Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு எழுதிய கதைகளில் வாழாது போயினர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல மெல்லக் கசியும்

உண்மைகளிலிருந்து

நீண்ட பெருவெளிக் கனவு

தற்கொலை செய்து கொள்கிறது.....

முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து

சொட்டுச் சொட்டாய்

சேர்த்து வைத்தவையெல்லாம்

இரத்தம் குளி(டி)த்துப்

பெருத்து நாறிப் பிணங்களாய்

மனித எலும்புக் கூடுகளாய்

வெளிவருகிறது.

நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய்

விட்டுச் சென்ற வார்த்தைகளும்

ஆள்மாறி ஆள்மாறி

அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு

துயர் வலியில் தடயமறிவிக்காமல்

தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள்.

சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள்

சாவின் நிணம்மாறாத்

தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து....

யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று

ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால்

அவர்கள் உண்மை அடையாளம்

அழிக்கப்படுகிறார்கள்.

களம் விட்டால் அன்றி நிலமறியாப் பிள்ளைகளின்

நிலமை கவலை தருவதற்கும் மேலாய்

இக்காலத்தைச் சப்பித்துப்பிச் சபிக்கிறது.

இன்னொருவன் போராட

இன்னொருத்தி இறந்து போக

மிடுக்கோடு கவியெழுதிய கையில் - அவர்கள்

விட்டுச் சென்ற துயரம் வழிகிறது.

தோழியே என்றவன்(ள்) தொடர்பறுத்துத்

தொலைந்ததும்....

தங்கையே என்றவன் தன் கடைசிச் சிரிப்பை மட்டும்

தந்துவிட்டுச் சென்றதும்....

அக்கா என்றவன் அசுமாத்தமின்றிப் போனதும்....

மகளே என்றவர் மவுனமாய் ஆனதும்....

மருமகளே என்றவர் மண்ணணையில் வீழ்ந்ததும்.....

எல்லாம் போயிற்று

எல்லார் உயிரும் என்னைப் போல

இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்

வாழாது போயினர்.....?

வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்

பெயரிட்ட பிள்ளைகளும்

துணைவந்த துணைவிகளும்

தனித்துப் போயினர்......

ஒரு நேர உணவிற்கும்

ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்

எவரையெல்லாமோ இறைஞ்சி....

எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான

இயலாத் துயரோடு

இன்னும் நம்புகிறார்கள்....

என்னை உன்னை எம் எல்லோரையும்......

01.01.2010

"ஒரு நேர உணவிற்கும்

ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்

எவரையெல்லாமோ இறைஞ்சி....

எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான

இயலாத் துயரோடு

இன்னும் நம்புகிறார்கள்....

என்னை உன்னை எம் எல்லோரையும்"

இதைத்தான் என்னால் இன்னமும் நம்பமுடியாமல் இருக்கின்றது.குழப்பம் நிறைந்த" மே" யும், அடுத்த "யூன்"இயும் விடுவம்.அதன் பின் நாம் முதலில் செய்திருக்கவேண்டியது என்ன,உலகம் முழுக்க பெரும் பணத்துடன் வியாபித்திருந்த இந்த அமைப்பு உங்களை நம்பிவந்த போராளிகளையும்,பொது மக்களையும் எப்படியாவது வெளியில் எடுப்பதற்கு ஒரு பொது வேலைதிட்டத்துடன் உலகம் முழுக்க இறங்கியிருக்க வேண்டும்.அதைவிட்டு இரத்தம் இன்னமும் காயவில்லை,பலருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,அதற்கிடையில் அங்கு எதுவுமே நடக்காத மாதிரியும்,எங்களுக்கும் அவர்களுக்கும் எதுவித சம்பந்தமே இல்லாத மாதிரியும் "வட்டுக்கோட்டை தீர்மானம்" "நாடு கடந்த தமிழீழம்" என்று இறங்கிவிட்டார்கள். அதற்கு புலம் பெயர்ந்தவர்களிடமும்,இளையவர்களிடமும் போராட்டத்தை தலைவர் கொடுக்க சொன்னவர் என்ற நொண்டிச் சாட்டு வேறு.

"கனடியர்கள் என்ன நினைகின்றார்கள்"என்று மச்சான் ஒரு இணைப்பு இணைத்திருந்தார்.எத்தனை பேர் வாசித்தார்கள்,பதில் எழுதினார்கள்.அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்று எவருக்கும் அக்கறையில்லை.எல்லாம் படித்த பெடியங்கள் பலரின் குடும்பங்கள் அவர்களை நம்பித்தான் இருந்தன.

வானொலியிலும்,டீ.வீ யிலும் வந்து ஏதேதோ கதைக்கின்றார்கள்.

கடைசி ஒட்டுக்குழுக்களாவது அவர்களைப் பற்றி அக்கறைபடுகின்றார்களே என்று ஆறுதல் பட வேண்டியதுதான்.

நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

கொடுந் துயரை வெளிப்படுத்தும் உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்

இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களை விடுவிக்கும் நிபந்தனையை பிரதானமாக முன்வைத்திருக்கவேண்டும். இதைவிட தற்போதைய அத்தியாவசியம் என்ன இருக்கின்றது. இவ்வளவு அழிவுகளும் அரங்கேறியபின் இந்தியாவுக்கு திரும்ப நக்கப் போயிருக்கின்றார்கள். இவர்களை விட்டால் டக்ளஸ் சங்கரி போன்றதொரு கூட்டம். தமிழ்நாட்டு அரசியலோடு ஒப்பிடுகையில் எமது நிலமை அதைவிட பன்மடங்கு அருவருக்கத் தக்கதாக உள்ளது.

புலத்தேசியத்தின் ஆதரவு தமிழீழம் என்ற பின்னணி அடயாளத்தை நோக்கியது. அது நிறைவேறாது என்ற நிலை வந்ததும் தாயக மக்களின் விருப்புவெறுப்புகளை கடந்து வேறு வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. மக்களின் அவலங்களோ மனிதஉரிமைக்கான குரல்களோ சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது தொடர்பான முனைப்புகள் எதுவுமற்று அதன் தேவை என்னவோ அதைநோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை தோண்டி எடுத்து இவ்வளவு பூராயம் புடுங்கும் புலத்தேசியம் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் போராடி சிறைப்பட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான பிள்ளைகளை விடுவிப்பது தொடர்பாக ஏதாவது முயற்ச்சித்துள்ளதா?

இயலாத் துயரோடு

இன்னும் நம்புகிறார்கள்....

என்னை உன்னை எம் எல்லோரையும்......

மன்னிக்கவேண்டும் நாம் தமிழீழத்தை நம்புகின்றோம். உங்கள் நம்பிக்கைகளுக்கு செவிசாய்க்க நேரமில்லை. போரில் இதெல்லாம் சகஜம்.

கடைசி ஒட்டுக்குழுக்களாவது அவர்களைப் பற்றி அக்கறைபடுகின்றார்களே என்று ஆறுதல் பட வேண்டியதுதான்.

நிச்சயமாக.. அவலப்படும் மக்கள் இனி டக்ளஸ் பிள்ளையான் கருணா போன்றவர்களை நம்புவதை விட வேறு ஒரு மார்க்கமும் இல்லை.

சாந்தி,

சிறையில் இருக்கும் போராளிகள் பற்றி இன்னமும் நினைத்துகொண்டு கவிதை வடிக்க உங்களுக்கு என்ன விசரா?

இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களை விடுவிக்கும் நிபந்தனையை பிரதானமாக முன்வைத்திருக்கவேண்டும். இதைவிட தற்போதைய அத்தியாவசியம் என்ன இருக்கின்றது. இவ்வளவு அழிவுகளும் அரங்கேறியபின் இந்தியாவுக்கு திரும்ப நக்கப் போயிருக்கின்றார்கள். இவர்களை விட்டால் டக்ளஸ் சங்கரி போன்றதொரு கூட்டம். தமிழ்நாட்டு அரசியலோடு ஒப்பிடுகையில் எமது நிலமை அதைவிட பன்மடங்கு அருவருக்கத் தக்கதாக உள்ளது.

என்ன சுகன் இப்படிச் பகிடி விடுகின்றீகள்.... த.தே.கூ இனதும், சம்பந்தர் ஐயா வினதும் அரசியல் சாணக்கியம், எதிரியை அகற்ற இன்னொரு எதிரியை கொண்டு வரும் தந்திரம், சிங்கள் பேரினவாத அரசியலமைப்பை போற்றும் ஆழ்ந்த ஞானம் என்பனவெல்லாம் புரியாமல் இப்படிச் சொல்கின்றீர்களே... இப்படியான நுண்ணறிவு இருப்பவர்கள் எப்படி சிறையில் இருக்கும் கேடு கெட்ட எமக்காக போராடப் புறப்பட்ட போராளிகள் பற்றிச் சிந்திக்க முடியும்...

அப்படி நீங்கள் சொல்லும் விடயத்தை முன்வைத்தால் பிறகு மகிந்த ஐயா அதனையே சிங்கள மக்கள் முன் கொண்டு சென்று இனவாத முலாம் பூசி சரத்துக்கு தோல்வியை ஏற்படுத்தித் தந்துவிடுவார் என்று சொல்லிச் சமாளிக்கக் கூட எம் இனத்தில் பலர் உண்டு தெரியுமோ...

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நுண்ணறிவு இருப்பவர்கள் எப்படி சிறையில் இருக்கும் கேடு கெட்ட எமக்காக போராடப் புறப்பட்ட போராளிகள் பற்றிச் சிந்திக்க முடியும்...

தற்போதய நிலையில் சிறையிலுருப்பவர்களிடம்.......???

போய்க்கேட்டாலும்

மூச்சுவிட உதவுங்கள் என்ற பதில்தான் வரும்

வரலாற்றுக்கதை

தமிழீழம் கூட அதற்கு பிறகுதான் நண்பர்களே......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் முதலில் செய்திருக்கவேண்டியது என்ன,உலகம் முழுக்க பெரும் பணத்துடன் வியாபித்திருந்த இந்த அமைப்பு உங்களை நம்பிவந்த போராளிகளையும்,பொது மக்களையும் எப்படியாவது வெளியில் எடுப்பதற்கு ஒரு பொது வேலைதிட்டத்துடன் உலகம் முழுக்க இறங்கியிருக்க வேண்டும்.அதைவிட்டு இரத்தம் இன்னமும் காயவில்லை,பலருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,அதற்கிடையில் அங்கு எதுவுமே நடக்காத மாதிரியும்,எங்களுக்கும் அவர்களுக்கும் எதுவித சம்பந்தமே இல்லாத மாதிரியும் "வட்டுக்கோட்டை தீர்மானம்" "நாடு கடந்த தமிழீழம்" என்று இறங்கிவிட்டார்கள். அதற்கு புலம் பெயர்ந்தவர்களிடமும்,இளையவர்களிடமும் போராட்டத்தை தலைவர் கொடுக்க சொன்னவர் என்ற நொண்டிச் சாட்டு வேறு.

அவசியமாகச் செய்ய வேண்டியவற்றுக்கு முக்கியம் கொடுக்காமல் கதையளப்பதுதான் பெரும்பணியென்ற மனநிலை இருந்திருந்தால் மே 18வரை காட்டிய உலகத்தை எழுப்பிய வீச்சை தொடர்ந்து மேற்கொண்டிப்போம். *ஆண்டிகள் போக மடமும் கலைஞ்சுது* (27வருடங்கள் முதல் பாட்டா சொல்வதுதான் ஞாபகம் வருகிறது) இதுபோல் நீங்கள் கருத்துச் சொன்னா துரோகம் நண்பரே :(

புலம் பெயர்ந்தவர்களிடமும்,இளையவர்களிடமும் போராட்டத்தை தலைவர் கொடுக்க சொன்னவர் என்ற நொண்டிச் சாட்டு வேறு.

கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியே இருக்கிற மிச்சத்தையும் சுடலைக்கு அனுப்புவதில்தானே உள்வீட்டு அரசியல் நிலமை இருக்கிறது arjun.

இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களை விடுவிக்கும் நிபந்தனையை பிரதானமாக முன்வைத்திருக்கவேண்டும். இதைவிட தற்போதைய அத்தியாவசியம் என்ன இருக்கின்றது. இவ்வளவு அழிவுகளும் அரங்கேறியபின் இந்தியாவுக்கு திரும்ப நக்கப் போயிருக்கின்றார்கள். இவர்களை விட்டால் டக்ளஸ் சங்கரி போன்றதொரு கூட்டம். தமிழ்நாட்டு அரசியலோடு ஒப்பிடுகையில் எமது நிலமை அதைவிட பன்மடங்கு அருவருக்கத் தக்கதாக உள்ளது.

கூட்டமைப்பு பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. அடுத்த பொதுத்தேர்தலில் எத்தனை ஆசனங்களைக் கவ்வுவது என்ற கணக்கில் அவர்கள் எதையும் தாங்கும் இதயமாக இத்தேர்தலில் மதில்மேல் ஏறிக்குந்தியிருக்கிறார்கள். பாச்சலா அல்லது எதுவென்பது 26இன் பின்தான் வெளிச்சம்.

புலத்தேசியத்தின் ஆதரவு தமிழீழம் என்ற பின்னணி அடயாளத்தை நோக்கியது. அது நிறைவேறாது என்ற நிலை வந்ததும் தாயக மக்களின் விருப்புவெறுப்புகளை கடந்து வேறு வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. மக்களின் அவலங்களோ மனிதஉரிமைக்கான குரல்களோ சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது தொடர்பான முனைப்புகள் எதுவுமற்று அதன் தேவை என்னவோ அதைநோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது.

தாயக மக்களின் குரல் மறுக்கப்படுகையில் அதை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் புலத்தாராக இருக்க பயணங்களின் நகர்வு தன்னியல்புக்கு ஏற்ப ஆரம்பித்துள்ளது.

உள்ளிருப்போர் வெளிவரவும் கூடாது செத்துப்போனவர்கள் கனவு செத்துக்கிடக்க உண்டியல்கள் நிரப்பி சுதந்திர தமிழீழக்கனவை ஏந்தி நிற்கும் கனவான்களின் கைகளில் கைதான உயிர்களின் கதையிருக்கிறது.

சொன்னால் கசக்கும் கனபேரைக் கலக்கும் உண்மை இதுதான்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை தோண்டி எடுத்து இவ்வளவு பூராயம் புடுங்கும் புலத்தேசியம் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் போராடி சிறைப்பட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான பிள்ளைகளை விடுவிப்பது தொடர்பாக ஏதாவது முயற்ச்சித்துள்ளதா?

வட்டக்கோட்டை சதுரக்கோட்டைக் கனவில் எஞ்சிய கோவணத்துண்டையும் கொள்ளை கொடுப்பதில் நமக்கு நிகர் யாருளர்? சிறையில் உள்ளோரை மானத்தின் மகுடம் வீரத்தின் அடையாளம் என்று வரிக்கவிதையிலும் வாயிலும் சொன்னால் போதும்தானே. அதுவே அவர்களை விடுவிக்கும் வீரமந்திரமல்லவா சுகன். சிறைகளில் இருப்போரின் குடும்பங்களில் பலர் தற்கொலைக்குத் தயாராக நிற்கிறார்கள். அவர்களுக்கான ஒரு ஒளியைக்காட்ட ஒரு வழியையும் காட்டாமல் வீராப்பில் குறைவில்லாத வீரம் நிறைந்த நமது வீரத்தை என்ன நினைத்தீர்கள்?

மன்னிக்கவேண்டும் நாம் தமிழீழத்தை நம்புகின்றோம். உங்கள் நம்பிக்கைகளுக்கு செவிசாய்க்க நேரமில்லை. போரில் இதெல்லாம் சகஜம்.

நம்பிக்கையில்லாமல் வெற்றியில்லை. ஆனால் நம்பியவர்கள் சாகக்கிடக்கிறார்கள். செவிசாய்க்க வேண்டாம் மூடிக்கொண்டிருந்தாலே கோடிபுண்ணியம்.

ஓம் போரில் சகஜம் - போர்க்களத்தின் கொடுமையும் போர்க்காலத் துயரமும் புகாத இடங்களில் இருந்து போராடுதல் அதைவிட சகஜமல்லவா. :)

சாந்தி,

சிறையில் இருக்கும் போராளிகள் பற்றி இன்னமும் நினைத்துகொண்டு கவிதை வடிக்க உங்களுக்கு என்ன விசரா?

என்ன செய்வது நிழலி விசர்பிடிக்கும் வரையிலுமாகிலும் விசராய் எழுதுவோம்.

தற்போதய நிலையில் சிறையிலுருப்பவர்களிடம்.......???

போய்க்கேட்டாலும்

மூச்சுவிட உதவுங்கள் என்ற பதில்தான் வரும்

வரலாற்றுக்கதை

தமிழீழம் கூட அதற்கு பிறகுதான் நண்பர்களே......

யதார்த்தமாக இம்முறை கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள் விசுகு. நாயை கனவைக்காட்டிலும் இன்றைய வாழ்வு மீதான நம்பிக்கைதான் அவசியமானது.

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனசுநிறைய பாரங்களை ஏத்திவைத்த கவிதை.

நன்டறாக இருக்கிறது.

எல்லோரும் நா.க.அரசு,வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று தேர்தல்கால கூட்டுவைத்து தொலைக்காட்சியில் தோன்றி

பாவ்லா காட்டுபவர்களுக்கு நடுவில் சிறையில் இருப்பவர்களையும் சிந்தித்து கவிதை எழுதும் உங்கள் கருத்துக்கள் அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி சாந்தி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரில்லாமல் கெடும் என்ற திருக்குறள்தான் ஞாபகம் வருகிறது. வெல்ல வேண்டுமெற நல் நோக்கத்துடன் இடித்தாரை எல்லாம் துரோகி என்று போட்டுத்தள்ளியாயிற்று. வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்து ஈழத்தவருக்கு மருத்துவப்பணி புரிந்தபடி ஐ.பி.கே.எப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய அந்தப் பெண் இடிபாரின் இறுதிக்குரல்கள் இப்பவும் என்காதில் ஒலிக்கிறது.

உங்கள் முகாம் பற்றிய குறுநாவல் புத்தகமாக வெளிவருவது நல்லது. உங்கள் குறு நாவல்களைப் பதிப்பிக்கும் ஆர்வம் இருப்பின் உதவ முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனசுநிறைய பாரங்களை ஏத்திவைத்த கவிதை.

இப்போதெல்லாம் பாரங்களை நினைவு கொள்ளத்தான் முடிகிறது four four bravo. தீர்மானங்களை மீண்டும் தீர்மானித்தலே தமிழின விடியெல் என்ற கனவுகள் நடுவில் நின்று என்னத்தை செய்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பொயட்,

நல்நோக்கங்கள் சரியாக சென்றடையாமை அல்லது செல்ல விடாது தடுப்பாக நின்றவையும் நின்றவர்களும் இன்று எங்கென்றே தெரியாதுள்ளது. எதையும் கேட்கவோ அல்லது திருந்தவோ யாருமில்லை. ஆளாளுக்கு அறிக்கைகளால் சுதந்திரதமிழீழதாயகத்தை கனவில் மட்டும் காணும் நிலைதான் உண்மையான நிலையாகவுள்ளது. நாவல் புத்தகமாக்கும் எண்ணமுள்ளது. பலதரம் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் செழுமைப்படுத்திக் கொண்டு வரவேண்டும். தங்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.