Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு

Featured Replies

தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு

ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் தேர்தலில் பாரி யளவில் வன்முறைச்சம்பவங்கள் ஏற்படலாம். எனவே தமிழ் மக்களின் மீது வன்முறைகள் திணிக்கப்படாதிருக்க இந்தியா உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்புக் குறித்து பி.பி.சிக்கு கருத் துத் தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் சார்பான விடயங்கள் குறித்தும் அது தொடர்பான ஒரு ஆலோசனையைப் பெறுவதற்கும் நாம் இந்தியா வந்துள்ளோம். வெளிவிவகார அமைச்சின் செயலருடன் பேசியபோது நாம் எடுத்துள்ள நிலைகுறித்து கலந்துரையாடினோம்.

ஏற்கனவே தமிழ் மக்கள் எடுத்த முடிபின் அடிப்படையிலேயே எமது முடிபு எடுக்கப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டினோம்.இந்தத் தேர்தல் வன்முறை இல்லாது சரியான முறையில் நடைபெறவேண்டும் என்பது தொடர்பாக நாம் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் எடுத்துள்ள முடிபு தொடர்பான கருத்துக்களைச் செவிமடுத்த அவர், தமிழ் மக்கள் சார்பான இந்த நிலைப்பாட்டிலே சரியான முடிபு இருக்கும் என்பதை அவர் எடுத்துக் கூறினார்.

இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டை நாமே கோரியிருந்தோம். அத னடிப்படையில் சந்திப்புக்கள் நடைபெறுகின் றன.சரத் பொன்சேகாவை நாங்கள் ஆதரிப் பதாக எடுத்த நிலைப்பாடு குறித்தோ, ஜனாதி பதித் தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிபு கள் சரியானவையா என்பது குறித்தோ விவாதிக்கவில்லை. ஆனால் மக்களின் அபிப்பிராயப்படி செயற்படுமாறு அவர் கூறினார்.

தேர்தலில் வன்முறைகள் எமது மக்களை நோக்கி வரக்கூடாது என்பது குறித்தும் ஜனா திபதித் தேர்தலில் யார் வென்றாலும் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளுவதில் இந்தியா முன்னுரிமை காட்ட வேண் டும் என்பதன் அடிப்படையிலும் இச் சந்திப்பின் நோக்கம் அமைந்தது.

இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்க ளும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அவ்வகையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அமைந்தாலும் தொடர்ச்சியான வன்முறைகள் இடம் பெறலாம் என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. அது தமிழர் தரப்பின் மீது கட்டவிழ்த்து விடப்படாதிருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தியாவின் ஆலோசனையும் உதவியும் பெறும் நோக்கில் இச்சந்திப்பு அமைந்தது என்று அவர் தெரிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=2010

தேர்தலில் வன்முறைகள் எமது மக்களை நோக்கி வரக்கூடாது என்பது குறித்தும் ஜனா திபதித் தேர்தலில் யார் வென்றாலும் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளுவதில் இந்தியா முன்னுரிமை காட்ட வேண் டும் என்பதன் அடிப்படையிலும் இச் சந்திப்பின் நோக்கம் அமைந்தது

கூட்டமைப்பு தெளிவாகத்தான் இருக்கிறது...

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு மக்களை குழப்பமடைய வேண்டாம்,எண்டு கூறிக்கொண்டு தங்களுக்குள் குழம்பி தெளிவடைந்ததில் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே.

மாறாக மக்கள் குழப்பத்திலுள்ளார்கள் எண்டு ஒருத்தரும் யோசித்த மாதிரி தெரியல்ல.

அடுத்தடுத்து நடக்கப்போகும் தேர்தல்கள் உண்மையான தெளிவின் பெறுமானத்தை உணர்த்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

209jczp.jpg

மீண்டும் பாலியல் வல்லுறவு படையை அனுப்பவா? இவனுங்க ராணுவத்தின் லட்சணம்தான் ஏற்கென்வே பார்த்தாகிவிட்டதே? இவ்வளவுக்கு பின்னும் ஈழத்தவர் திருந்தலன்னா எதுவும் செய்ய முடியாது.. உள்ளூர கணக்குகள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் அர்த்த சாஸ்திரத்தை படைத்த கும்பல்களிடம் எதுவும் எடுபடாது.. ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன்.. ஒரு அனைத்துலக ஆடை வடிவமைப்பு போட்டி நடக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்..

சீனன் அதற்கு மூலமான பருத்தியை கொடுத்தான்..

கொரியாக்காரன் அதை தைத்துகொடுத்தான்..

ஜப்பான்காரன் அதற்கு பொத்தானை போட்டுவிட்டான்..

இப்படி ஆளாளுக்கு தங்களால் முடிந்த வேலையில் சிரத்தையுடன் செய்து முடிக்க..

கடைசியில் கைப்புள்ளையிடம் அந்த ஆடை வந்தது.. மேட் இன் இந்தியா என்று போட்டான் கைப்பிள்ளை..

நிற்க இது உதாரணம் அன்று உண்மை .. ஈழபிரச்சனையில் விடுதலைக்கு போராடி மாண்டவர் யாரோ..கைபுள்ளைக்கு தன் பெயரை இதில் போடவேண்டும்(அதாவது அரைகுறை தீர்வை நான் தான் பெற்று கொடுத்தேன் என்பது) என்ற ஆசை வந்து விட்டது.. கைப்புள்ளையின் வீட்டிலேயே காசுமீரு நாகாலாந்து அஸ்ஸாம் என ஆயிரம் பிரச்சனை இருக்கிறது.. அதை கவனிக்க கைபிள்ளையால் முடியாது.. இளிச்சவாயன் எவனோ அவனை போய் நோண்டுவது.. இவனுக்கு எங்கதொட்டால வலிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.. முழுமையான தீர்வை சிங்களவன் தந்தாலும் இவர்கள் கொடுக்க விடமாட்டார்கள் ..எனவே ஈழத்தவர் தலைமையில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசானது உலகில் ஒடுக்கபடும் ஏனைய இனத்திவரின் ஆதரவினை பெற்று கொள்வதோடு ஒடுக்கபடும் காசுமிர் நாகலாந்து அருணாசலம் தமிழ்நாடு ஆகிய இனத்தவரின் விடுதலைக்கும் குரல் கொடுக்க வேண்டும்

புரட்சிகர தமிழ்தேசியன் திருவண்ணாமலை

தீர்வைப் பெற்றுத்தர இந்தியாவாலும் முடியாது. இது ஏதோ சரத்பொன்சேகா பக்கம் தாம் சார்ந்திருப்பது இந்தியாவிற்குப் பிடிக்காதது என்பது கூட்டமைப்பிற்குத் தெரிந்திருக்கிற விடயம். இந்தியாவை சமாதானப்படுத்தி தம் முடிவுமீது பிழையில்லை என்பதை தெரிவிக்கும் பூடகக் கோரிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வைப் பெற்றுத்தர இந்தியாவாலும் முடியாது. இது ஏதோ சரத்பொன்சேகா பக்கம் தாம் சார்ந்திருப்பது இந்தியாவிற்குப் பிடிக்காதது என்பது கூட்டமைப்பிற்குத் தெரிந்திருக்கிற விடயம். இந்தியாவை சமாதானப்படுத்தி தம் முடிவுமீது பிழையில்லை என்பதை தெரிவிக்கும் பூடகக் கோரிக்கை.

தோழர் இறைவன் நம் கேள்வி ஏன் இவர்களை கண்டு பயம்... எதிரி என்று தண்ணீர் தெளித்துவிடவேண்டியதுதானே.. எதிரிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவதிலேயே வளர்கிறான் - அறிஞர் கொர்ப் கோகன்

தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு

இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்க ளும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அவ்வகையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அமைந்தாலும் தொடர்ச்சியான வன்முறைகள் இடம் பெறலாம் என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. அது தமிழர் தரப்பின் மீது கட்டவிழ்த்து விடப்படாதிருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தியாவின் ஆலோசனையும் உதவியும் பெறும் நோக்கில் இச்சந்திப்பு அமைந்தது என்று அவர் தெரிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=2010

மீண்டும் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு(பாலியல் வல்லுறவு) படையின் உதவி தேவையா????

Edited by shanu thinesh

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உதவியின் பலனை அனுபவித்த லட்சக்கணக்கான மக்கள் மீளா இன்பத்தால் இறந்துபோயும். இந்தியாவின் உதவியை இவர்கள் தேடுவது என்பது? தமது இருப்பை உறுதி செய்ய தாய்நாட்டை விலைபேசியும் விற்கத் தயார் என்பதை தாமாகவே விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் இதை எழுதும் எம்முடன்தான் கோபம் இங்கேயே பலருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு

வரும் தேர்தலில் யார் தோற்றாலும்......

தமிழர் மீது தான் , சிங்களவர்களின் ஆத்திரம் திரும்பி ஒரு கலவரமாக மாறக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு.

அப்படி நடந்தால் அதனை தடுக்கக் கூடிய வல்லமை, ஐ.நா. வுக்கோ, ஐரோப்பிய கூட்டமைப்புக்கோ அல்லது மேற்குலக நாடுகளுக்கோ இல்லை என்பதே..... உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ததேகூட்டமைப்பை இந்தியாவுடன் கலந்துரையாடுமாறு தமிழமக்கள் கோரவில்லையே?முள்ளி வாய்காலில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் பொழுது ஏன் இந்தக் கூட்டமைப்பு இந்தியாவுடன் ஒரு போர் நிறுத்த்திற்கான கலந்துரையாடலை நடத்த முன் வரவில்லை? பூனை இழைச்சா எலிக்குக் கொண்டாட்டம் என்ற மாதிரி இருக்குது.யாருடைய அழுத்தத்திற்கும் முகம் கொடுக்க தமிழ்மக்கள் சொன்னார்களா?முடிவைத் தமிழ் மக்களே தீர்மானிக்கட்டும் என்று ஒதுங்கி இருந்தால் மக்கள் சரியாகத் தீர்மானிப்பார்கள்.(இவர்கள் 50 வருடங்களுக்கு மேலாக அரசியல் செய்து தமிழ் மக்களு;கு எதையும் பெற்றுக் கொடுக்க வில்லை)தமிழ் மக்களுக்க உண்மையாக உழைக்கக் கூடிய எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுக்கக்கூடிய புதிய அரசியல் அமைப்பின் தேவையை காலம் வேண்டி நிற்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு

முந்தி கதைக்க பவரில்ல.... கட்டி வச்சிருக்கேக்க போட்ட தீனிய திண்டிட்டு கயித்து நீளத்துக்குத்தான் வலம்வரலாம்.... இப்ப கயிறுமில்ல பவறும் வந்திட்டிது, ஜமாய்க்கவேண்டியதுதான். :)

Edited by Mathivathanang

முந்தி கதைக்க பவரில்ல.... கட்டி வச்சிருக்கேக்க போட்ட தீனிய திண்டிட்டு கயித்து நீளத்துக்குத்தான் வலம்வரலாம்.... இப்ப கயிறுமில்ல பவறும் வந்திட்டிது, ஜமாய்க்கவேண்டியதுதான். :)

சனம் முள்ளிவாய்க்காலுக்கை இடிபடும் போது இல்லாத பவர் தானே....??? எனக்கும் உந்த கேள்வி இருக்கிறது...!

முந்தி எல்லாம் தமிழ் நாட்டுக்கு போய் முக்கிமுனகி சந்தர்ப்பத்துக்காக காத்து இருந்து அனுமதி வாங்கி டெல்லி போய் பேசினவை.... இப்ப இலங்கையிலை இருந்து நேரடியாக ஒரு பிளேனிலை போகிறார்கள்...

2006 ம் ஆண்டு கருணாநிதியை கூட சந்திகாமல் வந்த சம்பந்தன் குழு... காரணம் என்ன எண்டு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் எழுதியது...

http://www.alaikal.com/new/index.php?option=com_content&task=view&id=968&Itemid=40

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்தோடு பதினொண்டாக இன்னுமொரு இனக்கலவரம் வரும்.

அப்போது தெரியும் அப்பன் இல்லா வீட்டில் உப்பின் அருமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.