Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெற்றிலைக்கேணி தேவாலயம் இராணுவமுகாமாக மாற்றம்: யாழ் ஆயர் அதிர்ச்சி

Featured Replies

வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆயரின் அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர் வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்களுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என சிறீலங்கா இராணுவம் ஆயருக்கு உத்தரவிட்டுள்ளது.

வன்னிப் பகுதிக்கு சென்ற ஆயர் அங்கு உள்ள பெருமளவான தேவாலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெற்றிலைக்கேணி மாதா ஆலயம், மிகப்பெரும் இராணுவத் தளமாக மாற்றப்பட்டுள்ளதுடன், அதனை சுற்றி வேலிகளும், காவல்நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேவாயலமும் சேதமடைந்துள்ளது.

பெருமளவான மக்கள் வழிபடும் இந்த தேவாலயத்தை சிறீலங்கா இராணுவம் முகாமாக பயன்படுத்தி வருவதால் மக்களின் மத உணர்வுகளை அது புறம்தள்ளியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

இதனிடையே வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியிலும் பெருமளவான ஆலயங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=68:2010-02-11-13-26-56&catid=34:2010-02-09-12-34-07

  • கருத்துக்கள உறவுகள்

மாதாவே..........மகிந்து வுக்குஒரு " வழி" காட்டு ...........

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட பயங்கர வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது, இனி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அறிக்கை விட்டது இந்த தேவாலயம் இராணுவ முகாமாக மாற்றப்பட்டதையும் சேத்துதானே ஆயர்?

வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய அரசு மடு மாதாவை தரும்படி புலிகளை மிரட்டி, அவர்கள் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இத்தாலியில் உள்ள தமிழர்களை கைது செய்து மிரட்டி அக்கிரமம் செய்தது.

இத்தாலிய அரசு இப்போது என்ன செய்யப்போகிறது???

இத்தாலிய அரசு மடு மாதாவை தரும்படி புலிகளை மிரட்டி, அவர்கள் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இத்தாலியில் உள்ள தமிழர்களை கைது செய்து மிரட்டி அக்கிரமம் செய்தது.

இத்தாலிய அரசு இப்போது என்ன செய்யப்போகிறது???

இத்தாலியில் உள்ள அத்தனை சிங்களவரையும் பிடித்து நாட்டுக்கு அனுப்புவார்கள்.பாருங்கள் .----

  • கருத்துக்கள உறவுகள்

இனிப்பிரச்சனையில்லை என்று அறிக்கை விட்டு தொப்பிமாற்றிய ஆயர் தேவாலயம் இராணுவ முகாமாக மாறியதும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்துக்கு வாறவன் போறவன் எல்லாரிட்டையும் புலிகள் புள்ள பிடிக்கினம் மக்களிட்ட வரி வசூலிக்கினம் விருப்பமில்லாமல் கட்டாய பயிற்சி கொடுக்கினம் மக்களுக்கு போராட்டம் தேவையில்ல என்று சொல்லிக் கொண்டிருக்கத்தான் இந்த ஆயருக்கு நேரம் இருந்தது.சில வேனை ஆயருக்கு இலங்கைக்கான தலைமை ஆயர் பதவி தாறன் எண்டு சொல்லிப் போட்டு இப்ப ஏலாது எண்டாங்களோ தெரியாது.அதுதான் நித்திரையால எழும்மினது மாதிரி அறிக்கை விடுறார்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர் வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=68:2010-02-11-13-26-56&catid=34:2010-02-09-12-34-07

ஒரு நாடே இராணுவமுகாமாக கிடப்பது இந்த தேவாங்கிற்கு இவ்வளவு நாளும் தெரியவில்லை. இப்போது சுற்றுலா போன இடத்தில் ஒரு தேவாலயம் இராணுவமுகாமாக கிடப்பதைபாத்து அதிர்ச்சி அடைந்தாராம்!

காரணம் அங்கிருந்துதானே ஏழைகளின் பணத்தை கடவுளைகாட்டி அச்சமூட்டி பறித்து வாழுகின்றார்கள். இதுகளைதான் இந்வளவு நாளும் ஆயரும் குருக்களும் என்று கும்பிட்டுகொண்டிருந்தோம். இந்த நாய்களை உடனக்குடன் இனம் கண்டு சமூதாயங்களில் இருந்து உடனேயே ஒதுக்கிவிட வேண்டும்.

பெரியாரிசம் தியாசியம் என்று ஏதாவது சாட்டு போக்கு சொல்லி இந்த நாய்களுக்கு வாழ்வு கொடுக்காது. களஉறவுகளே அநீயாயங்களை இனியாவது உடனுக்குடன் சுட்டிகாட்டும் மனநிலை மாறுதலையாவது நாம் கொஞசமாவது பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இந்தப் பச்சோந்திகளை மக்களே உதறித் தள்ள வேண்டும். சிங்களவனின் இனவழிப்பிற்குத் துணைபோய் அவனுக்குச் சார்பாக வெளியுலகில் பிரச்சாரம் செய்த இந்தக் கயவர்கள் ஒருநாள் கடவுளிற்கு கணக்குச் சொல்ல வேண்டி வரும்.

டெஸ்மன் டூட்டு...என்று ஒரு ஆயர் இருந்தார். அவர் எங்கே இந்த நக்கிப்பிழைக்கும் பரதேசிகள் எங்கே?? சீ...இவர்களும் சமூகத்தில் உயர்ந்தவர்கள், மனிதர்கள் .....???!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் இருந்து யாழப்பாணம் போகும் சிங்கள அரசியல்வாதிகளில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் வரை இவரைச் சந்திக்காமல் போவதில்லை. வருகிறவர்களிடம். இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை.மக்கள் மகிழ்ச்சியாக வாழுகிறார்கள் என்று சொல்வதுதான் இவரின் வேலை போல் இருக்கிறது.சரத் சொல்லப் போவதாகச் சொல்லும் உண்மைகளில் இவரின் தில்லுமுல்லுகளும் அடக்கமோ???பாதிரியாருக்குரிய ஆடையைக் களைந்து விட்டு சாதாரண தமிழ்க்குடிமகனாக உழைத்துப் பிழைக்கும்படி அடிகளாரைக் கேட்டுக்கொள்கிறேன்.செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக அல்லது பாவமன்னிப்பாக இருக்கும்

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ ஒரு அருட்தந்தை தென்ஆபிரிக்காவிலிருந்து தமிழ்இனஅழிப்புக்கு எதிராக குரல்கொடுக்கும்போது இதே

ஆயர் சிங்களவனின் குரலாக வாக்குமூலங்களை வெளியிட்டு புளகாங்கிங்கிதம் கண்டவர்.

இப்போ இவருக்கு அதிர்ச்சியாக இருக்கிறதாம்,,,!

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ முகாம் ஒன்று தேவாலயமானாலோ அல்லது பாடசாலையானாலோதான் அதிர்ச்சியடையவேணும்,அதை விட்டுப்போட்டு இவர் ஏன் அனியாயத்திற்கு அதிர்ச்சியடைகிறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.