந்த தாக்குதல்கள் பல மடங்கு அழிவையும், பாரிய ராணுவ உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்பதே உண்மை. சில ஆய்வாளர்களும், பத்திரிகைகளும் வான்புலிகளின் உருவாக்கம்தான் புலிகள் மீதான் இந்தியாவின் பொறாமைக்குக் காரணம் என்று எழுதினாலும், உண்மையிலேயே புலிகளின் இருப்பே இந்தியாவைப் பொறுத்தவரை பாதகமானது. அதனாலேயே அழித்தார்கள். இதில் தமிழரின் நலனோ, அல்லது இந்திய நலனோ கருத்தில் எள்ளளவிற்கும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அடியெடா ..... சக்கை எண்டானாம் .

இந்தியா , இலங்கை விவகாரத்தில் போட்ட கணக்கு எப்ப சரியாக இருந்திருக்கின்றது .

விடுதலைப் புலிகள் எத்தனை தரம் சொல்லியிருப்பார்கள் .... " இந்தியா எமது நட்பு நாடு" என்று ,

எல்லாவற்றையும் உதறித்தள்ளிய இந்தியாவுக்கு , இதுவும் வேணும் இன்னும் வேணும் .

உண்மை தான்

அண்ணா..

ஒருக்கா இல்லை பல முறை சொன்னார்கள் இந்தியா எங்கட நட்ப்பு நாடு என்று..இண்டைக்கு :(

Edited by kuddipaiyan26

... இங்குள்ள கடைத்தெருவில் என்னை மாதிரி மழைக்கும் பள்ளிப்பக்கமே ஒதுங்காத இரண்டு கதைத்துக் கொண்டு நின்றது ...

.... "புதுப்படங்கள் உலாவுகிறது பாத்தனியோ?" ..

... "யார் நடிச்சது?" ...

... "சினிமா இல்லையடா, தலைவர் பிளேனுகள் எழும்புகிறதை, தளபதிகளுடன் நின்று பார்க்கிறார்" ...

... "எட, உண்மையோ எல்லாம் அழிச்சு போச்சு எண்டாங்கள், ஆனால் ..." ...

... "எட, இது புதிசில்ல, பழசுதான்" ...

... " ம்ம்ம்" ...

... "ஒண்டு தெரியுமோ, உந்த புளேனுகளை இந்திய ரோக்காரந்தானாம் எங்களுக்கு கொடுத்தது" ...

... "உது ஒரு கதையோ, உங்க வெளியிலிருந்து எங்கடை ஆட்கள் எவ்வளவு கஸ்டப்பட்டுக் கொண்டு போனவங்களாம்" ...

... "அடேய், அவங்கள் நேரே கொடுக்கேலையாம், அப்பிடி இப்பிடி சுத்தி போயிருக்குதாம்" ...

..."உதை நீ, நம்புகிறாயோ? புலியை வளர்க்க இந்தியா?" .....

... "இது வளர்க்க அல்ல, அழிக்க கொடுத்ததாம்" ..

.. "என்ன சொல்கிறாய்?" ..

... "நாங்கள் பறந்து சாகஷம் செய்ய, அவங்கள் வட்டம் போடத்தொடங்கீட்டாங்கள், .... அவங்கடை அணு உலைகளோ, பொருளாதார நிலைகளோ தெற்கில்தான் பெருமளவுள்ளது. அவைகளுக்கு, இப்பறப்பதுகளால் ஆபத்து வரும் என்ற வாதத்தைதானம் சர்வதேசம் முன் இந்தியா வைத்ததாம்" ...

..."உதாலை அவ்னுக்கு ஆபத்து வரும் என்றதை உலகம் நம்புமோ?" ....

... "நம்புகிறதோ, இல்லாமல் விடுகிறதெல்லாம், பின்லாடனின் 9/11 உடன் மாற்றுக்கருத்தில்லாமல் போட்டுதாம். அதுவும் முன்னால் பிரதம மந்திரி உடபட பலரின் கொலைகளும் சுட்டிக்காட்டப்பட்டதாம்" ...

... "ஆஆ..." ...

... " அதை விட நாங்கள் நல்லவர்களாக இருந்தாலும், எங்களால் எதுவும் முடியும் என்ற கணக்கை உலகம் ஏற்கனவே போட்டிருந்ததாம்" ....

... "அப்புறம்" ...

.... "என்ன, இந்தியா போட்ட வட்டத்துக்கு, உலகம் தலையாட்டிச்சுதாம்! அதிலை இந்த ஒப்பங்களுக்கு முதல் ஒப்பம் இட்டது சமாதான தூதுவராக வந்த நோர்வேயாம்!!!!" ......

... "ஐயோ, அப்படியோ" ....

.... " அதுகப்புறம் என்ன எல்லாம் முடிச்சுது" ....

... கேட்டுக்கொண்டிருந்த அரைகுறையான எனக்கே, இந்த இரண்டும் முழுக்கழண்டதுகளாக தெரிந்தது. கழண்டதுகளின் கதைகளை நாம் ஏன் கவனத்தில் எடுக்க வேண்டும்??????????????? மென்ரலுகள்!!!!!!!!!!!!!!!!

http://www.yarl.com/forum3/index.php?showt...63027&st=40

எமது இலக்கற்ற Adventureகளால் இன்று நாம் .......... இழிவுநிலையில்!!!

மீள முடியாத ..............?!?!?!......

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showt...63027&st=40

எமது இலக்கற்ற Adventureகளால் இன்று நாம் .......... இழிவுநிலையில்!!!

மீள முடியாத ..............?!?!?!......

இது உங்கட சொந்தக் கருத்துதானே..! :( அல்லது முடிவெடுத்த ஆக்களே வந்து சொன்னவையோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

அரை குறை என்று ஒத்துக்கொண்ட பின்னர் உபதேசம் செய்தால் யார்கேட்பார்கள்? புலிகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்பது அபத்தம். புலிகளின் விமானப் படையினால் இந்தியாவுக்கு ஆபத்து என்று சொல்வதைப் போல வெட்கக் கேடு வேறு இல்லை. பாகிஸ்தான் காரனும் சீனாக் காரனும் அணுக்குண்டோட நிற்கிறாங்கள். புலிகளுக்குப் பயந்தவைக்கு வல்லரசுக் கனவு வேற??????????????????????????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை அடிக்கிறது சிலருக்கு adventure ஆக தெரியுது. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.