Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறையில் இருந்தாலும் சரத் பொன்சேக்கா நாட்டைக் காக்கத் தொடர்ந்து போராடுவார் என்கிறார் அனோமா பொன்சேக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருந்தாலும் சரத் பொன்சேக்கா நாட்டைக் காக்கத் தொடர்ந்து போராடுவார் என்கிறார் அனோமா பொன்சேக்கா

Wednesday, 10 February 2010 12:57

பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய எனது கணவர் ஒரு பயங்கரவாதியைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். எனினும் ஊழலும் வன்முறையும் நிறைந்த இந்த ஆட்சியாளரிடமிருந்து மக்களை விடுவிக்கும் தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும் மன நிலையிலேயே அவர் இருக்கிறார் என்று நேற்று சரத் பொன்சேக்காவை சென்று சந்தித்த அவரது மனைவி அனோமா பொன்சேக்கா தெரிவித்தார்.

இன்றைய தினம் சரத் பொன்சேக்காவின் கைதிற்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையே சரத் பொன்சேக்கா விடுவிக்கப்படாவிட்டால் அன்னப்பட்சிச் சின்னத்தின் கீழ் அனோமா பொன்சேக்கா தேர்தலில் போட்டியிடுவார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள சரத் பொன்சேக்காவின் அலுவலகத்தை தொடர்ந்து நடத்திச் செல்லும்படி அவர் தனது ஆதரவாளர்களிடம் கேட்டிருப்பதாகவும் இது தேர்தலில் போட்டியிடுவதற்கான முதலாவது சமிக்ஞை என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.

நன்றி ...........ஈழம் வெப்

...

இதற்கிடையே சரத் பொன்சேக்கா விடுவிக்கப்படாவிட்டால் அன்னப்பட்சிச் சின்னத்தின் கீழ் அனோமா பொன்சேக்கா தேர்தலில் போட்டியிடுவார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

...

நன்றி ...........ஈழம் வெப்

நாளைக்கு 'அனோமா பொன்சேக்கா கைது' என்ற செய்தி படிக்கலாம் என்று சொல்லுறியள்? :lol:

அனோமா வை கைதுசெய்தால் கடும் விழைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிக்கை ஏதும் விட்டிருக்கின்றதா?

இதென்ன புதுக்குலப்பமா கிடக்கு!

அனோமா வந்தா இப்ப கூட்டமைப்பு யாரை ஆதரிக்கிறது? ராசபக்சவைவா? அல்லது அநோமாவைவா?

எதுக்கு வெளிநாட்டில இருக்கிற (வழமையாக) கூட்டமைப்பு முக்கிய உறுப்பினர்கள் வந்து கலந்துரையாடி முடிவேடுப்பினம்.

முடிவெடுத்து எலக்க்சன் முடிஞ்ச கையோட வெளிநாட்டுக்குப் போடுவினம்.

ரோகித போகல்லாமவைவிட கூட்டமைப்புத்தான் அதிகமா வெளிநாடு போகுது.

முதலில் தன்னைக் காக்க போராடட்டும். அப்புறமா நாட்டைக் காக்கலாம்.

என்ன போராட்டமாவது நடத்துங்கப்பா. தூக்கில் போடும் விடயம் என்னாயிற்று? தற்செயலாக சிறையிலிருந்து பொன்சேகா தப்ப முயலும்போது சுடப்பட்டால் என்ன செய்வது.? மாவீரன் பட்டம் ஏதும் கொடுக்கலாமா? கொழும்பில் ஒரு சிலை வைக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன போராட்டமாவது நடத்துங்கப்பா. தூக்கில் போடும் விடயம் என்னாயிற்று? தற்செயலாக சிறையிலிருந்து பொன்சேகா தப்ப முயலும்போது சுடப்பட்டால் என்ன செய்வது.? மாவீரன் பட்டம் ஏதும் கொடுக்கலாமா? கொழும்பில் ஒரு சிலை வைக்கலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் தலைவி, அனோமா பொன்சேகா... எங்கள் வோட்டு அனோமா அம்மாவுக்கே.....

சரத் மனைவி அனோமாவுக்கு,

வணக்கம்.

தங்கள் கண்ணீரில், கவலையில், துயரத்தில் பங்கெடுக்கும் ஒரு ஈழத்தாயின் கடித வரிகள்.

கடந்த ஆண்டு இந்நேரத்திற்கெல்லாம் எங்கள் தமிழீழ மண் ரத்தம் தோய்ந்து காணப்பட்டது. எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. கொஞ்ச நேரம் நாங்கள் எதையோ மறந்து இருந்தபோது உங்களுடைய நேர்காணல் தொலைக்காட்சியில் காண நேரிட்டது. பார்த்தவுடன் எங்களுக்கு பகீர் என்றது. மீண்டும் பழைய நினைவுகள் எங்களை தொற்றிக் கொள்ள தொடங்கின. கொழும்பு நகரின் எதிர்கட்சி தலைவர்கள் சிலருடன் தங்களின் கணவர் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்கள ராணுவத்தினர் அவர் இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே வந்து அழைத்துச் சென்றதாக ஒருசிலரும், இழுத்துச் சென்றதாக ஒருசிலரும் கூறுவதை கேட்டோம்.

தங்கள் கணவர் என்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டாராம். ஏசுவை கைது செய்யும்போது ஏன் என்னை கைது செய்கிறீர்கள் என்று கேட்டதைப் போல் இருந்தது அந்த வரிகள். இயேசு யூத அடக்குமுறைக்கெதிரான ஒரு சிறந்த கருத்து வாதியாக திகழ்ந்தார். ஆனால் தங்கள் கணவர் ஒரு இனத்தை ஒடுக்கும் மேல்தட்டு அதிகார வர்க்கத்தை சேர்ந்தவராக வாழ்ந்தார். இவரைப் பற்றி நாங்கள் வாசித்த போது அதிர்ந்து போனோம். ஏதாவது ஒரு விளையாட்டுப்போட்டி என்றால் எதிர்களத்தில் இருப்பவர்களை நான் தமிழனாக நினைத்துக் கொள்வேன். அப்போது எனக்கு கூடுதலான வெறி வந்துவிடும். அதே வெறியோடு வெற்றிப் பெற்றுவிடுவேன் என்று தங்கள் கணவர் அடிக்கடிச் சொல்வாராம்.

என்னை கைது செய்வதற்கு சாதாரண நடைமுறை சட்டம் போதுமே. நான் ராணுவத்திலிருந்து விலகி பல நாட்கள் ஆகிவிட்டதே என்று கேட்டபோது ராணுவ அதிகாரிகள் அவரை பிடறியில் அடித்தார்களாம். பிலாத்துவின் முன் நிறுத்தப்பட்ட இயேசுவின் கன்னத்தில் அறைந்தது போல் இந்த வார்த்தைகள் இருந்தன. ஒருகாலத்தில் அவரிடம் கைக்கட்டி வாய்பொத்தி நின்ற அவரைவிட கீழ் நிலையில் இருந்த அதிகாரி அவரின் கழுத்தில் அடிக்கும் அளவுக்கு எப்படி துணிச்சல் பெற்றான் என்று புரியவில்லையா? இது அதிகாரத் திமிர். சரத் பொன்சேக மட்டுமல்ல, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ஒருவேளை ராஜபக்சேவுக்கு எதிராக இருந்தாலும் அவனுக்கும் இதுதான் தண்டனை.

இந்த அதிகார போதையிலிருந்து ராஜபக்சேவால் வெளியேற முடியாது. அதோடில்லாமல் நீங்களாக வந்தால் சேதமில்லாமல் உங்களை கூட்டிச் செல்வோம். இல்லையென்றால் எங்கள் பலத்தைக் காட்டி இழுத்துச் செல்லுவோம் என்று மிகக் கேவலமாக ஒரு அதிகாரி தங்கள் கணவரை எச்சரித்தாராம்.நீங்கள் கூறிய வார்த்தை எங்களை கண் கலங்க செய்துவிட்டது. என் கணவரை ராஜபக்சே கைது செய்வார் என்று எனக்கு தெரியும். ஆனால் இப்படி ஒரு நாயை இழுத்துச் செல்வது போல் இழுத்து செல்வாரென்று நான் கணவில்கூட நினைக்கவில்லை என்று விம்மி விம்மி அழுதீர்கள். சோற்றில் வைத்த கையை வாயில் வைக்க முடியாத நிலையில் தங்களைப் பார்த்து நாங்களும் அழுதோம்.

பொன்சேக இப்போது எந்த இடத்தில் இருக்கிறார் என்று எமக்கு தெரியாது என்று கூறியபோது தங்களின் முகத்தோற்றம் வயிற்றில் புளியைப் போட்டு கரைத்தது. மேலும் அவரது ஆதரவாளர்கள் தேசிய சட்டத்தின்படி கைதுசெய்யப்படுவார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறினீர்கள். தங்கள் கணவர் ராணுவ அதிபர் பதவியிலிருந்து விலகியப்பின் நாட்டின் அதிபர் பதவிக்கு ஆசைப்பட்டு தேர்தல் களத்திற்கு வந்தார். அப்போது ராஜபக்சேவின் தம்பியும், ராஜபக்சேவும் இணைந்து செய்த ஊழல்களை அம்பலப்படுத்தப்போவதாகவும் விடுதலைப்புலிகள் சரணடைய வந்தபோது அவர்களை உலக ராணுவச் சட்டத்திற்கு எதிராக சுட்டுக் கொன்றதை உலக நீதிமன்றத்தில் ஒப்புதலாய் வாக்குமூலம் அளிப்பதாகவும் தங்கள் கணவர் தேர்தல் பரப்புரையிலே சொல்லி வைத்தார்.

பாவம். அதற்குள்ளாக அவரை கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத இடத்தில் வைத்திருப்பதாக தங்கள் நேர்காணலில் அழுது ஆறாக தங்கள் முகத்தில் வடிந்த கண்ணீர் எங்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.கடந்த ஆண்டு இதே நாளில் தான் என் இரண்டு பிள்ளைகளையும் இந்த சிங்கள ராணுவத்தினர் அழைத்துச் சென்றார்கள். அழைத்து சென்றார் என்று சொல்ல முடியாது. இழுத்து சென்றார்கள். ஒரு நாயை விட கேவலமாக அவர்கள் என் பிள்ளைகளை நடத்தினார்கள். கேட்பதற்கு எங்களுக்கு ஆளில்லை. தங்கள் கணவர் அழைத்துச் செல்லப்பட்டாரோ? இழுத்து செல்லப்பட்டாரோ?

ஆனால் நீங்களோ ஊடகவியலரை அழைத்து உங்கள் குறைகளை கொட்டித் தீர்க்கிறீர்கள். நாங்கள் முள்வேலி வதைமுகாமில் முடங்கிப்போய் கிடக்கிறோம். எங்கள் பிள்ளைகள் எங்கே என்று கேட்க எங்களுக்கு நாதியில்லை. ஒவ்வொரு நாளும் சோறு போட்டு சாப்பிடும் போதெல்லாம் என் பிள்ளைகள் இருக்கிறார்களா? இல்லையா? சாப்பிட்டார்களா? சாப்பிட வில்லையா? சுட்டுக் கொன்றார்களா? சித்திரவதை செய்கிறார்களா? என் பிள்ளைகள் துடித்துக் கொண்டிருக்கிறதா? அல்லது முடங்கிப் போய் இருக்கிறதா? என்றெல்லாம் என் தாய் மனம் அழுது ஆர்ப்பரிக்கிறது. ஆனாலும் என்ன செய்ய? நாங்கள் தமிழராய் பிறந்தோம்.

எங்கள் சொந்த நாட்டில் வாழ்வதற்கு நாங்கள் உரிமைக்கூறி நடத்திய போராட்டத்திற்குத் தான் உங்கள் கணவரின் தலைமையில் இருந்த ராணுவம் என் பிள்ளைகளை இந்த அளவிற்கு சித்ரவதை செய்து இதுவரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் செய்துவிட்டது.வெந்த புண்ணில் வேள் பாய்ச்சுவதாக நினைக்காதீர்கள். இப்போது இப்படி பேசுவது உங்களை மேலும் துன்புறுத்துவதாக அமையும். நீங்கள் இந்த போர் நிறைவடைந்தது என்றுச் சொல்லி உங்களிடம் உங்கள் கணவர் மகிழ்ச்சிக் கொண்டாடி இருப்பாரே அப்பொழுது கேட்டுப் பார்த்தீர்களா? ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை அழைத்துச் சென்று எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று. அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா? என்ற செய்தி உங்களிடம் உங்கள் கணவர் பறிமாறிக் கொண்டிருக்கிறாரா? தங்களுக்கு துயரென்றவுடன் எங்களுக்கும் துயரமாகத்தான் இருக்கிறது.

காரணம் நாங்கள் தமிழர்கள்.எங்களுக்கு யாருமே துயர்படக் கூடாது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நீங்கள் பாருங்களேன். தமிழ்நாடு என்று எங்களுக்கு ஒரு தாய்நாடு இருக்கிறது. அதிலே தலைநகரமாக சென்னை இருக்கிறது. சென்னையிலே வாழும் மக்களில் தமிழர்கள் மிகக் குறைந்த விழுக்காடு தான். தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மார்வாடிகள், பனியாக்கள் மற்றும் வட இந்திய மக்கள் பெரும்பகுதியை ஆக்ரமித்து வைத்திருக்கிறார்கள்.

அப்போதுகூட அவர்களின் வாழ்வு அவர்களின் வளத்திற்காக சொந்த மண்ணின் மக்களாகிய நாங்கள் அவர்களிடம் கூலி வேலை செய்துதான் பிழைப்போம். இதையெல்லாம் சொல்லி உங்களை வேதனை படுத்துவதாக நினைக்காதீர்கள். ஈழத்திலே எமது மக்கள் கொல்லப்பட்டபோது தமிழகத்தில் இருந்து எதிர்குரல் வராமல் போனதற்கு இதுதான் பெரும் காரணம். எம்மக்கள் கலப்பின மக்களாகி விட்டார்கள். அவர்களுக்கு தமிழ் என்பது தமிழ் உணர்வு என்பது தமிழன் என்ற அடையாளம் என்பது கலைந்து காலங்கள் பலவாகிவிட்டது. உங்களிடம் இவையெல்லாம் சொல்லி வேதனைப்படுத்துவதாக நினைக்காதீர்கள்.

ஆனாலும் எங்களுக்கான மனவேதனை இருக்கிறதே. அதையெல்லாம் சொல்லித்தான் தீரவேண்டும். தங்கள் கணவர் திரும்ப வருவார். நிச்சயமாக ராஜபக்சே தங்கள் கணவரை கொல்லமாட்டான்.காரணம் ஒரு மனிதர் இரண்டு முறை சாகமுடியாது. தனக்குக் கீழ் இருந்த ஒரு அதிகாரி தங்கள் கணவரின் பிடறியில் அடித்தபோதே அவர் மனதளவில் செத்துப்போய் விட்டார். அவர் திரும்ப உங்களிடம் வந்தாலும் உயிருடன் கூடிய பிணமாகத்தான் உறவாட முடியும். புலிகள் இயக்கம் சொன்னது, ராஜபக்சே என்பவன் போர் வெறி பிடித்த அரக்கன் என. நம்பினீர்களா? நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் தான் உங்களுக்கு அளக்கப்படும் என கிறித்துவர்களின் வேத நூலான விவிலியம் சொல்கிறது.

அதைவிட எங்கள் தமிழிலே அருமையான பழமொழி இருக்கிறது. எதை விதைக்கிறீர்களோ அதைத்தான் அறுக்கமுடியும் என. தங்கள் கணவர் விதைத்தார், அறுக்கிறார். ஆனாலும் கனடாவிலே எம் தமிழ் உறவுகள் தங்களின் கணவரின் கைதை கண்டித்து அரசியல் புரிந்திருக்கிறது. நாங்கள் விரோதிகளாக இருந்தாலும் அவர்களை மன்னிப்பவர்களாக இருக்கிறோம். துரோகிகளாக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்பவராக இருக்கிறோம்.அதனால் தான் ராஜபக்சேவின் பக்கத்திலே கருணா, டக்ளஸ் போன்றவர்கள் இன்னும் உயிருடன் பல்லிலித்து உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை தங்களின் கணவர் தங்களை சந்திப்பாராயின் நீங்கள் கேட்டுப் பாருங்கள். கைது செய்து அழைத்துச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என. கைது என்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் இளம் பெண்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என. இவையெல்லாம் கேட்டு எங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள் என்று நம்புகிறோம். காரணம் கொடுமையின் கோரம் நீங்கள் நேரடியாக அனுபவித்தப்பின் உங்களுக்குத் தெரிகிறது.ஆனாலும் உங்களின் கனவு எதாவது இருக்கலாம். ஆனால் எங்களின் ஒரே கனவு எங்களுக்கான தமிழீழ தாயகம் தான்.

நன்றி.

இப்படிக்கு,

தமிழீழத் தாய்.

http://viduthalaivengaigal.blogspot.com/2010/02/blog-post_12.html

சிறையில் இருந்தாலும் சரத் பொன்சேக்கா நாட்டைக் காக்கத் தொடர்ந்து போராடுவார் என்கிறார் அனோமா பொன்சேக்கா

பொன்சேகா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழரையும் படுகொலை செய்யப்போகிறாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிருப்பவர்கள் கூட்டமைப்புடன் சேர்ந்து உங்கள் கணவருக்காக செய்யாத பிரச்சாரமா? அன்னம்மா கனடாத்தமிழர் மட்டுமல்லாது எல்லாத்தமிழரும் நாட்டைக்காக்க ஒன்றிணைந்து தொடர்ந்து போராடுவார்கள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.